Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 48



Colorless Tsukuru Tszaki and his years of Pilgrimage  - 
Haruki Murakami - Translated by Philip Gabriel 


                      
அழகியசிங்கர்




நான் இங்கு வந்தபோது அமெரிக்கன் நூலகத்திற்குச் சென்று ஐந்து ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க எடுத்து வந்தேன். அந்தப் புத்தகங்களின் ஒன்றுதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள புத்தகம்.
இலக்கிய உலகில் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் ஆரூகி முராகாமி.  அமெரிக்கன் நூலகத்தில் இவருடைய புத்தகங்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம்.  அவருடைய இரண்டு நாவல்களைப் படிக்க எடுத்து வந்தேன்.  அதில் ஒன்றைப் படித்தும் விட்டேன். முராகாமி புத்தகங்களுடன் இன்னொரு நோபல் பரிசுப் பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான காஷ÷ இஷøகுரோ நாவல்கள் இரண்டையும் அதேபோல் படிக்க எடுத்து வந்தேன்.  முராகாமி புத்தகத்தைப் படிக்கிற வேகத்தில் இன்னொருவருடைய புத்தகத்தைப் படிக்க முடியவில்லை.  
முராகாமி நாவலில் காணப்படுகிற வேகம் மற்ற நாவல்களைப படிக்கும்போது ஏற்படவில்லை.  ஸ்டீவ் எரிக்ஷன் என்பவர் நியூயார்க் டைம்ஸில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.  

