Skip to main content

Posts

Showing posts from 2010

எதையாவது சொல்லட்டுமா......../ 33

இந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன். 70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது. நான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எ

இது அவனைப் பற்றியக் கதையல்ல

வெகுநாட்களாகவே கதை எழுதிவிட விருப்புற்றிருந்தாலும், கதை எழுதுதல் குறித்த பல கேள்விகள், இயலுமா எனும் ஐயம், நற்பல கதையாசிரியர்கள் இருக்குமிடத்தில் எழுதல் குறித்த தயக்கம், எழுத்துக்கு உடன்படாமல் இருக்கிற சூழல், வர மறுக்கிற வார்த்தைகள், வந்தாலும் உறவு முறித்துக் கொண்டு போகிற காதலியாய் கரு என முடியாமையின் எச்சங்கள் மிகைந்து பொதிந்து கிடந்த தறுவாயில்.. அவன் எனக்கு எந்த விதத்திலும் நெருக்கமானவனில்லை, அவன் எனக்கு எந்த விதத்திலும் தூரமானவனுமில்லை, அவனை நான் அறிந்திருக்கிறேன், அவனை நான் அறியாமலும் இருக்கிறேன், அவனை எனக்கு அவனாக தெரியும், அவனை எனக்கு அவனாகவும் தெரியாது, இப்பேர்ப்பட்ட குழப்பமான சூழலில் உங்களுக்கு எப்படி அவனை அறிமுகம் செய்யப் போகிறேன் என்று எனக்கு புரியவில்லை. இந்த இரவில் அவனைப் பற்றி கதை சொல்லவேண்டும் என்று ஏன் எனக்கு தோன்றியதென்று அறிகிலேன், எனினும் அவனைப் பற்றி சொல்லவே எனக்கு விருப்பமாய் இருக்கிறது, தற்போது தான் சென்னையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், கோயம்பேட்டில் பேருந்தில் ஏறி எனக்கான முன்பதிவு செய்துவிட்ட ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அவனைப் ப

களங்கம்

நிலாவிலிருந்து வெகு தூரத்திலிருப்பதாக அறிவியல் புத்தகங்கள் விவரித்த நட்சத்திரங்கள் நிலவின் அருகில் சூழ்ந்திருந்தன நேற்று பின்னிரவில் எழுந்தவள் நிலவில் களங்கம் என்றாள் சில தினங்களில் வளர்ந்தது நிலா களங்கத்துடன் தொலைந்திருந்த நட்சத்திரங்களுடன் அறிவியலில் வாசித்திராத வேறு நிலவுகளும் மனமுகிலில் தவழ்ந்தன

உணர்தல் நிமித்தம்

ஒரு தாளில் தீட்டப் பெற்ற ஆரஞ்சு வர்ணம் பழமாதல் போல் வளை கோடுகள் கடலாதல் போல் இரு 'V' பறவைகளாதல் போல் பசிய நீள் கோடுகள் செழும் புற்களாதல் போல் பக்கவாட்டு முகமொன்றில் நம்பப் பெறும் உயிர்ப்புள்ள இன்னொரு விழி போல் மனம் அசைவுறுகையில் மௌனம் இசையாதல் போல் பார்வை மொழியாதல் போல் புன்னகை உறவாதல் போல் வார்த்தைகள் ஒலியாதல் போல் சொல்லாமல் செல்லும் - சொல்லும் பொருள் அடர் உணர் கவிதை.

இரண்டு கவிதைகள்

தாகத்தோடு நிற்கும் காகம் தண்ணீர் முழுவதையும் குடித்துவிடவேண்டும் தாகம் என்பது ஒரு புறமிருக்க தண்ணீர் முழுவதையும் நானே குடித்துவிடவேண்டும் தாகமெடுக்கவேண்டுமே இதயமும் இருட்டிக்கொண்டுவரவேண்டும் குடம் குடமாக கொண்டுவந்து கொடுக்கிறது காகம் மேகத்தின் வயிற்றுக்குள் கடல், நீர்த்தேக்கங்கள் எல்லாம் கறுத்து இரத்தம் கட்டினாற்போல் நிறத்தில் காகத்தை ஒத்தது எவ்வளவு பெரிய காகம் பெரிய காகம் கரையும் சிறிய காகம் நனையும் தென்னை மரங்களில், மா மரங்களில் பறந்துபோய் தங்கி தலை உணத்தும் கோதுமை மாவு ரொட்டி சுடுகிற மணம் வருது கிடுகு கூரை கொதிச்சு ஆவிபோகுது 02 முட்டையிடும் நாய்கள் மூன்று பன்றிகளுக்கு நடுவில் ஒரு நாய். பன்றிகள் இறைச்சியை சாப்பிடுகின்றன நாயும் இறைச்சி சாப்பிடும்தானே. ஏன் அது பன்றிக்கு தெரியவில்லை தெரிந்தும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுகின்றன. அப்படித்தான். நாய்கள் பசியில் தன் நிழலை சாப்பிடுகின்றன. வாய்க்குள்ளிருக்கும் இறைச்சியை உண்பதா நா

