Skip to main content

Posts

Showing posts from April, 2019

துளி : 49 - அமெரிக்கன் நூலகங்கள் பற்றிச் சொல்ல வேண்டும்

அழகியசிங்கர் பீனிக்ஸ் என்ற இடத்தில் நாலைந்து அமெரிக்கன் நூலகங்கள் உள்ளன.  இங்கு எந்த நூலகத்திலும் புத்தகங்கள் எடுக்கலாம்.  புத்தகங்களை கௌன்டரில் கொடுக்க வேண்டுமென்பதில்லை.  இங்குள்ள எலெக்டிரானிக் கருவியின் முன் புத்தகங்களை நீட்டினால் அது புத்தகத்தைப் பதிவு செய்துகொள்ளும்.  ஆட்கள் யாரும் இதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  பிறகு ரிட்டர்ன்ஸ் என்ற பெட்டியில் புத்தகங்களைப் போட்டு விடலாம். ஒரு நூலகத்தில் வாங்கிய புத்தகங்களை இன்னொரு நூலகத்தில் உள்ள ரிட்டர்ன்ஸில் செலுத்தி விடலாம். நூலகத்தின் ஒரு பகுதியில் சிறாருக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளது.  அதில் விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருள்கள் வைத்திருக்கிறார்கள்.  அதைத் தவிர தனியாக அவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்கள்.  அதேபோல் இளம் பருவத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன.  புத்தகங்கள் தவிர டிவிடி, சிடியையும் இரவல் எடுத்துக்கொள்ளலாம்.  எல்லாம் 35 எண்ணிக்கைக்குள் எடுத்துப் போகலாம்.  இதைவிட முக்கியமானது ரெஸ்ட் ரூம்.  இதைத் தனியாக ரொம்பவும் சுகாதாரத்துடன் வைத்திருக்கிறார்கள்.  நான் இந்த ந

செவ்வரளி

அழகியசிங்கர்         காலை நேரத்தில் பாதை ஓரத்தில் பூத்திருக்கும் செவ்வரளியைப் பறித்து மனைவியிடம் கொடுக்கிறேன் பூக்களை பூசைக்கு வைத்துக்கொண்டிருக்கிறாள் பூக்களை இழந்த செடி ஏனோ சோகத்தை உதிர்க்கிறது பூக்களைப் பறித்த கைவிரல் கசப்பை உணர்கிறது. பீனிக்ஸ் 24.04.2019 - புதன் காலை : 9.25

நீங்களும் படிக்கலாம் - 48

Colorless Tsukuru Tszaki and his years of Pilgrimage  -  Haruki Murakami - Translated by Philip Gabriel                         அழகியசிங்கர் நான் இங்கு வந்தபோது அமெரிக்கன் நூலகத்திற்குச் சென்று ஐந்து ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வந்தேன். அந்தப் புத்தகங்களின் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம். இலக்கிய உலகில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஆரூகி முராகாமி.  அமெரிக்கன் நூலகத்தில் இவருடைய புத்தகங்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம்.  அவருடைய இரண்டு நாவல்களைப் படிக்க எடுத்து வந்தேன்.  அதில் ஒன்றைப் படித்தும் விட்டேன். முராகாமி புத்தகங்களுடன் இன்னொரு நோபல் பரிசுப் பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள் இரண்டையும் அதேபோல் படிக்க எடுத்து வந்தேன்.  முராகாமி புத்தகத்தைப் படிக்கிற வேகத்தில் இன்னொருவருடைய புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.   முராகாமி நாவலில் காணப்படுகிற வேகம் மற்ற நாவல்களைப படிக்கும்போது ஏற்படவில்லை.  ஸ்டீவ் எரிக்ஷன் என்பவர் நியூயார்க் டைம்ஸில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.   “More than anyone, Haruki

