Skip to main content

Posts

Showing posts from May, 2014

விருட்சம் இலக்கியச் சந்திப்பு

 அழகியசிங்கர்  இலக்கிய உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை.  என்ன செய்யலாமென்று யோசித்தபோது இலக்கியக் கூட்டம் நடத்தலாமென்று தோன்றியது.  செப்டம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது.  நடந்த இடம் பாரதியார் இல்லம்.  அசோகமித்திரனின் 82 வயது கூட்டம்.  பலர் கலந்து கொண்டு சிறப்பாக கூட்டம் நடந்தது.  அதன்பின் கவிதைகள் வாசிக்கிற கூட்டமொன்றை ஏற்பாடு செய்யலாமென்று நினைத்தேன்.  ஆனால் என்னால் முடியவில்லை.  முன்னதாகவே இப்படி கூட்டம் நடத்தப் போகிறேனென்று சொன்னால், கூட்டம் நடக்காமல் போய் விடுகிறது.   முயற்சியை கை விட்டுவிட்டேன்.  ஆட்வான்ஸôக கொடுத்த 300ரூபாய் பணம் போய்விட்டது.  இனிமேல் இதெல்லாம் வேண்டாமென்று சும்மாதான் இருந்தேன்.  அப்போதாவது பணியில் இருந்தேன்.  நேரம் கிடைக்காது.  பிப்ரவரி மாதத்திலிருந்து பதவியிலிருந்து மூப்பு அடைந்தேன்.  சரி, இனிமேல் இலக்கிய உலகத்தை சும்மா விடக்கூடாது என்று தோன்றியது.   என் நண்பர் ஒருவர், ஆடிட்டர் கோவிந்தராஜன், இதுமாதிரி கூட்டம் நடத்துவதில் ஆர்வம் உள்ளவர்.  என்னிடம் மாட்டிக்கொண்டார்.  அல்லது நான் அவரிடம் மாட

அமைதி காத்தல் - பாப்லோ நெருடா கவிதை

 ராமலக்ஷ்மி இப்போது நாம் பன்னிரெண்டு வரை எண்ணுவோம் எண்ணுகையில் அனைவரும் அசையாமல் நிற்போம் ஒரு முறையேனும் இப்பூமியில்  எந்த மொழியிலும் பேசாதிருப்போம் ஒருநொடியேனும் நம் கைகளை  அதிகம் அசைக்காமல் நிற்போம் அவசரங்களின்றி, இயந்திரங்களின்றி அதிசயமாய் நாம் அனைவரும் இணைந்திருப்பது விநோதமாய்த் தோன்றலாம். திமிங்கலங்களுக்குத் தீங்கிழைக்க  மாட்டார்கள்  குளிர்ந்த கடலில் மீனவர்கள். காயம் பட்டத் தம் உள்ளங்கைகளைக் கவனிப்பார்கள் உப்பைச் சேகரிக்கும் மனிதர்கள். பசுமைக்கு எதிராக காற்றுக்கும் நெருப்புக்கும் எதிராக போர்கள் தொடுத்து எவரும் எஞ்சியிராத களத்தில் வெற்றியைக் கொண்டாடுவதை விடுத்து தூய ஆடைகள் அணிந்து சகோதரர்களுடன் இணைந்து நிழலில் நடக்கலாம், எதுவும் செய்யாமல். நான் சொல்ல விழைவதை வாழாவிருத்தலோடு குழப்பிக் கொள்ளக் கூடாது வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது வாழும் போதே மரணிப்பதை நான் விரும்பவில்லை. வாழ்க்கையைக் கொண்டு செல்ல இத்தனை சுயநலமாய் சிந்திக்காமல் ஒருமுறையேனும் இருக்கலாம், எதுவும் செய்யாமல். அத்தகு பேரமைதி 

விருட்சம் இலக்கியச் சந்திப்பு

     நடைபெறும் நாள்                  ::     24.05.2014 (சனிக்கிழமை)     நேரம்                                            ::      மாலை 5 மணிக்கு                         இடம்                  ::                                 ஸ்ரீ அலர்மேலுமங்கா கல்யாண மண்டபம்                                                                      நடேசன் பூங்கா அருகில்                                                                       19 ராதாகிருஷ்ணன் சாலை,                                                                      தி. நகர், சென்னை 600 017        பொருள்                                               'தமிழில் புதிய இலக்கியப் போக்குகள்"     உரை நிகழ்த்துபவர்  :         எழுத்தாளர் அசோகமித்திரன்                                         அன்புடன்     (அழகியசிங்கர்)

