Skip to main content

Posts

Showing posts from 2012
   ஐராவதம் பக்கங்கள்   ஆகஸ்ட் 15 - நாவல் - குமரி எஸ் நீலகண்டன் - 502 பக்கங்கள் - ரூ.450 - சாய் சூரியா வெளியீடு - டி டி கே சாலை - ஆழ்வார்பேட்டை - சென்னை    ஆகஸ்ட்15 புதினமா இல்லையா? மிகுந்த சர்ச்சைக்குரிய கேள்வி இது.  கல்யாணம் என்ற நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விவிரிக்கிறது.  அவர் காந்தியின்தனிப்பட்ட காரியதரசியாக இருந்தவர்.  இந்தப் புதினத்தில் காந்தி, நேரு, ராஜாஜி வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் எல்லோரும் வருகிறார்கள்.  அமெரிக்க நாவலாசிரியர் John Dos Passon இதே ரீதியில் சில நாவல்களை எழுதியுள்ளார்.  டாகுமெண்டிரி பாணியில் தனிப்பட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை வர்ணித்திருக்கிறார்.  இந்த நாவலின் ஆசிரியரோ கல்யாணம் என்பவரின் வாழ்க்கையை நாட் குறிப்பு என்ற விதத்தில் பதிவு செய்துள்ளார். காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மதுவை விரும்புகிறார்.  கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டு காந்திக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.  காந்தி சுடப்பட்டு இறந்தபோது, குஜராத்தில் இருந்த ஹரிலால் துக்க செய்தி என்று தந்தி அனுப்பினார்.  இரண்டாவது
கூழாங்கற்கள் மணல் வீட்டைக் கட்டி மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை. ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்த கூழாங்கற்களால் அகழியை அலங்கரித்து அழகு பார்க்கிறது. பிரபஞ்சத்துக்கு அப்பாலும் வர்த்தகப் பரிமாற்றம்.. அன்றாடம் நாம் அனுப்பும் புண்ணிய பாவங்களின் வடிவில். செல்வக் குவியலென நினைத்துச் சேகரிப்பவற்றில் செய்த நல்லன மட்டும் கணக்கில் வருகின்றன. பக்தியும் பவ்யமும் மயங்க வைத்தக் கைத்தட்டல்களும் வைர வைடூரியங்களானாலும், இருட்டத் தொடங்கியதும் ஆட்டம் முடிந்ததென ஆற்றங்கரையோடு குழந்தைகள் விட்டு வந்து விடும் கூழாங்கற்களாகிப் போகின்றன. *** -ராமலக்ஷ்மி
ஐராவதம் பக்கங்கள் ஆட்கொல்லி - நாவல் - ஆசிரியர் க.நா.சுப்ரமண்யம் - வெளியீடு : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், முதல் பதிப்பு: July 1957 - விலை ரூ.1.65 - பக்கம் 119 முன்னுரையில் க.நா.சு தன் இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்துகிறார்.  தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும்.  அது தவிர்க்க முடியாத இலக்கியவிதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி.  தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம்.  நாவல் என்பது தனி ரகம்.. தொடர்கதை படிக்க சுலபமானது.  சம்பவங்கள் நிறைந்தது.  சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியது என்று சொல்லும் ஆசிரியர், ஆட்கொல்லி என்ற நாவலை தத்துவச் செறிவுள்ளதாக, இலக்கிய நயம் நிரம்பியதாக எழுதியுள்ளார்.  இது வானொலியில் வாராவாரம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல் என்னும்போது, ஆசிரியரின் கலை நுட்பம் ரேடியோவில் இடம் பெற முடிந்துள்ளது என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க்கையில் தோல்வியுற்றவனான கதைசொல்லி அவனுடைய மாமா வேங்கடாசலம் பற்றி பேசுகிறார்.  மாமா 2