துளி : 48 - இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தேன் - 2

அழகியசிங்கர் உலக அதிசயங்களில் ஒன்றான இடமாகத்தான் நான் கிரான்ட் கென்யான் என்ற இடத்தைக் காண்கிறேன்.  இந்த இடத்தின் முடிவில் முழுக்கக் கல்லால் ஆன காப்பி குடிக்கும் இடம்.  100 வருடங்களுக்கு முன்னால்  இந்த இடத்தைச் சுற்றிக்காட்டும் வழிகாட்டி இறுதியில் இந்தக் கல்லால் ஆன ஓட்டலில் காப்பி குடிப்பாராம்.  அதனால் இந்த இடம் பிரபலமானது என்று சொல்கிறார்கள். கிராண்ட் கென்யானில் உள்ள ஓட்டலில் இரவு தங்குவது அதிக அளவிற்கு வாடகைத் தரவேண்டும் என்பதால்  வ்ளாக் ஸ்டாவ் என்ற இடத்தில் உள்ள டேஸ் இன் என்ற ஓட்டலில் தங்கினோம்.  கிôôன்ட் கென்யான் கிட்டத்தட்ட 100 மைல் தூரத்தில் இந்த ஓட்டல் இருந்தது.   அங்கிருந்து நாங்கள் கிளம்பி சென்ற இடம் லாஸ் வேகாஸ் என்ற இடம்.   24 மணி நேரமும் ஒரு நகரம் விழித்துக்கொண்டிருக்குமென்றால் அது லாஸ் வேகாஸ் என்ற இடம்தான்.   பெரிய பெரிய ஓட்டல்கள்.  மேல்நாட்டு இசையின் சப்தம். கூடவே சூதாட்டம்.  110 மாடிகள் கொண்ட ஸ்டாராட்ஸ்பியர் என்ற 5 நட்சத்திர ஓட்டல்.  நாங்கள் 7வது மாடியில் உள்ள அறையில் இருந்தோம்.  பிரமிப்பாக இருந்தது. அன்று இரவு 108வது மாடிக்குச் சென்று வேகாஸ்

துளி : 48 - இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தேன் - 1

அழகியசிங்கர் நான் இருக்குமிடத்தில் குளிர் போய்விட்டது.  எப்போதும் காலை 10 மணிக்குமேல் சென்றாலும் குளிர் அடிக்கும்.  நகர முடியாது.  ஆனால் இப்போதோ காலை 8 மணிக்கே தாங்க முடியாத வெயில். ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில்தான் வெளியில்  செல்வோம்.  போன சனி ஞாயிறுகளில் 2 முக்கியமான இடங்களுக்குச் சென்றோம்.   காலையில் 8 மணிக்குக் கிளம்பிவிட்டோம்.  கார்.  அரவிந்த் (என் பையன் பெயர்) காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.  மலைகள் சூழும் இடத்தில் வண்டி சென்றுகொண்டிருந்தது.  நடுவில் சாலை.  இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மலைகள்.  பூமியிலிருந்து 7000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சிக்குச் சென்றோம்.  நாங்கள் சென்றது சனிக்கிழமை மதியம் மேல்.  ஒரே கூட்டம்.  கிரான்ட் கென்யான் என்று அந்த இடத்திற்குப் பெயர்.  பெரிய பள்ளத்தாக்கு என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  அதைப் பார்த்துவிட்டு அசந்து போய்விட்டேன்.   பெரிய பள்ளம்.  பள்ளத்தில் பாறைகள். அந்தப் பள்ளமும் நீண்ட பள்ளமுமாக இருக்கிறது.  பெரிய விஸ்தாரமான பள்ளம்.   மாலை நேரத்திற்கு மேல் அங்கிருப்பது தவறு என்று எங்களுக்குத் தோன்றியது.  குளிர் தாங்க

