Skip to main content

Posts

Showing posts from November, 2017

அஞ்சல் அட்டை என்கிற மகாத்மியம் - 1

அழகியசிங்கர் அஞ்சல் அட்டை எழுதுவோர் சங்கம் என்று பெயரை மாற்றிக்கொள்ளலாம். தபால் கார்டு சங்கம் என்று வேண்டாம்.  முகநூலில் ஒருவர் குறிப்பிட்டதுபோல.  நான் ஏன் இது குறித்தே எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தேன்.  எனக்குப் பலர் அஞ்சல் அட்டை மூலம் எழுதியிருக்கிறார்கள். கோபிகிருஷ்ணன் என்ற எழுத்தாளர் பலருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை அஞ்சல் அட்டை மூலம் எளிமையாகத் தெரிவித்து விடுவார்.  ஒவ்வொரு ஆண்டும் எனக்கும் அவர் தெரிவிப்பதுண்டு. ஒருவருக்கு ஏன் நாம்அஞ்சல் அட்டை மூலம் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  முதலில் நாம் கணினியை அதிகமாகப் பயன்படுத்தி  கையால் எழுதுவதே விட்டுவிட்டோம்.  நாம் எழுதிப் பழகுவதற்கு தபால் அட்டைகளைப் பயன்படுத்தலாம் என்றுதான் முதலில் நினைத்தேன்.   தபால் அலுவலகத்தில் போய் அஞ்சல் அட்டைகளை வாங்கும் வழக்கம் உள்ளவன் நான்.  ஆனால் அதைப் பயன்படுத்தியதில்லை.  ஒரு இடத்தில் அடுக்கி அடுக்கி வைப்பேன்.   என் பத்திரிகைக்கு சந்தா அனுப்பும் படி முன்பெல்லாம் கார்டு மூலம் கேட்பேன்.  இப்போது ஏனோ அப்படியெல்லாம் கேட்பதில்லை.  இப்படி தபால் அட்டை வாங்கும் மோகம்

சரஸ்வதி வேண்டாம் லட்சுமி வேண்டும்

அழகியசிங்கர் வரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி அடியேனும் புத்தகங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.  டிசம்பர் மாதம் முதற்கொண்டு ஒரே பிரச்கினை.  எனக்கு ஒரு சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள்.  ஆனாலும் நான் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும்.  எப்படியாவது ஐந்தாறு புத்தகங்களாவது கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இந்தச் சமயத்தில்தான் அச்சடிப்பவர்களுக்கு போன் பேசினால் போனையே எடுக்க மாட்டார்கள்.  அதற்குமுன் நம் முன் கண்ணில் அநாவசியமாகத் தடடுப்படுபவர்கள் இப்போது இந்தத் தருணத்தில் ஏன் என்று கேட்காமல் ஓட்டமாய் ஓடிவிடுவார்கள்.  இது உலக நியதி.   நான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் புத்தகங்கள் தயாரிப்பதும் விருட்சம் என்ற பத்திரிகையும் நடத்துபவனாக இருக்கிறேன்.  100 இதழ்களுக்கு மேல் சமாளித்துக்கொண்டு விருட்சம் கொண்டு வந்துவிட்டேன்.  அதேபோல் புத்தகங்கள் 70க்கும் மேல் கொண்டு வந்துவிட்டேன்.  100 வரை கொண்டு வர வேண்டுமென்று விரும்புகிறேன்.  கடந்த சில ஆண்டுகளுக்குமுன் 300 பிரதிகளுக்குக் கீழ் புத்தகங்கள் அச்சடித்து, விற்க முடியாமல் வைத்துக்கொண்டிருக்கிறேன்.  இப்போதுதான் ஒரு தெளி

தபால் கார்டு சங்கம்

அழகியசிங்கர் தபால் கார்டு மூலம் நாம் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாமென்று தோன்றுகிறது.  இதன் முக்கியக் குறிக்கோள்கள் கீழ் வருமாறு. 1. நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது 2. கார்டில் மட்டும்தான் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். இன்லென்ட் கடிதம் கிடையாது. கவரில் எழுதி அனுப்புவது கிடையாது. 3. போனில் பேசக்கூடாது 4. இ மெயிலில் எதுவும் அனுப்பக்கூடாது 5. கார்டு மூலம் நாம் ஒருவரை ஒருவர் சாடக் கூடாது 6. ஒரு கார்டில் எதுவேண்டுமானாலும் எழுதலாம் 7. கையெழுத்துப் புரியும்படி எழுத லேண்டும் 8. முக்கியமாக அரசியல் பற்றி எழுதக் கூடாது. 9. தமிழ் மொழியில் எழுதுவது சாலச் சிறந்தது.  ஆங்கிலத்திலும் எழுதலாம். உங்கள் அறிவுச் செல்வத்தை கார்டு மூலம் தெரியப்படுத்துங்கள்.  ஆனால் உங்கள் துயரங்களை பயங்களை வெளிப்படுத்தாதீர்கள். நீங்களும் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் முதல் கார்டை என் முகவரிக்கு அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன். என் முகவரி : அழகியசிங்கர் சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ் 7 ராகவன் காலனி மேற்கு மாம்பலம் சென்னை 600 033

