Skip to main content

Posts

Showing posts from September, 2013

எதையாவது சொல்லட்டுமா......89

அழகியசிங்கர்     சி சு செல்லப்பா கூட்டம் ஒன்று ஜனவரி மாதம் நடந்தது.  அதில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார்.  சி சு செல்லப்பாவின் நெருங்கிய நண்பர்.  செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் எழுதியவர்.  அவர் நடந்து வரும்போது யாரோ ஒருவர் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு வரும்படியாக இருந்தது.  முறுக்கிய மீசையுடன் கம்பீரமாகக் காட்சி அளிப்பவர்.  பேசும்போது தயங்கி தயங்கி பேசுவதுபோல் இருந்தாலும், யாரும் அவரது பேச்சை ரசிப்பார்கள்.  கிட்டத்தட்ட 75 வயதாவது அவருக்கு இருக்கும்.  தமிழில் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்.  ஆனால் அவர் தன்னை சிறுகதை எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்ள விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்.  நாடகத்தில் தீவிரமாக கவனம் செலுத்துபவர்.  ஒவ்வொரு நடிகனும்  வசனம் பேசும்போது எப்படி உச்சரிக்க வேண்டுமென்பதில் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.  கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் சி சு செல்லப்பாவை குறித்து தன் எண்ண ஓட்டத்தைத் தெளிவாகப் பேசினார்.   அவரின் கம்பீரமான குரலுக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் அன்று அவர் துணையுடன் நடந்து வந்ததுதான் எனக்கு உறுத்தலாக இருந்தது.     இன்னொரு எழுத்தாள நண்பர், அவருக்

வரட்டும்

அழகியசிங்கர்  சந்திரமௌலி என்பவர் அங்கிருந்து இங்கு வருகிறார் இங்கிருந்து அங்கு போகிறார் பென்சன்காரர்கள் எங்கே எங்கே எங்கே என்று கேட்கிறார்கள் அவர் ஆமாம் ஆமாம் ஆமாம் என்கிறார் யாருக்கும் எந்தத் தீர்வும் கிடைப்பதில்லை குறையில்லாத மனிதர்களும் இல்லை 2014 பிப்ரவரி மாதம் பின்பு இவரும் பென்சன்காரர்தான்                                 (25.09.2013) 

A. Thiagarajan

    கண்ணாடி   கண்ணால் காண்பதும் பொய் ... கண்டதே காட்சி ... கண்ணாலே பேசி பேசி .... இன்னமும் எத்தனை  கண்கள் சார்ந்தவை ? வார்த்தைகள், பழமொழிகள், அறிவுரைகள்  வழக்காடல்கள் புழக்கத்தில் ... பார்த்தலே நம்புதல் விசிவிக்-  நீ எதை பார்க்கிறாயோ அதுவே கிடைக்கும்   என்ன பேசினாலும்  எப்படி யோசனை செய்தாலும்  கண்ணாலே பார்ப்பது போலாகுமா? பகுத்தறிவாளனும் இதையே... தினமும் இந்தப்  பொய் நமக்கு அவசியம்  வேண்டியிருக்கிறது... நினைவு தெரிந்த நாளிலிருந்து  இன்று வரை நான் எனது  என்று நம்பும் என் முகமல்லாத வேரொரு பிம்பத்தை  தவறாமல் தினமும் எனக்கே காட்டும் இந்த கண்ணாடியை  தவறாமல் தினமும் நானும் பொய்யாய் கண்டும்- ஒரு சந்தேகம்  கண்ணாடி கண்டுபிடிக்குமுன்னர்  எதைப் பார்த்துக் கொண்டிருதோம்? பார்த்தல் என்பதுதான் நம்புதல்  என்று ஆன பின்,   அவை  நம்பிக்கொண்டிருத்தல் என்பது  அவசியமில்லாத நாட்களாக இருந்தன   என்றுதான் கொள்ள வேண்டும் ? நமக்குள்ளே இருக்கும் வேற்றுமைகளே  நம்மை யுநீக் ஆக்குகின்றன  என்ற