துளி : 47 - ஜெயகாந்தனின் யுகசந்தி

அழகியசிங்கர் தமிழ் எழுத்தாளர்களில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.  அந்தக் காலத்தில் ஆனந்தவிகடன் அலுவலகத்திற்குள் நுழையுமுன் பான்ட் ஷர்ட் அணிந்துகொண்டு மிடுக்குடன் நுழைவார்.  மற்ற எழுத்தாளர்கள் வேஷ்டி, சட்டை அணிந்திருப்பார்களாம். இதெல்லாம் ஜெயகாந்தன் பற்றி மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருமுறை என் கல்லூரியில் ஜெயகாந்தன் பேசும்போது மாணவர்களைப் பார்த்து தைரியமாகப் படிப்பதை விட மாடு மேய்க்கலாம் என்று சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. என்ன இவ்வளவு தைரியமாக மாணவர்கள் முன் பேசுகிறாரே என்று நினைத்ததுண்டு. ஜெயகாந்தனுக்கு பாரதி மேல் பற்று அதிகம்.  உண்மையில் அவர் தன்னை பாரதி மாதிரியே நினைத்துக்கொண்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.  ஆலந்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஜெயகாந்தன் பேசப்போகிறார் என்பதை அறிந்து நான் அந்தப் பள்ளிக்கு முன்னதாகவே ஜெயகாந்தன் பேசுவதைக் கேட்கப் போயிருந்தேன்.  ஜெயகாந்தன் தெருமுனையில் பள்ளியை நோக்கி நடந்து வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  தலையில் தான் வைத்திருந்த துண்டை எடுத்து முண்டாசு மாதிரி கட்டிக்கொண்ட

துளி : 46 - உலகப் புத்தகத் தினம்..

அழகியசிங்கர் போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.   இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன்.  இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.  அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு புத்தகங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன்.  எனக்குப் பிடித்த எழுத்தாளரான ஐ பி ஸிங்கரின் சிறுகதைகளைப் படிக்கிறேன். ஒரு முறை நூலகத்தைச் சுற்றி வரும்போது ஒரு மூலையில் புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனைக்கு என்று எழுதப்பட்டிருந்தது.  சாதாரண புத்தகமாக இருந்தால் கால் டாலரும், கனமான அட்டைப் போட்டிருந்த புத்தகமாக இருந்தால் 1 டாலரும் ஏன்றும் போட்டிருந்தது.  இதைத் தவிர நேஷனல் ஜியாகரபி, டைம் பத்திரிகை விலை குறைவாக விற்கிறார்கள். ஒவ்வொரு நூலகத்திலும் ஒவ்வொரு விதம்.  டிவிடி, சிடி எல்லாம் விற்கிறார்கள். விற்கிற இடத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.  நாம்போய் புத்தகத்தை எடுத்துக்கொண்டு நன்கொடையாக ஒரு மரப்பெட்டியில் காசைப் போடவேண்டும்.     இந்த உலகப் புத்

ஏப்ரல் 20ஆம் தேதி....

. அழகியசிங்கர் ஒருநாள் மாலை நேரத்தில் பிரமிள் வீட்டிற்கு வந்தார். என் கையைக் குலுக்கினார்.  'இன்று ஒரு முக்கியமான நாள்,  உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  'என்ன?' என்று கேட்டேன்.  'என்னுடைய பிறந்த நாள் இன்று,' என்று சொன்னபோது, ஆச்சரியமாக இருந்தது. பொதுவாகச் சந்தித்துக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் பிறந்த தின வாழ்த்துக்கள் தெரிவிப்பது இல்லை. பிரமிளும் நானும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று பிறந்த தினத்தைக் கொண்டாடினோம். எழுத்தாளர் க நா சு ஜனவரி மாதம் 31ஆம் தேதி 1912ல் பிறந்தவர்.  அவருடைய 100வது வயது 2012ல் முடிவடைந்தது.  என் நண்பர் ஞானக்கூத்தன் அவர்கள் அவருடைய பிறந்த தினம் வருகிறது அதை முன்னிட்டு எதாவது கூட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.   அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லை.  மயிலாடுதுறையிலிருந்தேன்.  என்னால் க நா சுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  ஞானக்கூத்தனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் நான் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடிந்தது.  க.நா.சு கவிதைகளைச் சிலவ