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும் நகுலன் க.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை - நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம். ''எதற்காக எழுதுகிறேன்?'' என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ''உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று ந

லதாமகன் கவிதை

மழைபொழியும் நாளை ஐஸ்கிரீம் வழிய நீ பார்த்துக் கொண்டிருந்த போதுதான் என் முதல் கவிதையை எழுதினேன் நான் o அழும் குழந்தையை அணைத்து சமாதனப்படுத்துவாய் எப்பொழுதும் மழை பொழியும் போதெல்லாம் அழும் குழந்தாய் மாறிவிட ஆசை எனக்கு o உன் கூந்தல் வழிந்த மழையைத்தான் தேனென சேகரித்துப் போகிறது தேனீக்களெல்லாம். o நட்சத்திரங்களின் எண்ணிக்கைக்கு முத்தமிடுகிறாய் மழை நாளில் மழை பொழிந்த வானாகிறேன் முத்த நாளில். o ஒற்றைக்குடைக்குள் நீயும் நானும் ஒண்டிக்கொண்டிருக்க நிலமெல்லாம் பூக்கள் தூவும் காதலின் மழை oOo

லதாமகன் கவிதை

குட்டி மீனைப்போல் வாய்திறந்து பாடத்தொடங்குகிறாள் சந்தியாக்குட்டி ஸ்வரங்கள் தப்பிய குரலுக்கு ஏற்ப தன் ஸ்வரங்களை மாற்றிக்கொள்கிறது இசை o டம் டம் சத்தத்தில் ஆடத் தொடங்கும் கால்கள் சந்தியாவுடையவை. ஆடிமுடித்து அப்பா என ஓடி வந்து வெட்கத்துடன் அணைத்துக் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது எனக்கான நடனம். o நீரை அள்ளி கடலுக்குள் தெளித்துக் கொண்டிருக்கிறாள் சந்தியாக்குட்டி ஸ்பரிசங்களில் தன் பிறப்பிடம் அறிகிறது முன்னாள் மழை. o பப்லுக்குட்டிக்கு மம்மு என பொம்மைக்கு புட்டிப்பால் ஊட்டுகிறாள் சந்தியாக்குட்டி அகலச் சிரித்து உடலெங்கும் பாலாகிறது பப்லுகுட்டி. o எங்கள் எல்லோரையும்போல் நடித்துக் காட்டுவாள் சந்தியாக்குட்டி அவளைப்போல் வாழ்வதற்கு இன்னும் யாரும் பிறக்கவில்லை. oOo

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1

(பட்டியல்கள் தொடர்ச்சி......) - அசோகமித்திரன் க.நா.சு இல்லாமலும் இவர்கள் நன்றாக எழுதியிருப்பார்கள். எழுதினார்கள். க.நா.சு எடுத்துக் கூறுவதற்கு முன்புகூட இவர்களுக்கு உண்மையான ரசிகர்கள் இருந்திருக்கக்கூடும். ஆனால் க.நா.சுவால்தான் இவர்கள் பற்றி விமரிசனப் பூர்வமாக ஒரு ரசிகர் பார்வை உண்டு பண்ண முடிந்தது. மெளனியின் கதைகளுக்கும் நீல பத்மநாபனின் 'தலைமுறைகள்' நாவலுக்கும் அப்படைப்புகளையும், அப்படைப்பாளிகளையும் சிறிதும் பிடிக்காததோர் மத்தியில் கூட அவை இலக்கியமே என்று ஒத்துக்கொள்ளக் கூடிய சூழ்நிலை இன்றிருக்கிறதென்றால், அது க.நா.சுவின் திட்டவட்டமான, முறையான வாதங்கள் நிறைந்த விமர்சனங்களால்தான். அதேபோல ஜனரஞ்சங்கத் தன்மையே இலக்கிய நயமாக என்றென்றும் நியதியாகிவிடும் தமிழ் எழுத்துத்துறை வரை என்று மலைப்பூட்டிய நாளில் அந்த ஜனரஞ்சகப் படைப்புகள் பற்றித் துணிவாகவும், திட்டவட்டமாகவும், அறிவுபூர்வமாகவும் எடுத்துக் கூறிய பெருமை க.நா.சுவுடையதுதான். அவர் அறிவுபூர்வமாகத் தன் கணிப்புகளை எடுத்துக் கூறுவது - அவைகளுக்கு மறுப்புக் கூற இடமில்லாமல் அவர் வாதங்கள் இருப்பதால் - எவ்வளவோ பேருக்கு கோபமூட்டியிருக்க

ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு

கவிதை தலைப்பிடப் படாதது இந்தக் கவிதை எப்படி முடியும் எங்கு முடியும் என்று தெரியாது. திட்டமிட்டு முடியாது என்றெனக்குத் தெரியும் இது முடியும்போது இருக்கும் (இருந்தால்) நான் ஆரம்பத்தில் இருந்தவன் தானா ஏன் இந்தக் கேள்வி யாரை நோக்கி இன்றிரவு உணவருந்தும் நம்பிக்கையில் இங்கிருப்பேன் இப்படியும் ஒரு நம்பிக்கை இருந்த நேற்று எனக்கிருண்ட கணங்கள் அவற்றின் தவளைக் குரல்கள் கேட்கும் அடிக்கடி அதனை ஒதுக்கத் தெரியாமல் தவிக்கையில் நிகழ்ச்சியின் சப்தங்கள் செவிப்பறை கிழிக்கும் நாளை ஓர் ஒளிக்கடலாய் கண்ணைப் பறிக்கும் இருதயம் இதோ இதோ என்று துடிக்கும். இன்னும் புறாக்கள் பறந்து போகும் கழுத்திலே வைரத்தோடு கிளிகளும் விரட்டிச் செல்லும் காதலின் மோகத்தோடு காக்கைகள் கரைந்து செல்லும் தானியம் தேடிக்கொண்டு குருவிகள் கிளுகிளுப் பூட்டும் கிளைகளில் தவழ்ந்து கொண்டு பாசிக் கரை படர்ந்த தாமரைக் குளத்து நீரில் நீளக்கால் மெல்ல அளையும் கரை நிழல் கீழமர்ந்து. பழங்களைக் கடித்துத் தின்ற அணில்களும் அவ்வப்போது கேள்விகள் கேட்டாற் போலத் தலைகளைத் தூக்கிக் காட்டும் சிவனருள் பூசாரி குடத்தில் நீரெடுப்பார் மந்திரம் சொல்லும் வாயால் தம்மையே நொந்

எதையாவது சொல்லட்டுமா / 32

நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள். வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. 'எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?' என்றார். 'ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜ

இரண்டு கவிதைகள்

பிறந்தநாள் 58 ஓடிவிட்டன நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும் கழுத்தில் சுருக்கம் இளமை இன்னும் மாறவில்லை என்று அப்போதிருந்து சிந்தனை ஓட்டம் ஒரே மாதிரிதான் வானத்தில் நட்சத்திரம் மின்ன தூரத்தில் தெருநாய் குரைத்தது வேடிக்கையாக யாரோ கொட்டாவி விட்டனர் இன்று 58 @@@@@@@@ ஒரு ரோஜாப்பூவை சூடிக்கொண்டிருந்த பெண் என்ன நினைக்கிறாள் சீர்காழி பஸ்ஸில் ஏறி சிதம்பரம் போகிறாளா? வழியில் எங்காவது இறங்கி விடுவாளா? அலுவலகம் போகிறாளா? வகுப்பிற்குச் செல்கிறாளா? வீட்டிற்குத்தான் போகிறாளா? ஒற்றை ரோஜா புத்தம்புது மலராய் மினுமினுக்க அவள் கன்னத்திலும் சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

அவர்கள்..

* அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை ஒரு மௌனத்தை உடைத்து நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு ஒரு கோரிக்கையை கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு ஒரு புன்னகையின் அகால மரணத்துக்குரிய ஈமக் காரியங்களுக்கு பிறகு கனவின் கூச்சல்களை மொழிப்பெயர்த்து வாசித்துக் காட்டிய மனப் பிறழ்வுக்கு பிறகு ஒவ்வொன்றின் உதிர்விலும் தடயமற்று போவதிலும் இருந்த அவர்கள் அதன் பிறகு வரவேயில்லை..

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து வழிகின்றன முகங்கள் கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல கைகளில் கட்டப்பட்டிருக்கும் நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில் நிழலாக அசைகின்றன பாதையோர மரங்களும் ஈரப் பறவைகளும் மழையும் ஒரு தெருச் சண்டையும் புன்னகையும் சிரிப்பும் எள்ளலும் சுழிப்பும் முணுமுணுப்பும் அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள் மழைச்சாரலிடையில் அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட பேய்களின் வாய்களுக்கெனவே பிறப்பெடுத்தவை போல வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன பிணங்களின் வாடையுடனான அழுக்கு மொழிகள் இடி வீழ்ந்து இலைகள் கிளைகள் எரிய மொட்டையாகிப்போன மரமொன்றென நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள் மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி புதைக்கப்பட்ட விரல்களில் புழுக்களூர்வதைப் போல நேச உணர்வேதுமற்றவன் தன் தாக்குதலைத் தொடர்ந்தான் நத்தைகள் ஆமைகளைப் போல தங்களை உள்ளிழுத்து கதவுகளைப் பூட்டிக்கொண்டன தெருவில் நிகழ்ந்த கொலையைக் கண்டமுகங்கள் எதையும் காணவில்லையென்ற பொய்யை அணியக்கூடும் இனி அவர்தம் நாவுகள்

