Skip to main content

Posts

Showing posts from November, 2015

2 கவிதைகள்

                                                           நீல பத்மநாபன்                         1   நடப்பியல்   அன்றாட வாழ்வில்   மூச்சுத்   திணறவைக்கும்  ஒராயிரம் நடப்பியல் உண்மைகள்   நித்தம் நித்தம் நிரந்தரமாய்   குரல்வளையை                           நெறித்துக்கொண்டிருக்கையில்    உலக மகா தத்துவங்கள்    வரலாற்று ஆவணங்களை     பார்த்துப்    பரவசப்படச்சொன்னால்........?!                             2         வலியும் கிலியும்                                       வலியை சகித்துக்கொள்ள                                       நெடுநாள் பயின்று பயின்று                                       ஒரளவுக்கு பழகமுடிந்தும்                                        வலிகள் வரப்போகிறதென்ற                                       ஆரம்ப சைகைகள்                                       கிடைக்கத் தொடங்கையிலேயே                                       நெஞ்சில் வந்து உடும்பாய்                                       கவ்வுக்கொண்டுவிடும்                                       வரப்போகும் வலி

ஜான்னவி

நவீன விருட்சம் 98வது இதழில் வெளி வந்த கவிதை ஜான்னவியின் காலக் கணக்கு கவிதையைப் படிக்க அளிக்கிறேன். நவீன விருட்சம் இதழைப் பொறுத்தவரை எதாவது ஒரு கவிதை, கதை, கட்டுரை சிறப்பாக அமைந்து விடுகிறது. யாருக்காவது நவீன விருட்சம் இதழ் வேண்டுமா? முகவரியை அனுப்புங்கள். காலக் கணக்கு ஒரு சொற்ப காலம் நாம் குழந்தைகளாய் இருந்தோம் ஒரு சொற்ப காலம் நாம் இளமையோடிருந்தோம் ஒரு சொற்ப காலம் நாம் மகிழ்ச்சியில் நினைத்தோம். ஒரு சொற்ப காலம் நாம் நேசித்த செல்லப் பிராணிகள் நம்முடனிருந்து பின் காணாமற் போயின அல்லது மடிந்து போயின. சொற்ப காலமே ஆனது நானறிந்த அல்லது மடிந்து போயின சொற்ப காலமே ஆனது நானறிந்த அல்லது அறிந்திருந்ததாக நினைத்திருந்த மனிதர்கள் மாறிப் போவதற்கு. சொற்ப காலமே ஆனது நானறிந்த அல்லது அறிந்திருந்ததாக நினைத்திருந்த மனிதர்கள் மாறிப் போவதற்கு. ஒரு சொற்ப காலத்தில் நீ உன் வாழ்க்கையில் கற்ற சகலத்தையும் நிகழ்ந்த அனைத்தையும் அறிந்திருந்த அனைவரையும் மறந்து போனாய் ஒரு சொற்ப காலத்தில் அன்பானவர்கள் மறைந்து விட்டார்கள், அந்நியர்கள் வசிக்கிறார்கள் சுற்றிலும். இன்னுமொரு சொற்ப காலத்தில் என்னென்ன ம

கோபிகிருஷ்ணனைப் பற்றி சில குறிப்புகள..

அழகியசிங்கர் வாசக சாலை என்ற அமைப்பு கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  நேற்று விடாமல் மழை பெய்தாலும் அவர்கள் கூட்டத்தை நிறுத்தவில்லை.  திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில்  கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.  முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி கூட்டம் நடத்தி வருகிறார்கள்.  நேற்று (22.11.2015- sunday) கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கூட்டம நிகழ்த்தினார்கள். கமலி பன்னீர் செல்வம், தமிழ் செல்வன், அபிலாஷ், நான் நால்வரும் பேசினோம். திருவான்மியூரை அடைந்த போது மழை பிய்த்து உதறியது.  வாசக சாலை நண்பர்கள் போன் செய்து மழையால் கூட்டம் இல்லை என்று சொல்வார்கள் என்று நினைத்தேன்.  அதுமாதிரி எதுவும் நடக்க வில்லை.  மழையில் கொஞ்சம் நனைந்தபடி பனுவல் சென்றேன்.  எனக்கு ஆச்சரியம் எப்போதும் கூட்டத்திற்கு வருபவர்கள் இந்த மழையிலும் வந்திருந்தார்கள்.   மழையில் நனைந்தபடி கோபிகிருஷ்ணனைப் பற்றி பேசியது புது அனுபவமாக இருந்தது.  கோபி 2003ல் இறந்து விட்டார்.  கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இதுமாதிரியான கூட்டம் நடைபெறுகிறது

