Skip to main content

திருட்டு பீடிஎப்களைத் தயாரிக்கிறார்கள்...

அழகியசிங்கர்







 காலையில் நண்பர் சந்தியா நடராஜன் போன் செய்து ஒரு தகவல் கூறினார்.  கேட்டவுடன் திகைப்பாக இருந்தது.  சில வாட்ஸ் அப் குழுக்கள் அனுமதி பெறாத புத்தகங்களை பீடிஎப் ஆகத் தரவிறக்கம் செய்து எல்லோரிடமும் இலவசமாக விநியோகம் செய்கிறார்கள் என்று.  இதைக் கண்டிக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்தார்.
இது விஷயமாகப் பதிப்பாளர் சங்கத்தின் மூலம் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.  பெரும்பாலும் வண்ணதாசன் புத்தகங்கள், பா ராகவன் புத்தகங்கள் எல்லாம் திருட்டுத்தனமாக எடுக்கப்படுகின்றன.  
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் ஏன் வாசகர்கள் கூட  முன் வர  வேண்டும்.

Comments

Popular posts from this blog