Skip to main content

Posts

Showing posts from October, 2021

கவிதையும் ரசனையும் – 22

  அழகியசிங்கர் ஒரு கவிதைப் புத்தகத்திலிருந்து இரண்டு கவிதைகளை எடுத்து ஆராய வேண்டுமென்று நினைக்கிறேன்.கடற்கரய்யின் ‘காஃப்காவின் கரப்பான் பூச்சி.’ பிப்ரவரி 2021 அன்று வெளிவந்த புத்தகம். காஃப்காவின் கரப்பான் பூச்சி என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் கடற்கரய் எழுதிய கவிதைத் தொகுப்பு இது. ‘தேவதைகள் அல்லர்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். பொதுவாக ஒரு கவிதையை எடுத்து எழுதினால் போதும் எல்லா வரிகளும் நமக்குப் புரிந்து விடும். அதன்பின் அதற்கு விளக்கத்தைத் தர வேண்டுமென்பதில்லை. ‘தேவதைகள் அல்லர்’ என்ற கவிதையை இங்குத் தருகிறேன். தேவதைகள் அல்லர் எனது பிள்ளைகளை நான் தேவதைகள் எனச் சொல்ல மாட்டேன். ஏனெனில்; தேவதையை எனக்குத் தெரியாது. என் பிள்ளைகளை ராஜா என்று நான் கொஞ்ச மாட்டேன். ஏனெனில் மன்னர்கள் மக்களுடன் இருப்பதில்லை . என் பிள்ளைகளை நான் வைரம் என்று ஒப்பிட மாட்டேன் ஏனெனில் அதைப் பாமரர்கள் பார்த்ததில்லை என் பிள்ளைகள் எப்போதும் என் பிள்ளைகள்தான். பிறப்பால், பின் தங்கியவர்கள். வரலாற்றால், ஒடுக்

மகாத்மா காந்தி நூல் நிலையத்திலிருந்து ஓர் அழைப்பு..

  07.10.2021 துளி - 223 அழகியசிங்கர் ஒருநாள் ம. நித்யானந்தம் போன் செய்தார். ஒரு பரிசு கொடுக்கப் போகிறோம் என்றார் . சக்தி கிருஷ்ணசாமி விருது வழங்கப் போவதாகக் கூறினார். நேரிடையாக வீட்டிற்கு வந்திருந்து அழைப்பிதழைக் கொடுத்தார். என் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினேன். என்னையும் ஞாபகப்படுத்துகிறீர்களே என்றேன். ஒரு முறை ம. நித்யானந்தம் குவிகம் கூட்டத்தில் எல்லாக் கோயில்களைப் பற்றிப் பேசினார். உண்மையில் ஆச்சரியப்பட்டுப் போனேன். உண்மையில் நான் ரொம்பவும் பக்தி உள்ளவன் கிடையாது. எனக்கு அவர் பேசியதைக் கேட்ட பின் ஒவ்வொரு கோயிலாகப் போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. வருகிற (10.10.2021) பத்தாம் தேதி 69வது ஆண்டு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா அன்று சக்தி கிருஷ்ணசாமி விருதைப் பெறுகிறேன் ஞாயிறு காலை 10.30 மணிக்கு அருள்மிகு சொர்ணாம்பிகை திருமண மண்டபம், குளக்கரை தெரு, சைதாப்பேட்டை, சென்னை 15 என்ற இடத்தில் நிகழ்ச்சிக்கு வந்திருந்து கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.இத்துடன் அழைப்பிதழை உங்கள் பார்வைக்கு இணைக்கிறேன். 2 You and Rangarajan Sridhar

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 21

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை (09.10.2021) மாலை 6.30 மணிக்கு. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைஞர்கள் 1. சிட்டி 2. சீதா ரவி வழக்கம்போல் 8 இலக்கிய நண்பர்கள் கதைகளைச் சுருக்கமாகக் கூறி கதையைப் பற்றி உரையாடுகிறார்கள். சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 21வது கதை வாசிப்புக் கூட்டம். Time: Oct 9, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82567412507... Meeting ID: 825 6741 2507 Passcode: 102835 1 Chandramouli Azhagiyasingar Like Comment Share 0