Skip to main content
 
எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம்
                       
                                                                                                            - நிஸர்கதத்தா மஹாராஜ்

                                                                                                               தமிழில் : அழகியசிங்கர்)
 
 
 

கேள்விகேட்பவர் : நான் நன்றாக இல்லை.  ரொம்பவும் பலவீனமாகத் தெரிகிறேன்.  நான் என்ன செய்வது? 

 நிஸர்கதத்தா மஹாராஜ் : யார் நன்றாக இல்லை. நீயா அல்லது உன் உடலா?

 கே.கே : என் உடலாகத்தான் இருக்கும்.

 நிஸர் : நீ உன் உடல் நன்றாக இருக்கும்போது மகிழ்ச்சி அடைகிறாய்.  உன் உடல் நன்றாக இல்லாதபோது வருத்தப்படுகிறாய்.  ஒருநாள் வருத்தமாகவும், ஒருநாள் மகிழச்சியாய் யார் இருக்கிறார்கள்.

 கே.கே : மனம்தான்

 நிஸர் :  யாருக்குத் தெரியும்?  மனதின் மாற்ற நிலை.

 கே.கே : மனதிற்கு.

 நிஸர் :  மனம்தான் தெரிந்தவர்.  ஆனால் யாருக்குத் தெரியும் தெரிந்தவரை.
 கே.கே : தெரிந்தவருக்கு அவரைப் பற்றியே தெரியுமா?

 நிஸர் : மனம் தொடர்பு அறுந்து போய்விடுகிறது.  திரும்ப திரும்ப அது ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. தூக்கத்திலிருப்பது போல், மயக்கத்தில் இருப்பதுபோல், அல்லது விலகிப் போய்விடுவதுபோல்.  தொடர்பறுந்ததை தொடர்ந்து பதிவு செய்கிறது. 

 கே.கே : மனம் ஞாபகப்படுத்துவதால்தான் தொடர்ந்து செயல்பட காரணமாகிறது.

 நிஸர் : ஞாபகம் எப்போதும் அரைகுறையானது.  நம்ப முடியாதது.  ஞாபகம் எப்போதும் மன ஆழத்தை விவரிக்காது.  üநான்தான்ý என்பதை அறியாதது.  மனதின் அடிதளத்தில் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடி.

 கே.கே : என்னதான் ஆழமாகப் பார்த்தாலும், நான் மனதைதான் அறிய முடிகிறது.  உங்களுடைய வார்த்தையான üமனதிற்கு அப்பால்ý என்பதை அறிய முடியவில்லை.

 நிஸர் : மனதுடன் பார்த்துக்கொண்டிருந்தால், அதைத் தாண்டி போக முடியாது.  மனதிற்கு அப்பால் போகவேண்டுமென்றால், மனதிலிருந்தும் அதன் பிணைப்புகளிலிருந்தும் விலகிப் பார்க்க வேண்டும்.

 கே.கே : எந்த வழியில் நான் பார்க்க வேண்டும்?

 நிஸர் : எல்லா வழிகளும் மனதிற்குள்தான்.  நான் உங்களை எதாவது ஒரு நிச்சயமான வழியில் பார்க்கச் சொல்லவில்லை.  உங்கள் மனதில் நடப்பவை எல்லாவற்றையும் சாதாரணமாகப் பாருங்கள்.  பின் அதன் மூலம் üநான் தான்ý என்பதை உணர முயலுங்கள்.  'நான் தான்' என்பது வழி அல்ல.  அது எல்லா வழிகளையும் நிராகரிப்பது.  இறுதியாக 'நான்தான்' என்பதும் போகக் கூடியது.   üநான் தான்ý என்ற உணர்வு நிலைக்கு மனதைக் கொண்டு செல்லும்போது, எல்லாவற்றிலிருந்தும் மாறுவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

 கே.கே : இவை எல்லாம் எங்கே என்னை அழைத்துச் செல்லப் போகிறது?

