Skip to main content
  ஐராவதம் பக்கங்கள்

 

ஆகஸ்ட் 15 - நாவல் - குமரி எஸ் நீலகண்டன் - 502 பக்கங்கள் - ரூ.450 - சாய் சூரியா வெளியீடு - டி டி கே சாலை - ஆழ்வார்பேட்டை - சென்னை
 
 ஆகஸ்ட்15 புதினமா இல்லையா? மிகுந்த சர்ச்சைக்குரிய கேள்வி இது.  கல்யாணம் என்ற நபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விவிரிக்கிறது.  அவர் காந்தியின்தனிப்பட்ட காரியதரசியாக இருந்தவர்.  இந்தப் புதினத்தில் காந்தி, நேரு, ராஜாஜி வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் எல்லோரும் வருகிறார்கள்.  அமெரிக்க நாவலாசிரியர் John Dos Passon
இதே ரீதியில் சில நாவல்களை எழுதியுள்ளார்.  டாகுமெண்டிரி பாணியில் தனிப்பட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையை வர்ணித்திருக்கிறார்.  இந்த நாவலின் ஆசிரியரோ கல்யாணம் என்பவரின் வாழ்க்கையை நாட் குறிப்பு என்ற விதத்தில் பதிவு செய்துள்ளார்.

காந்தியின் மூத்த மகன் ஹரிலால் மதுவை விரும்புகிறார்.  கேளிக்கை வாழ்க்கை வாழ்ந்தார். இஸ்லாமியராக மதம் மாறி தன் பெயரை அப்துல்லா என்று மாற்றிக்கொண்டு காந்திக்கு எதிராகப் பிரசாரம் செய்தார்.  காந்தி சுடப்பட்டு இறந்தபோது, குஜராத்தில் இருந்த ஹரிலால் துக்க செய்தி என்று தந்தி அனுப்பினார்.  இரண்டாவது மகன் மனிலால் காந்தி தென்னாப்பரிகாவில் இருந்தார்.  மூன்றாவது மகனான ராம் தாஸ் காந்தியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்தார்.  காந்திகூட நேருவை பிரதமராக்க விரும்பவில்லை (பக்கம் 328)

 காந்தியைப் பொறுத்தவரை வன்முறையின் பொருளானது அதிநுட்பமானது.  கோபத்துடன் முறைத்துப் பார்ப்பதே வன்முறை.  பல்லைக் கடிப்பதும், மனதிற்குள் ஒருவரை பழிவாங்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வதும் வன்முறை.  அவருக்கு தீங்கு நிகழ வேண்டுமென எண்ணுவதும் வன்முறை என்பதே காந்தியின் சித்தாந்தமாக இருந்தது. (பக்கம் 83)
 காந்தி இரண்டு கைகளாலும் நன்றாக எழுதும் பழக்கம் கொண்டவர்.  வலது கையில் நிறைய எழுதி கை களைப்படைகிறபோது இடது கையால் எழுத ஆரம்பித்து விடுவார்.  (பக்கம் 67).

 அவர் கிழங்குவகைகளைச் சாப்பிடமாட்டார்.  வேக வைத்த காய் கறிகளையே சாப்பிடுவார்.  நீர் சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரி பூசணி பரங்கிக்காய் போன்றவற்றையே சாப்பிட்டார்.  அவற்றில் உப்பில்லாமலயே சாப்பிட்டார் (பக்கம் 67).

 காந்தியிடம் நான் அனைத்து மதங்களையும் ரசிக்கக் கற்றுக்கொண்டேன்.  இரண்டாவதாக சேவாகிராமில் தங்கி இருந்த அந்த குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தங்கி இருந்த அந்தக் குறுகிய நாட்களில் பொருளாதாரம், நேரம் தவறாமை, ஒழுங்குமுறை, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றைக் குறித்து முறையாக கற்றுக்கொண்டேன்.  மூன்றாவதாக சுய உதவி குறித்தும், யாரையும் சாராத தன்னிறைவில் முக்கியத்துவத்தைக் குறித்தும் புரிந்து கொண்டேன்.  நர்காவதாக உடல் ரீதியாக உழைப்பின் தேவையையும் தனது பணிகளை தானே செய்வதன் முக்கியத்துவத்தையும் அறிந்து அதை நான் செயல் படுத்துகிறேன் என்றார் கல்யாணம்.  (பக்கம் 68-69)

 சாகித்திய அகாடமி இந்தப் புதினத்திற்கு ஆண்டு பரிசு அளித்து தன் பாவங்களை  கழுவிக்கொள்ள வேண்டும். 
 

Comments