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு அழகியசிங்கர் 12 பந்தநல்லூர் எனக்குப் பிடிக்கவில்லை.  கொத்தமங்கலம் சுப்பு ஒரு நாவல் எழுதியிருந்தார்.  பந்தநல்லூரில் பாமா என்று.  அந்தத் தலைப்பே சரியாக வரவில்லை என்று தோன்றியது.  அப்படி வார்த்தைகளை இணைப்பது ஏதோ பகடி பண்ணுவதுபோல் தோன்றியது.   மயிலாடுதுறை நல்ல ஊர்.  எனக்கு அதுமாதிரியான ஊரில் உள்ள வங்கிக் கிளையில் பதவி உயர்வு கொடுத்திருந்தால், மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.  ஆனால் அப்படியெல்லாம் கொடுக்க மாட்டார்கள்.  எல்லாவற்றிலும் ஒரு போட்டி இருக்கும்.  போட்டியில் நான் தோல்வியை தழுவிவிட்டேன்.   ஒவ்வொருநாளும் மயிலாடுதுறையிலிருந்து குற்றாலம் போய், அங்கிருந்து பந்தநல்லூர் செல்லும் சாலை வழியாகச் செல்வேன்.  மயிலாடுதுறையிலிருந்து போகும் வழியில் முதன் முதலாக தமிழில் நாவல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிய வேதநாயகம் பிள்ளையின் சமாதி தென்படும். அவருக்கு ஒரு சிலையும் வைத்திருக்கிறார்கள்.  அழகியசிங்கரிடம் இதைக் குறிப்பிட்டு, 'நீங்கள் ஏன் நாவல் எழுதக்கூடாது?' என்று கேட்டேன்.   ''அதுதான் ஏன் எழுத முடியவில்லை என்பது தெ
  எதையாவது சொல்லட்டுமா....79 அழகியசிங்கர்     என் இலக்கிய நண்பர் ஒருவருக்கு நான் போன் செய்தேன்.  அவர் வருத்தத்துடன் ஒரு தகவலைக் குறிப்பிட்டார. அவர் வைத்திருந்த எல்லாப் புத்தகங்களையும் கடையில் கொண்டுபோய் போட்டுவிட்டாராம். எனக்கும் கேட்க வருத்தமாக இருந்தது.  =வேற வழியில்லையா? + என்று கேட்டேன்.  =வழியில்லை.  அவர்களுடன் இருக்க வேண்டுமென்றால், புத்தகம் இருக்கக்கூடாது..+ இத்தனைக்கும் நண்பர் ஏற்கனவே இருந்த இடத்தைவிட இன்னும் அதிகம் இடம் உள்ள இடத்திற்கு மாற உள்ளார்.  ஆனால் அவருடைய மனைவியும், புதல்வனும் கட்டாயம் புத்தகத்திற்கு இடம் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.  ==என்ன சார், புத்தகம் வைத்துக் கொள்ளக் கூடாதென்று சொல்லிவிட்டார்கள்..இதிலிருந்து ஒன்று தெரிகிறது..வீட்டைத் தவிர தனியாய் ஒரு ஆபீஸ் வைத்துக்கொள்ள வேண்டும்.++  வீடைத் தவிர தனியாய் புத்தகம் வைத்துக்கொள்ள ஒரு இடமா? முடியுமா?  சாதாரணமானவர்கள் எங்கே போவார்கள்.   என்னுடைய இன்னொரு இலக்கிய நண்பர் இருக்கிறார்.  இவர் பழுத்த இலக்கியவாதி.  உலக இலக்கியம்  முழுவதும் அவருக்கு அத்துப்படி.  ஆனால் அவர் சேகரித்து வைத்திருந்த ம
இரண்டு கவிதைகள் அழகியசிங்கர் 1) நான் சொல்வேன் வாய்த் திறந்து ஜெம்பு என்று அவர் ஏன் என்று கேட்க மாட்டார் இன்னொரு முறை கூப்பிடுவேன் ஜெம்பு ஜெம்பு என்று அவர் உம் என்று சொல்லமாட்டார் எனக்குத் தெரிந்தது அவருக்குப் பிடிக்கவில்லை பின் நான் நகர்ந்து அவரிடம் போய் பிடபூள்யு என்பேன் பின் இருவரும் கிளம்புவோம் சலிப்புடன்........ 2. ஒருவர் ரிட்டையர்டு ஆகிறாரென்றால் என்ன நினைக்க முடியும்? அவர் இனிமேல் வரப் போவதில்லை காலையில் சீக்கிரமாய் வந்திருந்து அலுவலகக் கதவைத் திறக்கப் போவதில்லை அவர் பார்த்த அலுவலக இருக்கையில் கொஞ்ச நாட்களுக்குத் தெரியும் அவர் கையெழுத்து மற்றவர்களெல்லாரும் வழக்கம்போல் வந்து கொண்டிருப்பார்கள் நான் பிப்பரவரி 2014ல் வரும் என் ரிட்டையர்மெண்டை நினைத்து காலத்தைத் தள்ளுவேன்
நதியும் நானும் பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை அவசியமெனக் கருதுகிறேன் நான் சற்று நீண்டது பகல் இன்னும் மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம் வந்த தூரமும் அதிகம் எல்லையற்றது மிதந்து அசையும் திசை இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி எனினும் கணத்துக்குக் கணம் மாறியபடியும் ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம் நதியும் நானும் - ரொஷான் தேல பண்டார தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
