Skip to main content

Posts

Showing posts from July, 2020

கந்தசாமி கந்தசாமிதான்...

அழகியசிங்கர் இன்று மொட்டை மாடியில்  நடைப்பயிற்சி  செய்து கொண்டிருந்தபோது நண்பர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து ( கசடதபற  ஆசிரியர்)  போன்  வந்தது.  காலை 7.30 மணிக்கு சா. கந்தசாமி இறந்து  விட்டதாகத்  தகவல் கூறினார். இந்த மாதம் சில தினங்களுக்கு முன்னால்தான் கந்தசாமி 80வயதை முடித்திருந்தார்.  அப்போது அவர் மருத்துவ மனையில் தீவிர  கண்காணிப்பிலிருந்தார் .  “ அவருடைய பிறந்தநாள் பற்றி முகநூலில் எழுதலாமா என்று சந்தியா நடராஜனைக் கேட்டேன்.  அவர் வேண்டாம் என்று சொன்னார்.  அவர் சொன்னது நியாயமாகப் பட்டது.  அவர்  மருத்துவமனையி லி ருந்து  மீண்டு வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று மரணமடைந்து விட்டார்.  என் முக்கியமான எழுத்தாளர் வரிசையில் அவரும் ஒருவர்.  பல ஆண்டுகளாக நான் அவரிடம் நட்புடன் பழகி வருகிறேன்.   உற்சாகி .   தோன்றுவதைச்  செய்து முடித்து விட வேண்டுமென்று நினைப்பவர்.      அவருடன் பழகினால் முதுமையே தெரியாது.  நான் எழுதிய புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால் உடனே படித்து விட்டு  அடுத்தநாள்   போன்  செய்து தன் அபிப்பிராயத்தைச்  சொல் லி விடுவார். அந்த அளவிற்குப் புத்தகம் படிப்பதில் தீவிரமானவர்.

ஞானக்கூத்தன் மொழிபெயர்ப்பில் ஒரு தாஒ கவிதை

அழகியசிங்கர் எழுத்து பத்திரிகை ஞானக்கூத்தனின் திறமையைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் 1970 வெளிவந்த ' கசடதபற'  என்ற சிற்றேட்டில்தான் அவருடைய படைப்புகள் எல்லாம் வெளிவந்தன. 'தமிழை எங்கே நிறுத்தலாம்' என்று அவருடைய முதல் கவிதையிலிருந்து தொடர்ந்து  கசடதபறவில்  அவர் படைப்புகள் வெளிவந்து கொண்டிருந்தன.   ஜனவரி 1971ஆம் ஆண்டு ' கசடதபற'   இதழில் (4வது இதழ்) அவருடைய மொழிபெயர்ப்பு ஒன்று வெளிவந்தது.  மொத்தமே 3 வரிகள்தான்.  ஒரு  தாஓ  கவிதை என்ற தலைப்பில்.  இங்கே வாசிக்கத் தருகிறேன். ஒரு  தாஒ  கவிதை “ சோளக் கொல்லைப் பொம்மையிடம் இரவல் பெற்ற தொப்பியின் மேல் மழை வலுத்துப் பெய்கிறது.

பிரிவு என்கிற பிரபு மயிலாடுதுறை கதை

அழகியசிங்கர் சொல்வனம் என்ற மின் இதழில் பிரபு எழுதியிருக்கிற கதையின் பெயர் பிரிவு. இது வங்கியில் பணி ஓய்வு பெறுகிற ஒரு பெண் ஊழியரைப் பற்றிய கதை. பெண் ஊழியர் பத்மா ஓய்வு பெறும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நூறு பேர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் பத்மாவின் புகழ் பாடுகிறார்கள். அதைக் கேட்கும்போது தன்னுடைய கதைதானா என்று அவளுக்குத் தோன்றுகிறது. மேலாளர் பேசும்போது, பதமா மேடம் இன்று ஓய்வு பெறுகிறார். நான் அவரைவிட வயதில் சிறியவன். அவர் எப்போதும் வங்கி திறப்பதற்கு அரை மணி நேரம் முன்பே வந்து விடுவார். அலுவலகம் முடிந்தபின்னும் அவருடைய அடுத்தநாள் பணிகளை ஒருங்கமைப்பார்.. கலையில் எந்த மனநிலையில் வந்தாரோ அந்த மனநிலையில் முடியும் வரை இருப்பார். கிளையின் பணியை எளிதாக்கினார் என்றார். இந்திய அணியின் பந்து வீச்சாளர் அந்த வங்கிக் கிளையில் ஒரு வாடிக்கையாளர். அவரது தாயார் நிகழ்ச்சியில் பத்மாவைப் புகழ்ந்து பேசுகிறார். நிகழ்ச்சி தொடங்கி பத்து நிமிடம் கழித்து தாரணி வந்திருந்தாள். அவள் நுழையும் போதே இருவரும் பார்த்துக் கொண்டார்கள். தாரணி நடுவயதில் இருக்கிறாள். தாரணி ஒரு வாடி

50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள்..