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் - 2

அழகியசிங்கர் (ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார்.  அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் மறைந்தார். நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன். அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன்.  முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன்.  தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.) கே.கே : நான் மருத்துவத் துறையைச் சார்ந்தவன்.  நான் அதிகமாகவே படித்திருக்கிறேன்.  உடல் பயிற்சி செய்வதன் மூலமும், தேவைக்கேற்ப உடலைப் பரிசோதனை செய்வதன் மூலமும் நான் ஒழுங்கைக் கடைப்பிடித்து வருகிறேன்.   மஹா : ஆனால் மனதைத் தொட்டு சொல்லுங்கள். நீங்கள் விரும்புவது என்ன? கே.கே : உண்மையை அறிய விரும்புகிறேன். மஹா : உண்மையை அறிய என்ன விலை கொடுக்க விரும்புகிறீர்கள்?  எதாவது விலை உண்டா? கே.கே : அதற்கு தியரிப்படி எதாவது விலை கொடுக்கத்தான் விரும்புகிறேன்.  இந்த வாழ்க்கையில் த

ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் - 1

அழகியசிங்கர் ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் அவர்கள் 17 ஏப்ரல் மாதம் 1887 அன்று ஹனுமான் ஜெயந்தி அன்று பிறந்தார். அவர் இயற்பெயர் மாருதி. 84 வயதில் 1981ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் மறைந்தார். நான் ஏற்கனவே நான்தான் அது என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து விருட்சத்தில் வெளியிட்டுள்ளேன். அவருடைய பிறந்த தினத்தை ஒட்டி அவருடைய மொழி பெயர்ப்பைத் தருகிறேன்.  முகநூலில் தர இருப்பதால் இரண்டு அல்லது மூன்று தவணையாகத் தர உள்ளேன்.  தொடர்ந்து வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ் கேள்வி கேட்பவர் : தொழில் ரீதியாக நான் ஒரு மருத்துவன்.  நான் அறுவை சிகிச்சைச் செய்பவனாக என் தொழிலை ஆரம்பித்தேன்.  பின், மனோதத்துவ நிபுணனாகத் தொடர்ந்தேன்.  மேலும் நான் சில மனோதத்துவப்  புத்தகங்களையும் எழுதியிருக்கிறேன்.  நம்பிக்கையின் மூலம் குணப்படுத்த முடியுமென்று நம்புகிறவன்.  நான் உங்களைப் பார்க்க வருவதற்கு முக்கிய காரணம், ஆன்மிக விதிகளைக் கற்பதற்குத்தான். ஸ்ரீநிஸகர்கதத்தா மஹாராஜ்  : ஒரு நோயாளியின் நோயைத் தீர்க்குமுன் நீங்கள் எந்தவிதமாக நோயைத் தீர்

நகுலனும் நானும்

அழகியசிங்கர் ஒருமுறை நகுலன் வீட்டிற்கு வந்திருந்தார் வாருங்கள் என்று அப்பா கூப்பிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தார் குடிக்க நானும் நகுலனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் என்னைப் பார்த்து கண் சிமிட்டினார் நகுலன் 'அந்தத் தண்ணீ கிடைக்குமா?' என்று அப்பாவுக்குப் புரியவில்லை பின் நடந்தோம் தெருவில் 18கே பஸ் திருப்பத்திலுள்ள ஒயின் ஷாப்பில் குவார்டர் ரம் வாங்க நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு நின்றார் ஏனோ பொருத்தமில்லாமல் பட்டது ஒரு பிராமணக் கிழவன் என்று முணுமுணுத்தான் ஒயின்ஷாப்காரன். 12.04.2019-பீனிக்ஸ் அமெரிக்கா

துளி : 44 - யாரும் படிப்பதில்லையா?