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...30

சாபம் வைதீஸ்வரன் என் காலடியில் ஒரு பூனை கடவுளை வேண்டித் தவம் இருக்கிறது என் கை தவறி விழும் இட்டிலிக்காக. அதன் தவத்தை உண்மை யாக்க நான் குட்டிக் கடவுளாகி இட்டிலியைத் தவற விடுவேன். பல தடவை நான் கோணங்கிக் கடவுளாகி இட்டிலியை கைவிடாமல் கட்டை விரல் காட்டுவேன் பொறுமை வறண்ட பூனையின் அரை வெள்ளைக் கண்களில் ஒரு நரகம் தெரியும் விரல் முனையால் சிறிது பல் முளைக்கும். நள்ளிரவில் இருள் அறுக்கும் ஓலம் பூனைக் குரவளைக்குள் ஓரெலியின் இரத்தம் பீச்சி யடிக்கும். கனவுக்குள் நான் எலியாகி இறந்த பின்பும், விழித்துப் பதறிக் கொண்டிருப்பேன். ஏனென்று தெரியாமல்

லதாமகன் கவிதை

அந்த நிலத்தில் ஒரு பொம்மை இருந்தது. பிறகு ஒரு குடில் இருந்தது பிறகு ஒரு இடிபாடு இருந்தது பிறகு சில பிணங்கள் இருந்தது பிறகு ஒரு பங்கீடு இருந்தது பிறகு நிறைய சமாதி இருந்தது பிறகு ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது பிறகு அங்கு கடவுள் வந்தார்.

நான், பிரமிள், விசிறி சாமியார்....16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை. அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன். அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது. பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இர

அது என்ற ஒன்று..

ஒவ்வொரு துரிதக் கணத்திலும் நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள் அது உங்களின் ஒரு பகுதி என்பதை நம்ப மறுப்பீர்கள் அதை ஏற்றுக் கொள்வதில் இருக்கும் அசௌகரியத்தை வாதிட்டு வென்று விடுவீர்கள் பாதுகாப்பைக் கோரும் ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல் அது உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி அலைவதை கவனிக்க மறந்து விடுவீர்கள் உங்கள் துயரத்தின் பாடலை அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும் உங்கள் தோல்வியின் குறிப்புகளை அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து எழுதிக் கொண்டிருக்கும் உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத முனகல்களை இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும் அது ஒரு சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக உங்கள் மீதான ஒரு புகாருக்காக நீங்கள் தான் உங்களின் அவமானம் என்பதை உரைப்பதற்காக அது காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு துரிதக் கணத்திலும் நீங்கள் தவற விடும் அந்த ஒன்று உங்களின் ஒரு பகுதி என்பதை இப்போதும் நம்ப மறுப்பீர்கள்..!

வீடு

மூதாதையர்கள் வாழ்ந்த இடம் நாங்களனைவரும் வளர்ந்த இடம் ஓடிவிளையாட நிறைய மறைவிடங்கள் இருந்த இடம் எப்பொழுதும் சந்தன வாசம் கமழும் இடம் சமையலறையில் விறகு அடுப்பு அணைக்கப்படாமல் சதா எரிந்து கொண்டேயிருந்த இடம் தாத்தா, பாட்டி புழங்கிய பொருட்களால் அவர்களது ஞாபகங்களை மீட்டெடுக்கும் பணிகளைச் செய்த இடம் வீசிய புயலுக்கு தாங்காமல் ஆங்காங்கே விரிசல் கண்டது சுவர்கள் இதோ பொக்லைன் இயந்திரம் தரைமட்டமாக்கிக் கொண்டுள்ளது எங்கள் பொக்கிஷத்தை இனி எங்கள் ஞாபகங்களில் தான் வாழும் இந்த வீடு.

எதையாவது சொல்லட்டுமா - 31

இங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன். சி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத

எதையாவது சொல்லட்டுமா / 30

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன். ''என்ன மெட்ராஸ் ஐ யா?'' என்றான். பின் ''கிட்ட வராதே...எல்லாருக்கும் பரவிவிடும்'' என்று கூப்பாடு போட்டான். எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப

எதையாவது சொல்லட்டுமா / 29

தீபாவளிக்கு அடுத்தநாள் என் இடது கண்ணைப் பார்க்க சகிக்கவில்லை. கண் வீங்கியிருந்தது. கண்ணில் வலியும் இருந்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. அன்று என் அம்மாவின் திதி. நானும் சகோதரனும் சேர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அம்மாவின் திதியை நடத்துவோம். என்னைப் பார்த்தவுடன் என் சகோதரன். ''என்ன மெட்ராஸ் ஐ யா?'' என்றான். பின் ''கிட்ட வராதே...எல்லாருக்கும் பரவிவிடும்'' என்று கூப்பாடு போட்டான். எனக்கு எப்படி இந்த நோய் வந்தது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். புரியவில்லை. அன்று திதி முடிந்து அவன் வீட்டிற்கு என் சகோதரன் போனபோது அவனுக்கும் மெட்ராஸ் ஐ வந்துவிட்டது. இந்த மெட்ராஸ் ஐ எப்படிப் பொறுத்துக் கொள்வது என்பது தெரியவில்லை. நான் பெரும்பாலும் வசிக்கும் சீர்காழி வங்கிக் கிளையில் யாரோ ஒரு வாடிக்கையாளர் கருப்பு நிற கண்ணாடி அணிந்து வந்திருந்தான். அவன் மூலம் எனக்குப் பரவியிருக்க வாய்ப்புண்டா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. கண்ணில் அழுக்குகள் சேர்ந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக மாறிவிடுமோ என்று தோன்றியது. என் கண் எப்போதும் சிவப்பாக இருக்காது. கண் சிவப்பாக மாறினால் அதற்குப

