Skip to main content

துளி : 48 - இரண்டு இடங்களுக்குச் சென்று வந்தேன் - 1




அழகியசிங்கர்



நான் இருக்குமிடத்தில் குளிர் போய்விட்டது.  எப்போதும் காலை 10 மணிக்குமேல் சென்றாலும் குளிர் அடிக்கும்.  நகர முடியாது.  ஆனால் இப்போதோ காலை 8 மணிக்கே தாங்க முடியாத வெயில்.
ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில்தான் வெளியில்  செல்வோம்.  போன சனி ஞாயிறுகளில் 2 முக்கியமான இடங்களுக்குச் சென்றோம்.  
காலையில் 8 மணிக்குக் கிளம்பிவிட்டோம்.  கார்.  அரவிந்த் (என் பையன் பெயர்) காரை ஓட்டிக்கொண்டு வந்தான்.  மலைகள் சூழும் இடத்தில் வண்டி சென்றுகொண்டிருந்தது.  நடுவில் சாலை.  இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மலைகள்.  பூமியிலிருந்து 7000 அடி உயரத்தில் உள்ள மலை உச்சிக்குச் சென்றோம்.  நாங்கள் சென்றது சனிக்கிழமை மதியம் மேல்.  ஒரே கூட்டம்.  கிரான்ட் கென்யான் என்று அந்த இடத்திற்குப் பெயர்.  பெரிய பள்ளத்தாக்கு என்று குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.  அதைப் பார்த்துவிட்டு அசந்து போய்விட்டேன்.   பெரிய பள்ளம்.  பள்ளத்தில் பாறைகள். அந்தப் பள்ளமும் நீண்ட பள்ளமுமாக இருக்கிறது.  பெரிய விஸ்தாரமான பள்ளம்.  
மாலை நேரத்திற்கு மேல் அங்கிருப்பது தவறு என்று எங்களுக்குத் தோன்றியது.  குளிர் தாங்க முடியவில்லை.  
நாங்கள் பயணம் செய்ததை ஒளி வடிவத்தில் காணும்படி கேட்டுக்கொள்கிறேன். 

Comments