உள் நோயாளி நான் எப்போதும் உள் நோயாளி தான் என் காதலை உன்னிடம் சொல்ல நினைத்ததிலிருந்து. கிடைத்தது பல சமயங்களில் கிடைத்தது என்பதை விட ஏற்றுக்கொண்டேன் என்பதே சரியாயிருக்கிறது பலாச்சுளை சிறு ஊடலுக்குப்பின் அளவுக்கதிகமாக அன்பைத்தெரிந்தே பொழிவது போல இந்தப் பலாச்சுளை ஏகத்திற்கு இன்று தித்திக்கிறது. எல்லோரும்  கொண்டாடப்படும் இடத்தில் குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல எல்லோரும் தான். பெயர் நான் வைத்த பெயர் என் மகளுக்கு பிடித்திருக்கிறதாம் நீ வைத்த பெயர் உன் மகனுக்குப் பிடித்திருக்கிறதா ? முதல் பாடல் காலையில் கேட்ட முதல் பாடல் போல் நாள் முழுதும் சுழலும் உன் ஞாபகங்கள் என்னுள். ஒரு பக்கக் காதல் கடலை மடித்துக்கொடுத்த காகிதத்தில் இருந்த பாதிக்கவிதை போலிருக்கிறது என் காதல். - சின்னப்பயல் 
இரு சீன வைத்தியக் கதைகள் அசோகமித்திரன் சீனாவின் பாரம்பரிய வைத்தியம் உலகப் புகழ் பெற்றது. நான் ஒரு முறை வைத்தியம் செய்து கொண்டேன். என் வரையில் அவ்வளவு வெற்றிகரமாக முடியவில்லை. கதைகளில் முதல் கதை நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் ‘காம்ப் ஃபைய ’ ரில் நிழல் நாடகமாக நட்த்தப்பட்டது. அது இரண்டாம் உலக யுத்த காலம். நாங்கள் நேரடியாக யுத்த களத்துக்கு போவதாகக் கற்பனை செய்து கொள்ளுவோம். எங்கள் ‘காம்ப் ’ இரண்டு அல்லது மூன்று தினங்கள் நடக்கும். வெட்ட வெளியில் கூடாரங்கள் போட்டு, நாளெல்லாம் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் உழைப்போம். பொழுது சாய்ந்ததும் ‘காம்ப் ஃபையர் ’ நடக்கும். ஆசிரியர்கள் உரை ஒரு மணி நேரம் இருக்கும். அதன் பிறகு சாரணர்கள் கலை நிகழ்ச்சி. ஒரு பாட்டு, ஒரு சிறு நாடகம் என மாறி மாறி ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பிறகு இரவு உணவு. எங்கள் நிகழ்ச்சியில் மூன்று நடிகர்கள். சீன டாக்டர், சீன நர்ஸ், சீன நோயாளி. ஒருவன் ஒரு எலியை விழுங்கிவிடுகிறான். டாக்டர் முதலில் அவன் மண்டையில் ஒரு போடு போட்டு மயங்க வைக்கிறார். டாக்டருக்கும் நர்ஸுக்கும் சண்டை. நர்ஸ் முதலில் ஒரு ரம்பத்தை டாக்டரைப் பார
தோற்பாவைக்கூத்து சின்னப்பயல்   புதிதாக வெள்ளையடித்த சுவரில் நகத்தை வைத்துக்கீறும்போது ஏற்படும் மனக்குறுகுறுப்பை உள்ளூர ரசிப்பது , மண்ணெண்ணெய் பாட்டிலைத் திறந்து அதன் மணத்தை தான் மட்டும் நுகர்வது , ஆகக்கூடுதல் சிரமத்திற்குப்பின்னர் கைவிரல்களால் பிடித்த வண்ணத்துப்பூச்சியின் நிறத்தை உற்றுநோக்குவது , இப்போது அடிக்கப்போகும் பெரிய அலை கண்டிப்பாகத் தன் காலை நனைத்தே தீரும் என நினைக்கையில் அது அருகில் கூட வராமல் போவதை ரசிப்பது , தரைமட்டமான கட்டிட இடுபாடுகளிலிருந்து சிறு சிராய்ப்பு கூட இல்லாமல் மீண்டுவருவது , சிறு கண்ணாடிக்குடுவையின் உள்ளுக்குள் நீந்தும் மீனை வெளியிலிருந்து ஏதும் செய்ய இயலாது பார்க்கும் பூனை மனத்துடன் சில சமயங்களில் இருப்பது , எனக்கென்னவோ இவையெல்லாவற்றிற்கும் காதலுக்கும் தொடர்பிருக்கிறது என்பது போலத்தான் தோணுகிறது . -
  எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம்                                                                                                                                     - நிஸர்கதத்தா மஹாராஜ்                                                                                                                தமிழில் : அழகியசிங்கர்)       கேள்விகேட்பவர் : நான் நன்றாக இல்லை.  ரொம்பவும் பலவீனமாகத் தெரிகிறேன்.  நான் என்ன செய்வது?   நிஸர்கதத்தா மஹாராஜ் : யார் நன்றாக இல்லை. நீயா அல்லது உன் உடலா?  கே.கே : என் உடலாகத்தான் இருக்கும்.  நிஸர் : நீ உன் உடல் நன்றாக இருக்கும்போது மகிழ்ச்சி அடைகிறாய்.  உன் உடல் நன்றாக இல்லாதபோது வருத்தப்படுகிறாய்.  ஒருநாள் வருத்தமாகவும், ஒருநாள் மகிழச்சியாய் யார் இருக்கிறார்கள்.  கே.கே : மனம்தான்  நிஸர் :  யாருக்குத் தெரியும்?  மனதின் மாற்ற நிலை.  கே.கே : மனதிற்கு.  நிஸர் :  மனம்தான் தெரிந்தவர்.  ஆனால் யாருக்குத் தெரியும் தெரிந்தவரை.  கே.கே : தெரிந்தவருக்கு அவரைப் பற்றியே தெரியுமா?  நிஸர் : மனம் தொடர்பு அறுந்து போய்விடுகிறது.  திரும்ப திர
அசோகமித்திரன்     ஒவ்வொரு முறையும் எழுத உட்கார்ந்தவுடன் என்ன ezஎழுதுவது என்று என்னையே கேட்டுக்கொள்வேன். குழப்பமாகத்தான் இருக்கும். பல முறை முழுத்தாள்கள் எழுதி எழுதியதை ஒதுக்கி வைத்திருக்கிறேன்.   ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு சாமியாருக்குப் புனைகதை மீது மிகுந்த ஆர்வம். நான் படிக்கவேண்டும் என்று அவரே நூலகங்களுக்குச் சென்று ஸ்டீஃபன் ஸ்வெய்க், காஃப்கா ஆகியோருடைய நூல்களை வாங்கி வந்து என்னைப் படிக்க வைத்தார். எழுத யோசனை ஏதாவது தோன்றியவுடனே அதைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பார். காலம் காலமாக எழுத்தாளர்கள் பல உத்திகள் கையாண்டிருக்கிறார்கள். அதில் குறிப்புகள் எழுதி வைப்பதும் ஒன்று.நான் அன்றிலிருந்து கையில் கிடைத்த தாள்களிலெல்லாம் குறிப்புகள் எழுதி வைக்கத் தொடங்கினேன். ஆயிரம் குறிப்புகளுக்கு மேல் இருக்கும். எவ்வள்வு பேருந்துச் சீட்டுகள் பின்னால் எழுதியிருப்பேன்! பல குறிப்புகளும் தாள்களும் மக்கிக்கூடப் போய்விட்டன.இதில் யதார்த்தம் என்னவெனில் ஒன்றிரு முறைதான் குறிப்புகள் பயன்பட்டிருக்கின்றன.ஆனால் நான் குறிப்புகள் எழுதுவதை விடவில்லை.   குறிப
காஞ்சனா   புதுமைப்பித்தன் இரண்டொரு வருஷயங்களுக்கு முன் அயல் நாட்டு இலக்கியாசிரியர் ஒருவர் இந்தியாவுக்கு வந்திருந்தார்.   இந்திய பாஷை இலக்கியங்களைப்பற்றி அறிந்துகொண்டு போக அவருக்கு ஆசை.    இப்படி இங்கு வந்து சேருகிற மற்றவர்களைப் போல இல்லாமல் அவர், அவசரப்படாமல். நிதானமாக, நின்று, ஆர்வத்துடன், பல விஷயங்களை விசாரித்து அறிந்து கொள்ள முயன்றார்.  வசதியும், தகுதியுமுள்ளவராக இருந்தார் அவர்.   பல பேச்சுக்கிடையில் அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார்.   üüபொதுவாக இந்தியா பூராவிலுமே, சிறப்பாகத் தமிழில், பழமை என்று ஒன்று தப்ப முடியாத ஆட்சி செலுத்துகிறது என்பது தெளிவவாகத் தெரிகிறது.  எங்கள் இலக்கியங்களில் எங்கள் அனுபவம் என்னவென்றால்,  பழமையின் பிடி மென்னியைப் பிடிப்பதாகவும் இருக்கக் கூடாது ; நழுவிவிடக்கூடியதாகவும் இருக்கக் கூடாது ; இன்றைய இலக்கியத்தில்  பழமையின் சாயை இருக்கத்தான் வேண்டும்.  ஆனால், அதுவே புதுமைக்கு  அனுசரணையாகவும் இருக்க வேண்டும்.  பழமையே புரட்சிகரமானதாக இருக்கலாம். அந்தமாதிரி எழுத்து ஏதாவது உங்களிடையே உண்டா?"     "உண்டு" என்று சொல்லிவிட்டுச் சிறிது தயங்கினேன்
