Skip to main content

கொரோனாவின் கொடூர முகம்..

 துளி 196


அழகியசிங்கர்



கொரானாவால் ஏற்படும் மரணத்தை விட, அது குறித்து ஏற்படும் அச்ச உணர்வு காரணமாகப் பலர் இறந்து விடுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் கி.ரா இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி திருப்பூர் கிருஷ்ணனை அழைத்தேன். அப்போதுதான் ஒரு அதிர்ச்சியான தகவலைத் தெரியப்படுத்தினார்.

அவர் வீட்டில் மூவருக்கும் கொரானா என்று. அவர் புதல்வனை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகக் கூறினார். அவரும் அவர் மனைவியும் வீட்டிலேயே வைத்தியம் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

யாரிடமும் சொல்லாதீர்கள் என்று அப்போது கூறியதால் நான் யாரிடமும் இதைப் பற்றி தெரிவிக்கவில்லை.

அவருடைய பையன் இளவயது என்பதால் அவருக்கு ஒன்றும் ஆகாது என்று நினைத்தேன்.

இன்று அவர் புதல்வன் இறந்து விட்டானென்ற செய்தியை என்னால் நம்பமுடியவில்லை. அதிர்ச்சி. அவர் எப்படித் தாங்கிக்கொள்வார்? குறிப்பாகத் திருப்பூர் கிருஷ்ணனின் மனைவி எப்படித் தாங்கிக் கொள்வார்?

உண்மையில் கொரானா என்ற கொடிய நோயைவிட, அதன் பயம் ஒருவரை கொன்று விடும் என்று தோன்றுகிறது.

அதனால் தயவு செய்து கொரானா செய்திகளைப் படிக்காதீர்கள், தினசரிகளைப் பார்க்காதீர்கள், குறிப்பாக முகநூலைத் தவறுங்கள்.

Comments