Skip to main content

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் ...11



அழகியசிங்கர்



14வது புத்தகமாக வளவ துரையனின் கவிதைப் புத்தகம்.  அப்பாவின் நாற்காலி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.  100 கவிதைகளுக்கு மேல்.  வளவ துரையன் சங்கு என்ற பெயரில் சிறுபத்திரிகை நடத்திக்கொண்டு வருகிறார்.  கதைகள், கவிதைகள் எழுதுபவர். 
நவீன விருட்சத்தில் அவர் கதைகள், கவிதைகள் பிரசுரித்துள்ளேன்.  
பொதுவாக கவிதைப் புத்தகங்களுக்கு உலகமெங்கும் வாங்குபவர்கள் எண்ணிக்கைக் குறைவு.  தமிழில் பல பதிப்பகங்கள் மூலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் பாரதியார் கவிதைகள் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
வளவ துரையன் கவிதை ஒன்றை இங்குக் கொடுக்க விரும்புகிறேன்.


பொம்மைகள்

அவன்வட்ட வடிவத்
துணிமேல் பொம்மைகள்
வைத்துள்ளான்.

போலிஸ் பொம்மை ஒன்று
திருடன் பொம்மையிடம்
பிச்சைகேட்பதாய் இருக்கிறது.

புலிக்குப் பக்கத்தில் மானும்
முயலும் சிரிக்கின்றன.

இராமாயணசெட்டில்
சீதையைக் காணோம்
இராவணன் கொண்டு
போயிருப்பானோ?

இலட்சுமியை விட்டுச்
சரஸ்வதி விலகி அமர்ந்துள்ளாள்.
தலையாட்டிப் பொம்மைகள்
அதிகம்தான்

இவை இப்படி
ஏன்என்று கேட்டால்
அவன்
பித்துப்பிடித்தவனாய்ச்
சிரிக்கிறான்.

வளவ துரையன் புத்தகம் விலை ரூ.100தான்.






Comments