Skip to main content

Posts

Showing posts from 2009

எதையாவது சொல்லட்டுமா....13

July மாதத்தில் நான் நான்கு மாதங்களுக்கு நூலகக் கட்டடத்தின் சின்ன அறையைப் பதிவு செய்திருந்தேன். அதாவது டிசம்பர் மாதம் வரை.ஆனால் எதிர்பாராத திருப்பமாக அக்டோபர் மாதம் சென்னையிலிருந்து கும்பகோணம் போகும்படி நேரிட்டது. இனி பணி நிமித்தமாக அங்குதான் இருக்கும்படி ஆகிவிட்டது. நான் இப்போது சீர்காழியில் இருக்கும்படி இருந்தாலும், சென்னையில் கூட்டம் நடத்தும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நவம்பர் மாதம் முழுவதும் நான் லோலோவென்று கும்பகோணம் முழுவதும் அலைந்தேன். அதனால் நவம்பர் மாதம் நான் நடத்தும் கூட்டம் மழையும் சேர்ந்துகொண்டதால் நடத்த இயலவில்லை. கூட்டம் நடத்தாமலே ரூ.250 போய்விட்டது. டிசம்பர் மாதக் கூட்டம் என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்தேன். வழக்கமாக மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை என்னால் கூட்டம் நடத்த முடியவில்லை. நான் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கிளம்பி சென்னையை அடைந்து, ஒரே ஒரு நாளான ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து, அன்று இரவு 11 மணிக்கு ஒரு பஸ்ûஸப் பிடித்து சீர்காழி வந்து விடுவேன். அப்படி வரும் கால் வீங்கி விடுகிறது. பிறகு சரியாகி விடுகிறது. நான் முதலில் பயந்துபோய் டாக்டர்களிடம் கேட்டதற்கு அத

எதையாவது சொல்லட்டுமா....12

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் பத்திரிகைகளைப் படித்தவர்கள் புரிந்துகொண்ட விஷயம். தொடர்கதைகள், கதைகள் எல்லாம். ஆனந்தவிகடன் என்ற பத்திரிகை முத்திரைக் கதைகளை எல்லாம் பிரசுரம் செய்திருக்கிறது. இன்று ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை அறிவதற்கு ஆனந்தவிகடன் ஒரு காரணம். குமுதம் பத்திரிகை சாண்டில்யன் போன்ற படைப்பாளியெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறது. பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேந்திர குமார், ராஜேஸ்குமார் , புஷ்பாதங்கத்துரை போன்ற பிரபல எழுத்தாளர்களையும் இந்த லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் பத்திரிகைகளில் வலம் வந்தவர்கள்.இன்றைக்குப் பிரபலமாக அறியப்படும் சுஜாதா என்ற எழுத்தாளர் குமுதம் பத்திரிகையில் முதன் முதலாக தொடர்கதை மூலம் அறியப்பட்டவர்தாம். என் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் ஆரம்பத்தில் காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதியவர். பின்னர் ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரில் தொடர்கதைகளை ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்த பிறகு பிரபலமானார். இப்படி பிரபல பத்திரிகைகளில் எழுதுபவர்களுக்கு ஏகப்பட்ட வாசகர்கள் வாசகிகள் கிடைப்பார்கள். அண்ணாசாலையில் உள்ள பொது நூலகத்தில் நடந்த ஒரு வாசகர் சந்திப்பில் சுஜாதாவை நான

ட்யூஷன் ஆசிரியரின் கவிதை

மொழிபெயர்ப்புக் கவிதை இன்றொரு கவிதை எழுதவேண்டும் சொல்லும்பொழுதே தாளொன்று பாதி நிறுத்தப்பட்ட ட்யூட்டொன்று உம்மென்றிருந்தன எடுக்கும்வரைக்கும் விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு ஒன்பது மணிக்கு குழு வகுப்பு இரவில் விடைதிருத்தும் வேலை சிவப்புப் பேனையிலிருந்து வழிவது மனைவியின் முறைப்பு செஞ்சாயத் தேனீரருந்தியபடி சிற்றுண்டிச் சாலையில் எழுதிய எளிய கவிதைப் புத்தகத்தின் கவிதைத் தலைப்புகளே இங்கு சுவர் முழுதுமிருந்து என்னைப் பார்த்துச் சிரிப்பவை கரும்பலகையில் வெண்கட்டி போல தேய்ந்துபோகும் வாழ்விடையே கவிதைகள் கைவிட்டு நழுவி எனக்கே மிதிபட்டு அலறும் சாகித்திய வானிலே கவிதையொன்றைக் கற்பனை செய்கிறேன் இரவில் வந்து அரை மயக்கத்தில் நித்திரை கொள்கிறேன் கண்களில் வீழ்கின்றன சந்திரனின் கிரணங்கள் எவ்வாறு நாளை கவிதையொன்றை எழுதுவேன் மூலம் - திலீப் குமார லியனகே ( சிங்களமொழியில் )