 நிஸர் : எப்போது மனம் தன்னுடைய தளைகளிலிருந்து விடுபடுகிறதோ அப்போது அமைதியாகிறது.  அந்த அமைதியை  தொந்தரவு செய்யாமல், அதைத் தக்க வைத்திருந்தால், இதுவரை அறியாத வெளிச்சத்தையும், அன்பையும் கண்டுணரலாம்.  கூடவே இயல்பான சுபாவத்தையும் உணர்வாய்.  ஒருமுறை நீ இந்த அனுபவத்தைக் கடந்து விட்டால்,  எப்போதும் உள்ள மனிதனாக இருக்க மாட்டாய்.  கட்டுக்கடங்காத மனம் அமைதியை சீர்குலைக்க முயலும்.  பார்வையை மாற்றும்.  உன் முயற்சி தொடர்ந்து இருந்தால், அது பழைய நிலைக்குத் திரும்ப வழி இல்லை.  எந்த ஒரு நாளில், எல்லாத் தளைகளும் விலகி, பிரமைகளும், பிணைப்புகளும் விலகுகிறதோ அப்போது வாழ்க்கை  தற்சமயத்தில் நிலைத்திருக்கும். 

 கே.கே :  இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?
 
 நிஸர் : மனம் என்பது இருக்காது.  நம் செயல்பாட்டில் அன்புதான் இருக்கும்.

 கே.கே. : அந்த நிலையை அடைந்துவிட்டேன் என்பதை எப்படி உணர முடியும்? ஆபத்துகளும் புதிர்தன்மை நிறைந்த உலகம் நம்மைச்சுற்றி இருக்க நான் எப்படி பயமில்லாமல் இருக்க முடியும்?

 நிஸர் : உன்னுடைய சின்ன உடம்புக்குள்கூட புதிர்தன்மையும் ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.  இருந்தாலும் நீ பயப்படுவதில்லை.  என்ன உனக்குத் தெரியாது என்றால் இந்தப் பிரபஞ்சம் கூட உன் உடம்புதான்.  அதற்காக நீ பயப்படத் தேவை இல்லை.  நீ சொல்லலாம் உன்னிடம் கூட இரண்டு உடல்கள் உண்டு.  ஒன்று உன்னுடையது இன்னொன்று பிரபஞ்சத்துடையது என்று. உன்னுடையது வரும் போகும். ஆனால் பிரபஞ்ச உடல் எப்போதும் உன்னுடன் இருக்கும்.  உன்னுடைய முழு ஆக்கமும் பிரபஞ்ச உடல்தான்.  நீ உன்னுடைய உடலுடன் கட்டுப்பட்டிருக்கிறாய்.  நீ பிரபஞ்சத்தை உணர்வதில்லை.
 

கட்டுப்பட்டிருப்பதை அப்படியே விட்டுவிடக் கூடாது.  இதை கெட்டிக்காரத்தனமாகவும், முயற்சியாலும் விடுவிக்க வேண்டும்.  எல்லாவித மாயைகளையும் புரிந்துகொண்டு விட்டுவிட்டால், நீ குற்றமில்லாத புனிதமான நிலையை அடைவாய்.  அப்படி அடையும் தறுவாயில் உனக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள வித்தியாசம் இருக்காது. 

 கே.கே : நான் சாதாரண மனிதன். காலத்தையும் இடத்தையும் மிகக் குறைவாகவே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.  மிகச் சில தருணங்களைத் தவிர எல்லாம்  என்னை விட்டுப் போய்விடுங்கின்றன.  எனக்குள்ளே இந்தப் பிரபஞ்சத்தை உணரவே முடியாது.

 நிஸர் : நிச்சயமாகக் கிடையாது.  நீ உனக்குள் உன்னுடைய உண்மையான சொரூபத்தை புரிந்துகொண்டால், நீ அதை உணர்வாய்.  உன்னுடைய உடல் சிறியது அதேபோல் உன்னுடைய ஞாபகமும் குறைவானது.  ஆனால் அளவிடமுடியாத இந்தப் பிரபஞ்ச வாழ்க்கை உன்னுடையது.
 கே.கே : üநான்ý, üபிரபஞ்சம்ý ஒன்றுக்கொன்று முரணானது. ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டது.

