Skip to main content

Posts

Showing posts from August, 2009

மதிமை சாலா மருட்கை

திரு . ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் 'தனப் பேச்சி'யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள். திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர்

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......8

பிரமிள் இதற்கு பிறகு பலதடவைகள் விசிறி சாமியாரைப் போய்ப் பார்த்தார். ஆனால் நான் அதன்பின் பார்க்கவில்லை. பாலகுமாரன் மூலம் விசிறி சாமியார் புகழ் எங்கும் பரவி விட்டது. தனியாக அவர் ஆஸ்ரமம் வைத்துக்கொண்டு போனபின், அவரைச் சுற்றிலும் கூட்டம். அக் கூட்டத்தில் அவரை நெருக்கமாக பார்த்துப் பேச வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தோடு நான் அந்த ஆஸ்ரமத்திற்குப் போயிருக்கிறேன். ஆனால் விசிறி சாமியாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. என் மூட் மாறிவிட்டதை பிரமிள் நன்றாக அறிந்திருந்தார். அடுத்தநாள் பிரமிளிடம், இன்னொரு முறை விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாமா என்று கேட்டேன். இன்னொரு முறை நம்மைப் பார்க்க விரும்ப மாட்டார் என்றார் பிரமிள். பின் நாங்கள் மூவரும் திருவண்ணாமலையைச் சுற்றி வந்தோம். தவம் புரியும் குகை போன்ற இடங்களைப் பார்த்தோம். விசிறி சாமியாரிடமிருந்து விடைபெற்று வரும்போது, எஙகள் மூவருக்கும் விசிறி சாமியார் கி.வா.ஜா அவர்கள் விசிறி சாமியார் பற்றி எழுதிய கவிதைகள் அடங்கிய நூலைக் கொடுத்தார். நானும் பிரமிளும் சென்னை திரும்பும்போது, என் மனதில் சாமியார் என்றால் யார்? அவ

அது கூட

வரட்டுமென்று அனுமதிப்பதா அதனை வாராது தடுப்பதா....... வந்து போய்விட்டது விட்டுவிடு.

தனிமை

நூறாண்டுக்கு முந்தைய பாழடைந்த வெறுமை படர்ந்த கோயில்களுக்கு தனியாக செ‌ன்று திரும்பும்போதெல்லாம் முதுகுக்கு பிறகு சன்னமாக கேட்கிறது விசும்பலொலி அடு‌த்த முறையாவது உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்

உங்களுடன் ஒரு வார்த்தை

நண்பர்களே, இத்தனை நாட்களாக நான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. என் கணினி ஒத்துழைக்கவில்லை. எதிர்பாராதவிதமாய் ஏற்பட்ட விபத்தைச் சரிசெய்ய சரியாய் 2 வாரங்கள் ஓடிவிட்டன. நேற்றுவரை முரசு அஞ்சல் கிடைக்கவில்லை. இன்று ஒரு நண்பரின் புண்ணியத்தால் முரசு அஞ்சல் கிடைத்துவிட்டது. இந்த இரண்டுவாரங்களில் ஒரு கூட்டம் நடத்தினேன். அது குறித்து தகவல் தருவது அவசியம். சில புகைப்படங்களை இணைக்கவும் வேண்டும். அதேபோல் என் கட்டுரை நான், பிரமிள், விசிறி சாமியார்..தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும். எனக்குப்பிடித்த கவிதை, எனக்குப்பிடித்த கதை எல்லாவற்றையும் கொண்டு வரவேண்டும். முக்கியமாக நீங்கள் எழுதுவதையும் நான் பிரசுரிக்க வேண்டும். மெதுவாக நவீன விருட்சம் 84வது இதழை எல்லாருக்கும் அனுப்பிவிட்டேன். இன்னும் சிலருக்கு விட்டுப் போயிருக்கும். அவர்கள் விபரங்கள் தெரிந்தால் அதையும் அனுப்பி விடலாம். இன்று புதியதாய் வருபவர்கள் பிரமாதமாய் எழுதித் தள்ளி விடுகிறார்கள். நான் நடத்திய கூட்டத்தில் blogல் எழுதும் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தது மகிழ்ச்சியான விஷயமாக எனக்குத் தோன்றியது. திரும்பவும் தினம் தினம் சந்திக்க

