Skip to main content

Posts

Showing posts from April, 2012

எதையாவது சொல்லட்டுமா.........71

காலையில் அப்பா என்னைப் பார்த்துச் சொன்னார்.  ஒரே மயக்கமாக இருக்கிறதுடா? நான்  கேட்டேன்.  ''எப்போது?'' ''எப்போதும்தான்.'' ''டாக்டர்கிட்டே போகலையா?'' ''போனேன்.  அவன் சொல்லிட்டான்.  இனிமேல் மருந்தெல்லாம் வேண்டாமாம்.'' அப்பாவிற்கு 90 வயது.  நினைச்சே பார்க்க முடியாத வயது. எனக்கு 59.  பயங்கர தடுமாற்றம்.  சென்னைக்கு வந்தபிறகு சென்னையே புரியவில்லை.  மாம்பலத்திலிருந்துத திருவல்லிக்கேணிவரை டூவீலரில்தான் போக முடிகிறது.  வரும்போது, பயங்கர கூட்டம்.  வண்டியில் பறக்க முடியாது.  நடந்துதான் போகமுடியும்.  நான் வந்தவுடன், தினமும் எனக்குப் பிடித்த நடேசன் பூங்காவில் நடக்க ஆரம்பித்தேன்.  வேகம்.  சர்க்கரை அளவைக் குறைக்க வேண்டும் என்று.  காலையில் 7.45க்கு ஒரு லைட்டா டிபன் சாப்பிட்டு மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போவேன்.  மதியம் 2 மணிக்குத்தான் சாப்பிடுவேன்.  அதற்கு முன் குறைந்தது 3 காப்பிகளை விழுங்குவேன்.  மாலை வீடு திரும்பும்போது ஒரு மாதிரியாகிவிடும்.  பேசாமல் சீர்காழிக்கே போய்விடலாமா என்று தோன்றும். அதேபோல் நான் அடிக்கடி சந்தித்த

அன்பின் பிரார்த்தனை

சந்திக்கும் ஒவ்வொரு மனிதரின் அன்பையும் சந்தேகித்தபடியே சில இதயங்கள் அக்கறையை அவமதிப்பாக பரிவைப் பாசாங்காக மூளையின் துணைகொண்டுக் காரணங்களை அலசி அலசி அன்பைத் திரித்து மகிழ்கின்றன  பேதமையின் உச்சத்தில். யார் யார் வாயிலாகவோ சுற்றிச் சுற்றி முயன்றும் தாம் தாமாகத் தங்க முடியாத இடத்தில் சுயமிழந்துவிடும் சாத்தியங்களுக்கு அஞ்சி விலகத் தொடங்குகிறது  வேதனையுடன் அன்பு அமிர்தக் கடலில் மூழ்கிக் கிடந்தாலும் நச்சு கலந்த இரத்தத்தையே இதயத்துக்குப் பாய்ச்சுவேன் என அடம்பிடிக்கிற ஆன்மாக்களின் பரிசுத்தத்துக்குப் பிரார்தித்தபடி. ***    

புதிர் விளையாட்டு!

கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில் வரிப்புலியொன்றும் புள்ளிமான் இனத்தினது இரண்டும்  மிகுந்த வேட்கையிலிருந்தன முதலாவது வாழ்வு பசிக்காகவும் இரண்டாவது மரண பசிக்காகவும் சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி அசை உண்ட தருணம் தாகம் உப்பிய பேராற்றங்கரை காளிச்சிலைக்குள் மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான் கடவுள்!                   

பிழை

நதி வெள்ளம் கடல் நோக்கி என்னவளின் வீட்டின் கதவு திறக்காது தாமதமாய்ப் போனால் மேகங்கள் தூது போகும் என்னவளின் செளக்கியத்தைச் சொல்லாது மழை நீர் பேதம் பார்த்தா மனிதனைத் தொடும் பயணம் இரவுகளைத் தொலைக்கும் பிரிவு வரத்தை யார் தான் வேண்டுவார்கள் வெண்மேகம் கரைந்தோடும் நினைவுப் போரலைகள் விண்ணைத் தொடும் நெஞ்சம் நிழலாடுகிறது நிழல்கள் கூட உன்னைப் போலவே தெரிகிறது எழுதுகோலில் மை இருக்கிறது கவிதை எதிரில் உட்கார்ந்திருக்கிறது.