மேன்மக்கள்

எல்லோரும் உடம்பின் வியர்வை ஊற்றுக் கண்களிலெல்லாம் வாசனைத் திரவமூற்றி காற்றில் போதையேற்றி சற்றே முகமெங்கும் வெள்ளை அடித்து வீதிக்கு வருகிறார்கள். அவர்களின் ஒரு கையில் பெரிய பூதக் கண்ணாடியும் இன்னொரு கையில் தார் சட்டியும். பூதக்கண்ணாடியால் ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்த்துவிட்டு அவர்கள் முகத்தில் சிறிது கரும்புள்ளி தென்பட்டால் கூட உடனடியாக அவருடைய உருவம் வரைந்து அதில் தார் பூசி எல்லோருக்கும் காட்டி இளித்து இன்பமடையும் மக்கள்.

இரண்டு கவிதைகள்

கொல்லும் முகம் சுழலும் விழிகளில் நீ஡ ஏனோ? கழநிகளில் பாய்ந்ததுதான் போதாதோ! மறையும் மாலையில் ஒளிர்ந்திடும் - உன்முகம்தான் என் வாழ்வின் விதிப்பயனோ? தெரிந்ததில்லை பயணம் தொடர்ந்தக்கால்! தெரிந்ததில்லை - பருவமதில் - மாற்றத்தில் - தெரிந்ததுதான் யாருக்கு எப்போது? இயம்புமோ உன்முகம்தான் அதைப்பற்றி? என் உறக்க, விழிப்பில், ஊர்ந்தவளே! என் சிந்தையில் படர்ந்த கோடிப் பூவே என் மூளையில் பூத்த வெண்மலரே! உன் முகம்தான் என்னைக் கொன்றதடி. இன்னொரு கவிதை அழிவுப் பாதையில் பயணம் - இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டு - தொடுவானம் கண்டது! ஆக்கப் பாதையில் பயணம் - செளகரியங்களின் நிரந்தரத்திறகான - கதறலோடு பட்டமெனப் பறக்கவும் - ஆதூரம் கொண்டது ரொம்ப நாட்கள் கழித்து- ஒரு மரத்தடியில் உட்கார்ந்தேன் - அழிவுப் பாதையும் - ஆக்கப் பாதையும் - தெரியாத இடத்தில் - களைத்து!

யாராக இருக்கிறாள்?

குளிரும் கம்பிகளில் முகம் வைத்தபடி சிறுமி ஒருத்தி கடும் மழையில் தனித்து நிற்கிறாள். மழை ஆயிரம் குமிழ்களாய் பூத்து மறைவதை உற்று நோக்கி தன்னை மறக்கிறாள். பின்மாலை நேர மழை வண்ணக் குடைகளாய் ததும்பிச் செல்ல பரவசம் இலைச் சொட்டாய் அவள் இதயமெங்கும். வீட்டின் உள்ளே திரும்பிப் பார்த்துவிட்டு தவிர்க்கவியலா உந்தலோடு உள்ளும் புறமும் நனைய கம்பிகளூடே கை நீட்டுகிறாள். மழை - சிதறல்களாய் உள்ளங்கைகளில் பட்டுத் தெறிக்கும் அந்த இடி, மின்னல் கணத்தில் அவள் யாராக இருக்கிறாள்?

நான், பிரமிள், விசிறி சாமியார்....15

நான் இந்தத் தொடரை ஆரம்பித்து பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் தொடர்ந்து இதை எழுதி முடிக்க முடியவில்லை. பிரமிள் பற்றி பல விஷயங்கள் யோசித்து யோசித்து எழுத வேண்டி உள்ளது. எதுவும் ஒரு ஒழுங்கில்லாமல் இந்தத் தொடர் போய்க் கொண்டிருக்கிறது. எழுத்தாளர் பலருக்கு பிரமிளைப் பிடிக்கவில்லை. அது ஏன் என்று நான் ஆராய்ந்து பார்ப்பேன். பல மூத்த எழுத்தாளர்கள் அவருடன் ஒரு காலத்தில் நெருங்கி பழகியிருக்கிறார்கள். பின் அவரை விட்டு விலகி ஓடியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரமிள் பற்றி அவர்கள் மூலமாகவும், அவர்களைப் பற்றி பிரமிள் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்கள் பிரமிள் பற்றி பேசும்போதே கசப்புணர்வுடன் பேசுவார்கள். பிரமிள் இலங்கைக்காரரா தமிழ்நாட்டைச் சார்ந்தவரா? இந்தக் குழப்பமும் எல்லோருடனும் இருக்கும். ஆனால் இலங்கையில் தன் குடும்பத்தை விட்டு வந்தவர். பின் அங்கு செல்லவே இல்லை. தனி மனிதனாகவே தமிழ் நாட்டில் தங்கி விட்டார். கடைசிவரையில் அவர் தனிமனிதர். முரண்பாடு மிக்க மனிதர். எனக்கு அவர் வாழ்வதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும். அவர் யாரிடமும் அடிமையாய் போய் பணம் சம்பாதிக்கவே இல்லை. கொஞ்சம் இணங்கினால் போதும்,

