Skip to main content

Posts

Showing posts from September, 2019

இருபத்திமூன்றாம் நாளின் வாசிப்பனுபவம் (23.09.2019)

அழகியசிங்கர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னால் முழுவதும் புத்தகம் படிக்க முடியவில்லை.  அவ்வளவு கெடுபிடி.  அதேபோல் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  ஒரு புத்தகத்தை முழுவதும் படிக்க முடியவில்லை.  நான் முதலில் ம பொ சியின் தமிழன் குரல் என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன்.  அதைப் படிக்க ஆரம்பித்தவுடன் என்னால் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை படிக்க முடியாது.  அதனால் வேற புத்தகம் எடுத்துக்கொண்டேன்.  80 பக்கங்கள் அடங்கிய புத்தகம். நேற்று பாதிப் பொழுது நம்மவீட்டுப் பிள்ளை என்ற பேத்தலான படம் பார்த்தோம்.  கூட்டமோ கூட்டம்.  அதுவும் உதயம் தியேட்டரில் அந்தப் படம் பார்த்தேன்.  இனிமேல் உதயம் தியேட்டரில் மட்டும் படம் பார்க்கக் கூடாது என்று தோன்றியது.  காரணம் குடித்து விட்டு சினிமாவிற்கு வருகிறார்கள்.  அப்படி வருகிறவர்கள், அமைதியாகப் படம் பார்த்துவிட்டுப் போகலாம், ஆனால் கெட்ட வார்த்தையால் எல்லோரையும் பார்த்து சத்தம் போடுகிறார்கள். உதயம் தியேட்டர் நிர்வாகம் இது குறித்து ஒன்றும் செய்யவில்லை.  அந்த 3 மணி நேரததிற்கு பல புத்தகங்களைப் படித்து விட்டிருக்கலாம்.  என் நேரமெல்லாம் வீண்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 124

அழகியசிங்கர் வியாகுலன் கவிதை அழகை காதலை சிறகில் சுமந்து திரியும் வண்ணத்துப் பூச்சி சிறகுகளில் துடித்திருந்தன இருதயங்கள் பூவிலொன்று அந்தரத்திலொன்று ஒன்றின்மேல் மற்றொன்றென பொழுதுகளின் அற்புதங்களோடு சொற்ப நாள் வாழ்வெனினும் அழகு காண்பித்து மறையும். நிறமிழந்த சிறகுகளை எறும்புகளிழுத்துச் செல்லும் குழந்தைகளின் விளையாட்டுகளுக்கானது வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை நன்றி : கல்மடந்தை - வியாகுலன் - அசரம், மனை எண் : 1 நிரம்லா நகர், தஞ்சாவூர் 613 007 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2002 - விலை : ரூ.35.

இருபத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (23.09.2019)

அழகியசிங்கர் இன்று வாசித்த புத்தகம் சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் என்ற புத்தகம்.  இந்த நாவல் பல சம்பவங்களின் கோர்வை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.   இந்தச் சம்பவங்கள் வரம்பு மீறியவை.  ஆனால் இந்த நாவலைப் படிப்பது ஒரு புது அனுபவமாக இருக்கிறது.  இந்த நாவலில் வருகிற கதாநாயகன் பெயர் என்ன என்று தெரியவில்லை.  அவர் தானே முன்வந்து சொல்வதுதான் இந்த நாவல்.  நாவல் முழுவதும் ஒருவர் பேசுவதுபோல் ஆரம்பிக்கிறது.  இந்த நாவலில் கதா மாந்தர்கள் தப்பாக நடக்கிறார்கள்.  அடிக்கடி குடிக்கிறார்கள்.  பெண்களுடன் தகாத உறவு வைத்துக்கொள்கிறார்கள். கதையில் ஒரு ஒழுங்கு என்று எதிர்பார்ப்போம்.  அந்த ஒழுங்கை இந்த நாவல் கட்டுடைக்கிறது.  சந்திரன் என்ற நண்பனுடன் ஏற்பட்ட நட்பைச் சுற்றி இந்த நாவல் வட்டமிடுகிறது.   சுந்தர் அண்ணா என்பவர், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத இந்த நாவலின் கதாநாயகனைப் பார்த்து,  'ஒரு மோசமான கண்டம் ஒன்று இப்போது உன் அமைப்பு படி உருவாகி இருக்கிறது.  அந்தக் கண்டத்தைத் தாண்டி விட்டால் அதற்கடுத்து சக்ரவர்த்திக்கு நிகரானவனாக மாறிப் போவாய்' என்கிறார்.   &qu

இருபத்தோராம் நாளின் வாசிப்பனுபவம் (22.09.2019)