பெண்

சா.தீபா     காணக் கிடைக்காத  காவல்கள் எனக்காகவே  காவலில்லாத வாயில்களில்  காத்துக் கிடக்கும்!    தெருவில் இறங்கித்  தொடர்ந்து நடக்கத்  தொடர்பில்லாத  கண்கள்  துளைத்துத் தொலைக்கும்!   ஆடைகளின் சலசலப்பும்  ஆரவாரமாய்த் தோன்றும்! வசைமொழியில் வாய் நனைத்து  வார்த்தைகள் கேட்கும்!   பேருந்து நிறுத்தம் வந்து  பெருமூச்சு விடும் முன்பு  பெருங்கூட்டம் கழுகாகி  வெறித்துப்  பார்க்கும்!   சகித்துக்  கொண்டு  சட்டென்று பேருந்திலேற  சற்றுமுன்  பார்த்த கூட்டம்  வேலை காட்டும்!   நிறுத்தம் வந்து  நின்றிறங்கிய பின்பு  அலுவலக வாயிலும்  அப்படியே வரவேற்கும்!   இறந்த பகலின்  இருளோடு வீடு வர  சந்தேகமாய் சில முகங்கள்  சேறிரைத்துப்  போகும்   என்ன செய்ய?          பெண் என்று            பெயர் வைத்து விட்டா னே???                                                            

சில குறிப்புகள்...1

அழகியசிங்கர்     21.09.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மையிலாப்பூரில் உள்ள கோகுலே ஹாலில் ஆரம்பித்து 80 ஆண்டுகள் முடிந்த மணிக்கொடி பத்திரிகைக்கு ஒரு கூட்டம் நடந்தது.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் புதல்வர் போனில் அழைத்ததால் சென்றேன்.  அரங்கத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருந்தனர்.  சிதம்பர சுப்பிரமணியன் புதல்வர்கள், இராமையாவின் புதல்விகள், சிட்டியின் புதல்வர்கள், சி சு செல்லப்பாவின் புதல்வர் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கி.அ சச்சிதானந்தம், ம ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர் நரசய்யா, பேராசிரியை செந்தமிழ்ச் செல்வி என்று பலர் கலந்துகொண்டு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி பேசினார்கள்.      நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் மறைமலைநகர் நூலகத்திற்குச் சென்று மணிக்கொடி இதழ்களைப் பார்த்திருக்கிறேன்.  மணிக்கொடி எழுத்தாளர்களான சி சு செல்லப்பா, சிட்டி அவர்களுடன் பேசிப் பழகியிருக்கிறேன்.              கூட்டத்திற்கு பொருத்தமே இல்லாமல் சுப்பு என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  பின்னார் மணிக்கொடி சம்பந்தமாக மேலே அறிவித்த பேச்சாளர்கள் ஒவ்வொருவராகப் பேசினார
எதிரி காஷ்மீர் சிறுகதை - ஏ.ஜி. அத்தார் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் நான் இந்தியக் காவலரனைக் கடந்து வேகமாக நடந்து சென்றேன். அது மத்தியான நேரம். எவரும் தென்படவில்லை. சிலவேளை அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கக் கூடும். அவ்வாறில்லையெனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நடுப்பகலில் எந்தவொரு மனித ஜீவராசியும் தேசத்தின் எல்லையைக் கடந்து செல்வரென அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். வியர்வை வழிய நான் புகையிரதமொன்றைப் போல வேகமாக ஓடினேன். எனது சகோதரனின் முகம் எனது கண்ணெதிரே தோன்றுகிறது. அவரது நிலைமை படுமோசமானதென தகவல் தந்தவர் கூறியிருந்தார். நீலம் ஆற்றங்கரையில் தனது இல்லத்தில் வசிக்கும் அவனுக்கு தனதென்று சொல்லக் கூடிய எவரும் அங்கில்லை. நான் ஆற்றங்கரையில் இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் வசித்து வந்தேன். எனது சகோதரன் ஆற்றின் எதிர்ப்புறத்தில் பாகிஸ்தானுக்குச் சொந்தமான கரையில் வசித்து வந்தான். 'அவர் சுயநினைவற்ற நிலையிலும் உங்கள் பெயரையே கூறிக் கொண்டிருக்கிறார்' என தகவல் தந்தவர் கூறியிருந்தார். அவ்வாறான தகவலொன்று கிடைத்த பின்

நீல பத்மநாபனின் 43 கவிதைகள் குறித்து...............

