Skip to main content

புதிர் விளையாட்டு!


கடவுள் சாத்தானாகப் பெயர்ந்த
ஒரு வெயில் மதியப்பெருவெளியின் கானகத்தில்
வரிப்புலியொன்றும்
புள்ளிமான் இனத்தினது இரண்டும் 
மிகுந்த வேட்கையிலிருந்தன

முதலாவது வாழ்வு பசிக்காகவும்
இரண்டாவது மரண பசிக்காகவும்

சாத்தான் முகம் மலர்த்தி தாடை வருடி
அசை உண்ட தருணம்
தாகம் உப்பிய பேராற்றங்கரை
காளிச்சிலைக்குள்
மெல்லப் புகுந்து ஒளிந்து கொண்டான்
கடவுள்!
       
          

Comments

Popular posts from this blog