 நிஸர் : அவை அப்படியில்லை.  பிரபஞ்சத்துடன் கூடிய உணர்தலைத் தேடு.  அப்போதுதான் நீயும் பிரபஞ்ச மனிதனை கண்டுபிடிக்கலாம்.  அவன் உன்னிடமே முழுவதுமாய் நிரம்பி இருக்கிறான்.
 எப்படியோ உலகமானது உன்னிடத்தில் உள்ளது என்பதை உணர்ந்துகொள்.  அதாவது நீதான் உலகத்தில் உள்ளாய் என்றல்ல.  
 
கே.கே : எப்படி இருக்க முடியும்.  பிரபஞ்சத்தின் ஒரு பகுதிதான் நான்.  இதில் எப்படி உலகம் முழுவதும் இருக்க முடியும்.கண்ணாடியில் பார்ப்பதுபோல் ஒரு கீற்றுபோல் இருக்கலாம்.

 நிஸர் : நீ சொல்வது உண்மைதான்.  உன்னுடைய உடல்
ஒரு பகுதிதான். அதில் பிரபஞ்சம் முழுமையும் எதிரொலிக்கிறது.  ஆனால் நீ ஒரு பிரபஞ்ச உடலாக உள்ளாய்.  நீ சொல்லமுடியாது எனக்குத் தெரியாதென்று.  ஏன்என்றால் நீ எப்போதும் இதைப் பார்த்துக்கொண்டும், உணர்ந்துகொண்டும் இருக்கலாம்.  என்னவென்றால் அதை நீ பிரபஞ்சம் என்று கூறுவாய்.  அது குறித்து பயந்துகொண்டும் இருப்பாய்.

 கே.கே : என்னுடைய சிறிய உடலைப் பற்றி அறிவேன்.  மற்றபடி அறிவியல்முறைப்படி மற்றவர்களைப் பற்றியும் அறிவேன்.

 நிசர் : உன்னுடைய சிறிய உடலும் அற்புதகங்களும், புதிர்தன்மைகளும் நிரம்பியது.  அதற்கும் உன் அறிவியல்தான் புரியவைக்க இருக்கிறது.  உடலைப் பற்றிய சாஸ்திரமும், வானியல் சாஸ்திரமும் உன்னைப் பற்றி விவரிக்கிறது.

 கே.கே : நீங்கள் சொல்கிற பிரபஞ்ச உடலைப் பற்றி ஏற்றுக்கொண்டாலும், எந்த வழியில் நான் அறிவது?  அதனால் என்ன பயன் எனக்கு?

 நிசர் : உனக்குள் இதை உணர்ந்தால், நீ விடுவதற்கு ஒன்றுமிருக்காது.  பிரபஞ்சம் முழுவதும் உன் அக்கறையாக மாறிவிடும்.  ஒவ்வொரு உயிரினத்தையும் நீ விரும்புவாய் ரொம்ப நேசத்துடனும், கெட்டிக்காரத்தனத்துடனும்.  உனக்கும் மற்றவர்களுக்கும் எந்தப் பூசலும் இருக்காது.  எல்லாவித எதிர்பார்ப்புகளும் முழுவதும் இல்லாமல் போய்விடும்.  உன்னுடைய எந்தவொரு முயற்சியும்  பயன் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு அருள் அளிப்பதாகவும் மாறிவிடும்.

 கே.கே  : நீங்கள் சொல்வது என்னைத் தூண்டுவதுபோல் உள்ளது.  ஆனால் எப்படி என்னுடைய பிரபஞ்ச உணர்வை அறிந்து கொள்வது.