அப்பாவின் குடை

மூட்டெலும்புகள் உடைந்து மடங்காமல் முடங்கியது அப்பாவின் குடை. சிகிச்சைக்கு வழக்கமான இடத்திற்கேச் சென்றேன். அப்படியே இருந்தான் அப்பாவின் குடைக்காரன் அதே இளமையுடன் அதே இடத்தில். சரி செய்ய முடியுமா என்று குடைக்காரனிடம் கேட்டேன். சரி செய்து விடலாம் என்றவன் சரி செய்து கொண்டே அப்பா எப்படி இருக்கிறார் என்றான். அப்பாவைக் காப்பாற்ற முடியவில்லை என்றேன் வருத்தத்துடன். அப்படியா....அதான் அப்பாவைக் காணவில்லை... என்றவன் சரி செய்த குடையை விரித்தான். விரித்த கருங்குடைக்குள் அப்பாவிற்கே உரிய சிரிப்பு மழை இடி முழக்கமாய்.....

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1

(பட்டியல்கள் தொடர்ச்சி......) க.நா.சுவின் விமர்சனப் பார்வையில் ஒரு படைப்பின் தனித்தனி அம்சங்கள் போதிய கவனம் தரப்படாமல் போவதில்லை. ஆனால் அவருடைய இறுதிக் கணிப்பில் அப்படைப்பு அதன் முழுமையில் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதற்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதைக் கூட ஒரு லெளகீக சாமர்த்தியத்துடன் செய்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய் விடலாம் குறைந்த பட்சம், பொல்லாப்பு பெற்றுக்கொள்ளாமல் சமாளித்துவிடலாம். ஆனால் க.நா.சு அவருடைய வாதங்கள், கணிப்புகளைக் கூறிவிட்டு அவைகளை விளக்கக் குறிப்பிட்ட படைப்புகள், படைப்பாளிகள் பெயர்களையும் எடுத்துக் கூறியிருக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களை ரகவாரியாகப் பிரித்துப் பட்டியல்கள் போட்டிருக்கிறார். பட்டியல்கள் - இதை வைத்ததுத்தான் க.நா.சு எவரிடமும் முதல் வசவை வாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய சக விமரிசகர்கள், எழுத்தாளர்களிலிருந்து தொடங்கி, ஒரு பத்திரிகை இதழ் வெளிவந்தால் அதன் அட்டவணையிலிருந்து கடைசிப் பக்கம்வரை உள்ளதை ஒவ்வொரு வரியில் வியந்து - பாராட்டி, திட்டி எழுதும் ஆர்வ வாசகன் வரை க.நா.சுவின் பட்டியல்கள் உபாதைப்படுத்தியிருக்கின்றன. க.நா.சு இப்போது

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....1

பட்டியல்கள் இந்த ஆண்டு (1972) குடியரசு தினத்தன்று சென்னையில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. 'கைராலி ஸ்டடி சர்க்கிள்' என்னும் குழு, நான்கு தென்னிந்திய மொழிகளின் தற்கால இலக்கியம் பற்றிக் கட்டுரைகள் படிக்க ஏற்பாடு செய்திருந்தது. கட்டுரையாசிரியர்கள் நான்கு பேருமே சிறிது கடுமையான விவாதத்திற்கு உட்பட வேண்டியிருந்தது. தெலுங்கு மொழிக் கட்டுரையை ஒரு அன்பர் வெகுவாகக் குறை கண்டார். தெலுங்கு மொழி புரட்சிகர எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் போதிய கவனமும் முக்கியத்துவமும் தராதது குறித்துக் கண்டனம் தெரிவித்து, புரட்சிகர எழுத்தாளர்களின் நோக்கங்களைக் கட்டுரையாசிரியர் பூரணமாகப் புரிந்துகொள்ள புரட்சிகர எழுத்தாளர்க சங்கத்தின் பிரகடனத்தின் சில பகுதிகளை உன்னிப்பாகப் படிக்குமாறு வற்புறுத்தினார். கட்டுரையாசிரியர் கண்டனங்களுக்குப் பதில் அளித்தார். திருப்திகரமாகப் பதில் கூறினாரா என்று கூற முடியாது. ஆனால் அவர் கூறிய பதில் ஒன்று சிந்தனைக்குரியது ''எந்தப் பிரகடனம்தான் மிக உன்னத நோக்கங்களை எடுத்துக் கூறாமல் இருக்கிறது? இலக்கிய சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கம், படைப்பாளிகள் குழாம், இலக்கிய வாசகர் வட்டத்