இராமானுஜர்

April 18, 201 5 ஞானக்கூத்தன் படைப்புகள சைவர்கள் உடம்பில் திருநீற்றைப் பூசிக்கொள்கிறார்கள். இப்படிப் பூசிக்கொண்டு யாத்திரை போகிறவர்களைப் பூச்சாண்டி என்று ஜைனர்கள் வருணித்தார்களாம். குழந்தைகளை மிரட்டுவதற்குப் பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுப்பேன் என்று அம்மாக்கள் சொல்வதுண்டு. நாமம் போடுவதென்றால் ஏமாற்றுவது என்று ஒரு சாரார் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள். அது சைவ வைணவப் பூசல்களை ஒட்டி எழுந்த தொடராக இருக்கலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் பிற போராட்டக்காரர்களும் நாமம் போட்டுக்கொண்டு ஊர்வலம் போவதும் ஆர்ப்பாட்டம் செய்வதும் புதியதல்ல. மார்ச் 2015ல் மட்டும் இப்படிப்பட்ட இரண்டு நிகழ்வுகளை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கோவையில் ஒரு தி.மு.க. பெண் உறுப்பினர் நெற்றியில் நாமம் வரைந்துகொண்டு மன்றத்துக்குள் ஆர்ப்பாட்டம் செய்தார். 20.1.15 அன்று ஜாதிச் சான்றிதழ் பற்றி ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பந்தலில் நாமம் வரையப்பட்டிருந்தது. தி.மு.க. பொருளாளர் திரு. ஸ்டாலின் ‘நாமம் – நாற்றிப் பதினொன்று – போட்டுவிட்ட

தப்பித்தல்

ராமலக்ஷ்மி ம ஞ்சள் கண்கள். சின்னக் கொம்புகளில் எப்போதோ தீட்டப்பட்ட சிகப்பு வர்ணத்தின் மிச்சங்கள். பால்வெள்ளைக் கழுத்துக்கு  அழகு சேர்த்த ஆழ்நீலக் கழுத்துப் பட்டையின்  சங்கிலி கட்டப்பட விட்டுப் போயிருந்ததை  உணர்ந்தும் கொட்டடியில் ஆறஅமரப் பசும்புல்லை அசைபோட்டுக் கொண்டிருந்த ஆட்டுக்குத் தெரிந்திருக்க வேண்டும் எப்படியும் வெட்டப்படப் பிறந்த  பிறப்பென்பதும் தப்பித்தல் தரப் போவதில்லை எதனிலிருந்தும்  விடுதலையை என்றும். ***

ஆம் ஆத்மியும் அண்ணா ஹஸாரேவும் நியாயமும்

WRITTEN BY : பிரபு மயிலாடுதுறை சில நாட்களுக்கு முன், ஒரு நண்பரின் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.அவர் ஒரு கட்டிடப் பொறியாளர்.கட்டிட வரைபடங்களை வரைந்து கொடுப்பவர்.ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் கட்டித் தருபவர்.மயிலாடுதுறைக்காரர்.பழகுவதற்கு இனிமையானவர்.கடுமையான சொற்களை எவ்விஷயத்துக்கும் பயன்படுத்தாதவர்..சில நாட்கள்   சென்னையில் ஒப்பந்தக் கட்டுமானத் தொழில் புரிந்தார்.இப்போது முழுமையாக மயிலாடுதுறைக்கு வந்து விட்டார்.அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். எனக்கு பொதுவாக ஒரு தயக்கம் உண்டு.ஒருவரை தொழில் நிமித்தமன்றி, நட்பார்ந்த ரீதியில் அவர்கள் பணி புரியும் இடத்திலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ சந்திப்பது எந்த அளவு சரி என தயங்குவேன்.குறிப்புகள் கேட்டுப் பெற பணியாளர் காத்திருக்கக் கூடும்.வாடிக்கையாளர்களின் பணிகள் பற்றி-பணி முன்னேற்றம் பற்றி அவர்களுக்குள் மட்டுமே பேச வேண்டிய விஷயங்கள் இருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கும்.புதிய வாடிக்கையாளர் சந்திக்க வருவர்.அவர்கள் ஒரு இடத்தில் நிறைய பேர் இருப்பத்தைக் கண்டு திகைப்பர்.எனவே நண்பர்கள் பணி புரியும் அல்லது தொழில் புரியும் இ

