Skip to main content

Posts

Showing posts from May, 2020

என்னவென்று சொல்வது?..

அழகியசிங்கர் நேற்று விருட்சம் கவிதை வாசிக்கும் கூட்டம்  சூமில்  நடத்தினேன்.  எனக்குத் திருப்தியாக இல்லை.  நேற்று கவிதை வாசித்தவர்களை தனித்தனியாகக் கூப்பிட்டு இன்னொரு முறை வாசிக்க வைக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இன்னும் எனக்கு  சூம்  கூட்டம் நடத்துகிற அனுபவம் போதவில்லை.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும்  சூம்  கூட்டம் கவிதை வாசிக்கும் கூட்டமாக நடத்த உத்தேசம். எனக்கு அறிமுகமான கவிஞர்களையெல்லாம்  கூப்பிட்டு வாசிக்கச் சொல்லப் போகிறேன்.. ஒவ்வொரு வாரமும் 4 கவிஞர்களைக்  கூப்பிட்டுக்  கவிதை வாசிக்கச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.  ஒரு வாரம்  மரபுக்  கவிதைகள் எழுதுபவர்களைக் கூப்பிடலாமென்று நினைக்கிறேன் (அப்படி என்னதான் எழுத முடிகிறது அவர்களால்?)  அதேபோல்  ஐகூ  வாசிப்பவர்களை. நான் 32 வருடமாக விருட்சம் நடத்தி வருகிறேன்.  கவிஞர்கள்தான் பெரும்பாலும் அறிமுகம் எனக்கு.  தேங்கிவிட்ட கவிதைப் புத்தகங்களை என்ன செய்வது என்று எனக்கு எப்போதும் தெரியாது?  கவலைப் படுவதுமில்லை.  பேப்பர்  கடைகளிலும் போடுவதில்லை. வரும் வெள்ளிக்கிழமை 4 பெண்  கவிஞர்களைக்  கவிதை வாசிக்க அழைக்கல

அஞ்சலட்டைக் கதைகள் 13

அழகியசிங்கர் இது என் 13வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச் சிரிக்காமஙூருக்க முடியாது.  எதிர்பாராத தகவல்? நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம்.  குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை.  அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும்  தொலைக்காட்சி , தினசரி எல்லாம்  பார்ப்பதில்லை , படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம்.  தொலைப்பேசிகளைத்  தூர வைத்துவிட்டோம்.  நான் புத்தகங்களுடன் ஐக்கியமானேன். அவள் ஜவ்வரிசி வடாம் இடுவது என்று தீர்மானித்து மும்முரமாக அதில் ஈடுபட்டிருந்தாள். ஒரு  மூலையிலிருந்து  இன்னொரு மூலைக்கு  நாற்காலியை  நகர்த்திக் கொண்டு வந்தாள்.  வெயில் படுகிற மாதிரி  பால்கனிக்கு  இழுத்துக்கொண்டு வந்தாள். பின் மடமடவென்று ஜவ்வரிசி  வடத்தை  இட்டாள். “ அலாதியான மகிழ்ச்சி.  ஜவ்வரிசி வடாம் இடுவதற்கு முன் என் நாக்கில் அதன் மாவைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னாள்.  புளிப்பு

சில வித்தியாசங்கள்

சிறுகதை : சுஜாதா சில வித்தியாசங்கள் நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும், சித்தார்த்தன் என்கிற என் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு - அவனை நீங்கள் சந்திக்க வேண்டும்; அழகான பயல் - பால், விடமின் சொட்டுகள், ‘ஃபாரெக்ஸ்' வாங்குவதற்கும், என் புத்தகச் செலவுகளுக்கும் ... எதற்கு உங்களுக்கு அந்தக் கணக்கெல்லாம். வாங்குகிற முந்நூற்று சொச்சம், இருபத்தைந்து தேதிக்குள் செலவழிந்து விடுவது சத்தியம். இந்த உலகத்தில் இன்றைய தேதிக்கு என் சொத்து: ஒரு டெரிலின் சட்டை, பெட்டி நிறையப் பிரமாதமான புத்தகங்கள், ராஜேஸ்வரி. கடைசியில் குறிப்பிடப்பட்டவள் என் மனைவி. இவளைப் பற்றி கம்பராமாயண அளவில் புகழ் பாடலாம். அதிகம் பேசாதவள். என் வக்கிரங்களையும், பணமில்லா

நவீன விருட்சம் 112வது இதழ் வெளிவந்துவிட்டது.