எனது குடும்பம் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன் எமக்கென இருக்கிறது நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று - தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு     அழகியசிங்கர்   11.   நான் பந்தநல்லூருக்கு வந்த புதியதில் கிராமம் என்றால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.  நான் சென்னை போன்ற இடத்தில் இருந்து பழகியவன்.  கிராமம் என்றால் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.  சாப்பிட நல்ல ஓட்டல் கிடைக்காது.  நல்ல மருத்துவமனை இருக்காது என்றெல்லலாம் பல குறைபாடுகள் கிராமத்தில் உண்டு.  என் நண்பர் ராஜேந்திரன் ஏன் பந்தநல்லூரிலேயே தங்கலாமே என்ற அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  கிராமாத்தைச் சுற்றி அருகாமையில் இருக்கிற ஒரு நகரத்தைத்தான் நான் பெரிதும் நம்பினேன்.  முதலில் சாப்பாடு.  இது பெரிய பிரச்சினை.  என் வீட்டில் நான் வெந்நீர் கூட சுடவைத்துப் பழகாதவன்.    ஆனால் பந்தநல்லூர் என்ற ஊர் கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நடுவில் உள்ளது.  மயிலாடுதுறை 28 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.  கும்பகோணம் 30 கிலோமீட்டர் மேல் இருந்தது.  நான் கும்பகோணத்தில் இருப்பதைவிட மயிலாடுதுறையில் இருப்பதையே பெரிதும் விரும்பினேன்.  காரணம் என் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள்.  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் உதவி செய்வார்கள்
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு     அழகியசிங்கர் 10.     நான் இங்கு வந்தபிறகு அழகியசிங்கர் என்னைப் பற்றி சில கவிதைகள் எழுதினார்.  ஒரு கவிதை பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு என்ற கவிதை.  அந்தக் கவிதை எழுதும்போது நான் என் பெண்ணிற்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லாமல், மயிலாடுதுறையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தேன்.  என் பெண் அப்போது சொன்ன ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது.  ''ஏன்ப்பா..என் கல்யாணம் நடக்கும்போதுதான் நீ அங்கே போகவேண்டுமா?''  சொல்லும்போது அவள் குரலில் வருத்தம். உண்மையில் பெண்ணின் திருமணம்போது நான் சென்னையில் இருந்தால் பலவிதங்களில் நான் பயன்படுவேன்.  திருமணம் என்கிற பதைப்பு ஒருவரை ஒருவர் பார்க்கும்போது குறையும் வாய்ப்பு அதிகம். என் விதி அந்தச் சமயத்தில் நான் அங்கில்லை.  பின் திருமணத்திற்கு லீவு.  அது கொடுப்பார்களா என்ற அச்சம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது.  எனக்கு ஒரு மாதமாக லீவு வேண்டியிருக்கும்.  அதற்கான முனைப்பை செய்து கொண்டிருந்தேன். அழகியசிங்கர் என்னைக் கிண்டல் செய்ததுபடி, லீவு கிடை

காக்கைச் சிறகினிலே (சிறுகதை)

                                                                   செல்வராஜ் ஜெகதீசன்       அ தற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை . அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது , மைக்கேல் சாரை , அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது . தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை . அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம் . ஒரு பதினைந்து வருடத்திற்கு முன் , தன் வீடே பழியாய்க் கிடந்தவனை , இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா ?   அ ப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் . மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர் . சொந்த ஊர் காஞ்சிபுரம் பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு த ினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார். ‘ தில்லு முல்லு ’ படத்தில் வரும் ரஜினிக்குமீசை வைத்த மாதிரி இருப்பார் . எப்போதும் வெள்ளை பாண்ட் வெள்ளை முழுக்கை சட்டையுடன் பளபளக்கும் பெல்ட் ஒன்று அணிந்துதான் அவரை பெரும்பாலும் காண