     அழகியசிங்கர்         திருவனந்தபுரம் என்ற இடத்திலிருந்து மூன்று முக்கிய  படைப்பாளிகளை நான் அறிவேன்.  அதில் ஒருவரான நீல பத்மநாபனை எனக்கு கல்லூரி ஆண்டிலிருந்து தெரியும்.  அவர் புத்தகங்களை நான் விரும்பிப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து அவரை நேரிடையாக அறியாவிட்டாலும் அவர் மீது எனக்கு ஒருவித மதிப்பும், லயிப்பும் இருந்துகொண்டுதான் இருந்தது.   இன்னும் இரண்டு படைப்பாளிகளாக நான் அறிவது. நகுலனையும் காசியபனையும்.  இந்த மூன்று படைப்பாளிகளிடமும் நான் காணும் ஒரு ஒற்றுமை.  மூவரும் கவிதைகள் எழுதுவார்கள்.  சிறுகதைகள் எழுதுவார்கள்.  நாவல்கள் எழுதுவார்கள்.  கட்டுரைகள் எழுதுவார்கள்.  மொழிபெயர்ப்பு செய்வார்கள்.   திருவனந்தபுரத்தில் இன்னும் இரண்டு படைப்பாளிகளைப் பற்றியும் நான் அறிவேன்.  அதில் ஒருவர் ஷண்முக சுப்பையா.  இன்னொருவர் ஆ மாதவன்.  ஷண்முக சுப்பையா கவிதைகளுடன் நின்றுவிட்டார்.  ஆ மாதவன் சிறுகதைகள், நாவல்களுடன் நின்றுவிட்டார்.   நீல பத்மநாபனை நான் அறிந்தபோது ஒரு நாவலாசிரியராகத்தான் அறிந்தேன்.  உண்மையில் நான் அதிகமாக அவர் நாவல்களைப் படித்திருக்கிறேன்.  அவர் நாவல்களைப் படித்துக்கொண்டிருந

அலுப்பு

   A.தியாகராஜன்     சில சமயங்களில் மூச்சு விடுவது அலுப்பாக இருக்கிறது  விடுவதை விட்டுவிடலாம் என்று சீரியசாகவே தோன்றுகிறது- ஏன் வேலைக்குச் சென்றோம் என்று இருக்கிறது-   கண்ட கழுதைகளின் கீதோபதேசங்களை  பல சமயங்களில் இந்த கிருஷ்ணர்களை மனதில் சபித்துக் கொண்டு கேட்கையில்- சில சமயங்களில் ஏதோ ஒருவன் சரி என்று தோன்றும் போது  ஏன் நான் தெரியாதிருந்தேன் என்று என்னை நானே கரித்துக் கொட்டிக்கொண்டு-  அலுப்பு -   அது கோபம் இல்லை- கோபம் மீண்டும் மீண்டும் வந்தால் அது அலுப்பாகி விடுகிறது- அலுப்பு மீண்டும் மீண்டும் வந்தால்  அது கோபமாகி மறுபடி  ப்யூபா பூச்சி யாவது போல  அலுப்பாகவே உரு மாறுகிறது - நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ ,  ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை- என்று கேட்கும்போது- நான் ஜீன்களால்,படிப்பால், சூழலால் ஆடும் கைப்பொம்மை என்று உணர்கையில்-  அன்பே சிவம் ஏன் சிவப்புக் கலராக இருக்க வேண்டும் என்று- கோட் சூட் போட்டுக்கொள்ளும்போது- ரோமில் இருக்கும் போது ரோமானியர்கள் செய்வதை செய் என்றவன் மீது- வள்ளுவர் மீது உலக

