Skip to main content

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்







கதவு

இது ஒரு காலம்
யாராலும்
நிச்சயம் கொள்ள இயலவில்லை
எதைப்பற்றியும்
கதவை
திறந்து வைப்பதா அல்லது
மூடி விடுவதா என்பதையும் கூட

ஒவ்வொரு முறையும்
கதவைத் திறக்கும் போதும்
சிறிதே தயங்குகின்றன கைகள்

மீண்டும் மீண்டும்
நிச்சயம் கொள்ள முடியாமலே போய்விடுகிறது எனக்கு

நான் இருப்பது

கதவுக்கு
இந்தப் பக்கமா அல்லது
அந்தப் பக்கமா?


(ஜ்யோத்ஸனாமிலன்(1941) கவிதை, நாவல் இத்துறைகளில் ஹிந்தி, குஜராத்தி மொழிகளில் சிறந்து விளங்குகிறார். அவரது கவிதைகளும், கதைகளும், ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

Comments

Popular posts from this blog