Skip to main content

ஐராவதம் பக்கங்கள்

ஆட்கொல்லி - நாவல் - ஆசிரியர்
க.நா.சுப்ரமண்யம் - வெளியீடு : அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட், முதல் பதிப்பு: July 1957 - விலை ரூ.1.65 - பக்கம் 119


முன்னுரையில் க.நா.சு தன் இலக்கியக் கொள்கையை வெளிப்படுத்துகிறார்.  தொடர்கதை படிக்கும் ரஸிகர்கள் பெருகப் பெருக நாவல் கலை தேய்ந்து கொண்டுதான் வரும்.  அது தவிர்க்க முடியாத இலக்கியவிதி. தொடர்கதையும் நாவல்தானே என்று கேட்பது இலக்கியத்தின் அடிப்படைகளை அறியாததால் எழுகிற கேள்வி.  தொடர்கதை என்பது இலக்கியத்தில் ஒரு தனி ரகம்.  நாவல் என்பது தனி ரகம்..

தொடர்கதை படிக்க சுலபமானது.  சம்பவங்கள் நிறைந்தது.  சுலபமாக வாரா வாரம் பின்பற்றக்கூடிய சுவாரசியமான அம்சங்கள் நிரம்பியது என்று சொல்லும் ஆசிரியர், ஆட்கொல்லி என்ற நாவலை தத்துவச் செறிவுள்ளதாக, இலக்கிய நயம் நிரம்பியதாக எழுதியுள்ளார்.  இது வானொலியில் வாராவாரம் வாசிக்கப்பட்ட ஒரு நாவல் என்னும்போது, ஆசிரியரின் கலை நுட்பம் ரேடியோவில் இடம் பெற முடிந்துள்ளது என்பது நமக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்க்கையில் தோல்வியுற்றவனான கதைசொல்லி அவனுடைய மாமா வேங்கடாசலம் பற்றி பேசுகிறார்.  மாமா 25 வருஷங்களுக்கு அதிகமாக மாசம் நூறு ரூபாய்க்குள் சம்பளம் வாங்கி, எப்படியோ இரண்டு இரண்டரை லட்ச ரூபாய் பணம் சேர்த்தவர்.  இன்றைய பண வீக்க யுகத்தில் இந்தத் தொகை அல்பமானதாக நமக்குப் படலாம்.  ஆனால் 1950, 1960களில் இது பெரிய தொகைதான்.

'தவறு செய்பவர்கள் போல் நியாயமும் தத்துவமும் பேசுவதில் தீவிரமுள்ளவன் வேறு யாரையும் காண முடியாது.  கடவுளும் சாதிக்காத காரியங்களைச் செய்பவன், கடவுளைக் கூப்பிடுகிற அளவு சாதாரண வாழ்வு வாழும் எவனும் கூப்பிடுவதில்லை.  தர்மம், நியாயம் என்பவற்றின் பெயரால் உலகில் நடக்கிற அதர்மங்களும் அநியாயங்களும் கணக்கு வழக்கில் அகப்படா (பக்கம் 26)'

'பணம் சேர்ப்பதில் ஈடுபாடுள்ள எல்லோருக்குமே தெய்வப் பக்தியும் அதிகமாக இருப்பதற்குக் காரணம் ஏதாவதிருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பணம் சேர்ப்பது என்பது என்னவோ எப்படிப் பார்த்தாலும் பாவச் செயல்தான்.  பாவங்கள் செய்துதான் பணம் சேர்க்க வேண்டும்.  பண மூட்டையுடன் பாவ மூட்டையும் பெரிது ஆகாதிருப்பதற்காக பணக்காரர்களாக விரும்புகிறவர்கள் கடவுள் பக்தியையும் உடன் கைக் கொள்ளுகிறார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது (பக்கம் 48/49).'

பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இது இப்படித்தான் என்கிற ஒதுங்கி நிற்க முயலும் ஒரு சிருஷ்டித் தத்துவத்தை கடைபிடிப்பதுதான் நான் இந்த நாவல் எழுதினேன் என்கிறார் ஆசிரியர் முன்னுரையில்.  கடவுள் போல் மறைந்து சிருஷ்டிக்குப் பின் ஒதுங்கி நின்று நகத்தைக் கிள்ளுவதில் ஈடுபட்டிருப்பவன்தான் கலைஞன் என்பது முப்பது வருடங்களுக்கு முன் ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதிய வாக்கியத்தை மேற்கொள் காட்டியிருக்கிறார்.

U¦dùLô¥ GÝjRô[oLs Be¡X IúWôl©V GÝjRô[oLû[l ©uTt± AYoLs Y¯«úXúV ReLs TûPl×Lû[ EÚYôd¡]ôoLs Gu\ Ït\fNôhÓ EiÓ. L.Sô.Ñ JÚ U¦dùLô¥ GÝjRô[o GuTÕ NofûNdϬV ®`Vm. B]ôÛm AYo Rªr UWûT - Ck§V UWûT - ©uTt± TQm JÚ BhùLôs° Gu¡\ £kRôkRjûR ¨ûX ¨ßjR CkR SôY­p ØVu±Úd¡\ôo Gu\ YûL«p CûR Rªr CXd¡Vj§tÏ ×§V RPm AûUdÏm ØVt£ Guß HtßdùLôsY§p Sôm GkR ®RUô] IVlTôÓm ùLôs[j úRûY«pûX.
ஆசிரியர் அவருடைய 45வது வயதில் எழுதப்பட்ட இந்த நாவலை அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் 2012லும் படிக்க முடிவது நமது பாக்கியம்.

 

Comments

ushadeepan said…
pக.நா.சு.வின் ஆட்கொல்லி நாவல் அனுப்பித் தர இயலுமா? விலை சொன்னால் பணம் அனுப்பி வைக்கிறேன். உஷாதீபன்