Skip to main content

Posts

Showing posts from December, 2010

எதையாவது சொல்லட்டுமா......../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன். 70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது. நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எ

இது அவனைப் பற்றியக் கதையல்ல

வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல் குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள் இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல் இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக் கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து கிடந்த தறுவாயில்.. அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான் அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை. இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அவனைப் ப

களங்கம்

நிலாவிலிருந்து வெகு தூரத்திலிருப்பதாக அறிவியல் புத்தகங்கள் விவரித்த நட்சத்திரங்கள் நிலவின் அருகில் சூழ்ந்திருந்தன நேற்று பின்னிரவில் எழுந்தவள் நிலவில் களங்கம் என்றாள் சில தினங்களில் வளர்ந்தது நிலா களங்கத்துடன் தொலைந்திருந்த நட்சத்திரங்களுடன் அறிவியலில் வாசித்திராத வேறு நிலவுகளும் மனமுகிலில் தவழ்ந்தன

உணர்தல் நிமித்தம்

ஒரு தாளில் தீட்டப் பெற்ற ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல் வளை கோடுகள் கடலாதல் போல் இரு 'V' பறவைகளாதல் போல் பசிய நீள் கோடுகள் செழும் புற்களாதல் போல் பக்கவாட்டு முகமொன்றில் நம்பப் பெறும் உயிர்ப்புள்ள இன்னொரு விழி போல் மனம் அசைவுறுகையில் மௌனம் இசையாதல் போல் பார்வை மொழியாதல் போல் புன்னகை உறவாதல் போல் வார்த்தைகள் ஒலியாதல் போல் சொல்லாமல் செல்லும் - சொல்லும் பொருள் அடர் உணர் கவிதை.

இரண்டு கவிதைகள்

தாகத்தோடு நிற்கும் காகம் தண்ணீர் முழுவதையும் குடித்துவிடவேண்டும் தாகம் என்பது ஒரு புறமிருக்க தண்ணீர் முழுவதையும் நானே குடித்துவிடவேண்டும் தாகமெடுக்கவேண்டுமே இதயமும் இருட்டிக்கொண்டுவரவேண்டும் குடம் குடமாக கொண்டுவந்து கொடுக்கிறது காகம் மேகத்தின் வயிற்றுக்குள் கடல், நீர்த்தேக்கங்கள் எல்லாம் கறுத்து இரத்தம் கட்டினாற்போல் நிறத்தில் காகத்தை ஒத்தது எவ்வளவு பெரிய காகம் பெரிய காகம் கரையும் சிறிய காகம் நனையும் தென்னை மரங்களில், மா மரங்களில் பறந்துபோய் தங்கி தலை உணத்தும் கோதுமை மாவு ரொட்டி சுடுகிற மணம் வருது கிடுகு கூரை கொதிச்சு ஆவிபோகுது 02 முட்டையிடும் நாய்கள் மூன்று பன்றிகளுக்கு நடுவில் ஒரு நாய். பன்றிகள் இறைச்சியை சாப்பிடுகின்றன நாயும் இறைச்சி சாப்பிடும்தானே. ஏன் அது பன்றிக்கு தெரியவில்லை தெரிந்தும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுகின்றன. அப்படித்தான். நாய்கள் பசியில் தன் நிழலை சாப்பிடுகின்றன. வாய்க்குள்ளிருக்கும் இறைச்சியை உண்பதா நா

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும் நகுலன் க.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை - நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம். ''எதற்காக எழுதுகிறேன்?'' என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ''உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று ந

லதாமகன் கவிதை

மழைபொழியும் நாளை ஐஸ்கிரீம் வழிய நீ பார்த்துக் கொண்டிருந்த போதுதான் என் முதல் கவிதையை எழுதினேன் நான் o அழும் குழந்தையை அணைத்து சமாதனப்படுத்துவாய் எப்பொழுதும் மழை பொழியும் போதெல்லாம் அழும் குழந்தாய் மாறிவிட ஆசை எனக்கு o உன் கூந்தல் வழிந்த மழையைத்தான் தேனென சேகரித்துப் போகிறது தேனீக்களெல்லாம். o நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய் மழை நாளில் மழை பொழிந்த வானாகிறேன் முத்த நாளில். o ஒற்றைக்குடைக்குள் நீயும் நானும் ஒண்டிக்கொண்டிருக்க நிலமெல்லாம் பூக்கள் தூவும் காதலின் மழை oOo

லதாமகன் கவிதை

குட்டி மீனைப்போல் வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள் சந்தியாக்குட்டி ஸ்வரங்கள் தப்பிய குரலுக்கு ஏற்ப தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது இசை o டம் டம் சத்தத்தில் ஆடத் தொடங்கும் கால்கள் சந்தியாவுடையவை. ஆடிமுடித்து அப்பா என ஓடி வந்து வெட்கத்துடன் அணைத்துக் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது எனக்கான நடனம். o நீரை அள்ளி கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள் சந்தியாக்குட்டி ஸ்பரிசங்களில் தன் பிறப்பிடம் அறிகிறது முன்னாள் மழை. o பப்லுக்குட்டிக்கு மம்மு என பொம்மைக்கு புட்டிப்பால் ஊட்டுகிறாள் சந்தியாக்குட்டி அகலச் சிரித்து உடலெங்கும் பாலாகிறது பப்லுகுட்டி. o எங்கள் எல்லோரையும்போல் நடித்துக் காட்டுவாள் சந்தியாக்குட்டி அவளைப்போல் வாழ்வதற்கு இன்னும் யாரும் பிறக்கவில்லை. oOo

