Skip to main content

செவ்வரளி




அழகியசிங்கர்






        காலை நேரத்தில்
பாதை ஓரத்தில் பூத்திருக்கும்
செவ்வரளியைப் பறித்து
மனைவியிடம் கொடுக்கிறேன்
பூக்களை பூசைக்கு வைத்துக்கொண்டிருக்கிறாள்
பூக்களை இழந்த செடி
ஏனோ சோகத்தை உதிர்க்கிறது
பூக்களைப் பறித்த கைவிரல்
கசப்பை உணர்கிறது.

பீனிக்ஸ்
24.04.2019 - புதன்
காலை : 9.25

Comments