கார்டில் எழுதுகிறேன்

கார்டில் எழுதுகிறேன் அழகியசிங்கர் நவீன விருட்சம் இதழ் 103 பிரதிகளை எடுத்துக்கொண்டு மேற்கு மாம்பல தபால் நிலையத்தில் அனுப்பும்போது அஞ்சல் அட்டையைப் பார்த்தேன்.  100 அஞ்சல் அட்டைகளை வாங்கினேன்.   அஞ்சல் அட்டைகளை சீட்டுக் கட்டுப்போல் புரட்டிக்கொண்டிருந்தேன்.  அஞ்சல் அட்டை என்ற பெயரை கார்டு என்று மாற்றி எழுதவிரும்புகிறேன்.  மன்னிக்கவும். கார்டு வாங்கிவிட்டோம்.  என்ன செய்வது? யோசித்தேன்.  யாருக்காவது கடிதம் எழுதினால் என்ன?  என்ன எழுதுவது?  யாருக்கு எழுதுவது?  என் நண்பர் ஒருவர் ஓராண்டிற்கு மேல் படிக்கிறேன் என்று என்னிடம் புத்தகம் வாங்கி வைத்துக்கொண்டு என் புத்தகத்தைத் திருப்பியும் தராமல் டபாய்த்துக் கொண்டிருக்கிறார்.  அவருக்கு ஒரு கார்டு எழுதினேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.   எப்படியும் அவருக்கு அதிகம் கடிதம் எழுதும்படி எனக்குத் தோன்றியது.  அதனால் பல கார்டுகள் எழுத நமக்கு சந்தர்ப்பம் கிடைக்குமென்று சந்தோஷமாக இருந்தது.  அப்படியும் அவரிடமிருந்து என் புத்தகம் கிடைக்குமா என்று தெரியவில்லை.   என் இன்னொரு நண்பர் ஒருவருக்கு üரமண அருள் வெள்ளம்ý என்ற புத்தகத்தைப் படிக்

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 2

அழகியசிங்கர் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் ராஜேஷ் ஆற்றிய உரையின் முதல் பகுதியை நேற்று முகநூல் நண்பர்களுக்கு அளித்தேன்.  இதோ இரண்டாவது பகுதியை அளிக்கிறேன்.   என்னுடைய சோனி காமிராவில் இவ்வளவு தூரம் படம் பிடிக்கலாமென்று முன்னதாகவே தெரிந்திருந்தால் பலவற்றைப் படம் பிடித்திருப்பேன்.  இந்தக் காமெரா மூலம் நேரிடையாகவே இந்தக் கூட்ட.த்தை உலகம் முழுவதும் பலரும் ரசிக்க முடியும்.  ஆனால் ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்க வேண்டும்.

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 1

லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் - ஒளிப்படம் 1 அழகியசிங்கர் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்  என்ற தலைப்பில் ராஜேஷ் சுப்பிரமணியன் நிகழ்த்திய உரையின் முதல் ஒளிப்படத்தை இங்கு அளிக்கிறேன்.   வகுப்பில் பாடம் நடத்துவதுபோல் ராஜேஷ் போர்டில் சில வரைப்படங்கள் எல்லாம் வரைந்து லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை விளக்கி உள்ளார்.  அவர் முயற்சிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.  இதை நீங்கள் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  