புகைப்படம் சொல்லும் கதை 1

ந பிச்சமூர்த்தி அவர்களின் நூறறாண்டு விழா 15.08.2000 ஆம் ஆண்டில் சிறப்பாக திருவல்லிக்கேணியில் பாரதி வாழ்ந்த இல்லறத்தில் கொண்டாடப்பட்டது.  அன்று பிச்சமூர்த்தியின் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும், ஒரு கவிதைத் தொகுதியும் வெளியிடப்பட்டன.  விழாவின் தொடர்பாகக் கட்டுரைகளும் படிக்கப்பட்டன.   அப்போது எடுத்தப் புகைப்படத்தை இங்கு அளிக்கிறேன்.

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை    மாரியம்மன் 3 தேசமாளும் முத்தம்மா     முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம்.  சில சிற்றூர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு.  இவள் பிறப்பு முத்தாரம்மன வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது.  ஏழ் கடலுக்கும், அப்பாலுள்ள, மணி நாகப்புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது.  பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர்.  அவர்கள் பிரம்ம ராக்குசக்தி, சின்ன முத்தார், பெரிய முத்தார் என்பவர்கள்.  அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தைகள் பெற்றார்கள்.  அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர்.  நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள்.  பிரம்ம ராக்கு - சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார்.  இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்தி பெற்ற மூன்று சகோதரிகளும், தமிழ் நாட்டிலே வந்து குடியேறி

கிராமீயப் பாடல்கள் - 4

தொகுப்பாசிரியர் : வானமாமலை    மாரியம்மன் பாட்டு 2 சின்ன முத்தாம் சிச்சிலுப்பை சீரான கொப்பளிப்பான் வண்ண முத்தாம் வரகுருவி வாரிவிட்டா தோணியிலே மாரியம்மா தாயே, நீ மனமிரங்கித்தந்த பிச்சை, தற்காத்து நீ கொடும்மா உன் சன்னதிக்கே நான் வருவேன். வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா, இரண்டு வடுகரோட வாதாடி தனக்கிசைந்த எல்லை என்று மாரி தனித்து அடித்தாள் கூடாரம். உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள். முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா இறக்கிடுவாள் கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள் பதக்கத்து முத்துக்களை மாரி மாறாமல் இறக்கிடுவாள். நெஞ்சில் போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள் தோளிலே போட்ட முத்தை மாரி துணிவாக இறக்கிடுவாள்.  வயிற்றிலே போட்ட முத்தை மாரி வரிசையாய் இறக்கிடுவாள். முட்டுக்கால் முத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள் கரண்டக்கால் முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள். பாதத்து முத்தை மாரி பாராமல் இறக்கிடுவாள். ஐந்து சடை கொஞ்சிவர, மாரி அழகு சடைமார் பிறழ, கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு குயில் இருந்து தாலாட்ட  உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமாம் மண்டபத்தில் உன் உடுக்கைப் பிறந்ததம

சிவாஜியும் எம்ஜியாரும்........