அழகியசிங்கர் இன்று பரனுர் பயணம். ஒரு விசேஷம்.  ஒன்றரை மணி நேரம் மின்கார வண்டியில்.  இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்று நினைத்தேன.  ஒரு புத்தகம் லா ச ராமாமிருதத்தின் 'நான்'.  இன்னொரு புத்கதம் 'காண்டாமிருகம்'.  ஆனால் லா ச ராவின் 'நான்' மட்டும் எடுத்துக்கொண்டு போனேன்.  இதைப் படி முதலில் போதும் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.   உறவினர் வீட்டுக்குப் போனபோது 'கண்டாமிருகத்தையும்' எடுத்துக்கொண்டு வந்திருக்கலாமென்று தோன்றியது.  ஏற்கனவே சிந்தா நதி என்ற பெயரில் லா ச ரா அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.  கிடைத்தால் அதை உறுதி செய்ய முடியும்.  üநான்ý என்கிற இந்தப் புத்தகம் அவருடைய சுயசரிதம்.  அவர் அம்மாவைப் பற்றி ரொம்ப எழுதியிருக்கிறார்.  குமுதம் ஜங்ஷனில் ஒரு பேட்டி வந்திருந்தது.  அதை இந்தப் புத்தகத்தில் சேர்த்திருக்கிறார்கள்.  இந்தப் புத்தகம் முழுவதும் அவருடைய சுயசரிதம்மட்டும் இல்லை.  3 சிறுகதைகள் சேர்த்திருக்கிறார்கள்.  ஒரு கட்டுரை.  குமுதம் ஜங்ஷனில்

இருபதாம் நாளின் வாசிப்பனுபவம் (21.09.2019)

அழகியசிங்கர் முதலில் நான் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கலாமென்று நினைத்தேன்.  பின் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.  அது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.  அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது இன்னும் கொஞ்சம் கவனம் தேவை என்று தோன்றியது.  பின் நேற்று மாலை 4மணிக்குத்தான் இன்னொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்தேன்.  தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.  எப்படியாவது இந்தப் புத்தகத்தைப் படித்தே தீர்வது என்று முடிவு கட்டினேன்.  ஆனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. வேறு வேறு வேலைகள் வந்து தொந்தரவு செய்யத் தொடங்கின.  ஆனால் புத்தகத்தைக் கீழே வைக்கத் தோன்றவில்லை. எப்படியாவது முடித்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டினேன். இதோ முடித்தும் விட்டேன்.  ஆனால் இந்தப் பதிவை நேற்றே இட முடியவில்லை. நான் படித்த புத்தகத்திற்கு வருகிறேன்.  அது üராஜாஜியின் ஜெயில் டைரி.ý  206 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது.  1921ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தோராம் தேதி பிற்பகல் ராஜாஜியும் மாகாண கமிட்டித் தலைவர் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரியாரும் வேலூர் மத்திய சிறைக்கு வந்து சேர்ந்தார்கள் என்று ஆரம்பிக்கிறது இந்த

பத்தென்பதாம் நாளின் வாசிப்பனுபவம் (20..09.2019)

அழகியசிங்கர் நான் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க வேண்டுமென்று என் புத்தகக் குவியலில் தேடிக் கண்டு பிடித்தேன்.  அந்தப் புத்தகம் வானதி பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. ஏப்ரல் 1990ல் அப் புத்தகம் வெளிவந்துள்ளது.  இன்னும் கூட அப்புத்தகத்தின் பிரதிகள் விற்பனைக்கு வானதியில் கிடைக்கலாம்.   உண்மையிலேயே கரிச்சான்குஞ்சுவின் நூற்றாண்டில் அவருடைய 3 புத்தகங்களை வைத்துக்கொண்டிருந்தேன்.  முதல் புத்தகம் அவருடைய நாவல் பசித்த மானிடம், இரண்டாவது புத்தகம் சுகவாசிகள் என்ற அவருடைய குறுநாவல்கள்.  மூன்றாவது புத்தகம்தான் முக்கியமான புத்தகம்.  கு ப ரா என்ற மகத்தான எழுத்தாளரைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைப் புத்தகம்.   எப்படியும் இந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதி விடுவதென்று, அசராமல் நேற்றிலிருந்து இன்று முழுவதும் படித்து முடித்து விட்டேன். 282 பக்கங்கள் கொண்ட புத்தகம்.   1996ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்பதால் புத்தகத்தைத் தொட்டுப் படிக்கும்போது தாள்கள் எல்லாம் ஒடிந்து ஒடிந்து விழுந்து கொண்டிருந்தது.  கு.ப.ராவைப்பற்றி கரிச்கான்குஞ்சுவின் இந்தப் புத்தகம் அவ்வளவு உருக்கமாக இருந்தது

பதினெட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (19.09.2019)