எதையாவது சொல்லட்டுமா / 11

இங்கு எழுதுவதில் எதாவது தலைப்பு இட்டு எழுதலாமா என்று யோசிக்கிறேன். அப்படி எழுதுவதென்றால் காலடியில் கவிதைகள் என்ற பெயர் இடலாம். 22 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது அது கவிதைக்கான பத்திரிகையாகத்தான் திகழ்ந்தது. ஒரே கவிதை மயமாக இருக்கும். முதன் முதலாக ரா ஸ்ரீனிவாஸன் கவிதைப் புத்தகம்தான் விருட்சம் வெளியீடாக வந்தது. சமீபத்தில் நேசமுடன் என்று வெங்கடேஷ் எழுதிய கட்டுரையைப் படித்தேன். புத்தகம் விற்பது என்பதைப் பற்றி எழுதியிருந்தார். அப்படியென்றால் என்னவென்று தெரியாது. ஒரு கவிதைப் புத்தகத்தை ஒரு 100 பிரதிகளாவது எப்படி விற்பது..எனக்கு அந்த ரகசியத்தை யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். நான் சொல்வது பிரபலமாகாத யாருக்கும் தெரியாத புதியவரின் கவிதைத் தொகுதி. கடந்த 22 ஆண்டுகளாக புத்தகம் கொண்டுவரும் நான் அதை எப்படி விற்பது எனபதைக் கற்றுக்கொள்ளவே இல்லை. முழுக்க முழுக்க லைப்ரரியை நம்ப வேண்டியுள்ளது. கவிதைக்கு லைப்ரரியின் கருணை கிடையாது. இதைத் தெரிவிக்க முதல்வருக்கு ஒரு விண்ணப்பம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதினேன். விண்ணப்பம் எழுதி என்ன பிரயோசனம். கவிதைப் புத்தகங

குழிவண்டுகளின் அரண்மனை

பக்கம் 80 ரூ.40 புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் சுகுமாரன் முன்னுரை: அரவிந்தனின் கவிதைகள் தனி வழியில் உருவாகியிருப்பவை. தனித்துவமான இயல்புகள் கொண்ட கவிதைகள்தாம் கவனத்துக்குள்ளாகும் என்ற இலக்கிய நியதியை அறிந்துகொண்டேதான் இதைக் குறிப்பிடுகிறேன். பல தனித்துவங்கள் கவிதையுலகில் நிலவும்போது அதுவே ஒரு பொதுமொழியையும் உருவாக்கி விடுகின்றன. கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன் இந்தப் பொதுமொழியைக் கடந்து தன்னுடையதான கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள். இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர்கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன. (அட்டைப் படம் இணைத்துள்ளேன்)

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி...

பார்வைக்குப் புலப்படாப் பாதங்களைக் கொண்டது நீருக்குள் அசைந்தது சிற்பங்களெனக் கண்ட உயிர்த் தாவரங்கள் ஒளித்தொகுக்கும் வழியற்று மூலைகளை அலங்கரித்திட விட்டுவந்த துணையை குமிழிகள் செல்லும் பரப்பெங்கிலும் தேடியது எல்லாத் திசைகளின் முனைகளிலும் வாழ்வின் இருளே மீதமிருக்க காணும் யாரும் உணராவண்ணம் மூடா விழிகளில் நீர் உகுத்து அழகுக் கூரை கொண்ட கண்ணாடிச் சுவர்களிடம் தன் இருப்பை உணர்த்த கொத்திக் கொத்தி நகர்ந்திற்று செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று அது நானாகவும் இருக்கக் கூடும் -,

செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.

நண்பர்களே, எதிர்வரும் புத்தக கண்காட்சியை யொட்டி, எனது இரண்டாவது கவிதைத் தொகுதி "இன்ன பிறவும்" கவிஞர் சுகுமாரன் அவர்களின் முன்னுரையோடு வெளியாகிறது. நூல் விபரம்: நூல் பெயர்: இன்ன பிறவும் பதிப்பகம்: அகரம், தஞ்சாவூர் கிடைக்குமிடம்: டிசம்பர் 30 முதல் ஜனவரி 10 வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் அகரம் பதிப்பக ஸ்டால் மற்றும் சென்னை தியாகராய நகர் புக்லாண்ட்ஸ். அன்புடன், செல்வராஜ் ஜெகதீசன்.

விரிசல்

ஒரு சாயங்கால வேளையில் கண்ணாடியோ பீங்கானோ விழுந்து நொறுங்கும் சப்தம் பொதுச்சுவருக்கு அப்பால் பக்கத்து வீட்டில் மையங் கொண்டிருந்தது கதவருகில் சென்றபோது கசிந்து கொண்டிருந்தன கடுமையான வார்த்தைகள் ஒவ்வொரு துண்டும் பொறுக்கப்படும் ஓசை ஒன்றில் அவன் முத்தம் ஒன்றில் அவள் வெட்கம் சிலவற்றில் அவர்கள் சத்தியம் ஒரு மிகப்பெரிய துண்டில் இப்போது அழுது கொண்டிருக்கும் குழந்தையின் சிரிப்பு பதட்டமாக நானும் நானும் பேசித் தீர்க்கிறோம் மறுநாள் காலையில் கலங்காத கண்களுடனும் வழக்கமான புன்சிரிப்புடனும் அவளைக் கண்ட எனக்கு நிம்மதியுடன் சற்று ஏமாற்றமும் வார இறுதியில் கைகோர்த்துச் சென்றவர்களின் சிரிப்பின் விரிசல் மாயப்பசையில் இணைந்திருந்தது கோபத்தில் தட்டை நகர்த்த மட்டும் அறியும் எனக்குள் இருக்கும் மிருகம் இன்னும் கொஞ்சம் வளர்கிறது

அவளா இது?