அழகியசிங்கர் இதுவரை 50 கவிஞர்கள் சூம் மூலமாகக் கவிதைகள் வாசித்து விட்டார்கள். தொடர்ந்து கவியரங்கக் கூட்டங்களை சூம் மூலமாக நடத்திக்கொண்டு வருகிறேன். 9வாரங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறேன். நேற்று நடந்த கூட்டம் 9வது கூட்டம். சில திட்டங்களைச் செயல்படுத்த வேண்டுமென்று நினைத்திருந்தேன். எதிர்பாராதவிதமாய் இன்டெர் நெட் தொடர்பு போனதால் முதல் பாதியில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. என் நண்பர் சுந்தர்ராஜன் திறமையாக நடத்திச் சமாளித்து விட்டார். அடுத்த பாதியில்தான் நான் கலந்து கொண்டேன். என் திட்டத்தில் கவிதை வாசிப்பவர்களின் கவிதைகளைக் கேட்டு மற்றவர்களும் தனக்குத் தோன்றுகிற அபிப்பிராயங்களைக் கூற வேண்டுமென்று முயற்சி செய்தேன். ஓரளவுதான் வெற்றி பெற முடிந்தது. நான் மறைந்த கவிஞரின் கவிதைகளை நான் எடுத்துக்கொண்டு வாசிக்கிறேன். இதுவரை திரிசடை, ஆத்மாநாம் என்று வாசித்திருக்கிறேன். நேற்று க.நா.சுவை சரியாக அறிமுகம் செய்து வாசிக்க முடியாமல் போய்விட்டது. கவிதை எழுதுபவர்களே அவர்களுடைய கவிதைகளை வாய்விட்டுப் படிக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது. ஒருவர் வாசிக்கிற கவிதையை எந்த அளவிற்கு நாம் உன்னிப

கவிதை கேட்க வாருங்கள்.....

அழகியசிங்கர் சூம்   மூலமாக  விருட்சம் நடத்தும்   ஒன்பதாவது  கூட்டம் இது. கவிதையை ரசிக்க எல்லோரும் இணையும்படி கேட்டுக் கொள்கிறேன். கவிதையைக் கேட்டு ரசிப்பது என்பது மகத்தான விஷயமாக என்று எனக்குத் தோன்றுகிறது.           இன்று மாலை 7 மணிக்குக் கூட்டம் நடைபெறுகிறது. இது ஒன்பதாவது கூட்டம். எல்லோரையும் அன்புடன் அழைக்கிறேன்.  இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க இசைந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறேன். 1. சு. பசுபதி 2. வானவில் கே ரவி 3. தஞ்சாவூர்  ஹரணி 4.  பிரேம  பிரபா 5.  நளினா  கணேசன் 6. க.சோமசுந்தரி 7. க.நா.சு கவிதைகள் (வாசிப்பவர்  அழகியசிங்கர் )

கோவை ஞானியை முதலில் எங்குப் பார்த்தேன்?

அழகியசிங்கர்   திருவல்லிக்கேணியில்  பாரதி சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன் ஒருநாள்.  அப்போதுதான் கோவை ஞானியைப் பார்த்தேன்.  என் கூட வந்திருந்தவர் அறிமுகப்படுத்தினார். நான் பார்த்த அன்று அவர்  பார்வையை  இழந்திருந்தார் என்பதை அறிந்தேன்.  அதற்குக் காரணம் சர்க்கரை நோயின் கடுமை என்று குறிப்பிட்டார்..  அதன் பின் நான் எப்போதும் கோவை சென்றாலும் கோவை ஞானியைப் போய்ப் பார்ப்பேன்.  அவர் நிகழ் என்ற பத்திரிகையும், தமிழ் நேயம் என்ற பத்திரிகையும் அனுப்புவார்.  நான் விருட்சம் அவருக்கு அனுப்புவேன். அவர் வீட்டில்தான் அவரைச் சந்திப்பது வழக்கம். அவருடன் யாராவது இளைஞர் ஒருவர் உதவியாளனாக இருப்பார்.  அவர்தான் அவருக்குக் கொடுக்கும் புத்தகங்கள், பத்திரிகைகள் படித்துச் சொல்வார்.   வயது முதிர்ந்த நிலையிலும் அவர் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவர் விடாமல் அதிகம் விற்பனை ஆக முடியாத பத்திரிகைகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு வந்தது எனக்குத் திகைப்பாக இருக்கும். சமீபத்தில் அவர் பிறந்த நாள் அன்று அவரைப் பற்றி தமிழ் ஹிந்துவில் பலர் கட்டுரைகள் எழுதி இருந்தார்கள். 