    சிவாஜியும் எம்ஜியாரும்........     அழகியசிங்கர்       நாங்கள் திருச்சியில் இருந்தபோதுதான் நான் தனியாக சினிமா பார்க்கத் தொடங்கினேன்.  அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.  முதலில் வீட்டில் சொல்லிக்கொண்டு சினிமா பார்ப்பேன்.  பின் நானாகவே யாரிடமும் சொல்லாமல் சினிமா பார்க்கப் போய்விடுவேன்.       இரண்டு நடிகர்களின் படங்களைத்தான் நான் பெரும்பாலும் பார்த்துக்கொண்டிருப்பேன்.  ஒருவர் சிவாஜி.  இன்னொருவர் எம்ஜிஆர். எனக்கு இன்னும் ஒரு நிகழ்ச்சி ஞாபகத்தில் இருக்கிறது.  உறையூரில் உள்ள பத்மாவதி தியேட்டரில் (இப்போது அங்கு அந்தப் பெயரே மாறி விட்டது). நாடோடி மன்னன் என்ற படத்திற்கு மதியம் ஒன்றரை மணிக்கே சென்று விட்டேன்.  பெரிய படம் என்பதால் ஒரு மணி நேரம் முன்னதாகவே அந்தப் படம் ஆரம்பித்து விட்டது.       யோசித்துப் பார்க்கும்போது, நான் கல்லூரியில் படிக்க ஆரம்பித்து வேலைக்குப் போனபிறகுகூட எம்ஜிஆரும் சிவாஜியும் என்னை விடவில்லை.       சரோஜா தேவி என்ற நடிகை சிவாஜி படத்திலும் நடிப்பார்.  எம்ஜிஆர் படத்திலும் நடிப்பார்.  ஆனால் இந்த கே ஆர் விஜயா அவ்வளவாக எம்ஜிஆர் படத்தில் நடிக்க ம

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை                                                                                                       மாரியம்மன்     வைசூரி மிகக் கொடியதொரு வியாதி.  அதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.  ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர்.  வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்த தொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர்.  இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர்.  தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர்.  இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிக்கொண்டிருக்கிறாள்.  இக் கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன.  இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை ஆண்டிற்கொரு விழா நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.  பிள்ளையாரும அத் தெய்வங்களுள் ஒருவர்.  இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல.  இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர்.  நல்லமேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரததடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள். மாட்டுக் கொளப்படையில் மாவுருண்டை ஆயிரமாம், எருதுக் கொளப்படையில் எள்ளுருண்டை ஆயிரமாம் ஆட்டுக் கொளப்படையில் அதிரசம் ஆயிரமாம். கண்ணுக் கொளப்படையில் கடலுருண்டை ஆயிரமாம். குட்டிக் கொளப்படையில் கொழுக்கட்டை ஆயிரமாம். பண்ணிக் கொளப்படையில் பணியாரம் ஆயிரமாம் இத்தனையும் ஒப்பதமாம் - எங்க சப்பாணிப் பிள்ளையார்க்கு. வட்டார வழக்கு : கொளபபடை - கொட்டகை பண்ணி - பன்றி சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                இடம்

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை     திருவல்லிக்கேணி செல்லும்போதெல்லாம் கோஷ் ஆஸ்பத்ரிக்கு எதிரில் உள்ள பிளாட்பார நடைபாதைக் கடைகளில் வாரிக் குவித்திருக்கும் புத்தகக் குவியல்களைப் பார்வையிடாமல் இருக்க மாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கடைகளில் ஒன்றில் ஒரு அபூர்வமான புத்தகம் கிடைத்தது.  கிட்டத்தட்ட மோசமான நிலையில்தான் இந்தப் புத்தகம் கிடைத்தது. புத்தகம் உள்ளே கரையான் அடையாளம் பொட்டு பொட்டாக இருந்தது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் இது.  கிராமீயப் பாடல்கள் என்ற தலைப்பில் இப்புத்தகம் உள்ளது.  இப் புத்தகத்தைத் தொகுத்தவர் நா. வானமாமலை.  எஸ் எஸ் போத்தையா, எஸ் எம் கார்க்கி, பி எம் ராஜவேலு, குமாரி பி சொர்ணம், கவிஞர் எஸ் எஸ் சடையப்பன், கு சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன் என்று பலர் தொகுத்த கிராமீய்பாடல்களை மொத்தமாக தொகுத்திருக்கிறார் நா வானமாமலை.       இதுமாதிரி புத்தகம் திரும்பவும் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.  எந்தப் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.  இதில் உள்ள எல்லா கிராமீயப் பாடல்களையும் தினமும் ஒன்றாக அடித்து முகநூலில் பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன

ரூ. 5000 பரிசு வேண்டாமா?