அழகியசிங்கர் எழுத்தாளர் பிரபஞ்சன் ராயப்பேட்டையில் கோபாலபுரத்தில் குடியிருந்தார்.  புதுமைப்பித்தன் கதைகள் முழுவதும் படித்துவிட்டு அது குறித்து வாரம் ஒருமுறை அவருடைய வாசகர்களுடன் உரையாட நினைத்தார்.  கூடவே ஒரு சிறுகதையை எப்படி எழுதுவது எப்படி என்பதையும் சொல்லிக்கொடுக்கவும் விரும்பினார்.  ஆனால் சில வாரங்களுக்குப் பிறகு இது தொடர்ந்து நடக்கவில்லை.  இதெல்லாம் ரொம்ப ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை.  முக்கியமான ஒன்றாக இதைக் கருதுகிறேன்.  கதைகளை வாசிக்கவும் கதைகளை எழுதவும் ஒரு தளத்தை அவர் உருவாக்க முயன்றார். முடியவில்லை. பிரபஞ்சனின் சிறுகதைகள் 3 பாகங்களாக வெளிவந்துள்ளன.  அவருடைய எல்லாக் கதைகளையும் வாசிக்கும்போது பிரபஞ்சனின் உலகம் என்னவென்று தெரியும். பிரபஞ்சனாவது கொஞ்சமாவது அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். ஆனால் அவரைப்போல் திறமையாக எழுதக்கூடிய வேறு பல எழுத்தாளர்களை யாரும் கண்டுகொள்ளக் கூட இல்லை. எழுத்தாளர் மா அரங்கநாதன் பெயரில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளை மூலம் கடந்த இரண்டாண்டுகளாகப் பல படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கிறது. மா அரங்கநாதனின் குடும்பத்தினர் மூ

துளி : 43 - எது சுலபமானது?

அழகியசிங்கர் இந்த ஆண்டும் தினமணி கதிர் - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது முறையாக என் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பிற்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்து அதற்கென்று ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமென்று நினைக்கும் எழுத்தாளர் சிவசங்கரியைப் பாராட்டுகிறேன்.  இந்தத் திட்டத்திற்கு தினமணி கதிரும் உறுதுணையாக இருப்பதற்குப் பாராட்டப்பட வேண்டும்.   தமிழில் இதெல்லாம் நடந்தால்தான் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் தோன்றுவார்கள்.  ஆனால் வாசகர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டுவது என்பது தெரியவில்லை. அமெரிக்காவில் நான் தங்கியிருக்கும் பீனிக்ஸில் தமிழ் சங்கம் என்று எதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்.  பெரிய ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது. தமிழ் மொழி தெரிந்தும் தமிழில் பேசாதவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.  இங்குள்ள தமிழ்ச்சங்கம் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள்.  தமிழில் பேசுபவர்களே தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எங்கே தமிழ்ச் சிறுகதையோ கவிதையோ படிக்கப் போகிறார

துளி : 42 - நான்கு மதிப்பெண்களுக்கு மேல்..

அழகியசிங்கர் அமெரிக்கா போகிறேன் என்று எழுத்தாளர் கந்தசாமியிடம் சொன்னபோது, 'நிறையா பொழுது கிடைக்கும்யா புத்தகங்கள் படிக்கலாம், எழுதலாம்,' என்றார்.  அவர் ஒவ்வொரு முறை அயல்நாடு செல்லும்போது ஒரு புத்தகம் எழுதாமல் வர மாட்டார்.  அவர் சொன்னதில் எழுதுவதில் முன்னே பின்னே இருந்தாலும், புத்தகங்களைப் படிக்கிறேன்.  இதே சென்னையில் இவ்வளவு தூரம் படித்திருக்க மாட்டேன்.   அதேபோல் அதிகமாக தமிழ் சினிமாக்களைப் பார்க்கிறேன்.  பொதுவாக சென்னையில் இருக்கும்போது யாராவது சொன்னால்மட்டும் தியேட்டரில் போய்ப் படம் பார்ப்பேன்.  தியேட்டரில் படம் பார்ப்பது அவதியாக இருக்கும். இங்கு  நெட்டில் சுலபமாக (பணம் கட்டியிருப்பதால் விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்) படங்களைப் பார்க்கிறேன்.  தினமும் குறைந்தது ஒரு படமாவது பார்க்காமல் இருக்க மாட்டேன்.   இன்தூசம் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களில் நான்கு மதிப்பெண்கள்  மேல் வாங்கும் படங்கள் எல்லாம், எல்லாவிதங்களில் பார்க்க சிறப்பாக இருக்கிறது.  ஐந்து கட்டங்களாகப் பிரித்து மதிப்பெண்கள் தருகிறார்கள்