லூசியா. அதுதான் அவள் பெயர். பாத்திரங்களை முறையாக அடுக்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் வேறு ஏதோ நினைவில் உழன்று கொண்டிருந்தாள். 'இன்னும் சிறிது நேரத்தில் எட்வர்ட் வந்துவிடுவார்', என்ற எண்ணம் எழுந்ததும், இரவு உணவு தயாரிக்கும் வேலையில் இறங்கினாள். பத்தே நிமிடத்தில் மிருதுவான சப்பாத்தியும், மணமணக்கும் குருமாவும் தயார் பண்ணிவிட்டாள். அவற்றை சூடாகவே இருக்கும்படி வைத்துவிட்டு, சோபாவில் சற்றே ஆசுவாசமாக அமர்ந்தாள். அவள், இதுவரை தான் வாழ்ந்த வாழ்வை அசை போட்டுக் கொண்டிருந்தாள். அவள் முன் எட்வர்ட், குழந்தைகள், சமையலறை மட்டுமே நிழலாடின. சலிப்பாக உணர்ந்தாள் முதன் முறையாக. 'என் வாழ்க்கை இவ்வளவுதானா?' என்ற நினைப்பு அவளை என்னவோ செய்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. எட்வர்ட் தன் முதல் மனைவி இறந்த பிறகு, மிகவும் சிரமப்பட்டான். அவனால் அலுவலகத்திற்கும் சென்று, ஐந்து மற்றும் மூன்றே வயதான தன் பெண் குழந்தைகளையும் கவனிக்க இயலவில்லை. அந்த நேரத்தில்தான் லூசியாவைச் சந்தித்தான். அவளின் சந்திப்பால் எட்வர்ட் சிறிது ஆறுதல் அடைந்தான். அவன் தன் விருப்பத்தை

விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில் வந்து போகின்றன விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகள் நல்லது பயக்குமெனில் நல்லது கறையென்கின்றன இன்னுமதிக வெளுப்புக்கு இவையிவை என்ற அறிவிப்புகளோடு இலவசங்களுக்கான சீசன்களை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு விளம்பரங்களில் வகுபட்டு பின்னமாகிக் கொண்டிருக்கிறது பொழுதுகள்

எதையாவது சொல்லட்டுமா 10

ராஜன் தோட்டம் என்ற இடத்தில்தான் காலையில் நடைபயிற்சி செய்வேன். ஏராளமானவர்கள் வருவார்கள். விளையாட்டில் பெயர் எடுக்க வேண்டுமென்கிற யுவதிகளும், யுவர்களும் அதிகமாகக் கலந்துகொள்வார்கள். என்னைப் போலுள்ளவர்கள் நடந்துகொண்டே இருப்பார்கள். மகாலிங்கம் என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அரசாங்கத்தில் பணிபுரிபவர். இரண்டு புதல்வர்கள். இரண்டு பேர்களையும் கடன் வாங்கிப் படிக்க வைத்துவிட்டார். பெரிய புதல்வன் ஐஐடியில் படித்திருக்கிறான். ஆனால் அவர் புதல்வர்களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ஐஐடியில் படித்த பெரிய புதல்வனுக்கு சொற்ப சம்பளத்தில்தான் வேலை கிடைத்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு தயக்கம். மகாலிங்கத்திற்கு என்னைப் போல் சர்க்கரை. அவர் கிரவுண்டில் நடக்கிறதைப் பார்த்தால் அசந்து போய்விடுவீர்கள். அப்படி நடப்பார். நான் ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவர் இன்னொரு முறையும் சுற்றியபடி என்னைப் பிடித்து விடுவார். அப்படி நடந்து கொண்டிருந்தவர்தான் மெதுவாக நடக்கத் தொடங்கினார் அன்று. காலில் ஏதோ அடிப்பட்டுவிட்டதாம். அன்று அவர் சுரத்தாக இல்லை. கடன்காரர்கள் தொந்தரவு செய்கிறார்களாம்.வங்கியில் கடன் வாங்காமல்

ரசனை

நீர்ப்பறவை நீந்தாத வரையிலும் மீன்கள் துள்ளிக் குதிக்காத வரையிலும் மழைத்திரவம் சிந்தாத வரையிலும் சிறுவர்கள் கல்லெறிந்து விளையாடாத வரையிலும் காற்று பலமாக வீசாத வரையிலும் சலனமற்று கிடக்கின்ற குளத்துநீரில் தங்கள் பிம்பத்தை ரசித்துக் கொண்டிருக்கும் கரையோர பனைமரங்கள்

சுமை

எத்தனையோ கனமான பொருட்களை இந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றன விழாக்கள் போதும் சடங்குகள் போதும் இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும் கைகள் சுமையாக இருக்கின்றன

இன்று வரை

நிச்சயமாய் தெரியுமென்றாலும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது இன்று வரை. ஏதாவதொரு கையசைப்போ எதிர்கொண்டழைக்கும் முகமொன்றுக்கோ ஆன ஏக்கங்கள். O

எதையாவது சொல்லட்டுமா / 9

நான் சீகாழி மயிலாடுதுறை என்று பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். சனிக்கிழமை சென்னையை நோக்கி வந்துவிடுகிறேன். நான் சொல்ல வந்தது வேறு. பொதுக் கழிப்பிடம் பற்றி நீங்கள் எதாவது நினைப்பதுண்டா? பஸ்ஸில் பயணிக்கும்போது ரொம்ப உபத்திரவமானது இந்தக் கழிவறைகள். சனி மதியம் நான் சீகாழி பஸ் ஏறினால், எனக்குப் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான் இந்தக் கழிவறைகளை நோக்கி ஓட வேண்டியிருக்கும். இரண்டு ரூபாய் காசு வாங்கிக்கொண்டு கழிவறை வாசலில் ஒருவன் உட்கார்ந்து கொண்டிருப்பான். பை சகிதமாய் வரும் நான் அவன் காலடியில் அதைக் கிடத்திவிட்டு உள்ளே நுழைவேன். ஏண்டா நுழைகிறோம் என்றுதான் இருக்கும். உள்ளே நுழைந்தவுடன் மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டும். கழிவறையில் கொட்டுகிற தண்ணீர் மூத்திரம் மாதிரி இருக்கும். இப்படி ஒரு அவதியா என்று நினைக்காமல் இருக்க மாட்டேன். இந்தக் கழிவறையில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆண்களை விடுங்கள். பெண்கள் எப்படியெல்லாம் அவதிப்பட வேண்டியிருக்கும். நான் இருக்கும் சீகாழி பிராஞ்சு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் உள்ளே மட்டும் வந்து விடாதீர்கள்.

