Skip to main content

Posts

Showing posts from October, 2022

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 42

எல்லோருக்கும் வணக்கம் , சகலமானவர்களுக்குத் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இரு கதைஞர்கள் குறித்து ( 1. ஆர்வி 2. ஜே.வி.நாதன்) 6 எழுத்தாள நண்பர்கள் உரை. அதன் காணொளியை கண்டு மகிழுங்கள் சிறப்பாக நடந்து முடிந்தது

91வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

அழகியசிங்கர்  சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 91வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 21.10. 2022  -  மாலை 6.30மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது  ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள்.  கூடவே கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகளும் வாசித்தார்கள்    .  கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கவிதைகள்  குறித்து  ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்    இதன் காணொளியைக் கண்டு ரசியுங்கள் 

நேற்று எழுத்தாளர் சிவசங்கரியின் பிறந்த நாள்

  அழகியசிங்கர்  இலக்கியம் மூலம் இந்தியா இணைப்பு என்ற நான்கு பாகங்கள் கொண்ட புத்தகத்திற்க்காக நான் எழுத்தாளர் சிவசங்கரியை மதிக்கிறேன்.  இது  ஒரு  ஆசாத்தியமான முயற்சி. அவருடைய சிறுகதைகளை  விருட்சம் கூட்டத்தில் அலசினோம்.  அதை இங்கு மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறேன்.  

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 42

  அழகியசிங்கர்   வெள்ளிக்கிழமை (14.10.2022)  மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்தது  அதன் காணொளியை ரசித்துப் பார்க்கவும்  எழுத்தாளர் கல்கி சிறு கதைகளைக் குறித்து  1. எஸ் ஆர் சி  - அருணாசலத்தின் அலுவல் 2. ஆர்க்கே - நம்பர் 888 3. சுரேஷ் ராஜகோபால் - தற்கொலை எழுத்தாளர் பஞ்சாட்சரம் செல்வராஜன் சிறு கதைகளைக் குறித்து. 1. இராய செல்லப்பா - பிராயச்சித்தம்  2. பானுமதி - தந்தை என் நோற்றான் 3. கலாவதி பாஸ்கரன் - கடைக்குட்டி தீராஜ்

90வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 90வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக 07.10.2022 வெள்ளி அன்று நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை சிறப்பாக வாசித்தார்கள். கூடவே புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தார்கள். ந.பிச்சமுர்த்தி கவிதைகள்  குறித்து க.வை.பழனிசாமி  பத்து நிமிடங்கள்  சிறப்பாக உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியை  காணொளியில் கண்டு மகிழுங்கள்.

இன்று ஞானக்கூத்தன் பிறந்த நாள்

  அழகியசிங்கர் 1980 ஆண்டிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக ஞானக்கூத்தனை அறிவேன். அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பத்தை என் நண்பர் எஸ். வைத்தியநாதன் ஏற்படுத்திக் கொடுத்தார். வைத்தியநாதனை முதன் முதலாக ஒரு இலக்கியச் சிந்தனையின் ஆண்டு விழா அன்று சந்தித்தேன். அப்போதுதான் எனக்குப் பல நண்பர்களை வைத்தியநாதன் அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப்படுத்திய நண்பர்களில் ஒருவர்தான் ஞானக்கூத்தன். அவரைச் சந்திக்கும்போது நானும் கவிதை எழுதுபவனாகத்தான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்படி அறிமுகப்படுத்திக் கொள்வதில் எனக்குச் சற்று கூச்சமாக இருந்தது. ஞானக்கூத்தன் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். மேற்கு மாம்பலத்தில் இருக்கும் நான், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் அவரைச் சந்திப்பது வழக்கம். நான் திருவல்லிக்கேணி போவதற்கு முன் மயிலாப்பூரில் உள்ள வைத்தியநாதனையும் அழைத்துக் கொண்டு போவேன். அப்போது நான் லாம்பி என்ற ஸ்கூட்டர் வைத்திருந்தேன். கடற்கரையில் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் எங்கள் சந்திப்பு நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அங்குப் பல நண்பர்களுடன் சந்திப்பது வழக்கம். கவிதையை மட்டுமன்றி உலகத்தில் நடக்கிற வ

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 41

  அழகியசிங்கர்  வரும் வெள்ளிக்கிழமை அன்று- (30.09.2022)  மாலை 6.30 மணிக்கு இரண்டு  எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள். 1. எழுத்தாளர் வைக்கம் முஹம்மது பஷீர் 2. எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ்

புத்தகம் அறிமுகம்...1

அழகியசிங்கர் 23ஆம் செப்டம்பர் மாதம் 6 புத்தகங்களை குவிகம் வெளியிட்டது.  அது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி.   அன்று மதியம் டாக்டர் பாஸ்கரனிடமிருந்து ஒரு போன்.  'சார், மேடையில் என் புத்தகம் ஒன்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமா?' என்று கேட்டார். 'சரி' என்றேன்.  அன்றைய நிகழ்ச்சியில் எனக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது. டாக்டரின் புத்தகம் பெயர் 'குவிகம் கடைசிப் பக்கம் பகுதி ௨'. புத்தகத்தின் அமைப்பு கைக்கு அடக்கமாக இருந்தது. 185 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் விலை ரூ.200.  30 கட்டுரைகள் கொண்ட புத்தகம்.    குவிகம் மின்னிதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதித் தொகுத்தது.  நான் முழுப் புத்தகத்தைப் படிக்காவிட்டாலும் என்னால் ஓரளவு இந்தப் புத்தகம் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்புத்தகத்தின் பெரும்பாலான கட்டுரைகள் ஏற்கனவே முகநூலில் வாசித்தித்திருக்கிறேன். என்றாலும் மொத்தப் புத்தகத்தையும் முழுவதும் படிப்பது தனி அனுபவம்தான்.  முதலில் சில கட்டுரைகளை நான் வாசிக்காமலில்லை.  பரணீதரன் என்ற தலைப்பில் பல துறைகளில் வித்தகராக இருந்த எழுத்தாளர் பரணீதரன் பற்றி எழுதியிர