Skip to main content

Posts

Showing posts from March, 2013

பயணீ கவிதைகள்

If there are images in this attachment, they will not be displayed.    Download the original attachment     அமுதாக்கா இறந்துவிட்டாள்   காலையில் படுக்கையிலிருந்து விழித்தெழுந்து வெளியே வந்து பார்த்தபோது வானம் இருண்டிருந்தது மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது எதிரே கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் 27.09.2009 அன்று அமுதாக்கா இறந்துவிட்டதாகச் செய்தி இருந்தது ஆம் அமுதாக்கா இறந்துவிட்டாள் 27.09.2009 திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் அமுதாக்கா தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனாள் அவள் சாவுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன பல ஊகங்களும் உலவுகின்றன அமுதாக்காவை எனக்கு நன்றாகத் தெரியும் அவள் ஒரு பெண் குழந்தையின் தாய் முருகனின் அழகு மனைவி சுந்தர பெருமாளின் அன்பான கள்ளக்காதலி எங்கள் தெருவின் சிறந்த அழகி அமுதாக்காவை முதன்முதலில் தேநீர் கடையில் நண்பர்களுடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது பார்த்தது இடுப்பில் குழந்தையுடன் சொம்பில் தேநீர் வாங்க வந்தவளை நண்பர்கள் நமட்டுச் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க நான் மட்டும் வைத்த கண் வாங

ஓடு ---------------

- வைதீஸ்வரன் -------------- -- ஆமையைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. நத்தையைப் பார்த்தால் அதை விட அசூயை. பூமியில் ஆனந்தமாக இடம்மாறுகின்றன அவைகள்....வீட்டையும் மூட்டை கட்டிக் கொண்டு. ஆறுமாதத்துக்கு ஒரு முறை விரட்டுகிறான் வீட்டுக் காரன்... அடுத்த வீட்டைத் தேடிக் கொண்டு ஓட வேண்டியிருக்கிறது, பூமியின் ஓரத்துக்கே சாமி ரொம்ப ஓர வஞ்சகன்.

ஒற்றைச் சுவடு

If there are images in this attachment, they will not be displayed. Download the original attachment -  எம் . ரிஷான்   ஷெரீப் , ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன தரை , சுவர் , தூண் , கூரையெனப் பார்த்திருக்கும் அனைத்தும் வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின் உணர்வுகளையும் அத்தனை ரகசியங்களையும் அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை " ஆதித்யா , உன் தனிமை பேசுகிறேன் . கேட்கிறாயா ? " " நான் தனித்தவனாக இல்லை . இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள் , காலையில் வரும் தேன்சிட்டு , புறாக்கள் , கிளிகள் , மைனாக்கள் , எனது எழுத்துக்கள் என எனைச் சூழப்பல இருக்கத் தனித்தவனாக இல்லை . நீ பிதற்றுகிறாய் . வழி தவறி வந்திருக்கிறாய் " " இல்லை . உன் மனதுக்கு நீ தனித்தவன் . இதுவரையில் நீ வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு முகமூட