எதையாவது சொல்லட்டுமா / 8

சென்னையிலிருந்து ஒரு வழியாக 2ஆம் தேதி நவம்பர் கும்பகோணம் வந்துவிட்டேன். வழக்கம்போல் மயிலாடுதுறையில் தங்கி கும்பகோணம் சென்று கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னைக்குச் சென்றுவிடுவேன். பின் ஞாயிறு கிளம்பி வந்துவிடுவேன். மயிலாடுதுறையில் முன்பு தங்கியிருந்த வீட்டிலேயே தங்கி தினமும் கும்பகோணம். எனக்கு எந்த இடம் என்று தெரிய சில நாட்கள் ஓடிவிட்டன. பட்டுக்கோட்டையா? புதுப்பித்தன் கதையின் தலைப்பான அதிராமப்பட்டிணமா? அல்லது மன்னார்குடியா என்று திகைத்துக் கொண்டிருந்தேன். வேலையை விட்டுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்த உறவினர் வீட்டு விழாவிற்குச் சென்றேன். ஒருவரிடம் வேலையை விடலாமா என்று யோசிக்கிறேன் என்றேன். பின் இன்னொன்றும் சொன்னேன். வேலையை விட்டால் மாதம் ஆயிரம் கூட சம்பாதிக்க முடியாது என்று. அதைக் கேட்டு அவர் விழுந்து விழுந்து சிரித்தார். ஆனால் இனிமேல் சம்பாதிக்க வேண்டாம் என்று சும்மா இருந்தால், சும்மா இருக்க விட மாட்டார்கள் வீட்டில். என் அப்பா தொண தொண என்பார். மாமியார் தொண தொண என்பார். மனைவி ஏளனமாய்ப் பார்ப்பாள். விற்காத புத்தகங்கள் எல்லா இடங

நீ விட்டுச் சென்ற மழை

நீ விட்டுச் சென்ற மழை எனது மௌனத்தின் பின்புறத்தில் ஒளிந்திருந்தன உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட கதையொன்றின் மிச்சங்கள் அதனூடு இருப்பின் மகிழ்வுகளை எங்கோ தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது தனிமை செடி பூக்களை உதிர்த்து மழையைச் சூடிக்கொள்கிறது வழமைபோலவே மழைக்கு நனைந்த வீட்டை வெயிலுலர்த்திப் போகிறது வீழ்ந்த சாரல் போல நிரம்பி உருண்டையாகி உடைந்துவிழுகிறது ஆற்றுப்படுத்தப்படாத ஒரு விழிநீர்த் துளி எல்லாமறிந்தும் ஏதுமறியாய் நீ

நான், பிரமிள், விசிறிசாமியார்......11

ஞாயிற்றுக்கிழமை (29.11.2009) நான் சென்னையில் இருந்தபோது வாசலில் ஒரு கார் நின்றிருந்தது. கார் பின்னால் ஒரு வாசகம் யோகி ராம்சுரத் குமார் என்று. எனக்கு நான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரை ஞாபகம் வந்தது. ரொம்ப நாள் தொடராமல் போனதற்கு பிரமிளின் மறைவைப்பற்றி சொல்லும் சங்கடம்தான். ஒரு மரணம் ஒவ்வொரு மனதிலும் எப்படி நிழலாடுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பிரமிள் துணிச்சல்காரர். அவர் மரணத்தைப்பற்றி பேசி நான் கேட்டதில்லை. அவர் அவ்வளவு சீக்கிரம் மரணம் அடைந்துவிடுவார் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சென்னையில் நானும் அவரும் இருந்தாலும், அவர் அடிக்கடி கார்டில் தகவல் கொடுத்தபடி இருப்பார். அவருக்கு மஞ்சள்காமாலை நோய் திரும்பவும் தாக்கியிருப்பதை அவர் குறிப்பிட்டிருந்தார். முன்பே திருவான்மியூரில் அவர் தங்கியிருந்தபோது ஒருமுறை அவருக்கு அந்த நோய் தாக்கியிருந்தது. அப்போது சரியான நோய் திரும்பவும் பிடித்துக்கொண்டது. அத்துடன் இல்லாமல் நிமோனியா வேற அவரைத் தாக்கியிருந்தது.அவர் நோயைப் பற்றி எதுவும் சொல்லாவிட்டாலும் பலவீனமாக இருந்தார். அவர் இருந்த இடம் மோசமாக இருந்தது. சாந்தோமில் ஒரு குப்பத்தில் அவர் வசித்த

காக்கை கூடு

எங்கள் வீட்டுமுன் வேப்பமரத்தில் புதிதாக இரண்டு காக்கைகள் கூடுவைத்துள்ளன . காக்கைகளினால் பொழுதுகளில் சங்கடமும் சமயங்களில் பலன்களும் வரலாம் . நாளை மறுநாள் வரப்போகும் பங்காளிகளை இன்றே கரைந்து காட்டிக்கொடுத்துவிடும் . தப்பித்தவறி எச்சமிட்டுவிட்டாலும் நல்ல அதிஷ்டக்காரன் என்றொரு பட்டம் கிடைக்கும் . கூட்டிலிருந்த கருவேல முள் விழுந்து முற்றம் முழுவதும் குப்பையாகிரதென்பாள் . துணி தொவைத்து ஒன்றைக்கூட மரத்தடியில் காயபோட முடியவில்லை என்பாள் . காக்கை என்பதை அருவருப்பாய் மட்டுமே பார்ப்பவளுக்கு எப்படி புரியவைப்பது ? இந்த கூடு நிறைய நேரங்களில் இருக்கும் வரை சொறுவைத்த அம்மையை நினைவுபடுத்துகிறதென்பதை.