விருட்சம் 31வது கூட்டம்

அழகியசிங்கர் நேற்று (18.11.2017) விருட்சம் 31வது கூட்டம் வழக்கம்போல ஸ்ரீராம் காம்பளெக்ஸில் நடந்தது.  கூட்டத்தில் சிறப்புரை ஆற்றியவர் ராஜேஷ் சுப்பிரமணியன்.  சில மாதங்களுக்கு முன் தற்செயலாக ராஜேஷ் அவர்களைச் சந்தித்தேன்.  அவர் பேசும் விதம் பிடித்திருந்தது.  பல விஷயங்களைப் பற்றி பேசினார்.  நான் கூட்டங்களுக்கு வருவதற்கு முன்னாலே  வந்திருந்து எந்தவித நோக்கமும் இல்லாமல் உதவி செய்யக் கூடியவர்.  அவரிடம் நீங்கள் பேச முடியுமா என்று கேட்டேன்.  அவர் ஒப்புக்கொண்டு லத்தீன்  அமெரிக்க எழுத்தாளர்களைப் பற்றி பேச ஒப்புக்கொண்டார். நான் இதுவரை 6 கூட்டங்களை நடத்தி உள்ளேன்.  முதல் கூட்டம் ஜøன் மாதம் நடந்தது.  திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தி ஜானகிராமனைப் பற்றி பேசினார்.  அடுத்து ஜøலை மாதம் நடந்த கூட்டத்தில் புதுமைப்பித்தன் படைப்புகளைப் பற்றி பெருந்தேவி அவர்கள் பேசினார்கள்.  மூன்றாவது கூட்டமான ஆகஸ்டில் கடற்கரை அவர்கள் ஏ கே செட்டியாரைப் பற்றி பேசினார்.  நான்காவது கூட்டமான செப்டம்பரில் செந்தூரம் ஜெகதீஷ் அவர்கள் ஓஷோவைப் பற்றிப் பேசினார்.  ஐந்தாவது கூட்டமான அக்டோபரில் சந்தியா நடராஜன் திருவசாகத்த

விருட்சம் இலக்கியக் கூட்டங்கள்

அழகியசிங்கர்          விருட்சம் இலக்கியச் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை தரும் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.  இந்த முறை ரஜேஷ் சுப்பிரமணியன் அவர்கள் லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.  வழக்கம்போல் மூன்றாவது சனிக்கிழமை (18.11.2017) மாலை 6ரிருந்து 7.30க்குள் கூட்டம் முடிந்துவிடும்.  சமீப காலத்தில் நான் நிகழ்த்தும் இக்கூட்டங்களில் சிறப்பான முறையில் ஒவ்வொருவரும் பேசுகிறார்கள்.  தொடர்ந்து புதுமையான முறையில் இக் கூட்டங்களை நாம் நடத்திச் செல்லவேண்டும்.  அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு அவசியம் தேவை.  

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை அழகியசிங்கர் சமீபத்தில் வெளிவந்த என் புத்தகத்தின் பெயர் 'திறந்த புத்தகம்.' 200 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம்.  இது கட்டுரைகளின் தொகுப்பு. எல்லாக் கட்டுரைகளும் அதிகப் பக்க அளவு போகாதவாறு எழுதப்பட்டவை. கிட்டத்தட்ட 50 கட்டுரைகள் கொண்ட புத்தகம்.  இப் புத்தகத்தின் விலை : Rs..170. இப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி  என் நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன்  பேசி உள்ளார்.  அதேபோல் இன்னும் சிலரும் பேச உள்ளார்கள்.  புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....11

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....11 தமிழவன் பேட்டி அளிக்கிறார். பேட்டி எடுத்தவர் : அழகியசிங்கர் இந்தத் தலைப்பில் இதுவரை 11 படைப்பாளிகளைப் பேட்டி எடுத்துள்ளேன்.  இன்று 12.11.2017 (ஞாயிறு) தமிழவனின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்குச் சென்றேன்.   கூட்ட முடிவில் அவரைப் பேட்டி எடுத்தேன்.  அவரிடம் நான் கேட்ட கேள்விகள் பின்வருமாறு: 1. முதலில் உங்கள் எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது? 2. பத்திரிகையில் உங்கள் படைப்பு எப்போது எதில் முதலில் வந்தது? 3. இதுவரை எத்தனை நாவல்கள், சிறுகதைகள் எழுதி உள்ளீர்கள்? 4. கோட்பாடு ரீதியாக விமர்சனத்தைத் தமிழில் ஏன் இந்திய அளவில் நீங்கள்தான் தொடங்கினீர்களா? 5. உங்களுக்கு எதாவது பரிசு கிடைத்துள்ளதா? 6. எப்படி நீங்கள் ஒரு தமிழ் பேராசிரியாக இருந்துகொண்டு படைபாளியாகவும் உள்ளீர்கள்? 7. உங்கள் இலக்கிய முயற்சிக்கு உங்கள் குடும்பத்தினர்கள் ஆதரவு தருகிறார்களா? 8.  இப்போது உள்ள தமிழ்ச் சூழல் எப்படி உள்ளது? 9. சிறுபத்திரிகை என்ற ஒன்றை இன்னும் தொடர்ந்து கொண்டு வர முடியுமா? 10. இதுவரை நீங்கள் எழுதிய படைப்புகளில் எது சிறந்த படைப்பு?