தாய்மை

தாய்மை அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான

பூனைகள்.......பூனைகள்.........பூனைகள்......29

தந்தைமை என் வீட்டு மாடிப்படி யோரம் தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா? நொடிக்கொரு முறை மாடி யேறியது சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும் இரவுகளில் அழுதது உயிர் கரைய தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில் இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம் விட்டு திரும்பிய மறு கணம் பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய் -என்.விநாயக முருகன்

குடை

மழைக்காலங்களில் மனிதர்களுக்கு முளைக்கும் மூன்றாம் கை மேகக் கருமை வந்து ஒட்டிக் கொண்டது கைகளில் தவழும் குடைகளில் தூறல்களில் நனைந்தே வீடு சேரும் நேரங்களில் பைகளில் தூங்கும் புதிதாய் வாங்கிய குடைகள் கணினி யுகமானாலும் குடைகளின் வடிவம் மட்டும் மாறுவதே இல்லை குடை மீது விழும் மழைத்துளிகள் வருத்தப்பட்டன நனைதலின் சுகம் மனிதர்களுக்கு தெரிவதில்லையென

யானை

கானின் அடர்பச்சை இருளோடு அறையுள் பிரமாண்டத்தை கொண்டு வந்திருந்தது யானை. யாருமற்ற ஒரு நாளில் யானையும் மெல்ல அசைந்தது. கால்களை உதறிவிட்டு உடலை சிலிர்த்தபடி உயிர்ப்பின் சந்தோஷ கணங்களை அடிக்குரலோங்கிப் பிளிறிவிட்டு சின்னக் கண்களால் அறையை அளந்தது. ஒரடி எடுத்தாலும் அறையை விட்டு வெளியேறும் நிலை அறிந்த யானைக்கு இப்போது இரு முடிவுகள். எந்த முடிவு என்பதோ முடிவுகள் என்னென்ன என்பதோ நீங்கள் அறியாததில்லை வாழ்வின் வாதை தெரியாததுமில்லை. -

அனுவாகம்

ஒரு நிமிடம் தான் திரும்பி ஒரே ஒரு பார்வை தான் குசுகுசுக்கள் எல்லாம் அடங்கின இங்கே பார்வைகள் மட்டுமே காக்காய்கள் போல இப்படியும் அப்படியும் ஆட்டம் கண்டன- மௌன சொற்கள் இல்லை மௌனத்தில் சொற்கள் பதுங்கிச் செல்லும் படுத்துப் பதுங்கிச் செல்லும் ஜீவன்கள் போலே- ஏதோ இரண்டு வெவ்வேறு கபடி ஆட்டக் கட்சிகள் போல- சிந்சியரிட்டி இல்லையென்றால் ஏன் இங்கு? என்னுடைய செல் போன் கூவியது- இல்லை நடுங்கியது.. அணைத்து வைக்க முடியவில்லை பாஸ் அழைத்தால்? எடுத்துப் பார்த்து பின்னரே கவனித்தேன் அடுத்த அனுவாகத்துக்கு எல்லோரும் சென்றிருந்தனர் குகுசுத்தவர்களும் கூடவே

குட்டிக்கதைகள்

ஏழு பேர் ஆர். ராஜகோபாலன் அங்கே மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அவர்களில் பெரியவனாகத் தெரிந்த ஒரே ஒரு பையன் மட்டுமே கால்சிராயும் சட்டையும் அணிந்திருந்தான். மற்றவர்களில் சிலர் மேலேயோ கீழேயோ மட்டு஧மை அணிந்திருந்தார்கள். இரு பொடியன்கள் ஒன்றுமே இல்லாது இருந்தார்கள். ஒரு சிறுமிகூட ஒரு கிழிந்தபாவாடை ஒன்றையே இடுப்பு வரை கட்டியிருந்தாள். அவள் மடியிலிருந்த குழந்தை வாயில் விரலைப் போட்டுக்கொண்டு அவள் மார்பில் தலையை சாய்த்துக் கொண்டிருந்தது. இவன் உட்கார்ந்த திண்ணைக்கு நான்கு வீடுகளுக்கப்பால் அவர்கள் இப்போது வந்திருந்தார்கள். நன்றாகவும் தெளிவாகவும் அவர்கள் செய்கை இவனுக்குத் தெரிந்தது. கீழே கிடந்த ஒரு அறுந்த மாலையை அவர்களில் ஒருவனுக்குப் போட்டுக் கைதட்டி பெருஞ்சத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பையன் நழுவி விழும் கால்சிராயை ஒரு கையில் பிடித்துக்கொண்டே கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அவர்களுக்குச் சுற்றுப்புற பிரக்ஞையே இல்லாதது போல இவனுக்குப் பட்டது. பொழுது போகாமல் வெளியே வந்து உட்கார்ந்திருந்த இவனுக்கு அது மிகுந்த வேடிக்கைக்குரியதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூட இருந்தது. ஒரு அயலானின் ப

