Skip to main content

தாமதமான மனிதாபிமானம்...



நடுச்சாமம் சற்றே நகர்ந்த
அதிகாலைச் சாலையில்
விமானதளம் விரைகையில்
குறுக்காக கிடந்த
அந்த சாலையோரச்சடலத்தின்மேல் படாமல்
வண்டியை ஓட்டுனரும்
பார்வையை நானும் திருப்பிய லாவகம்...
ஊர் வந்திறங்கி
வேலை முடித்து
வந்த ஊர் பிரசித்தமெல்லாம்
வாங்கிபோட்டு விமானம் ஏறிஇறங்கி
வீடு திரும்புகையில் -
காலையில் காரை நிறுத்தியிருக்கலாமோ?

Comments

Popular posts from this blog