இரண்டு கவிதைகள்

கண்ணீர் அஞ்சலி நான்கு நாட்கள் முன்பு தெருமுனை மின்சார கம்பத்தில் அவரை பார்த்தேன் கண்ணீர் அஞ்சலி எழுத்துகளுக்கு கீழே இரண்டு கண்கள் படம் யாருடையதென்று தெரியவில்லை அழுதுக்கொண்டிருந்தன கண்களுக்கு கீழே சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார். புகைப்படத்திற்கு கீழே வருந்துகிறோம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் எ‌ன்று அச்சாகி இருந்தது. இரண்டாவது நாள் குடும்பத்தினரை காணவில்லை. நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர் மூன்றாவது நாள் நண்பர்களை மாடு நக்கி கொண்டிருந்தது. நான்காவது நாள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார் யாரோ ஒருத்தன் சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான் இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன இரண்டு கண்கள் யாருடையதென்று தெரியவில்லை ஒருநாள் அதுவும் மறைந்து விட்டது விசாரித்தல் எங்கு பார்த்தாலும் அன்புடன் விசாரிப்பார் எனது நண்பர் சினிமா தியேட்டரில் விசாரிப்பார் என்ன படம் பார்க்க வந்தீங்களா? மருத்துவமனையில் விசாரிப்பார் என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா? துணிக்கடையில் விசாரிப்பார் என்ன துணி எடுக்க வந்தீங்களா? கோயிலில் விசாரிப்பார் என்ன சாமி கும்பிட வந்தீங்களா? ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம். ஒருநாள் இறந்தும்விட்டார் ஒர

எதையாவது சொல்லட்டுமா....7

கடந்த 2 வாரங்கள் கும்பகோணத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். காலையில் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்றால் வர இரவு ஆகிவிடும். திரும்பவும் காலையில் மயிலாடுதுறையிலிருந்து. நிச்சயமில்லாத பிழைப்பு என்பார்களே அப்படித்தான் இருந்தேன். ஆனால் வண்டியில் ஒரு மணி நேரப் பயணத்தில் தினமும் இந்துவையும் தினமணியையும் படித்துவிடுவேன். சால்மன் ரிஷ்டியின் ஷாலிமர் தி க்ளௌன் என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டு வருகிறேன். புத்தகம் படிப்பதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இல்லை. புத்தகம் படிப்பதும் ஒரு அற்புதமான ஒன்றாகத்தோன்றுகிறது. சமையல் அறையில் சில புத்தகங்கள் என்ற பெயரில் புத்தக விமர்சனங்கள் பல எழுதியிருக்கிறேன். திரும்பவும் எழுத ஆரம்பித்து விடுவேன் என்று தோன்றுகிறது. திங்கள் கிழமையிலிருந்து மயிலாடு துறை சீர்காழி என்று பிழைப்பு நிச்சயமாகிவிடும். ஆனால் கணினி சென்னையில்தான் இருக்கிறது. அங்கு லாப்டப் வாங்கலாமா இன்னொரு கணினி தயார் செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கணினியில் எழுத ஆரம்பித்து பேப்பரில் எழுதும் பழக்கம் போயே விட்டது. கணினி இல்லாமல் கை ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது. கடந்த 2 வார

போன்சாய் ம‌ர‌ நிழல்

இருள் பூத்துத் தொங்கும் போன்சாய் ம‌ர‌ நிழலிலிருந்து வெளிவ‌ருகிறாள் அர‌ளிப்பூ தேவ‌தை பாம்புக‌ளின் பாதைத் த‌ட‌த்தின் மேல் க‌ம‌ழ்ந்து கொண்டிருக்கிற‌து தாழ‌ம்பூ ம‌ண‌ம் ப‌ழைய‌ க‌விதையொன்றின் பெண்ணைப் பிசாசென மொழிபெயர்க்கிறார் காதல் மொழி தெரியா பெயர்ப்பாளன் எல்லாக் க‌விதைக‌ளிலும் தேவ‌தை என‌ அடித்து எழுதுகிறான் ஆசிரிய‌ சித்த‌ன்

விமான நிலைய வரவேற்பொன்றில்...

# பயணக் களைப்பாய் இருக்கலாம். போய்வரும் இடத்தில் நேர்ந்த உறவைப் பிரிந்ததால் இருக்கலாம். எதிர்கொண்டழைக்க எவருமற்று காணும் புது இடம் குறித்த மிரட்சியாய் இருக்கலாம். ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்பட்டவனை நோக்கி இதழ்க்கோடியில் தவழ விட்டேன் புன்னைகையொன்றை. சற்றே சலனம் காட்டி பின் சமாளித்து போய்க்கொண்டிருந்தவன் நினைத்திருக்கக்கூடும் ஏதும் என்னைப் பற்றி. இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில் இன்னொரு முகத்தின் சோகத்தை இம்மியாவது இடம்பெயர்க்க முடிந்ததென்ற நிம்மதி எனக்கு.