கண்ணோடு காண்பதெல்லாம்

நகைச்சுவையும் உடல்நலமும் என்றொரு புத்தகம் வெளியிட்ட புகைப்படமொன்று இருந்தது நீள் மேஜையில் . காதைக் கிழிக்கும் சத்தத்துடன் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரின் அன்றைய எபிசோடில் அடுத்தடுத்த மாரடைப்பு சம்பவங்கள் . அவ்வப்போது திறந்து மூடிக்கொண்டிருந்த அறைக்கதவு வழியே கசிந்துகொண்டிருந்தது அந்த இதய நோய் மருத்துவரின் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பேச்சு .

மழை இரவு

பெரும் மழை இரவொன்றில் குளிர் தளைத்திருந்த உடலை வெப்பமேற்ற வென்புகை குழலொன்றை பற்ற வைத்தேன். மஞ்சள் விளக்கின் அருகாமை வெப்பமும் ஈரக்காற்றில் படபடத்துக் கொண்டிருந்த படிக்கப் பிடிக்காமல் வீசி எரிந்த புத்தகத்தின் வாசனையும் ஏனோ பிடித்திருப்பதாக தோன்றியது. வெளியில் தவளை சப்தமும் அதன் பின்னான அமைதியும் மழை இரவின் அச்சத்தை திரித்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரம் சிறு சிறு புகைகளாக சுவைத்திருந்த சிகரெட் விரலில் சுடும் போது சுண்டி எரிந்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டேன். அதன் பின் பெய்த மழையும் பரவியிருந்த சிகரெட் நெடியும் எப்போது விலகியது என எனக்கு தெரியவில்லை. மீண்டும் என்னை எழுப்பிவிட்டது கதவிடுக்கில் கசியும் அதே சூரியன்

குட்டி கவிதைகள் 2

1 காந்தி கொள்கை என்ன? கேட்டார் வாத்தியார் தெரியாது என்றேன் அடித்துவிட்டு சொன்னார் அகிம்சை என்று 2 ஒற்றை முத்தம்தான் தருவேன் அடம்பிடித்தாள் குழந்தை யார் பெறுவது? சண்டைஇட்டன என் இரு கன்னகளும்

இரவெல்லாம்

இரவெல்லாம் கத்தியபடி வழியெங்கும் வயிறு வெடித்து கிடந்த தவளைகள் நினைவூட்டுகின்றன முன்தின மாலையின் நமக்கான பிரிவொன்றை

சட்டையொன்று-----------------

என்னை தன்னுள்ளே உடுத்தியபடி சட்டையொன்று கிளம்பியது. எதிர்வந்தவர்கள் நலம் விசாரிக்க என்னை இறுதிவரை பேசவிடாமல் தன்னைப் பற்றியே பெருமையடித்து தீர்த்தது. புறக்கணிப்பின் உச்சத்தில் ஒரு நாள் சட்டைக்குள்ளிருந்த நானொன்று அம்மணமாக வெளியேறியது யாரிடமும் சொல்லாமல்

கூட்டம் பற்றிய அறிவிப்பு

விருட்சம் அழைக்கிறது கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும் ந.பிச்சமூர்த்தி எழுதிய 'காதல் ' என்ற கவிதை மணிக்கொடியில் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. க.நா சுப்ரமணியம் 'சரஸ்வதி' யில் வெளியிட்ட புதுக்கவிதை என்ற கட்டுரைக்கு 50 வயது நிறைவடைந்துவிட்டது. சிறு இதழ்களின் முன்னோடியான 'எழுத்து' முதல் இதழ் வெளிவந்தும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. விழா ஒருங்கிணைப்பாளர்கள் : ஞானக்கூத்தன் பேராசிரியர் சிவக்குமார் நடைபெறும் நாள் : 16.08.2009 (ஞாயிற்றுக்கிழமை ) நேரம் : மாலை 6 மணிக்கு இடம் : கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம் 735 அண்ணா சாலை சென்னை 600 002 கவிஞர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். கவிதைகள் குறித்து உரையாடவும் அழைக்கிறோம்.