பூனைகள் உலகம்

1 -  நினைவுப் பூனை ____________________ அன்றொரு பூனை பார்த்தேன் முதுகு தடவி கொடுக்க ஆளின்றி கண்ணில் மென்சோகம் கவிழ்ந்து மெதுவாய் நடந்து சென்றது . பூனையின் சொந்தக்காரன் இழுத்த இழுப்பில் கழுத்தில் பட்டையொடு விரைந்ததப் பூனை . பின்னொருநாளில் அந்த பூனையைப் பார்க்கையில் சோகம் கழிக்க என்று கையேந்த  யோசித்த நேரம் கையில் கீறி ரத்தம் சொட்டச் செய்தது வீட்டுப் பூனையின் நினைவு **** 2 - பூனையின் குரல் _________________ நாயும் பூனையும் நித்தம்  சண்டையிடும் வீட்டில் நாயின் குரல் ஓங்கி இருந்தது இருவரையும் நிறுத்தச் சொல்லிக் கத்தி சென்றான் வீட்டுக் காரன் பூனையின் குரல் அவனிடமும் வழக்கம் போலவே தாழ்ந்திருந்தது. உன் நியாயத்தை எஜமானனிடமாவது  எடுத்து சொல் என்றேன் பூனையிடம் என் அடிமைகளிடம் நான் அதிகம் பேசுவதில்லை என்றது அந்த பூனை. ****** 3  -  இளிச்சவாய் பூனை. ___________________ மகளின் கதைப் புத்தகத்தில் அறிமுகமானது அந்த பூனை காதளவு நீளும் புன்னகையுடன் உனக்கும்  சிரிப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றேன் சிரிப்பை எனக்களித்து ஓடிப் போய்விட்டது. இப்போத

மிதக்கும் பல்லி

  அந்த பல்லி ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு ஒப்பனையில் பறந்து சென்றது செயற்கைகோளின் துணையுடன். அதை மரப்பல்லி , காட்டுப்பல்லி,பறக்கும்பல்லி என்றனர் சிலர் அது பெண் பல்லி என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. பல்லிக்கு இறக்கை கட்டினால் பறவையாகிவிடுமா? பல்லி வளருமா? யாராவது வளர்ப்பார்களா? பல்லி இழந்த வால் என்னவாகும்? என விவாதித்தனர் சிலர். பல்லி எதிர்காலத்தில் வளர்ந்து டைனோசர் ஆகி விடுமா என்றஞ்சியோர் ‘நீ பல்லியே அல்ல - கொசுதான்’ என போதித்தனர் அதன் காதில். பல்லி இனம் அழிந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டனவே எனக்கூறிக் கொண்டே அதன் தலையை நசுக்க வந்தோரிடம் தன் தலையை கழற்றிவிட்டு விட்டு பிரபஞ்சபத்தில் மிதக்கத் தொடங்கியது பல்லி •••
ழ 6வது இதழ் பிப்ரவரி / மே 1979 ஒரு கவிதை  இந்தக் காலத்தில்  பிரும்மத்தை  கள்ளச் சந்தையில்  விடீயில்  மந்திரிகளின் பொய்களில்  எதிலும் (மே) குறைபிரசவத்தில்,   அவசரத்தில்  தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்தான்  காணமுடியும் போலிருக்கிறது.    -மீண்டும்-  இந்தக் காலங்களில்  தெய்வத்திற்கும் (கூட) ஊர்  சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது  என நினைத்தேன்-  சினிமாவெறும் கோவிலில்  நேற்று இரவு அவள் வந்தாள்  சிரித்தாள்  சொல்லறுற்றாள்  ''எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை''         S SAMPATH

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில் இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள் காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும் வலையினில் சிக்கிக் கொள்கிறது தண்ணீரில் முளைத்த பௌர்ணமி வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல் சலசலத்து எழுப்பும் இசை தேனீக்களுக்குத் தாலாட்டோ எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர் , சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு தூய மலர்களோடு அணிவகுக்கும் வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு வழிகாட்டும் நிலவின் விம்பம் அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது நீரின் மேல் மிதந்த நிலவு அசைந்து அசைந்து மூழ்கும் காலை தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில் தொலைதூரச் செல்லும் பறவைகள் தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான் சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

புத்தரின் நிழல்

  வீட்டு வரவேற்பறையில் புத்தர் சிலை முன் ஏற்றப்படும் தீபத்தின் கைங்கரியம். அறையிருட்டில் புத்தர் உயிர் பெற்று விஸ்வரூபமெடுக்கிறார். இலேசான காற்றில் தீபச்சுடர் ஆடுகையில் புத்தரின் நிழல் தலையசைத்து மௌனப்பிரவசனம் செய்வதாக தோன்றும் எனக்கு. மின்வெட்டு முடிந்து வெளிச்சம் திரும்பினால் அசையும் நிழல் புத்தர் மறைந்து விடுகிறார். புத்தர் சிலை மட்டும் வீற்றிருக்கும். புத்தர் மீண்டும் உயிர் பெற இருட்டுக்காக காத்திருக்க வேண்டும் -- Thanks and Regards Ganesh Tel : +91 9910120872   Buddha's shadow.jpg 1643K