எதையாவது சொல்லட்டுமா.......88

அழகியசிங்கர் கவிஞர் ஆத்மாநாம் சில அற்புதமான கவிதைகளை எழுதி உள்ளார்.  ஆனால் அவரைப் பற்றி அவர் இருக்கும்போது யாரும் சொல்லவில்லை.  இப்படித்தான் நாம் நம் படைப்பாளிகளைக் கொண்டாடுவதில்லை.  அவர்கள் எழுத்தை அலட்சியப்படுத்துகிறோம்.  ஆத்மாநாம் ஒருமுறை ழ என்ற பத்திரிகையை வைத்துக்கொண்டு ஒரு இலக்கியக் கூட்டத்தில் எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார்.  அவரிடமிருந்து பத்திரிகையை வாங்கியவர்கள் யாரும் அந்தப் பத்திரிகைக்கு உரிய தொகையைக் கொடுக்கவில்லை. ஆத்மாநாம் யார்? அவர் எப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார் என்பதையெல்லாம் யாரும் மதிப்பிடவில்லை.  பங்களூரில் அவர் தங்கியிருந்தபோது, க.நா.சுவைப் போய் சந்தித்திருக்கிறார்.  தான் எழுதிய கவிதைகளைக் காட்டியிருக்கிறார்.  க.நா.சு அவர் கவிதைகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.  உண்மையில் க.நா.சு எல்லாவற்றையும் படித்துவிட்டு உடனே அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடியவர்.  ஏன் அவருடைய கடைசிக் கால கட்டத்தில் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பற்றி கூட தினமணியில் எழுதியிருக்கிறார். ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.   ஆத்மாநாம் அவசரப்பட்டுவிட்

ஐராவதம் பக்கங்கள்

இலக்கியத்தின் முதுமை எனக்கு இப்போது அறுபதைந்து வயதாகிறது.  வங்கியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெற்று வருகிறேன்.  தெருவில் இறங்கி நடக்கும்போதெல்லாம் என்னைவிட முதியவர்களைத்தான் எதிர்கொள்கிறேன்.  வாலிபர்களும், யுவதிகளும் சைக்கிள், ஸ்கூட்டர் மோட்டார்கார் முதலிய வாகனங்களில் பயணிக்கிறார்களோ என்னவோ? சமீபத்தில் எழுபத்தோரு வயது நிரம்பிய ஒரு நண்பரை தற்செயலாக சந்தித்தேன்.  அந்தக் காலத்தில் தீபம், கணையாழி முதலிய இலக்கிய பத்திரிகைகளின் வாசகர்.  காஞ்சிபுரம் நகரத்துக்காரர்.  புனேயில் ராணுவ கணக்குப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்று கணிசமான ஓய்வூதியம் பெறுபவர்.  மாம்பலம் ஒட்டியுள்ள அசோக்நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சொந்தக்காரர்.  மனைவியுடன் வசித்து வருகிறார்.  இவருக்கு இரு மகன்கள்.  இருவரும் உயர்கல்வி பயின்று அமெரிக்காவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்கள்.  அவர்கள் அமெரிக்கா குடியுரிமைப் பெற்று விட்டார்கள்.  இந்தியாவிற்கு திரும்பி வரும் உத்தேசமில்லை.  நண்பர் அமெரிக்கா போய் முறையே நியூஜெர்ஸி நகரில், டல்லாஸ் நகரில் ஆறு ஆறு மாதங்கள் கழித்துவிட்டு இந்தியா திரும்பி வி

சின்னப்பயல்

வயது என் வயதைக்கேட்கும் அனைவரும் தம் வயதில் இரண்டைக்கூட்டி வைத்துக்கொண்டு அதுதானே என்றே கேட்கின்றனர் உன் வயதை நான் எப்போதும் என்னிலிருந்து இரண்டைக்கழித்து விட்டே நினைத்துக்கொள்கிறேன்

