Skip to main content

Posts

Showing posts from February, 2023

கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு

  24.02. 2023 - மாலை - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு அழகியசிங்கர் விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு. நிகழ்ச்சி எண் - 49 முதல் நிகழ்வு எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் சிறு கதைகளைக் குறித்து 1. மருத்துவர் ஜெ.பாஸ்கரன்- மாபெரும் சூதாட்டம் 2. முபீன் சாதிகா - கடந்து கொண்டிருக்கும் தொலைவு 3. பேராசிரியர் இராமச்சந்திரன் - எலும்புக்கூடுகள் இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன் சிறுகதைகளைக் குறித்து 1. ரேவதி பாலு - கடவுள் சித்தம் 2. மீனாட்சி சுந்தர மூர்த்தி - துணை 3. பி.ஆர். கிரிஜா - யார் அறிவாளி பேசியவர்கள் அனைவரும் சிறப்பாகப் பேசினார்கள். இக்கூட்டத்தைக் கனடா தேசத்தில் வசித்த சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் பசுபதி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளோம்.

97வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. வெள்ளிக்கிழமை - 17.02. 2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள். சுந்தர ராமசாமியின் கவிதைகளைப் பற்றி க.வை. பழனிசாமி சிறப்பாக உரை நிகழ்த்தினார். முபீன் சாதிகா ஆத்மாநாமின் நிஜம் கவிதையை வெகு சிறப்பாக விளக்கினார். வாசிக்கும் கவிதைகளைக் கேட்டு இராய செல்லப்பா தன் மேலான கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியை இப்போது காணொளியில் கேட்டு ரசியுங்கள்.

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

  அழகியசிங்கர் சூம்  மூலமாக விருட்சம் பெருமையுடன்  வழங்கும் 96வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசித்தார்கள். கூடவே  நாமக்கல் கவிஞர் கவிதைகளைப் பற்றி கோ.வைதேகி சிறப்பாக உரை நிகழ்த்தினார். வாசித்த  கவிதைகளைக் கேட்டு வளவ. துரையன்  தன் மேலான கருத்துத் தெரிவித்தது சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின்  காணொளியைப்  பார்க்கவும்.