“More than anyone, Haruki Murakami invented twenty-first-century fiction...He is the novelist of our mash-up epoch and the subversive who, by intent or not, lit the fuse to whatever ‘canon” of the previous century anybody still takes seriously...Murakami’s atomic sensibility characterises world literature.”
இன்று உலகம் முழுவதும் கொண்டாடுகிற எழுத்தாளராக முராகாமி இருக்கிறார்.  மேலே குறிப்பிடப்பட்ட இந்த நாவல் ஜப்பான் நாட்டில் வெளிவந்த முதல்  வாரத்தில்  மில்லியன் பிரதிகள் விற்றதாகப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும் கடைகளில் நள்ளிரவில் இப்புத்தகத்தை வெளியீட்டாளர்களாம்.  வரிசையில் நின்று புத்தகத்தை வாங்கிக்கொண்டு போனார்களாம். ஆனால் நம் தமிழ்நாட்டில் வெளியாகும் நாவல் ஒன்றின் 100 பிரதிகள் விற்பதற்குள் போதும்போதுமென்றாகிவிடுகிறது.
முதலில் இந் நாவலைப் பற்றி என்னால எதாவது சொல்ல முடியுமாவென்று பார்க்கிறேன்.  
கோயா என்ற ஊரில் வசித்து வந்த ஷøக்ரு டஸôகி, மேல் படிப்புக்காக டோக்கியா வந்து விடுகிறான். அவனுடனேயே படித்துக்கொண்டிருந்த நான்கு நண்பர்கள் நகோயா என்ற ஊரிலேயே மேலும் படிக்கிறார்கள்.  இந்த ஐந்து நண்பர்களும் முக்கியமானவர்கள்.  
இந்த ஐந்து நண்பர்களையும் பொறாமை கண்கொண்டு மற்றவர்கள் பார்ப்பார்கள்.  எல்லா இடங்களுக்கும் இவர்கள் ஒன்றாகச் செல்வார்கள்.  பல சமூக நலத் திட்டங்களில் பங்கு கொள்வார்கள்.  இவர்களில் இருவர் பெண்கள். இவர்கள் ஐவரும் பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் வேறு வேறு பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கிறார்கள்.  விடுமுறை தினங்களில் ஐவரும் சேர்ந்து மலை ஏறுவார்கள்.  தேர்வு சமயத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஐவரும் ஒன்றாகக் கூடி படிப்பார்கள்.  அல்லது ஒரு இடத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். 
டோக்கியாவிற்கு மேல்படிப்புக்குச் சென்றவுடன், ஷøக்ரு டஸôகியுடன் இந்த நால்வரும் சந்திப்பதையும் பேசுவதையும் திடீரென்று நிறுத்திக் கொண்டார்கள்.  ஏன்?  அதற்கு முன்பு வரை ஷøக்ரு டஸôகி டோக்கியாவில் படித்துக்கொண்டிருந்தாலும், தன்னுடைய சொந்த ஊரான கோயாவிற்கு அடிக்கடி வருவான்.  அப்போதெல்லாம் நண்பர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பான்.
ஷøக்ரு டஸôகியை மற்ற நால்வர்களும் தவிர்த்ததுடன் அல்லாமல் அதற்கான காரணத்தையும் கூற விரும்பவில்லை என்பதோடு சந்திக்கவும் இல்லை.   ஷøக்ரு டஸôகியின் வாழ்க்கையில் இது ஒரு பெரும் அதிர்ச்சியாகப் படுகிறது.  அவன் தற்கொலை செய்துகொள்ளத் தயாராகிறான். தன் பெயருக்கு ஏற்ப தன் வாழ்க்கையில் ஒன்றுமில்லை என்று நினைக்கிறான்.  டோக்கியாவில் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு யாரும் நெருங்கிய நண்பர்கள் இல்லை.  அவன் படுகிற அவதியை நாவலின் முன்பகுதியில் முரகாமி எடுத்துக்கொண்டு போகிறார்.  நான் இங்கு வந்து இந்த நாவலைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து இந்த நாவலைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது.  முரகாமியின் நடை ஒரு வசீகரமான நடை.  வாசகனைப் பிடித்து இழுக்கும் நடை. டோக்கியாவில் உயர் கல்வி படிக்க வரும்போது அங்குப் படித்துக்கொண்டு வரும் மாணவன் ஹய்டாவைச் சந்திக்கிறான்.
ஷøக்ரு டஸôகிக்கு நான்கு நண்பர்கள் கைவிட்டபிறகு ஹய்டாதான் நண்பனாக இருக்கிறான்.  அதுவும் தற்காலிகமாகத்தான்.  
