Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...17


அழகியசிங்கர்



ஒரு புத்தகக் காட்சியின் போதுதான் இதுமாதிரி செய்தேன். இரண்டு பக்கங்களிலும் கயிறுகளைத் தொங்கவிட்டு துணி காயப்போடுவதுபோல் சிறுபத்திரிகைகளைத் தொங்க விட்டேன்.   அப்போது என் கடையில் சிறுபத்திரிகைகளை அதிகமாக விற்பதற்குத் தருவார்கள்.  ஆனால் இப்போதோ சிறுபத்திரிகைகளே இல்லையோ என்று சொல்லும்படி இருக்கிறது.
இந்த முறை என் ஸ்டாலில் விற்பதற்கு வந்த இரண்டு சிறுபத்திரிகைகளைப் பற்றி சிறிய குறிப்பாவது கொடுக்க முயற்சி செய்கிறேன்.  
ஒரு புத்தகம் 'சிற்றேடு.'  இதன் ஆசிரியர் தமிழவன்.  ஜனவரி மார்ச்சு மாத இதழ் விற்பனைக்கு வந்துள்ளது.   இப் பத்திரிகையை சாதாரணமாகக் கையில் வைத்துக்கொண்டு படித்து விட முடியாது.  கொஞ்சம் முயற்சி செய்தால் முழுவதும் படிக்க முடியும்.  அப்படியே படித்தாலும் நாம் படித்ததில் என்ன புரிந்துகொண்டு விட முடியும் என்று தோன்றும்.
உதாரணமாக இதில் உள்ள கட்டுரைகளை வரிசைப்படுத்தி கூற விரும்புகிறேன்.
1. தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள் 2. காந்தியும், மார்க்ஸ÷ம், அயன்மையுறாத வாழ்வும், 3. நடுப்பத்திரிகை மனோபாவமும் சிறுபத்திரிகை மனோபாவமும் 4. ஒலித் தததுவம், நாக்கு, சிறுகதை 5. திணை விரிவாக்கம். 
இப்படியெல்லாம் பல தலைப்புகளில் இப் பத்திரிகை விரிந்து செல்கிறது.  பத்திரிகையின் விலை ரூ.100.72 பக்கங்கள் கொண்ட இப் பத்திரிகையை விருட்சம் அரங்கில் ஒருவர் வாங்கி வாசிப்பது அவசியம்.
ஸ்டால் எண் 403க்கிற்கு வரவும். 



Comments

Popular posts from this blog