-ராமலக்ஷ்மி

வலி தேநீர் விருந்தொன்றில்  சந்தித்தேன்  அந்த இளைஞர்களையும் யுவதிகளையும். இன்முகத்தோடு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தார்கள். வேடிக்கைப் பேச்சால்  விருந்தினர்களைக்  கவர்ந்தார்கள் . “பக்கத்தில் குடிவந்திருக்கிறார்கள் புலம் பெயர்ந்தவர்கள்” தணிந்த குரலில்  குனிந்து என்னிடம்  நண்பர் சொன்னது காலிக் கோப்பைகளை எடுக்கவந்தவன் காதுகளில் விழுந்து விட புன்முறுவலுடன் நகர்ந்தான். ‘ கலவரங்களில் குடும்பங்களை இழந்தவர்கள்’  ஏறிட்டே பார்க்க இயலவில்லை அறிந்த பின் அந்தப் பிரகாசமான முகங்களை. வரலாற்றின்  கருப்புப் பக்கங்களால் காயப்பட்டவர்கள், போதுமென்கிற அளவுக்கு வாழ்நாளின் பெருந்துயர்களைப்  பார்த்து விட்டவர்கள்  ஒருபொழுதும் அதைப் பற்றி பேசமட்டுமல்ல காட்டிக் கொள்ளவும்  விரும்புவதில்லை என்று புரிந்தது.  விருந்தின் முடிவில் அவர்கள் பாடிய பாடல் என் நாடி நரம்புகளிலிருந்து வெளியேற  ஒரு யுகம் ஆகலாம். அப்படி இருக்கையில் அவர்களும் அழக் கூடும் தம் நண்பர்களும் உடனில்லாத.. யாரும் பார்க்காத பொழுதுகளில்

ஆ. கிருஷ்ண குமார்.

ஊதா நிற தொங்கட்டான் ------------------------------ ---------------- தொங்கட்டான்கள் அழகானவை தொங்கட்டான்களுக்கு பாரம் குறைவு தொங்கட்டான்களில் கருமை இளஞ்சிவப்பு ஊதா நிறங்கள் எதனோடும் ஈடு சொல்ல இயலாதவை இதன் பொருட்டே தொங்கட்டான்களை வலிந்து சூட்டிக்கொள்கிறேன். கூர் மழுங்கிய கரு நிற தொங்கட்டானின் சிமிட்டலில் மெல்லிய கருணை பிறந்து அழியும் இளஞ்சிவப்பு நிற தொங்கட்டானின் குறுகுறுவென்ற ஆட்டலில் அருவ இசையொன்றின் பிரதியை உணரலாம் பிடித்து சூட்டுவதால் ஊதா நிற தொங்கட்டான் காதகேசம் சிக்கி நெருடும். பிரக்ஞை சிதறிய ஒரு சிறு கணத்தில்கூட அவை இருப்பையே தெரிவிப்பதில்லை என்பதால் எனக்கு முக்கியமாகிறது. கடைசியாக ஒரு நாள் உணர்ந்தறிந்தேன் அவை பார்ப்பதற்காக மட்டுமே அழகானவை என்றும் பாம்படங்களின் தோற்றம் என்றும்

நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்' - ஒஸ்கார் விருதினை வென்றுள்ள ஈரானின் முதல் திரைப்படம்

- எம்.ரிஷான் ஷெரீப்                                                                                           விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளும் கடமை தனக்கு இருப்பதால் அவளது வெளிநாட்டுப் பயணத்திற்கு உடன்பட மறுக்கிறான். மனைவி விவாகரத்துக் கோரி விண்ணப்பிக்கிறாள். "ஒரு வேலைக்காரரை வச்சுப் பார்த்துக்கலாமே. அவருக்கு இவர் தன்னோட மகன் என்பது கூடத் தெரியாது." "ஆனா அவர் என்னோட தந்தைன்னு எனக்குத் தெரியும்." இவ்வாறாக நீதிபதியின் முன்னால் வாதிட்டுக் கொள்ளும் தம்பதியினது விவாகரத்து குறித்த விசாரணையின் முடிவில் விவாகரத்துக்கான காரணம் வலிதற்றதெனக