எச்சம்

"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை, எளியதுகளுக்குக் கொடுத்துடலாம்". வீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள். குமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி. பலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து

இரண்டு கவிதைகள்

நாற்பட்டகம் இன்று இது நான் புகைக்கும் எத்தனையாவது சிகரெட்டோ இன்று இவள் நான் காதலிக்கும் எத்தனையாவது பெண்ணோ இன்று இது எத்தனையாவது இன்றோ இன்று இது எத்தனையாவது எத்தனையாவதோ எப்போது நினைத்தாலும் அழ முடிகிறது எப்போது நினைத்தாலும் காதல் வசப்பட முடிகிறது எப்போது நினைத்தாலும் கவிதை எழுத முடிகிறது எப்போதுமே நினைக்கத்தான் முடிகிறது தனிமைக்கு பயந்தவர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் தனிமைக்கு பயந்தவர்கள் மது அருந்துகிறார்கள் தனிமைக்கு பயந்தவர்கள் காதலிக்கிறார்கள் தனிமைக்கு பயந்தவர்கள் கவிதை எழுதுகிறார்கள் தனிமைக்கு பயந்தவன் தனிமையாகவே இருக்கிறேன் திட்டவட்டமாக நான் அவளைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்தேன் அவள் என்னைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்தாள் வட்டங்கள் ஒன்றை ஒன்று வெட்டிக் கொண்ட இணையும் புள்ளிகளில் யாரோ எங்களைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்தார் ஏதோ ஒரு விதிப்படி நாங்கள் அந்த வட்டங்களை விட்டுத் துடித்து வெளியேறினோம் இப்போது நாங்கள் எந்த வட்டத்திற்குள்ளும் இல்லை ... இல்லாமலும் இல்லை

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......7

பல ஆண்டுகள் கழித்து இச் சம்பவத்தைப் பற்றி எழுதுகிறேன். விசிறி சாமியாரும் இல்லை, பிரமிளும் இல்லை. விசிறி சாமியாரைப் பார்த்து, ''நீங்கள் ஏன் என்னிடமிருந்து சிகரெட்டிற்குப் பணம் வாங்கவில்லை,'' என்று அப்போது கேட்க தைரியம் இல்லை. அப்படியே கேட்டாலும் விசிறி சாமியார் பதில் சொல்லியிருப்பாரா என்பது தெரியாது. ஆனால் விசிறி சாமியார் நான் ஆவலுடன் சிகரெட் வாங்க அவரிடம் பணம் நீட்டியபோது வாங்க மறுத்தது என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதுவரை உற்சாகமாக இருந்த நான் உற்சாகம்குன்றியவனாக மாறிவிட்டேன். ஏன் வருத்தமாகக் கூட மாறிவிட்டது? ஏன் இதுமாதிரி சாமியார்களெல்லாம் பார்க்கிறோம்? என்று கூடத் தோன்றியது. ஏன் என்னிடம் வாங்கவில்லை என்பதற்குக் காரணமெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தைவிட்டுப் போய்விட வேண்டுமென்றுகூட தோன்றியது. எத்தனைப் பேர்கள் வழிபடுகிற சாமியார் உண்மையில் மிக முக்கியமானவர். அவர் இதுமாதிரி செய்ததற்கு எதாவது காரணம் இருக்குமென்று யோசித்தேன். மேலும் நான் சிகரெட் பிடிக்காதவன். அதனால் என்னிடமிருந்து அதை வாங்காமல் இருந்திருக்கலாமென்று நினைத்தேன். பி