துளி : 41 - ஒரு சிறிய ஆவணப்படம்

துளி : 41 - ஒரு சிறிய ஆவணப்படம் அழகியசிங்கர் 7ஆம் தேதி காலையில் 9 மணிக்குக் கிளம்பி விட்டோம்.  செடோனோ என்ற இடத்திற்கு.  அரவிந்த் கார் ஓட்டிக்கொண்டு வந்தான்.  கையில் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம்.  சுற்றிலும் மலை. செங்கல் நிறத்தில் தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. பல மணிநேரம் காரில் பயணம். ஒரு இடத்தில் கற்களின் மீது கால் வைத்து வைத்து நடக்க   வேண்டியிருந்தது.  அப்படியே நடந்து சென்று பார்த்தபோது சலனமில்லாமல் ஆறு போய்க்கொண்டிருக்கிறது.  அதில் பலரி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.   நான் எல்லாவற்றையும் கையில் வைத்திருந்த சோனி காமெரா மூலம் படம் எடுத்துக்கொண்டு வந்தேன்.  ஆனால் காமெராவிலிருது கணினிக்கு மாற்றும் சிறிய ஒயரை ராகவன் காலனியில் விட்டுவிட்டு வந்தேன்.  என்ன செய்வதென்று தெரியவில்லை.  இங்கே அதுமாதிரியான ஒயர் கிடைக்குமா என்ற கேள்வி கடந்த 1 மாதத்திற்குமேல் என்னை குடைந்துகொண்டிருந்தது.  சென்னையில் இதுமாதிரி நிலமை வந்தால், அங்கும் இங்கும் ஓடிப்போய் வாங்கிக்கொண்டு வந்து விடுவேன்.  ஒரு வழியாக என் பையன் (அரவிந்த்) வாங்கிக்கொண்டு வந்தேன்.  இதோ காமெராவிலிருந

மொழிப்பெயர்ப்பு கவிதை 1

ரேமண்ட் கார்வர் மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக இருள் விலகிக்கொண்டிருக்கிறது நான் ஜன்னல் பக்கத்தில் கையில் காப்பியுடன் எப்போதும்போல் காலை நேரம் என்ற எண்ணம் மனதில். நான் அந்தப் பையனையும் அவன் நண்பனையும் பார்க்கிறேன். தெருவில் நடக்கிறார்கள் செய்தித்தாள்களை வினியோகிப்பதற்கு. குல்லாயும் ஸ்வெட்டரையும் அணிந்திருக்கிறார்கள். தோள்பட்டையில் ஒரு பையை ஒருவன் சுமந்துகொண்டிருக்கிறேன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்கள் பேசிக்கொள்வதில்லை இருவரும் இணைந்து செல்கிறார்கள் இளம் காலைப்பொழுதில் அவர்கள் மெதுவாகச் செல்கிறார்கள். வானம் பளிச்சிடத் தொடங்குகிறது ஆனால் சந்திரன் ஒளி நீரில் மங்கலாகத் தெரிகிறது அந்த அற்புதம் ஒரு சில நிமிடம் மட்டும். மரணம், வேட்கை, காதல் கூட இதில் நுழையா. மகிழ்ச்சி. அது ஏற்படுகிறது எதிர்பாராதவிதமாய். உண்மையில் தாண்டிப் போகிறது. எந்தக் காலை நேரத்தைப் பற்றியும் பேசுவதற்கு. மொழியாக்கம் : அழகியசிங்கர் (Good Poems for Hard Times selected and introduced by Garrison Keillor)