ஹய்டா நன்றாக சமையல் செய்பவன் நீச்சல் அடிப்பவன். ஒரு வித்தியாசமான நண்பனாக இருக்கிறான்.   அவன் அப்பாவின் ஏற்பட்ட மரணத்தைப் பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறான். அவன் அப்பா ஒரு பியோனா வாசிப்பவரைச் சந்திக்கிறார்.  அவர் தன் மரணத்தைப் பற்றி முன்னதாகவே குறிப்பிடுகிறார். தனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் மரணம் ஏற்படும் என்று.  ஹய்டாவின்  அப்பா அதைக் கேட்டு ஆச்சரியப்படுகிறார். ஏனென்றால் அவர் நண்பர் உடல் நலத்துடன் நன்றாகக் காணப்படுகிறார்.  முன்னதாகவே மரணம் பற்றிய தகவல் கிடைப்பதாகத் தெரிவிக்கிறார்.    கதைக்குள் கதையாக அது போய்க்கொண்டிருக்கிறது.  
இந்த நாவல் ஆன்மிக உணர்வுக்குள் நம்மை ஹராகாமி இழுத்துக்கொண்டு வருகிறாரா என்ற எண்ணம் ஏற்படுகிறது.  ஒவ்வொரு பெயருடன் வர்ணத்தைத் தொடர்புகொண்டு எழுதி உள்ளார். ஷøக்ரு டஸôகி மட்டும் நிறமற்றவன். ஹய்டா எப்படி அறிமுகம் ஆகிறானோ அதேபோல் ஷøக்ரு டஸôகியை விட்டும் போய்விடுகிறான்.  திரும்பவும் தனிமையாகிறான்  ஷøக்ரு டஸôகி.
அவனுக்கு ரயில் தண்டவாளங்கள் தயாரிக்கிற இடத்தில் வேலை கிடைக்கிறது.  அவனுக்குப் பிடித்த வேலை.  
சாரா கிமோட்டோ  சுற்றுலாத் துறையில் பணிபுரிபவள்.  அதாவது வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்வது அவளுடைய பணி.  ஷøக்ரு டஸôகியை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறாள்.  சாரா ஷøக்ரு டஸôகியை விட இரண்டு வயது மூத்தவள்.  இந்த நட்புதான் அவனுக்கு ஆறுதல் தரக்கூடிய நட்பாக அவனுக்கு இருக்கிறது.   அவன் சாராவைச் சந்திக்கும் தருணத்தில் அவனுக்கு 35 வயதாகிவிடுகிறது.  சாராவிற்கு 37 வயது. அவனை விட்டு அவனுடைய 4 நண்பர்களும் ஏன் பிரிந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க உதவுகிறாள். அவனை ஏன் அவர்கள் வெறுத்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க அந்தக் குழுவைச் சேர்ந்த மூன்று பேர்களைச் சந்திக்கிறான். அவனுக்குத் தெரிந்து விடுகிறது.  இந்தப் பிரிவினைக்குக் காரணம்,  ஊழு என்கிற இன்னொரு பெண் நண்பர்தான் என்று.  அவளை யாரோ கற்பழித்துவிடுகிறார்கள்.  அந்தப் பழியை ஷøக்ரு டஸôகி மீது சுமத்தி விடுகிறாள்.  மற்ற 3 நண்பர்களும் அவள் சொன்னதை நம்பி ஷøக்ரு டஸôகியைச் சந்திக்காமலும்  பேசாமலும் இருந்து விடுகிறார்கள்.  இதைக் கேள்விப்பட்டபோது ஷøக்ரு டஸôகிக்கு சொல்ல முடியாத வருத்தம் ஏற்படுகிறது.
ஊழு அந்தப் பழியை ஷøக்ரு டஸôகியின் மீது சுமத்துவதோடல்லாமல் அவனால்தான் கர்ப்பம் அடைந்திருப்பதாகவும் சொல்லி எல்லோரையும் நம்ப வைக்கிறாள்.  அவளுடைய இன்னொரு பெண் தோழி ஷøக்ரு டஸôகியால் இது ஆகவில்லை என்று தெரிந்தும், ஊழு சொல்லும் பொய்யிற்கு ஆதரவும் தருகிறாள்.  இறுதியில் ஊழு பொறாமைப்படும்படியான அழகியாக இருந்தாலும், மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறி கொல்லவும்படுகிறாள். ஊழுவைப்பற்றி முழுத் தகவலையும் எரி என்கிற அவர்களுடைய குழுவில் உள்ள இன்னொரு பெண்ணால்தான் தெரியவருகிறது.
இதையெல்லாம் தெரிந்த பிறகு ஷøக்ரு டஸôகி தனிமைப்படுத்தப்படுகிறான்.  திரும்பவும் டோக்கியா வந்து தன் வாழ்க்கைத் துணையாக சாராவாவது கிடைப்பாளா என்று எதிர்ப்பார்க்கிறான்.  அவனுக்கு அவளும் கிடைக்கவில்லை.  அவன் வாழ்க்கை வெறுமையாகப் போவதுபோல் கதை முடிகிறது. 
இந்த நாவலில் அப்பட்டமாக செக்ûஸ விவரித்திருப்பார். அதைப் படித்துக்கொண்டிருந்தபோது சாருநிவேதிதாவின் ராசலீலா என்ற நாவல் ஞாபகத்திற்கு வந்தது.    ஆனால் முராகாமி இன்னும் வெளிப்படையாக அப்பட்டமாக விவரித்திருக்கிறார். மேலும் இந்த நாவலில் இசையைப் பற்றியும், விதம்விதமான கார்களைப் பற்றிய விவரங்களும் வெளிப்படுகின்றன. அதைத் தவிர ஆன்மிகம், அமானுஷ்யத் தன்மைகள், கனவுகள் என்று விரிவாகச்  சொல்லிக்கொண்டு போகிறது.   நான் இந்த நாவலை ஒருமுறைதான் படித்தேன்.  ஆனால் எப்போதுமே இதில் எதாவது ஒரு பகுதியைப் படித்துக்கொண்டு போகலாம் என்று தோன்றுகிறது.  இது ஜப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாவல்.  ஜப்பான் மொழியில் இது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

   

Comments