அழகியசிங்கர் 112வது இதழ் அச்சிற்கு  அனுப்புமுன்   கொரோனா  பிரச்சினை. அச்சில் இனி கொண்டு வர முடியாது என்று தோன்றியது.  அந்த இதழை  அமேசான்   கின்டஙூல்  அனுப்பி விட்டேன்.  அதன் பின் எல்லாம்  சரியானவுடன்  திரும்பவும் அச்சிற்கு அனுப்பி விருட்சம் 112வது இதழை இப்போது கொண்டு வந்துவிட்டேன்.   கடந்த 32 ஆண்டுகளாக விருட்சம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.   தற்போது 177பேர்களை ஆனந்தவிகடன்  வேலையிலிருந்து  நீக்கி விட்டது. மேலும் ஆங்கில ஹிந்து பத்திரிகையிலும் பலரை  வேலையிலிருந்து  நீக்கப் போவதாகக் கேள்விப்படுகிறேன்.  தமிழ் ஹிந்துவில்  பலருக்குச்  சம்பளம் குறைவாகக் கொடுக்கப் பட்டிருப்பதாக அறிகிறேன்.  ஆனால் விருட்சத்திற்கு எந்த ஆட்குறைப்புமில்லை.  மயிலாடுதுறைக்கு விருட்சம் நிர்வாகி மாற்றல் ஆகி பத்துவருடம் பித்துப்பிடித்த  நிலையிலிருந்தபோதும் , அமெரிக்காவில் சில மாதங்கள் இருந்தபோதும் விருட்சம் கலங்கியதே இல்லை.  தொடர்ந்து வந்து கொண்டிருக்கிற இலக்கியப் பத்திரிகை   நாளையிலிருந்து  விருட்சம் 112வது இதழைத்  தபாலில்  அனுப்ப உள்ளேன்.  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 145

அழகியசிங்கர்    முகமூடிகளின் உலகம் அதங்கோடு அனிஷ்குமார் தேவைகளுக்கேற்ப தேவைப்படுகின்றன முகமூடிகள்  பூகம்ப மனதின் அதிர்வுகள் அழித்து புன்னகை பூக்க கொலைவெறி புதைத்து கொல்லென்று சிரிக்க முகமூடிகளின் பொருட்டு எல்லோரும் தொலைக்கிறார்கள் முகங்களை முகமூடிகளின் உலகத்தில் முகங்கள் கழுவேற்றப்படுகையில் உயிர்வலியெடுத்து கதறுகின்றன யதார்த்தத்தின் குழந்தைகள் முடியாது இனி முகமூடிகளற்று முகம் காட்ட எந்த முகமூடியணிந்தாலும் எட்டிப் பார்க்கும் என் முகத்தை எப்படி மறைப்பது? “ நன்றி : நிறங்களின் பேராசைக்காரர்கள் - அதங்கோடு அனிஷ்குமார் - மயூரா பதிப்பகம், 37 தொட்டராயன் கோயில் வீதி, கோயமுத்தூர் 641 009 - பக்: 64 - விலை : ரூ.30 - வெளியான ஆண்டு : 2008 - தொலைபேசி : 93607 89001

அஞ்ச லட்டைக் கதைகள் 12

அழகியசிங்கர் இது என் 12வது கதை.  இந்தக் கதையைப் படிக்கும்போது  ஒரு  நிமிடத்திலிருந்து  இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  கூடவே இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் வாய்விட்டுச்  சிரிக்காமலிருக்க  முடியாது.  ஏன் இப்படி ? இந்தக் கொடூரமான  கொரோனா  காலத்தில் நான் வெளியில் செல்வது  ரொம்ப  ரொம்ப குறைச்சல்.  வயதானவர்கள் போகக்கூடாதென்று யாரையெல்லாம் வயதானவர்கள் என்று அரசாங்கம் சொன்னதோ அதில் நான் அடங்குவேன் என்பதால் நானும் போகவில்லை.  ஒரு மாதம்வரை நான் வீட்டைவிட்டு வெளியில் போகவில்லை.  பின் ஒருநாள் மாத்திரைகளை வாங்கச் செல்லலாமென்று கிளம்பினேன்.  என் டூ  வீலர்கள்  எதுவும்  ஸ்டார்ட்  ஆகாமல்  மக்கர்  செய்தன.   ஒருவழியாகத்  தாஜா பண்ணி  கைனடிக்   ஹோன்டா  வண்டியை ஓட்டத் தயாரானேன். அசோக் நகரில்  உள்ள மருந்துக் கடைக்கு முகமூடி அணிந்து சென்றேன்.  கடைக்கு முன்னே நிறையா முகமூடிகள்.  நின்று நிதானித்து மாத்திரைகளை வாங்கினேன்.  திரும்பும்போது வழியில் பிள்ளையார் கோயில் மூடி இருந்தது.  அதன் பக்கத்தில் ஒரு மூலையில்

கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள்

அழகியசிங்கர் கே.ஜி.  சங்கரப்பிள்ளை  கவிதைகளை மலையாள  மொழியி லிருந்து  மொழிபெயர்த்தவர்.  சிற்பி அவர்கள்.  மலையாளத்தில் மட்டுமல்லாது இந்தியக் கவிதை இலக்கியத்திலும் ஓர் அபூர்வமான குரல் கே.ஜி. சங்கரப்பிள்ளையின்  குரல்.   அவர் கவிதைகளைக் குறித்து  டாக்டர்  பி.கே ராஜசேகரன்  சங்கரப்பிள்ளை  கவிதைகள் குறித்து இப்படிக் கூறுகிறார். உருவத்திலும் மொழியிலும்  நமக்குப்  பழக்கமில்லாத பாதைகளில் நடந்து தன்னைத் தானே  புதுமைப்படுத்திக்கொள்ளும்  கவிதை இது.   வடிவாக்கத்திலும் , படிம நிர்மாணத்திலும் கவனம் செலுத்தியவாறு, தினசரி வாழ்வின் புறச்  சூழல்களிலிருந்து  வரலாற்றையும், பண்பாட்டின்  நுண்வெளிகளையும்   சங்கரப்பிள்ளை  கவிதை உற்று நோக்குகிறது.  73 கவிதைகளின்  தொகுப்பைச்  சிற்பி  மொழிபெயர்த்துள்ளார் .  சாகித்திய  அகாதெமி  வெளியீடாக இத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத் தொகுப்பில் நான் பல கவிதைகளை ரசிக்க முடிந்தது.  1959ஆம்  ஆண்டி லி ருந்து  1996ஆம் ஆண்டு வரை எழுதியுள்ள கவிதைகளை இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இக் கவிதைத் தொகுதியை 3 பாகங்களாகப் பிரித்துள்ளார்க

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 144

அழகியசிங்கர்      இன்ஸ்டண்ட்  கவிஞர் எம் கீதாஞ்சலி   பிரியதர்சினி   இன்ஸ்டன்ட் கவிஞர் எம் என்பவர் மாவட்டத்தின் ஒரு சிறந்த நிர்வாகி, நாட்டுக்கும், அவர் வீட்டுக்கும்  ஸ்டேட்ஸ் போய் படித்து விட்டு, பிடிக்காமல் ஊர்  வந்து முகநூலில் ஸ்டேடஸ் போடுவார் அடிக்கடி  முகநூலில் அவருக்கு மூவாயிரம் பேர் பரஸ்பர  நண்பர்கள் குருதிக்கொடை மற்றும் அடைமழைக்கு  மழைக்குடை உதவும் நண்பர் வரை பேமஸ் அவர்.  முன்தினம் அவர் மொரிஷியஸ் போனதை  அடுத்த நாள் முகநூலில் எழுதுவார், ஒரு நவீன  கைப்பேசி உதவியுடன் கையடக்க புகைப்படம் உண்டு  கண்டிப்பாக யாரோ ஒருத்தியுடன் சிரித்தபடி இருப்பார்  சிந்திப்பது குறித்து சிந்தனையுடன் தினம் பதிவில்  ஏராளம் எழுதுவார் நம் இன்ஸ்ட ன்ட் கவிஞர் எம்.  அணுஉலை எதிர்ப்பாளர், ஈழவிடுதலைக்கு தமிழ்  ஆதரவாளர் கவிஞர் எம் ஏழெட்டு புரட்சிகர தமிழ்க்  குறும்படங்களுக்கும் உரிமையாளர். புதுமற்றும் பழைய  கவிதைகள் குறித்தும், எழுத்தாளர்களின் போக்கு, திமிர்  குறித்தும் ஏராளம் பதிவுகள் போட்டார் நேற்று                முன்தினம்  அப்கோர்ஸ்

ந.முத்துசாமியின் நெய்ச் சொம்பு

அழகியசிங்கர் ந. முத்துசாமியின் ' மேற்கத்திக்  கொம்பு மாடுகள்' என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள நெய்ச் சொம்பு என்ற கதை.  நாலரை  பக்கங்கள் கொண்ட கதை. 2004ல் எழுதப்பட்ட கதை. பத்து வயது ஒரு சிறுவனின்  பார்வையிலிருந்து  எழுதப்பட்ட கதை.  ந.முத்துசாமி அவருடைய பத்தாவது வயதில் அவருடைய அனுபவத்தைத்தான் கதையாக எழுதி உள்ளார் எங்கள் வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில்  இறவாணத்திலிருந்து  ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது என்று ஆரம்பம் ஆகிறது கதை. ஆரம்பத்தில் ஒரு  கிராமப்புற  வீட்டில் நெய்ச் செம்பு எங்கே வீற்றிருக்கும் என்பதை நுணுக்கமாக விவரிக்கிறார்.   எங்கள் வீடு எருமைகளுக்குப் பெயர் போனது.  இரண்டு நாளைக்கு ஒரு முறை தயிர் கடைவார்கள்.  நானும் கடைவேன்.  என்று  கதாசிரியர்  தன்னைப் பற்றி  சொல்லிக்கொள்ள  ஆரம்பிக்கிறார். மோர் கடைவதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.  அந்த சுவாரஸ்யத்தைக் கம்பனும் அனுபவித்திருப்பான் என்று கம்பனின் வரிகள் இரண்டை குறிப்பிடுகிறர். தோயும்  வெண்தயிரி   மத்தொலிதுள்ளவும் . ஆயர் மங்கையர்  அங்கை  வருந்துவா