வேறோர் உலகம்

1. புன்னகை சாத்தியப்படாத முகங்களில் நடுவே கற்பாவையென மெளனபுன்னகையுடன் நின்றிருந்தாய் நீ. ஜென்மங்கள் கடந்த காத்திருப்பில் வார்த்தைகள் தேவையின்றி தழுவிக்கொண்டழுதோம். ப்ரியங்கள் சுமந்துவந்த தேவதை குழந்தைகள் நிறைந்த உலகிற்குள் நம்மை அழைத்துச் சென்றாள். மீண்டும், எதிரெதிரே நிற்கும் பொம்மைகளானோம். 2. இடக்கை உடைந்து தனியே விழுந்தபோது உன் கண்களை கண்டேன். துயர்மிகுந்த பார்வைக்குள் உன் வலியை மறைத்துக்கொண்டிருந்தாய். யாருமற்ற பொழுதொன்றில் அருகில் வந்தமர்ந்தது தோள்களில் சாய்ந்துகொண்டாய். பின், அகன்று சென்றாய். பொம்மையுலகில் பிறவி கொண்டதற்காக உடைந்தழுதேன் நான்.

நாவிஷ் செந்தில்குமார்

உனக்குமட்டுமொரு ரகசியம் சொல்கிறேன் என்றொருவன் காதில் சொன்னதை எனக்குமட்டும் சொல்வதாகச் சொல்கிறான் இன்னொருவன்... ரகசியம் என்ற வார்த்தையிலுள்ள புள்ளிக்கும் நாளும் கசிகின்ற எங்கள் வீட்டு தண்ணீர்த்தொட்டியிலுள்ள ஓட்டைக்கும் நானறிந்து வித்தியாசமேதும் இல்லை

எதையாவது சொல்லட்டுமா....6

போன 84வது நவீன விருட்சம் இரங்கல் செய்தியாக இருந்ததாக எல்லா நண்பர்களும் சொல்லிவிட்டார்கள். இதனால் 50 ஆண்டு கவிதைக் கொண்டாட்டமாக இல்லாமலும் போய்விட்டதாக சிலர் சொன்னார்கள். உண்மையில் இரங்கல் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் இதழில் கவிதைகள் சற்று அதிகம்தான். 160 பக்கம் 20 ரூபாய் என்பது ஆச்சரியமான விலை. பலர் நவீன விருட்சத்தை வாங்கிப் படித்தார்கள். எப்போது வரும் க்ரோம்பேட்டை ரயில் நிலையத்தில் மட்டும் 20 பிரதிகளுக்கு மேல் போன இதழ் விற்பனை ஆகி உள்ளது. இது மகிழ்ச்சியான விஷயம். ஏன் என்றால் அங்கு 5 பிரதிகள் கூட விற்பனை ஆகாது. பலர் இதழைப் பாராட்டியும் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் சொன்னார்கள். (சிறு பத்திரிகை என்றால் கடிதம் எழுத மாட்டார்கள்). எனக்குத் தெரியாத பல புதியவர்கள் படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி. ஒரு காலத்தில் நவீன விருட்சம் ஆரம்பிக்கும்போது படைப்புகளுக்காக எல்லோரிடமும் கேட்டுக்கொண்டே இருப்பேன். அந்த நிலை முற்றிலும் மாறி விட்டது. வலைதளத்தில் பலர் தெரியாத புதியவர்கள் படைப்புகளை கொட்டுகிறார்கள். சிலர் எழுத்துக்களை மறந்து விடுகிறேன். எல்லோரும் தீவிர எழு

சில கவிதைகள்

தூக்கி எறியும் பழைய செருப்புகளும் புதிதில் ஆசையாக வாங்கியதுதான் * வரும்போது இனிதே வரவேற்று போகும்போது இனிதே வழியனுப்பும் இரு பக்கங்கள் வாய்க்கிறது.. ஊர் எல்லை பெயர்ப்பலகைக்கே. * ஊருக்குப்போயிருக்கும் மகனின் மழலைச்சிரிப்பை எண்ணுந்தோறும் தனிமையில் விரக்தியாய் சிரித்துக்கொள்கிறான் அதற்கும் பெயர் சிரிப்புத்தானா? * கைகளேந்திப் பெற்றுக்கொண்டு திரும்பி நடக்கும் அந்தக் கண்களை உற்று நோக்குங்கள் திரளும் கண்ணீர்

எதையாவது சொல்லட்டுமா....5

நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து நான் கும்பகோணம் பக்கத்தில் உள்ள எந்த ஊரில் இருப்பேன் என்பது தெரியது. எனக்குப் பிடித்த ஊரான மாயவரத்தில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இந்த கம்ப்யூட்டரெல்லாம் இங்கயே வைத்துவிட்டுப் போய்விடுவேன். சில காலம் அங்கு பழகி, வேறு கம்ப்யூட்டரில் என்னை நுழைத்து திரும்பவும் எல்லாம் கொண்டு வர வேண்டும். இந்த முறை எனக்கு அங்கு செல்லவே பிடிக்கவில்லை. ஏன் பிடிக்கவில்லை? என் அப்பாவிற்கு வயது 88 ஆகிறது. அவரை விட்டுப் போவது ஒவ்வாத விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. என் அப்பா என்னை மாதிரி ரொம்ப சாதுவான மனிதர். நல்ல மனிதர். யாருடன் சண்டைக்குப் போக மாட்டார். கொடுத்ததைச் சாப்பிடுவார். பலருக்கும் உதவி செய்யும் நோக்கம் உடையவர். 88வது வயதில் கூட வெற்றிலைப் பாக்குக் கூட போட மாட்டார். எனக்குப் பிடித்த ஊரான மாயூரம் கிடைத்தால், நான் என் அப்பாவை சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைப் பார்த்துவிட்டு திங்கள் மாயூரம் போவேன். ஆனால் ஆண்டவன் சித்தம் எப்படி இருக்கும் என்று தெரி ய வில்லை . எனக்கும் 56 வயதாகிறது. என் மனைவி, அப்பாவை விட்டுவிட்டுத்தான் செல்லவேண்டும். மடிப்பாக்கத

டெரகோட்டா சிற்பங்கள்

கொஞ்சம் களிமண் எடுத்துக்கொள்ளுங்கள் கெட்டியாக பிசையவேண்டும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் நீங்கள் விரும்பும் வடிவத்தின் அச்சில் வார்க்கவும் அடைக்கப்பட்ட அறையில் புத்தகங்களை எரித்து க‌ளிமண்ணைப் போட்டுவிடுங்கள் டாக்டர் பொம்மையோ கணினி வல்லுனரோ விரும்பும் சிற்பங்கள் தயாராகும். களிமண்ணின் விருப்பத்தை மட்டும் கேட்காதீர்கள்.