மம்மூட்டி நடித்த பேரன்பு

அழகியசிங்க ர் இந்தப படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது படத்தில் என்ன பெரிதாகச் சொல்லமுடியப்போகிறது இயக்குநர் ராமால் என்ற எண்ணம் ஏற்பாடாமல் இல்லை. ஆனால் படம் பார்த்தப்பின்தான் மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் சாதனா மீது அளவு கடந்த பச்சாதாப உணர்வு ஏற்படுகிறது.  அப்படி ஒரு பெண்ணை வளர்ப்பது என்பது சாதாரணமாகத் தெரியவில்லை.  அந்தப் பெண்ணுடன் போராடும் அப்பாவாக நடிக்கும் மம்மூட்டியும் நம் கண்களை விட்டு அகலவில்லை.  ஆனால் இதையெல்லாம் கொஞ்சங்கூட போரடிக்காமல் படமாக எடுத்துக்கொண்டு போகிறார் ராம். இந்த முடக்குவாதப் பெண்ணைப் பார்த்துக்கொள்ள விரும்பாத அந்தப் பெண்ணின் அம்மா வேறு ஒருவருடன் வாழ ஓடிப்போய் விடுகிறாள். அவளுடைய செயல் அவள் கணவன் அமுதவன் துபாயிலிருந்து வருவதற்குக் காத்துக்கொண்டிருநததுபோல் இருந்தது.   அமுதவனுக்கு கூட இருந்தவர்களும் ஒத்துழைப்புத் தரவில்லை.  இந்தப் பெண்ணை எப்படியாவது தொலைத்துவிடு என்பதுபோல் அவன் அம்மாவே சொல்கிறாள்.   குடியிருக்கும் வீட்டிலும் அவனால் இருக்க முடியவில்லை.  அதனால் தனியாக ஒரு மலையடிவாரத்தில் உள்ள வீட்டை பத்து லட்

அசோகமித்திரனும் ஜானகிரமானும்

அழகியசிங்கர் ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி கதைப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கதைகளையும் படித்து முடித்தப்போது எனக்கு அசோகமித்திரனின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன.   என்னிடம் அசோகமித்திரன் கதைகள் படிக்க எந்தப் புத்தகமும் இங்கு (அமெரிக்காவில்) கொண்டு வரவில்லை.  ஆனால் ஒரு கேள்வி என்னுள் எழுந்தது?   இங்கு அசோகமித்திரனை விட ஜானகிராமன் சிறந்த எழுத்தாளர் என்றோ ஜானகிராமனை விட அசோகமித்திரன் சிறந்த எழுத்தாளர் என்று நிரூபிக்கப் போவதில்லை.   ஆனால் இரண்டு பேர்கள் எழுதுகிற சிறுகதைகளை அலச முடியுமா என்று யோசிக்கிறேன். ஜானகிராமன் அசோகமித்திரன் மாதிரி கதை எழுத முடியாது.  ஆனால் அசோகமித்திரன் நினைத்தால் ஜானகிராமன் மாதிரி எழுத முடியும்.  அதாவது 50 சதவீதம்.   உதாரணமாக அக்பர் சாஸ்திரி கதையை எடுத்துக்கொண்டால் அசோகமித்திரன் இப்படி எழுதி இருப்பார்.  அக்பர் சாஸ்திரி கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தார்.  யார் கூப்பிட்டும் எழுந்திருக்கவில்லை என்று எழுதி முடித்திருப்பார்.  ஆனால் ஜானகிராமன் இன்னும் கூடுதலாக. 68 வயதாகிற அக்பர் சாஸ்திரி பேசுவதை வாய் மூடாமல் எல்லோரும் கேட்டு வாயைப் பிள