வேர் பிறழ்ந்த மனதின் பலிபீடம்

ரேவா பெரும் மனப்பிறழ்வுக்கு பிறகு பாவனையில் எந்தவொரு பதட்டமும் இல்லையென்ற தொனியின் பலத்தோடு வலம் வருகிற எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம் நீங்கள் அறிந்திராதபடி அடிமாட்டைப் போல் அலைக்கழிக்கும் பிரியங்களுக்கு கசாப்புக் கடைகளின் ரத்தவாடை பழகி விட்ட படியாலே புன்னகையோடு  தலைவெட்டப்படும் கணத்திற்கு காத்திருக்கும் எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம் அவருக்கே தெரியாதபடி மொத்தமாய் அடைக்கப்படும் இடத்திலெல்லாம் ரகசியமெனும் ஈனஸ்வரம் கேட்கச் சகியாதவாரு அனற்றிக் கொண்டிருக்க பலியாவது தெரிந்த நொடி துண்டாகிப் போன சமாதானத்தில் சத்தியத்தின் நா தொங்க நம்பிக்கை விழிபிதுங்கி இறுதிமூச்சில் புத்தன் பிறக்கிறான் போதிமர வேரை அழித்தபடி ***

அம்மா தொட்டுப்பார்த்த வயிறும்; அதில் நானும்..

வித்யாசாகர் அ வள் எனை கர்ப்பத்தில் சுமக்கையில் இருந்த அவளுடைய ஆசைகளாகவே அவளை நான் பார்க்கிறேன்; அவள் கனவுகளை எனக்காகச் சுமந்தவள் வலிக்கும்போதேல்லாம் எனக்காகத் தாங்கிக் கொண்டவள் வயிற்றைத் தொட்டுத் தொட்டு எனைப் பார்த்த அவளுடைய கைகள் பூஜையரையைவிட மேலான எனது பெரிய மனதுள் பத்திர நினைவாகவே வைக்கப்பட்டுள்ளது. அம்மா; எனது மூச்சிக்கு சப்தம் இருக்குமெனில் எனது உயிருக்கு நிறம் இருக்குமெனில் எனது வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குமெனில் அதத்தனையும் அம்மா; அம்மா மட்டுமே.. இன்று எனக்கு வலித்தாலும் இன்று நான் அழுதாலும் என்னோடு சேர்ந்து அழுவது அம்மாவாகவே இருக்கிறாள் எப்போதைக்கும்.. அவள் கொடுத்த சோற்றின் அவள் கொடுத்தப் பாலின் அவள் தந்த மூச்சின் அறையெங்கும் அவளையே தேடுகிறது மனசு.. அம்மா எங்கே அம்மா எங்கே என்று ஏங்குகிறது மனசு.. அம்மா இல்லையே என்று கசங்கி அழுகிறது மனசு.. அம்மா இல்லாத நானும் இருந்தும் இல்லாதவன் தான்.. உண்மையில் எனக்கு அம்மா காலத்திற்கும் வேண்டுமாய் இருந்தாள், அவளில்லாத இரவுபகல் அவளோடு தீரவேண்டுமாய் இருந்தது, தீராத நாட்களோடு வதைபடுகிறேன் அம்மாவைத் த

புள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 6

     வட்டம் 1     வாழ மனமில்லை     சாக இடமில்லை     வானில் மேகமில்லை     ஆனால்     வெயிலும் மடிக்கவில்லை     கந்தைக் குடைத்துணி     யெனக்     கிடக்கும்     தன்னினமொன்றைச்     சுற்றிச்சுற்றி வருமிக்     கறுப்பின்ஓலம்போல்     செத்துக் கிடக்கும்     சுசீலாவை     வட்டமிட்டு     வட்டமிட்டு     வட்டமிட்டு.......                         நகுலன்

எதையாவது சொல்லட்டுமா.....93

                                                                                                        அழகியசிங்கர்     இந்த ஆண்டு பிப்பரவரி மாதம் போல் ஒரு சோதனையான மாதத்தை நான் சந்தித்ததே இல்லை.  வங்கியிலிருந்து 33 ஆண்டுகளுக்கு மேல் பணி ஆற்றி பதவி மூப்பு அடைகிறேன் என்பதை நினைத்துப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தது.  அதாவது பிப்பரவரி மாதம் நான் பதவி  மூப்பு அடையும் மாதம்.  அந்த மாதம்தான் எனக்குப் பிரச்சினையான மாதமாக மாறிவிட்டது.  கண் பொறை காரணமாக எனக்கு இரண்டு கண்களிலும் சரியான பார்வை இல்லை.  வண்டி ஓட்டிக்கொண்டு செல்லமுடியவில்லை. கணினிகளைப் பார்க்க முடியவில்லை.   கண் பார்வையைச் சரி செய்யலாமென்றால் சர்க்கரை நோயையும், உயர் அழுத்த நோயையும் சரி செய்தால் முடியும்.  அதை உடனே செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் அலுவலகம் போகலாமா வேண்டாமா என்ற நிலை.  ஆனால் அலுவலகத்திற்கு வரும்படி தொந்தரவு.  வேறு வழியில்லாமல் அலுவலகம் வந்துகொண்டிருந்தேன்.  நிம்மதியாக ஏன் பதவி மூப்பு அடைய முடியவில்லை என்று தோன்றி கொண்டிருந்தது.     ஜனவரி 26ஆம் தேதியிலிருந்து எனக்கு இந்தப் பிரச்சினை.  அதனால