 நிசர் : இரு  வழிகள் உள்ளன.  நீ உன்னுடைய இதயத்தையும், மனதையும் முழுவதும் ஒப்படைத்து விடு.  அல்லது நீ, நான் சொல்வதை முழுவதுமாக நம்பி அதன்படி நடந்துகொள்.  வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், நீ முழுமையாக உன்னைப் பற்றி நினைத்துக்கொள். அல்லது முழுமையாக உன்னைப் பற்றிய நினைவில்லாமல் இரு.  இதில் முழுமையாக இருப்பதுதான் முக்கியம். உயர்வை அடைய நீ தீவிர எல்லையை அடைய வேண்டும்.

 கே.கே. : நான் மிகவும் சாதாரணமானவன்.  அந்த உயரத்தை நான் எப்படி அடைய முடியும்?

 நிசர் : எல்லாமும் கடலைப்போன்ற பிரஞ்ஞையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.  இது ஒன்றும் கடினமானதல்ல.  முழுமையாக தன்னைத் தானே புரிந்துகொள்ளும்  ஒரு சிறிய முயற்சிதான் இது.  நீ பார்க்கலாம் எந்த நிகழ்ச்சியும் உன்னுடைய பிரக்ஞையை மீறிப் போவதில்லை.

 கே.கே : உலகம் முழுவதும் பல சம்பவங்கள்.  இவை யாவும் என் பிரக்ஞையில் நிகழ்வதில்லை.

 நிசர் : ஏன் உன்னிடம்கூட பல சம்பவங்கள்.  யாவும் உன் பிரக்ஞையில் தெரிவதில்லை.  இதனால் இது என் உடல் இல்லை என்று தடுக்க முடியாது.  உனக்குத் தெரியும் பிரபஞ்சத்தைக் கூட எப்படி உன் உடலை உணர்வுகளின் மூலம் அறிகிறாயோ அப்படித்தான்.  உன் மனம்தான் எல்லாவற்றையும் பிரிக்கிறது.  வெளி உலகம் உள் உலகம் என்று. ஒன்றுக்கொன்று முரண்பட வைக்கிறது.  இதுதான் பயத்தையும், வெறுப்பையும் இன்னும் பல துயரங்களையும் நம் வாழ்க்கையில் உருவாக்குகிறது. 

 கே.கே : பிரஞ்ஞையைத் தாண்டி போகச் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  நான் வார்த்தைகளைப் புரிந்துகொள்கிறேன்.  ஆனால் அந்த அனுபவத்தை உணரவில்லை.  நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.  எல்லா அனுபவங்களும் பிரஞ்ஞையில் இருப்பதாக.

 நிசர் : நீ சொல்வது சரிதான்.  எல்லா அனுபவங்களும் பிரஞ்ஞையைத் தாண்டி இல்லை.  ஆனாலும் இருத்தலே ஒரு அனுபவம்தான்.  பிரஞ்ஞையைத் தாண்டி ஒரு நிலை உண்டு.  அது அ-பிரஞ்ஞை கிடையாது.  அதேபோல் உன்னதமான பிரஞ்ஞை நிலையும் கிடையாது.  தன்னிலை புறநிலை என்ற குழப்பத்திலிருந்து விலகி முழுவதுமாக உணர்வது.

 கே.கே :  தியோசபி படித்திருக்கிறேன்.  நீங்கள் சொல்வதில் எதுவும் புதுசாகத் தெரியவில்லை.  தியோசபி உருவாக்கத்தைப் பற்றிதான் சொல்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அது பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்திலுள்ளவர்களைப் பற்றியும் விரிவாகச் சொல்கிறது.  அது பலதரப்பட்ட நிலைகளையும், அனுபவங்களையும் ஒப்புக்கொள்கிறது.  ஆனால் அது அதைத் தாண்டிப் போகவில்லை.  நீங்கள் சொல்வது அனுபவத்தைத் தாண்டிப் போகச் சொல்கிறீர்கள்.  அப்படி போவதென்றால் அது அனுபவமே இல்லை.  அதைப் பற்றி பேசி என்ன பயன்?