அழகியசிங்கர் சில தினங்களாக நவீன விருட்சம் 98வது இதழை சிறிது சிறிதாக அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களுக்குள் எல்லோருக்கும் போய்விடும்.  அப்படியும் சில பேர்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கும் அழகியசிங்கருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிறது.  ஒரு நீளமான நோட்டில் எழுதி வைத்திருக்கும் முகவரிகளை கவரில் தானாகவே எழுதி அனுப்பிக்கொண்டிருக்கிறார்.  டைப் அடித்து ஒட்டி அனுப்பலாம்.  அப்படி அனுப்பினால் நாம் நம் கையால் எழுதி அனுப்புகிற தன்மையை இழந்துவிடுவோம் என்கிறார்.  ஏன் என்றால் இப்போதெல்லாம் யாரும் பேனாவைப் பிடித்து எழுதுவதில்லை. இப்படி அவர் செய்து கொண்டிருக்கும் போதுதான் ஒன்று தோன்றியது. 1988ல் விருட்சம் இதழ் தோன்றியது.  இன்றுவரை 98வது இதழ் வரை வந்து விட்டது.  இது ஒரு காலாண்டு இதழ். உண்ûமாகப் பார்க்கப் போனால் 100வது இதழ் 25வது ஆண்டிலேயே வந்திருக்க வேண்டும். இயற்கை ஏற்படுத்திய சதியால் அப்படி எதுபும் நடக்காமல் போய்விட்டது.   98 இதழ்களையும் யாராவது ஒரு வாசகர் வைத்திருப்பாரா என்ற சந்தேகம் வந்து விட்டது.  அப்படி யாராவது வைத்திருந்து

கசடதபற ஜøலை 1971 - 12வது இதழ்

நான் குளம் ஆ சந்திரபோஸ் நாளை பெய்யும மழையில் நான் நிரம்பி விடுவேன் நேற்றுவரை.... குடிக்க நீர் கொடுத்தேன், குளித்துத் துவைத்தனர். குதித்து விளையாடிக்கூட என் மீது படகு விட்டனர். வயிறு புடைக்கத் தின்று ஏப்பம் விட கொக்குகளுக்கு மீன் கொடுத்தேனே..... மீனுக்கு என் 'பாசம்' இரையாக வில்லையா? ஏன்? இன்று கூட என்மேல் படிந்து கிடக்கும் அழுக்கை உரமாக்குகிறீர்களே... நான் என்ன கெட்டுவிட்டேன்...? நாளை பெய்யும் மழையில் நான் நிரம்பி விடுவேன்.

புத்தக விமர்சனம் 12

அழகியசிங்கர் தேவேந்திரபூபதியின் 'நடுக்கடல் மௌனம்' என்ற கவிதைத் தொகுதியை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எல்லாம் என்னுடன் அமர்ந்து பேசும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் கட்டுக்கடங்காமல் இக் கவிதைகள் எங்கோ சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்றனவோ என்றும் தோன்றியது.  திரும்ப திரும்ப இக் கவிதைளைக் கூப்பிட்டு அதனூடன் உரையாட முயற்சி செய்தேன். தனக்குத் தெரிந்ததை சில கவிதைகள் சொல்லிச் சென்றன. பல கவிதைகள் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி சென்றுவிட்டன. நான் என்ற தன்னை சாட்சியாக வைத்து பல கவிதைகள் எழுதிக் கொண்டே போகின்றன. சிலசமயம் சுயபுராணமாக இருக்குமோ என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. கவிதையில் பூடகத் தன்மையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அது ஓரளவுதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. படிக்க வருகிற வாசகன் என்ன எழுதி உள்ளார் என்று ஆராய்ச்சி செய்வதற்கு நேரமில்லாமல் இருப்பான். இத் தொகுப்பை மூன்று விதமாகப் பிரிக்கிறார் தேவேந்திரபூபதி. முதல் பகுதியை அலைமுகம் என்று பிரிக்கிறார். இரண்டாவது பகுதியை