Skip to main content

Posts

Showing posts from February, 2022

77 வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் - காணொளி

  அழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 77வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (12.02.2022) வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கீழ்க்கண்ட தலைப்புகளில் கவிதைகள் 10வரியிஙூருந்து 20 வரி வரை கவிதைகள் வாசித்தார்கள். 1.காற்று 2. மழை 3. மின்னல் 4.பூனை 5. காக்காய் என்ற தûப்புகளில் கவிதை வாசிக்கலாம். இந்தக் காணொளியைக் கண்டு களியுங்கள்.

கவிதையும் ரசனையும் – 26

  கவிதையும் ரசனையும் அழகியசிங்கர்  2022-02-08  -  Leave a Comment ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைதோறும் நான்கு கூட்டங்கள் நடத்துகிறேன். ஒரு கூட்டம் கவிதைக்காக..இன்னொரு கூட்டம் கதைக்காக. இதுவரை 44 கதைஞர்களின் கதைகளைப் பேசி உள்ளோம். இக் கூட்டத்திற்குக் கதைகளைக் கொண்டாடுவோம் என்று பெயர் வைத்துள்ளேன். அதேபோல் கவிதைகள் குறித்து உரையாடல், கவிதைகள் வாசித்தல் என்றும் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறேன். வேறு விதமாகக் கவிதைகளைப் புரிந்து கொண்டவர்களை என் பாணியில் வேறுவிதமான கவிதைகளை வாசிக்கக் கொண்டு வருகிறேன். இதற்கென்று ஒரு வாட்ஸ்ஸப் குழு வைத்திருக்கிறேன். அவர்களிடம் வேறு விதமா கவிதை எழுதுபவர்களைப் புகுத்துகிறேன். எப்போதும் 20 பேர்கள்தான் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை கவிதைக் கூட்டத்தில் இரண்டு கவிதைகளை எடுத்துக் கொண்டு அலசுவது என்று தீர்மானித்தோம். ஒன்று ‘வியாதி அறிக்கை’ என்ற பிரமிள் கவிதை. இன்னொன்று தேவதச்சனின் ‘பொற்கணம்’ என்ற கவிதை. ஏற்கனவே இந்தக் கவிதைகளைக் குழுவிற்கு அனுப்பி விட்டேன். முன்னதாகப் படிக்கட்டுமென்றுதான். அன்று கலந்து கொண்டவர்கள் எல்லோரும் முதலில் பிரமிள் கவிதையும், அதன்பின் தே

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 28

அழகியசிங்கர்   சூம்  மூலமாக விருட்சம் நடத்தும் 28வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசப்பட்ட  கதைஞர்கள்  1. ஆர்.  வத்ஸலா 2. கார்த்திக் பாலசுப்ரமணியன்     (சமீபத்தில்  யுவ   புரஷ்கார்  விருது பெற்றவர்)   இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடினார்கள்.   அதன் காணொளியை நீங்கள் காணலாம்.

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27

  அ ழகியசிங்கர் சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள் 1. ஆர். வத்ஸலா 2. கார்த்திக் பாலசுப்ரமணியன் (சமீபத்தில் யுவ புரஷ்கார் விருது பெற்றவர்) இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். Topic: விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27 Time: Feb 5, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81311791427... Meeting ID: 813 1179 1427 Passcode: 373921 1 Chandramouli Azhagiyasingar