Skip to main content

நாவிஷ் செந்தில்குமார்





உனக்குமட்டுமொரு
ரகசியம் சொல்கிறேன்
என்றொருவன் காதில் சொன்னதை
எனக்குமட்டும்
சொல்வதாகச் சொல்கிறான்
இன்னொருவன்...
ரகசியம் என்ற வார்த்தையிலுள்ள
புள்ளிக்கும்
நாளும் கசிகின்ற
எங்கள் வீட்டு
தண்ணீர்த்தொட்டியிலுள்ள
ஓட்டைக்கும்
நானறிந்து வித்தியாசமேதும் இல்லை


Comments

Chandran Rama said…
Nice poem....I liked it

Popular posts from this blog