தெரியாமல் திரு;ட்டுப் புத்தகங்களை வாங்கிவிட்டேன்

அழகியசிங்கர் எங்கள் வீட்டுக் கூடத்தில் ஒரு பெரிய பஞ்சமுக ஆஞ்சிநேயர் படம் உள்ளது.   பெரிய படம்.  அவரிடம் மண்டிப்போட்டு வேண்டிக்கொண்டேன்.  நான் இனிமேல் புத்தகங்களை வாங்காமல் இருக்க வேண்டுமென்று.  இரண்டு பிரச்சினைகளில் நான் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன்.  ஒன்று புத்தகங்களை வாங்காமல் இருக்க என்னால் முடியவில்லை.  இரண்டாவது பிரச்சினை அப்படி வாங்குகிறப் புத்தகங்களைப் படிக்கவே முடிவதில்லை. எங்கள் வீட்டில் உள்ளவர்கள் வன்முறைக்கு ஆளாகி விடுவார்கள் என்று பயப்பட வேண்டி உள்ளது.    நான் வாங்கிக்  குவிக்கும் புத்தகங்களைப் பார்த்து ஒரு பெரிய பிரளயமே வீட்டில் வெடிக்கப்போவதாக நினைக்கிறேன்.  அதனால்தான் பஞ்சமுக ஆஞ்சிநேயரை வணங்குகிறேன். எங்கள் மாம்பல பகுதியில் பலர் திடீர் திடீரென்று வீடுகளைக் காலி செய்துகொண்டு போய்விடுகிறார்கள்.  இன்னும் சிலர் இருக்கிற வீட்டைவிட்டு சின்ன வீட்டிற்குப் போய்விடுகிறார்கள்.  ஒரு குடும்பத்தில் புத்தகம் படிப்பவர் ஒருவர் நோய்வாய்பட்டு இல்லாமல் போகும் சூழ்நிலையில் அவர் வைத்துவிட்டுப் போன புத்தகங்களை ஒழித்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வ

எம் ஜி சுரேஷ் சில நினைவுகள்...

அழகியசிங்கர் ஒரு எழுத்தாளரைப் பற்றி யாராவது எதாவது ஒன்று சொல்ல வேண்டுமென்றால், அவர் எதாவது பரிசு பெற்றிருக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மரணம் அடைந்திருக்க வேண்டும்.  சமீபத்தில்  பரிசுப்பெற்ற சிறுகதைத் தொகுதி ஒன்று 5000 பிரதிகள்மேல் விற்றதற்குக்.  காரணம், அவர் சாகித்திய அக்காதெமி விருதையும், விஷ்ணுபுர விருதையும் ஒரு சேரப் பெற்றதால். வித்தியாசமான பல புதினங்களையும், சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதிக் குவித்த எம் ஜி சுரேஷ் என்ற எழுத்தாளர் சிங்கப்பூரில் அவர் பெண் வீட்டில் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு இன்னும் அதிகமாக எழுத வேண்டுமென்ற தணியாத தாகம்  உண்டு.  அவர் கடைசியாக எழுதிய நாவல் தந்திர வாக்கியம்.    அ சஞயஅக  ஐச ஊதஅஎஙஉசபந    என்று இந் நாவலைப் பற்றி சுரேஷ் எழுதியிருப்பார். அதேபோல் 37 என்ற நாவலில் பல குரல்களில் ஒரு அறிவியல் புனைகதை என்று எழுதியிருப்பார்.  சிலந்தி என்ற நாவலை ஒரு துப்பறியும் கதையாக எழுதியிருப்பார். கனவுலக வாசியின் ஒரு நனவுக் குறிப்புகள் என்ற சிறுகதைத் தொகுப்பும் கொண்டு வந்திருக்கிறார். சுரேஷ் ஒரு வித்தியாசமான எழுத்தாளர்.  சாதாரணமாக யோசிக்காமல் அசாதாரண

மறந்துபோன பக்கங்கள்

அழகியசிங்கர் இலக்கிய அனுபவம் தி.சோ. வேணுகோபாலன்                  சொல்வ திரண்டு  வகை; சிந்தித்துச் சொல்லல்; சிந்தை இலையாதல்; கரகம் அல்லது கண்கட்டு : இரண்டுக்கும் பொருள் சொன்னவன் புலவன்! கண்டவன் கவிஞன்! முழிப்வன் நீயும் நானும் கேவலம் வாசகக் கும்பல்! கோடை வயல் புத்தகத்திலிருந்து எடுத்தது.