அழகியசிங்கர் கடந்த இரண்டு நாட்களாக நான் எந்தப் புத்தகத்தையும் படிக்க வில்லை. தினமும் புத்தகத்தைப் படித்துவிட்டு அதைப்பற்றிக் குறிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருந்த எனக்கு, புத்தகமே படிக்க முடியவில்லை.  சனிக்கிழமை முழுவதும் என் பரபரப்பு அடங்கவில்லை.  புத்தகத்தைத் தொட முடியவில்லை.  ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் முழுவதும் கவனத்தைச் செலுத்த முடியவில்லை.  அன்று மாலை விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 50வது கூட்டம்.  அடுத்த நான் ஞாயிற்றுக்கிழமை.  அன்றும் என்னால் புத்தகம் படிக்க முடியவில்லை.   வீட்டில் விருந்தினர்கள் வருகை.  அன்றும் என்னால் படிக்க முடியவில்லை.  தெளிவான மனநிலையில்தான் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியும் என்று தோன்றியது.   ஒருவழியாக ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதும் படித்து முடித்தேன்.  இதோ நான்கு மணி வரை அந்தப் புத்தகத்தைப் பற்றி எதுவும் எழுத முடியவில்லை.   கூடவே நான் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப் பக்கங்கள் உள்ள புத்தகங்களையும் படித்துக்கொண்டு வருகிறேன்.  எல்லாம் நத்தை வேகத்தில்.   இப்போது நான் எடுத்துக்கொண்டு பேசப்

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 50 - பிரபு 1,2,3

அழகியசிங்கர் காவேரியிலிருந்து கங்கை வரை - மோட்டார் சைக்கிள் பயண அனுபவங்கள் என்ற தலைப்பில் பிரபு மையிலாடுதுறை அவர்கள் நேற்று (21.09.2019) பேசிய உரையை 3 பகுதிகளாக இங்கு தருகிறேன்.

பதினெட்டாம் நாளின் வாசிப்பனுபவம் (18.09.2019)

அழகியசிங்கர் இந்த முறை நான் எடுத்துக்கொண்ட புத்தகம் நாரணோ ஜெயராமனின் கவிதைகள் புத்தகம்.  வேலி மீறிய கிளை என்ற பெயரில் ஏற்கனவே அவருடைய கவிதைகள் தொகுதி க்ரியா பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது.  வெளிவந்த ஆண்டு நவம்பர் 1976.  அதன்பின் அவர் கவிதைகள் எழுதி பத்திரிகைக்கு அனுப்பவே இல்லை.  விருட்சம் முதல் இதழில் அவர் கவிதைகள் இரண்டு வந்திருக்கும்.   அவர் இலக்கியத்தை விட்டே ஒதுங்கி விட்டார்.  1972-76 வரை அவர் சிறுகதைகள், கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர்.  அவர் எழுதாமல் போனதற்குக் காரணம் ஜே கிருஷ்ணமூர்த்தி. அவர் தன்னைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுதியிருக்கிறார். அதில் பின் வருமாறு குறிப்பிடுகிறார். üஎனக்கு வாழ்க்கைதான் ஆசான்.  விரக்தி, பரவசம், விசாரமென வாழ்க்கை அனுபவங்கள் ஞானத்திற்கு ஏற்றிச் சொல்கின்றன.ý  ஆதர்ச புருஷர்கள் காஞ்சி மாமுனிவர், சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்று குறிப்பிடுகிறார்.  üஎன்னால் பூமியில் காலூன்றி வானத்தில் சிறகடிக்க முடிகிறது என்றால் தத்துவஞானி கிருஷ்ணமூர்த்தியுடன் சில ஆண்டுகள் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பயணித்ததுதான்,ý என்கிறார். ப

பதினாறாம் நாளின் வாசிப்பனுபவம் (17.09.2019)

அழகியசிங்கர் இன்று நான் எடுத்துக்கொண்டு எழுதப்போகிற எழுத்தாளரைப் பற்றி பலர் பேசி விட்டார்கள்.  இதில் நான் என்ன புதுமையாக சொல்ல முடியுமென்று தோன்றவில்லை.  ஆனால் என்னிடம் தெளிவாக ஒரு விஷயம் தோன்றிவிட்டது.  நான் படிக்கிற புத்தகத்தைப் பற்றி எதாவது எழுதுவது என்பது.   சில புத்தகங்களை நான் முழுவதுமாகப் படிக்க முடியவில்லை.  சில புத்தகங்களை üதம்ý பிடித்துப் படித்து விடுகிறேன்.  நான் அப்படிப் படித்தப் புத்தகம்தான் நகுலனின் 'இவர்கள்.'  அதேபோல் இன்னொரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க வேண்டுமென்று நினைத்தேன்.  நினைத்தபடியே படித்து முடித்து விட்டேன்.   அவ்வளவு எளிதாக என்னால் படித்து முடிக்கமுடியாத புத்தகங்கள் அதிகமாக உள்ளன.  எல்லாம் ஆயிரம் பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கும்.  எல்லாம் நாவல்கள்.  முழுவதும் படித்து முடித்தால்தான் எதையாவது அந்த நாவûப் பற்றி சொல்ல முடியும். தினமும் எதாவது ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு எதையாவது எழுத வேண்டுமென்ற கெட்ட வழக்கத்தை வைத்திருக்கிறேன். முதலில் 50 நாட்களுக்குத்தான் இது.  இது எப்படிப் போகிறது என்று பார்க்க வேண்டும்.  அதன் ப