 நிசர் : பிரஞ்ஞை என்பது முழுமையானதல்ல.  பல இடைவெளிகள் இருக்கும்.  ஆனால் நம்மைப் பற்றிய தொடர்ச்சி அதற்குண்டு.  பிரஞ்ஞையைத் தாண்டிப் போகவில்லை என்றால் இந்த அடையாளத்தால் என்ன பயன்?

 கே.கே : மனதைத் தாண்டுவதாக இருந்தால், எனக்குள் எப்படி மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?

 நிசர் : எதையும் மாற்றுவதற்கு என்ன அவசியம்?  எப்போதும்
மனம் தானாகவே மாறிக்கொண்டிருக்கிறது. உன் மனதை எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் பார்.  அதை அமைதிப் படுத்த அதுவே போதும்.  அது அமைதி அடைந்தால் தானகவே அதைத் தாண்டிப் போவாய்.  எப்போதும் அதைப் பரபரப்பாக்காதே.  அதை நிறுத்து. பின் அப்படியே இரு.  அதற்கு ஓய்வு கொடுத்தால் அது தானகவே சரியாகிவிடும்.  அதனுடைய புனிதத் தன்மையையும் வலிமையையும் தானகவே நிகழும்.  தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் அது சிதைவு அடையத் தொடங்கும்.

 கே.கே : என்னுடைய உண்மையான சொரூபம் என்னுடன் இருக்கும்போது, எப்படி நான் அதைப் பற்றி தெரியாமலிருக்கிறேன்.

 நிசர் : ஏனென்றால் அது நுணுக்கமானது.  ஆனால் உன்னுடைய மனம் அடர்த்தியானது.  அமைதியாக உன் மனதை ஆக்கு.  அப்போது தான் உனக்குப் புரியும் நீ எப்படி இருக்கிறாய் என்று.

 கே.கே : என்னைப் புரிந்துகொள்ள மனம் தேவையா?

 நிசர் : நீ மனதைத் தாண்டிப் பயணிப்பவன்.  ஆனால் உனக்கு எல்லாவற்றையும் அறிய மனம்தான் முக்கியம். உன்னுடைய ஆழத்தை, உன்னை அறிய மனம்தான் ஒரு கருவியாகப் பயன்படும்.  நீ எது மாதிரியான கருவியைப் பயன்படுத்துகிறாய் என்பது முக்கியம்.  நீ உன் கருவியை  மேன்மைப் படுத்தினால், உன் அறிவு தானாகவே அதிகரிக்கும்.

 கே.கே : சரியாக அறியவேண்டுமென்றால் நான் சரியான மனம் வைத்திருக்க வேண்டும்.

 நிசர் : அமைதியான மனம் எப்போதும் தேவை.    உன் மனம் அமைதி அடைந்தால், எல்லாம் தானாகவே நிகழும். சூரியன் உதிக்கும்போது இந்த உலகம் உயிர்ப்பிக்கிறது.  அதேபோல் தன்னைப் பற்றிய கவனம் மனதை மாற்ற வல்லது.  அமைதியான முறையில் தன்னைப் பற்றிய கவனம், உன்னுடைய உதவியிலலாமல் பல அற்புதங்களை நிகழ்த்த வல்லது.

 கே.கே : நீங்கள் சொல்வது என்னவென்றால் பெரிய காரியங்களெல்லாம் அவ்வாறு செய்யாமல் நிகழ்கிறது. 

 நிசர் : நிச்சயமாக.  தயவுசெய்து புரிந்துகொள். பூரண ஞானத்தைப் பெற விதிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை. அதற்கு எதிராகப் போகாதே. அதைத் தவிரக்க முயற்சி செய்யாதே.  அது தானாகவே நிரம்பவிட்டுவிடு.  நீ என்ன செய்ய வேண்டுமென்றால் முட்டாள் மனம் ஏற்படுத்தும் தடைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.   ****

Comments