குழந்தைகள் உலகம்

குழந்தைகள் உலகம் தனது நுழைவாயில் கதவுகளைத் திறந்து குதூகலத்துடன் என்னை வரவேற்றது அங்கே ஆனந்தமும், ஆச்சர்யங்களும் ஒவ்வொரு மணற்துகள்களிலும் பரவிக்கிடந்தன காற்றலைகளில் மழலைச் சிரிப்பொலி தேவகானமாய் தவழ்ந்து கொண்டிருந்தது மோட்ச சாம்ராஜ்யம், தனக்குத் தேவதைகளாக குட்டி குட்டி அரும்புகளை தேர்ந்தெடுத்திருக்கின்றது அங்கு ஆலயம் காணப்படவில்லை அன்பு நிறைந்திருக்கின்றது காலம் கூட கால்பதிக்கவில்லை அவ்விடத்தில் சுயம் இழந்து நானும் ஒரு குழந்தையாகி மண்டியிட்டு அவர்கள் முன் நிற்கின்றேன் அந்தக் கணத்தில் மரக்கிளையொன்று முறிந்து விழுகையில் அதைக் கொண்டு இன்னொரு விளையாட்டு ஆரம்பமாகிவிடுகிறது எங்கு நோக்கினும் முடமாக்கப்பட்ட பொம்மைகள் உடைந்த பந்துகள் கிழிந்த காகிதக் குப்பைகள் சேற்றுக் கறை படிந்த சுவர்கள் களங்கமில்லா அரும்புகள் எனக்கு கற்றுத் தந்தது இவைகள் வீட்டிற்குத் திரும்பியதும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்த அலமாரி பொருட்களையெல்லாம் ஒன்றுவிடாமல் கலைத்துப்போட்டேன், தரையில் விசிறி எறிந்தேன் ஏக்கத்தோடு ஊஞசலின் மீது அமர்ந்தேன் எனது வீட்டை அங

மரணம் ஒரு கற்பிதம்

நேற்று ஒரு கார்டு வந்தது. ..''மேட்டூரில் எனது தந்தை சம்பந்தம் போனவாரம் சனிக்கிழமை சிவலோகப்ராப்தி அடைந்தார் '' என்று தெரிவித்து மேலும் சில விவரங்களுடனும் கருப்புக்கறை தடவி இப்படிக்கு சிவராமன் '' என்று கையெழுத்திட்டிருந்தது. கார்டில் கண்ட விஷயம் வெகு நேரம் புரியாமல் இருந்தது. யார் இந்த சம்பந்தம்... யார் இந்த சிவராமன் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ன சொந்தம்.. இவர்கள் நண்பர்களா சொந்தக்காரர்களா.. அல்லது பங்காளிகளா ? வெகுநேரம் குழம்பிய பின் வயதான என் தாயார் மூலம் ஓரளவு அவர்களின் அடையாளங்கள் எனக்கு லேசாக தெரியவந்தது. அவர்கள் என் காலஞ்சென்ற தந்தையாரின் பங்காளிகளின் வம்சாவளிகள்.. அவர்களை நான் பிறந்ததிலிருந்தோ பிறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகோ பார்த்ததேயில்லை. என்னைப் பொறுத்த வரையில் சம்பந்தம் நாட்டின் எத்தனையோ மக்களைப் போல் எனக்கு சற்றும் தொடர்பில்லாமல் மேட்டூரில் எங்கோ வாழ

தாமதமான மனிதாபிமானம்...

நடுச்சாமம் சற்றே நகர்ந்த அதிகாலைச் சாலையில் விமானதளம் விரைகையில் குறுக்காக கிடந்த அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல் வண்டியை ஓட்டுனரும் பார்வையை நானும் திருப்பிய லாவகம்... ஊர் வந்திறங்கி வேலை முடித்து வந்த ஊர் பிரசித்தமெல்லாம் வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி வீடு திரும்புகையில் - காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?

நினைவின் கணங்கள்

பெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் ஒரு தனித்த அந்தி எல்லாக் கணங்களையும் விரட்டிக்கொண்டு போய் பசுமைப் பிராந்தியமொன்றில் மேயவிடுகிறது நீ வருகிறாய் மேய்ச்சல் நிலத்திலிருந்த கணங்களனைத்தையும் உன்னிரு உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி கீழே சிதறட்டுமென விடுகிறாய் எல்லாம் பள்ளமென ஓடி நினைவுகளுக்குள் புதைகிறது மீளவும் நினைவின் கணங்கள் மலையிறங்கக் காத்திருக்கின்றன

