Skip to main content

தபால் கார்டு சங்கம்

அழகியசிங்கர்




தபால் கார்டு மூலம் நாம் ஒரு சங்கத்தை ஆரம்பிக்கலாமென்று தோன்றுகிறது.  இதன் முக்கியக் குறிக்கோள்கள் கீழ் வருமாறு.

1. நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது
2. கார்டில் மட்டும்தான் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். இன்லென்ட் கடிதம் கிடையாது. கவரில் எழுதி அனுப்புவது கிடையாது.
3. போனில் பேசக்கூடாது
4. இ மெயிலில் எதுவும் அனுப்பக்கூடாது
5. கார்டு மூலம் நாம் ஒருவரை ஒருவர் சாடக் கூடாது
6. ஒரு கார்டில் எதுவேண்டுமானாலும் எழுதலாம்
7. கையெழுத்துப் புரியும்படி எழுத லேண்டும்
8. முக்கியமாக அரசியல் பற்றி எழுதக் கூடாது.
9. தமிழ் மொழியில் எழுதுவது சாலச் சிறந்தது.  ஆங்கிலத்திலும் எழுதலாம்.
உங்கள் அறிவுச் செல்வத்தை கார்டு மூலம் தெரியப்படுத்துங்கள்.  ஆனால் உங்கள் துயரங்களை பயங்களை வெளிப்படுத்தாதீர்கள்.
நீங்களும் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். உங்கள் முதல் கார்டை என் முகவரிக்கு அனுப்பும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
என் முகவரி : அழகியசிங்கர்
சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்
7 ராகவன் காலனி
மேற்கு மாம்பலம்
சென்னை 600 033

Comments

Popular posts from this blog