
வாசனையால் ஆனவனை
ஒருமழைக் காலத்தில்
சந்திக்க நேரிட்டது
பொத்தலாக நனைந்திருக்கும்
அவனது உடலெங்கும் பொங்கிய
அந்த வாசனை
அறுவறுப்பைக் கொடுத்தது
பின்னுச்சியிலிருந்தும்
முதுகெலும்பின் அடிப்பாகத்திலிருந்தும்
தனக்கு வாசனை பிறப்பதாகவும்
மக்கிய இதழ்களை
உணவாகப் புசிப்பதாகவும் கூறினான்
மெல்ல மெல்ல என்னிடமிருந்து
வாசனையை அவன்
உறுஞ்சுவதாக உணர்ந்தேன்
சட்டென அகலுகையில்
இழுத்து இழுத்து பெய்த மழையின்
சகதியொட்டிய என் உடலெங்கும்
வாசனை பரவிக் கொண்டிருந்தது
Comments