கையறு நிலை

வானவெளியெங்கும் நட்சத்திரக் கூட்டங்கள் இடைவெளியின்றி ஜொலிக்கின்றன காற்று வெளியெங்கும் பூ வாசம்மன வெளியை மயக்குகின்றன வெளியினூடே வெளிச்சம் பாய்ச்சும் கிரணங்கள் முயங்கிக் கிடக்கின்றன பேரவஸ்தையானதொரு விசும்பல் ஆகாயமெங்கிலும் எதிரொலிக்கின்றன குட்டியை பறிகொடுத்த யானையின் பிளீறிடல் சத்தம் வனமெங்கிலும் ஆக்ரமிக்கின்றன இரவுக்கு முத்தம் தந்து வழியனுப்பி வைக்கின்றன குழந்தைகள் தனது வாழ்வினூடே குட்டி குட்டி கதைகளை சேகரித்து வைத்திருக்கின்றார்கள் பாட்டிமார்கள் அநீதியை எதிர்த்து சமர் செய்யாமல் கையறு நிலையில் நின்று கொண்டிருந்தார் கடவுள் அவரது கட்டற்ற கட்டற்ற அற்புதசக்தியை கடன் வாங்கிப் போயிருந்தது சாத்தான்.

கடவுள் ஆடிடும் ஆட்டம்

கடவுளுக்கு முன்னதான ஜாதகக் கட்டங்களில் இடையறாது சுழலும் சோழிகள் திரும்பி விழுகின்றன சதுரங்க ஆட்டங்களில் சிப்பாய்களை இழந்த ராஜாக்கள் பயந்திருக்கின்றனர் ராணிகள் அருகில். வண்ணம் மாறிவிழும் சீட்டுக்கள் கோமாளியாக்கிக் கொண்டிருக்கிறது பிரித்தாடும் கடவுளை. மனிதர்களின் ஆட்டத்தின் சூட்சுமங்கள் புரியாது தெறித்தோடுகிறார் மனிதர்களுடனாடும் கடவுள். o ஒரு விளையாட்டின் இடைவேளையில் தேநீர் அருந்தும் கடவுளை கடவுளைச் சந்தித்தேன். இருவருக்கும் பேசுவதற்கு ஒன்றுமில்லை புன்னகைத்தோம் பிரிந்தோம். அவர் சொல்லாத உண்மைகளும் நான் கேட்காத கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொண்டிருந்தன பின்பு. o மரணத்தறுவாயில் என்னை வரச் சொல்லியிருந்தார் கடவுள் ரகசியம் எதாவது உடைக்கப்படலாம் என்றோ காதல் எதாவது சொல்லப்படலாம் என்றோ புலம்பல்கள் சேரலாம் என்றோ நினைத்திருந்தேன். நான் போய் சேருவதற்குள் கடவுள் போய்சேர்ந்திருந்தார். o கடவுள் பொம்மைகளை வைத்து விளையாடிய குழந்தைகளை பழிவாங்குவார் பிறிதொருநாள்.

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்...28

பூனையின் பிடிவாதம் எழுத எழுத… எழுத மறுத்தப் பேனா முனை காகிதப் பாதையில் எங்கோத் தட்டிற்று. ஓடும் மோட்டார் சக்கரத்தில் சிக்கிய சேலைத் துண்டாய் பேனா முனையின் இரு கம்பீர கம்பங்களைப் பிளந்து அதற்குள் ஒரு காகிதத் துணுக்கு. ஜீரணிக்க இயலாமல் கக்கிய மைக்குள் மிதந்து வந்த ஒரு பூனை பிடிவாதமாய் வரைமுறையின்றி கத்திற்று ஒரு எலியினை வரை வரை என்று. குமரி எஸ். நீலகண்டன்

கானல்

கா ற்றோடு கூடிய அடர்த்தியான சாரல் மழை ஊரையே ஈரலிப்புக்குள் வைத்திருந்தது. மேகக் கருமூட்டம் பகல் பொழுதையும் அந்திவேளையைப் போல இருட்டாக்கியிருந்தது. விடுமுறை நாளும் அதுவுமாய் இனி என்ன? உம்மா சமைத்து வைத்துள்ள சுவையான சாப்பாட்டினைச் சாப்பிட்டுவிட்டு அடிக்கும் குளிருக்கு ஏதுவாய்ப் போர்த்தித் தூங்கினால் சரி. வேறு வேலையெதுவும் இல்லை. ஒருமுறை வெளியே வந்து எட்டிப்பார்த்தேன். வீட்டுக்கு முன்னேயிருந்த வயல்காணி முழுதும் நீர் நிறைந்து வெள்ளக் காடாகியிருந்தது. நாளை கொக்குகளுக்கு நல்ல நண்டு வேட்டை இருக்கிறது என எண்ணிக் கொண்டேன். இந்தக்கிழமை போயா தினத்துக்கும் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை. மழை வெளியே எங்கும் இறங்கி நடமாட விடாது போலிருக்கிறது. "நானா உங்களுக்கு போன்'' தங்கை சமீனா கொண்டு வந்து நீட்டினாள். " யாரு ? " " வஜீஹா மாமி ஊட்டுலீந்து " ஹாரிஸாக இருக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன். அவன் என்னுடன் கூடப்படித்த நெருங்கிய சினேகிதர்களில் ஒருவன். கொழும்பில் வேலை செய்யும் அவனும் விடுமுறைக்காக வீட்