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1

(பட்டியல்கள் தொடர்ச்சி......) - அசோகமித்திரன் க.நா.சு இல்லாமலும் இவர்கள் நன்றாக எழுதியிருப்பார்கள். எழுதினார்கள். க.நா.சு எடுத்துக் கூறுவதற்கு முன்புகூட இவர்களுக்கு உண்மையான ரசிகர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் க.நா.சுவால்தான் இவர்கள் பற்றி விமரிசனப் பூர்வமாக ஒரு ரசிகர் பார்வை உண்டு பண்ண முடிந்தது. மெளனியின் கதைகளுக்கும் நீல பத்மநாபனின் 'தலைமுறைகள்' நாவலுக்கும் அப்படைப்புகளையும், அப்படைப்பாளிகளையும் சிறிதும் பிடிக்காததோர் மத்தியில் கூட அவை இலக்கியமே என்று ஒத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்றிருக்கிறதென்றால், அது க.நா.சுவின் திட்டவட்டமான, முறையான வாதங்கள் நிறைந்த விமர்சனங்களால்தான். அதேபோல ஜனரஞ்சங்கத் தன்மையே இலக்கிய நயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறை வரை என்று மலைப்பூட்டிய நாளில் அந்த ஜனரஞ்சகப் படைப்புகள் பற்றித் துணிவாகவும், திட்டவட்டமாகவும், அறிவுபூர்வமாகவும் எடுத்துக் கூறிய பெருமை க.நா.சுவுடையதுதான். அவர் அறிவுபூர்வமாகத் தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது - அவைகளுக்கு மறுப்புக் கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் - எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்க

ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு

கவிதை தலைப்பிடப் படாதது இந்தக் கவிதை எப்படி முடியும் எங்கு முடியும் என்று தெரியாது. திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும் இது முடியும்போது இருக்கும் (இருந்தால்) நான் ஆரம்பத்தில் இருந்தவன் தானா ஏன் இந்தக் கேள்வி யாரை நோக்கி இன்றிரவு உணவருந்தும் நம்பிக்கையில் இங்கிருப்பேன் இப்படியும் ஒரு நம்பிக்கை இருந்த நேற்று எனக்கிருண்ட கணங்கள் அவற்றின் தவளைக் குரல்கள் கேட்கும் அடிக்கடி அதனை ஒதுக்கத் தெரியாமல் தவிக்கையில் நிகழ்ச்சியின் சப்தங்கள் செவிப்பறை கிழிக்கும் நாளை ஓர் ஒளிக்கடலாய் கண்ணைப் பறிக்கும் இருதயம் இதோ இதோ என்று துடிக்கும். இன்னும் புறாக்கள் பறந்து போகும் கழுத்திலே வைரத்தோடு கிளிகளும் விரட்டிச் செல்லும் காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும் தானியம் தேடிக்கொண்டு குருவிகள் கிளுகிளுப் பூட்டும் கிளைகளில் தவழ்ந்து கொண்டு பாசிக் கரை படர்ந்த தாமரைக் குளத்து நீரில் நீளக்கால் மெல்ல அளையும் கரை நிழல் கீழமர்ந்து. பழங்களைக் கடித்துத் தின்ற அணில்களும் அவ்வப்போது கேள்விகள் கேட்டாற் போலத் தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் பூசாரி குடத்தில் நீரெடுப்பார் மந்திரம் சொல்லும் வாயால் தம்மையே நொந்

எதையாவது சொல்லட்டுமா / 32

நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள். வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. 'எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?' என்றார். 'ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜ

இரண்டு கவிதைகள்

பிறந்தநாள் 58 ஓடிவிட்டன நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும் கழுத்தில் சுருக்கம் இளமை இன்னும் மாறவில்லை என்று அப்போதிருந்து சிந்தனை ஓட்டம் ஒரே மாதிரிதான் வானத்தில் நட்சத்திரம் மின்ன தூரத்தில் தெருநாய் குரைத்தது வேடிக்கையாக யாரோ கொட்டாவி விட்டனர் இன்று 58 @@@@@@@@ ஒரு ரோஜாப்பூவை சூடிக்கொண்டிருந்த பெண் என்ன நினைக்கிறாள் சீர்காழி பஸ்ஸில் ஏறி சிதம்பரம் போகிறாளா? வழியில் எங்காவது இறங்கி விடுவாளா? அலுவலகம் போகிறாளா? வகுப்பிற்குச் செல்கிறாளா? வீட்டிற்குத்தான் போகிறாளா? ஒற்றை ரோஜா புத்தம்புது மலராய் மினுமினுக்க அவள் கன்னத்திலும் சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?