Skip to main content

ழ 6வது இதழ்

பிப்ரவரி / மே 1979


ஒரு கவிதை


 இந்தக் காலத்தில்
 பிரும்மத்தை
 கள்ளச் சந்தையில்
 விடீயில்
 மந்திரிகளின் பொய்களில்
 எதிலும் (மே) குறைபிரசவத்தில்,
  அவசரத்தில்
 தன்மைகள் எல்லாம் தோற்ற தந்திரத்தில்தான்
 காணமுடியும் போலிருக்கிறது.
   -மீண்டும்-
 இந்தக் காலங்களில்
 தெய்வத்திற்கும் (கூட) ஊர்
 சுற்றும் ஆசை ஏற்பட்டுவிட்டது
 என நினைத்தேன்-
 சினிமாவெறும் கோவிலில்
 நேற்று இரவு அவள் வந்தாள்
 சிரித்தாள்
 சொல்லறுற்றாள்
 ''எப்போதுமே அவன்ஊர்களிலிருந்ததில்லை''
   

    S SAMPATH

Comments