Skip to main content

Posts

Showing posts from March, 2017
கூட்டத்தை வெற்றிகரமாக 8.45க்கு முடித்துவிட்டேன்.... அழகியசிங்கர் எப்போதும் ஒரு இலக்கியக் கூட்டம் என்றால் சிலர் பேசுவார்கள். சிலர் பேசாமல் விலகி விடுவார்கள். அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்திலும் அதுமாதிரியான நிகழ்ச்சி நடக்காமல் இல்லை.  இக் கூட்டத்தை சிறப்பாக நடத்த ஸ்ரீகுமார் அவர்கள்தான் காரணம்.  பத்மா அவர்களும் கூட்டத்தை சரியான முறையில் நெறிப்படுத்தி எடுத்துச் சென்றார்.  முதலில் அம்ஷன்குமாரின் ஆவணப்படம் 5.15 ஆரம்பமாகியது.   அது முடிந்தவுடன் நாசர் நடித்த ஜெர்மன் இயக்குநர் எடுத்த புலிக் கலைஞன் என்ற அசோகமித்திரன் கதையை அடிப்படையகாக் கொண்ட குறும்படம் சரியாக 15 நிமிடங்களில் முடிந்து விட, ஒவ்வொருவராக 6 மணிக்கு எல்லோரையும் பேச அழைத்தோம். கூட்டம் முடியும்போது மணி இரவு 8.45.  அவ்வளவு நேரம் பொறுமையாக பலர் இக் கூட்டம் முடியும் வரை தங்கியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் நானும் ஒரு கட்டுரை வாசிக்க எழுதி வைத்திருந்தேன். அம்ஷன்குமார் பேசி முடித்தவுடன், 8.45 மணியைத் தொட்டுவிட்டது.  நான் என் கட்டுரையை வாசிக்கவில்லை.  ஏன்எனில் வாசிப்பது என்பது அந்த நேரத்தில் காது கொடுத்து
தமிழ் நடிகர்களில் சிலர் மாத்திரம் நம் கவனத்தைக் கவர்வார்கள். அவர்கள் நடிப்பு மட்டும் இல்லாமல் தீவிர வாசகர்களாக இருப்பார்கள். நாசர் அவர்களில் ஒருவர். படிப்பு மட்டுமல்ல, நடிப்பதிலும் திறமையானவர். பேசாமல் கண் அசைவுகள் மூலம் நடிக்கக் கூடிய திறமையானவர். எந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் அந்தப் பாத்திரமாக மாறிவிடுவார். தீவிர வாசகர். அசோகமித்திரன் எழுத்துக்களில் அபிமானம் உடையவர். அசோகமித்திரனின் புலிக்கலைஞன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். மொத்தமே 16 நிமிடங்கள் கொண்ட ப டம் என்று நினைக்கிறேன். நாசர் மாதிரி இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர் ரோகிணி, வசந்த், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்கள்.  அம்ஷன்குமார் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்து பின் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தவர். அவர் அசோகமித்திரனை வைத்து எடுத்த ஆவணப் படம் பலவிதங்களில் சிறப்பானவை. இந்த ஆவணப்படமும், நாசரின் புலிக்கலைஞன் குறும்படமும் நாளை நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அன்புடையீர், அசோகமித்திரன் நினைவேந்தல் கூட்டத்திற்கான தகவல் அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம்.