அஞ்சலட்டைக் கதைகள் 21

அழகியசிங்கர் இது என் 21வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டரை நிமிடங்களுக்குள் முடிந்து விடுகிறது. ஏன் இப்படி?  அந்த இடம் அமைதியாக இருந்தது.   கேட்டி லிருந்து  ஆசிரமத்தைப் பார்க்கும்போது அமைதி என்றால் அப்படியொரு அமைதி.  அங்கு எல்லோரும் சந்திக்கும் பெரிய கூடத்தில் ஒருவர் நுழைந்து பார்த்தால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருப்பது தெரியும்.  எல்லோரும்  மெதுவாகப்  பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அங்கு அமைதி கெடுவதுபோல் தோன்றுகிறது. ஜீவன் முக்தர் மெதுவாக நடந்து வருகிறார்.  வயது அதிகமாக இருப்பதால் அவருடைய தள்ளாட்டம் தெரிகிறது. அவர் உள்ளே நுழைந்தவுடன், எல்லோரும் பேசுவதை நிறுத்தி விடுகிறார்கள்.  அவர் மெதுவாக அவருக்குப் போடப்பட்டுள்ள மேடையில் அமர்ந்து கொள்கிறார்.  எல்லோரும் எழுந்து நின்று நமஸ்காரம் செய்கிறார்கள். கூட்டம் முழுவதையும் ஒரு நிமிடம் நோட்டம் விடுகிறார். பின் கண்ணை மூடி தியானம் செய்கிறார்.  கூட்டம் அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறது. சில நிமிடங்களில் கூடத்தின்  வாசலில்  சலசலப்பு கேட்கிறது. ஒரு பெண் தலைவிரி கோலமாய் உள்ளே நுழைகிறாள்.  அவள் கையில் ஒரு கு

தாவோ தே ஜிங் 3 (சாரமும் விசாரமும் : மொழி பெயர்ப்பு சந்தியா நடராஜன்)

அழகியசிங்கர் திரும்பவும் சந்திக்கிறார்கள்.  தாவோ தே  ஜிங்  குறித்து உரை நிகழ்த்துகிறார்கள்.   ஜெகன்  :  இதைக்  கல்லூரியில் பாடப் புத்தகமாக வைத்து பாடம் நடத்தினால் ஓரளவு புரியும். மோகினி : இந்தப் புத்தகத்தின் பெயர் தாவோ தே  ஜிங் .  அதில் தே  என்பதற்குத்  தனி விளக்கம் கொடுக்கப் பட்டிருக்கிறது.  தே என்பது ஒழுக்கம் அல்லது நற்பண்புகள் என்று பொருள் கொள்ளப்படும் என்கிறார். இருப்பினும் தே சற்று வித்தியாசமானது.  சுயமாக உருவாகும். தன்னளவில் உறுதி காட்டும்.  இனிய பண்பு அது என்கிறார்.   54வது பாடல் இப்படி மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.  அந்தப் பாடலின்  ஒரு  பகுதியைச்  சொல்ல விரும்புகிறேன். தே (ஒழுக்கம்) உனது வாழ்வில் நிலைபெறட்டும். நீ உண்மையானவன் ஆவாய் தே உனது குடும்பத்தில் நிலை பெறட்டும் உனது குடும்பம் செழிக்கும் தே உனது நாட்டில் நிலைபெறட்டும் உனது நாடு வலம் கொழிக்கும் தே  பிரபஞ்சத்தில் நிலை  பெறட்டும் பிரபஞ்சம்  இசையமைக்கும் எனவே உன்னைப் போல் பிறரைக் காண்.. இப்படிப்  போகிறது  இந்த  பாடலின் மொழிபெயர்ப்பு இங்கு தே என்று  குறிப்பிடுவதைக்  கூர்ந்து கவனிக்க வேண்டும். அழகியசிங்கர்