எதையாவது சொல்லட்டுமா....4

3வது இலக்கியக் கூட்டம் 18.10.2009 அன்று வழக்கம்போல் எல்எல்ஏ பில்டிங்கில் நடந்தது. இந்த முறை அஜயன்பாலாவும், தமிழ்மணவாளனும் கலந்துகொண்டார்கள். சினிமாவைப்பற்றிய அனுபவத்தை அஜயன்பாலா பகிர்ந்துகொண்டார். எல்லோருக்கும் போன் ஒரு முறை செய்வது. பின் இன்னொருமுறை போன் செய்வது. இதுதான் கூட்டம் நடத்தும் முறை. பத்திரிகையிலோ வேறு எங்கேவோ விளம்பரம் கிடையாது. அஜயன்பாலா சினிமாவைப் பற்றிய தன் அனுபவத்தைப் பேசினார். எனக்குப் பல ஆண்டுகளாக அஜயன்பாலாவைத் தெரியும். அவர் ஒரு பிடிவாதக்காரர். சினிமாவில் தன் தடத்தைப் பதிய வைக்கவேண்டுமென்ற வைராக்கியம் மிக்கவர். இதற்காக பல இன்னல்களை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அவரை அதிகமாகக் கவர்வது சிறுகதை எழுதுவதுதானாம். இதைக் கேட்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் முதல் சிறுகதை நவீன விருட்சத்தில்தான் வந்தது. ஒரு உதவி டைரக்டராக சினிமாவில் நுழைய அவர் பட்ட சிரமங்களை சுவாரசியமாகப் பேசினார். எனக்கு அதைக் கேட்க கேட்க ஆச்சரியமாக இருந்தது. வேலைக்குக் கட்டாயம் போகக்கூடாதென்று முடிவெடுத்து, டிகிரி சர்டிபிக்கேட்டை போய் வாங்கக்கூட இல்லையாம்.

இதயத்தில்

என்னுடைய நிறம் கருப்புமில்லாத வெளுப்புமில்லாத சாம்பல் நிறம் என் இதயப் பகுதியில் பச்சை நிறத்தில் ஒரு முதலை இருக்கிறது வெகுநாட்களாக நானும் இந்த முதலையும் காத்துக்கிடந்தோம் இருபத்தைந்து வயது யுவதி என்னை ஸ்பரிசித்தாள்; இப்போது அவள் வீட்டில் நான்; வயது முதிர்ந்த அவரை என்னுடன் அனுப்புகிறாள் வெளியே செல்லும் எங்களுக்குக் கையசைத்து விடையளிக்கிறாள் விரைந்த வாகனத்தின் தகரத்தில் மாட்டிய என் கை குருதிப் புனலில் நினைவிழந்த பெரியவருக்குக் குழாயில் சொட்டும் இரத்தம் எல்லோரும் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் தொங்கியபடி நானும் நாவில் குருதியொழுகும் முதலையும் குதிரை இதயத்துடன் வந்தவனுடன் அவளும்

முன்னாள் காதலிகள்

சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன் எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும் முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன். எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் அதுவும் ஐந்து என அவள் சொல்கையில் மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம் o

கவிதை (1)

அலுவலகம் செல்லும் வழியில் அடிபட்டு இறந்திருந்தது ஒரு செவலை நாய் விரையும் வாகனங்களின் குழப்பத்தில் சிக்கி இறக்க நேரிட்டிருக்கலாம் நாலைந்து நாட்களில் தேய்ந்து கரைந்தது இறந்த நாயின் உடல் காக்கைகள் கொத்தி தின்ன ஏதுவில்லை வாகனங்கள் நெடுகித் தொலையும் பெருவழிச்சாலையில் எப்போதும் பிறரின் மரணங்கள் ஒட்டியிருக்கிறது நமது பயணத்தடங்களில் .

பதட்டம்..

சகபயணி ஒருவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்த மூக்குக்கண்ணாடியோடு மாட்டிக்கொண்டபடி வந்த பேனாவை மீண்டும் சரியாகப் பொருத்தவில்லை - தன் சட்டைப் பாக்கெட்டில். பதட்டம் கூடிக் கொண்டிருந்தது பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

எதையாவது சொல்லட்டுமா....3

காலை 7.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்தேன். தலைப்பு பொதுவான தலைப்புதான் அதில் மாற்றம் இல்லை. ஆரம்பத்தில் எனக்கு பாரமௌன்ட் பப்ளிஸிட்டியில் வேலை. நாள் ஒன்றுக்கு மூன்று ரூபாய் சம்பளம். வெள்ளிக்கிழமை மட்டும் பூஜை முடிந்தபிறகு ரூ.2.50 பைசா கொடுப்பார்கள். வாங்கிக்கொண்டு எங்கள் வீட்டு தெருமுனையில் உள்ள டீ கடையில் சுண்டல் சாப்பிடுவேன். நான் டீ கடையில் சுண்டல் சாப்பிடுவது என் தம்பிக்குப் பிடிக்காது. பின் பள்ளிக்கரணை என்ற இடத்தில் கார்டெக்ஸ் அடுக்குபவனாக எனக்கு வேலை. மாதம் ரூ.205 சம்பளம். என்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சிபாரிசு செய்தவர் நான் அதிகமாக தலை முடி வைத்திருந்தால் பிடிக்காது. பாக்டரி பக்கத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்போம். இந்த வேலைக்கு நான் காலையில் 7.30 மணிக்கு சைதாப்பேட்டையில் பஸ் பிடிக்க வருவேன். சைதாப்பேட்டை ஸ்டேஷனலில் உள்ள ஒரு கடையில் செய்தி வாசிக்கும் சப்தம் கேட்கும். செய்திகள் வாசிப்பது....சரோஜ் நாராயணசாமி என்று ரேடியோவில் கேட்கும் பின் நான் பள்ளிக்கரணை பாக்டரி போய்விட்டுத் திரும்பும்போது சைதாப்பேட்டையில் அதே செய்திகள்