Skip to main content

A. Thiagarajan

 
 

கண்ணாடி

 
கண்ணால் காண்பதும் பொய் ...
கண்டதே காட்சி ...
கண்ணாலே பேசி பேசி ....
இன்னமும் எத்தனை 
கண்கள் சார்ந்தவை ?

வார்த்தைகள், பழமொழிகள், அறிவுரைகள் 
வழக்காடல்கள் புழக்கத்தில் ...
பார்த்தலே நம்புதல்
விசிவிக்- 
நீ எதை பார்க்கிறாயோ அதுவே கிடைக்கும்  
என்ன பேசினாலும் 
எப்படி யோசனை செய்தாலும் 
கண்ணாலே பார்ப்பது போலாகுமா?
பகுத்தறிவாளனும் இதையே...
தினமும் இந்தப் 
பொய் நமக்கு அவசியம் 
வேண்டியிருக்கிறது...
நினைவு தெரிந்த நாளிலிருந்து 
இன்று வரை
நான் எனது  என்று நம்பும்
என் முகமல்லாத
வேரொரு பிம்பத்தை 
தவறாமல் தினமும்
எனக்கே காட்டும் இந்த கண்ணாடியை 
தவறாமல் தினமும்
நானும் பொய்யாய் கண்டும்-

ஒரு சந்தேகம் 
கண்ணாடி கண்டுபிடிக்குமுன்னர் 
எதைப் பார்த்துக் கொண்டிருதோம்?

பார்த்தல் என்பதுதான் நம்புதல் 
என்று ஆன பின்,  
அவை 
நம்பிக்கொண்டிருத்தல் என்பது 
அவசியமில்லாத நாட்களாக இருந்தன  
என்றுதான் கொள்ள வேண்டும் ?
நமக்குள்ளே இருக்கும் வேற்றுமைகளே 
நம்மை யுநீக் ஆக்குகின்றன 
என்ற போதே 
கண்ணாடிகள் வந்தனவோ 

Comments

/// நமக்குள்ளே இருக்கும் வேற்றுமைகளே
நம்மையும் நீக்குகின்றன... ///

அருமை... பாராட்டுக்கள்...

Popular posts from this blog