Skip to main content

கவிதை (1)



அலுவலகம்

செல்லும் வழியில்

அடிபட்டு

இறந்திருந்தது ஒரு செவலை நாய்

விரையும் வாகனங்களின்

குழப்பத்தில் சிக்கி

இறக்க நேரிட்டிருக்கலாம்

நாலைந்து நாட்களில்

தேய்ந்து கரைந்தது

இறந்த நாயின் உடல்

காக்கைகள் கொத்தி தின்ன

ஏதுவில்லை

வாகனங்கள்

நெடுகித் தொலையும்

பெருவழிச்சாலையில்

எப்போதும்

பிறரின் மரணங்கள்

ஒட்டியிருக்கிறது

நமது பயணத்தடங்களில்.

Comments

Popular posts from this blog