Skip to main content

மழைக்குப்பின்........










இந்தக் கணம்தான்
உருவானதுபோல் எல்லாம்

நான் பார்க்க பார்க்க
முளைத்தன மரங்கள்

படர்ந்து சென்றது வானம்
எதிலும், எங்கும்

காற்றில் பழுத்தன பறவைகள்
மனிதர்களும்
இப்போதுதான் தோன்றியதுபோல்
எங்கெல்லாமொ.....எப்படியெல்லாமோ

மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும்
விதைத்துவிடு
மனதில் தோன்றியதை
ஆகாயத்தைக் கூட

சிருஷ்டித்துக் கொள்
விரும்பியவற்றை
மரம், பறவை, வீடு
ஏன் மனிதனையும் கூடத்தான்

தமிழில் : திலீப் குமார்

(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

Comments

Popular posts from this blog