Skip to main content

அலுப்பு

 
 A.தியாகராஜன்
 
 

சில சமயங்களில் மூச்சு விடுவது அலுப்பாக இருக்கிறது 
விடுவதை விட்டுவிடலாம் என்று சீரியசாகவே தோன்றுகிறது-

ஏன் வேலைக்குச் சென்றோம் என்று இருக்கிறது-  
கண்ட கழுதைகளின் கீதோபதேசங்களை 
பல சமயங்களில் இந்த கிருஷ்ணர்களை மனதில் சபித்துக் கொண்டு கேட்கையில்-
சில சமயங்களில் ஏதோ ஒருவன் சரி என்று தோன்றும் போது 
ஏன் நான் தெரியாதிருந்தேன் என்று என்னை நானே கரித்துக் கொட்டிக்கொண்டு- 



அலுப்பு -  
அது கோபம் இல்லை-


கோபம் மீண்டும் மீண்டும் வந்தால் அது அலுப்பாகி விடுகிறது-


அலுப்பு மீண்டும் மீண்டும் வந்தால் 

அது கோபமாகி மறுபடி 
ப்யூபா பூச்சி யாவது போல 

அலுப்பாகவே உரு மாறுகிறது -


நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ , 

ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை- என்று கேட்கும்போது-

நான் ஜீன்களால்,படிப்பால், சூழலால் ஆடும் கைப்பொம்மை என்று உணர்கையில்- 

அன்பே சிவம் ஏன் சிவப்புக் கலராக இருக்க வேண்டும் என்று-


கோட் சூட் போட்டுக்கொள்ளும்போது-


ரோமில் இருக்கும் போது ரோமானியர்கள் செய்வதை செய் என்றவன் மீது-


வள்ளுவர் மீது உலகத்தோடு ஓட்ட ஒழுகச் சொன்னபோது-


வயிறு ஜிம் போகச் சொன்னபோது-


அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை உள்ள அம்மாவைப் பார்த்து-


விட்டு விட சுதந்திரம் இருந்தும் விடாமல், நம்பிக்கை இல்லாத நிலையை நம்பாமல் பல காரியங்களைச் செய்யும் என்மீதும் -


கட்டாயம் வோட்டுப் போடும் அவசியத்தை எண்ணி-


நியாயமான கேள்விகளை கேட்க முடியாத போது-


தெருக்கோடி சாமி திருவிழாவுக்கு டொனேஷன் கேட்க வருபவர்களைப் பார்க்கும் போது-


டெட்ராய்ட் நகரம் திவாலா என்று படிக்கும் போது-


டி வி சிரிப்பு நிகழ்ச்சி களில் மீண்டும் மீண்டும் பார்தத தையே காட்டும் போது-


கிட்ட போகும்போது புஸ் வாணமானது வெடிக்கும் போது-


எனது வரவுகள் மட்டும் டாக்ஸப்ள் என்னும் போது-


நீங்கள் க்யூவில் என்று லக்ஷமாவது தடவை தொலைபேசியில் கேட்டும் யாரிடமும் கத்த வழியின்றி ...-


நடக்க இடமில்லாத் வீதிகளில் -

அலுப்பு அலுப்பு அலுப்பு      



 

Comments