அசோகமித்திரன் - நினைவேந்தல் கூட்டம்

வரும் வெள்ளி அன்று மாலை 5.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். தலைமை ஏற்று நடத்துவதற்கு இந்திரா பார்த்தசாரதி ஒப்புக்கொண்டுள்ளார். புலிக்கலைஞன் என்ற அசோகமித்திரனின் சிறுகதையின் குறும்படம் திரையிடப்படும். கீழ்க்கண்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். பெரும்பாலோரை தொடர்புகொண்டு அவர்கள் அனுமதியை இன்னும் சில தினங்களில் பெற முயற்சிப்போம். 1. எஸ் வைதீஸ்வரன் 2. சா கந்தசாமி 3. பாரதிமணி 4. கே எஸ் சுப்பிரமணியன் 5. நடிகர் நாசர் 6. பாலகுமாரன் 7. அம்ஷன்குமார் 8. திலகவதி 9. திலீப் குமார் 10. ஞாநி 11. பத்மா 12. சாருநிவேதிதா 13. எஸ் ராமகிருஷ்ணன் 14. திருப்பூர் கிருஷ்ணன் 15. மனுஷ்யப்புத்திரன் 16. இளையபாரதி 17. இரா.தெ.முத்து 18. சிகரம் ச. செந்தில்நாதன் 19. இரா முருகன் 20. பாரவி 21. சுகுமாரன் 22. வெளி ரங்கராஜன் 23. வேடியப்பன் 24. கிருஷாங்கினி 25. லதா ராமகிருஷ்ணன் 26. ஷங்கர ராம சுப்பிரமணியன் 27. நடிகை ரோகிணி   மேலும் அசோகமித்திரன் குடும்பத்தில் யாராவது ஒருவரைப் பேச அழைக்க உள்ளோம். இக் கூட்டத்தை அழகியசிங்கர், ஸ்ரீகுமார், பெருந்

பொதுவாக இரங்கல் கூட்டத்தை நடத்த.............

அழகியசிங்கர் அசோகமித்திரனுக்கு அடுத்த வாரம் ஒருநாள் இரங்கல் கூட்டம் நடத்த உள்ளேன்.  பெரும்பாலும் இதுமாதிரியான நெருங்கிய எழுத்தாள நண்பரின் இரங்கல் கூட்டம் நடத்தும்போது, தவறிப்போய் கூட அழாமல் இருக்க முயற்சிப்பேன். மனதில் துக்கம் அலைமோதி பரபரப்பாகி விடும். ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டம் நடந்தபோது சா கந்தசாமி மேடையில் விம்மி விட்டார்.  நான் விம்ம முடியாமல் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அசோகமித்திரனுக்கும் நான் இரங்கல் கூட்டம் நடத்த விரும்புகிறேன். அடுத்த வாரத்தில் ஒருநாள்.  முக்கால் வாசி வெள்ளிக்கிழமை.  ஆனால் இன்னும் இடம் பார்க்கவில்லை.  இதுமாதிரியான கூட்டத்தை நடத்த நான் விளக்கில் பயன்படுத்தும் திரிபோல்தான் செயல்படுவேன்.  அதுமாதிரியான கூட்டத்தை சிறப்பாக செயல்படுத்தக் கூடியவர்கள்.  எழுத்தாள நண்பர்கள், வாசகர்கள்.   அசோகமித்திரனுக்கு ஏகப்பட்ட எழுத்தாள நண்பர்கள் இருக்கிறார்கள். வாசகர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் இக் கூட்டத்தை சிறப்பாக எடுத்துச் சென்றுவிடுவார்கள். சென்னையில் எளிதாக எல்லோரும் வந்து போகிற மாதிரி ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இக் கூட்டத்திற்கு 100

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது..

இனிமேல் மிளகாய் பஜ்ஜியை வாங்கிக்கொண்டு போக முடியாது.. அழகியசிங்கர்                                                                                                                   நான் கிட்டத்தட்ட வாரம் ஒருமுறையாவது அசோகமித்திரனைப் பார்க்காமல் இருக்க மாட்டேன்.  அவருக்கு தேவையான உதவிகளைச் செய்வேன்.  "உங்களை தொந்தரவு செய்கிறேன்," என்பார்.  "பரவாயில்லை. நான் ஓய்வுப் பெற்று சும்மாதான் இருக்கிறேன்..உங்களுக்கு நான் உதவுகிறேன்," என்பேன்.  ஒவ்வொரு முறையும் மேற்கு மாம்பலத்திலிருந்து தி நகருக்கு டூ வீலரில் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன்.  விருட்சம் ஆரம்பித்தபோது என் பத்திரிகையில் அவர் தொடர்ந்து கட்டுரை எழுதித் தருவார்.  அவருடைய நகைச்சுவை உணர்வை சாதாரணமாக நினைத்து விட முடியாது.   நான் ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது, ஆர்யகவுடர் ரோடில் உள்ள வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக்கொண்டு போவேன்.  அசோகமித்திரன் ஒன்றே ஒன்று போதும் என்பார்.  எனக்கு இந்த மிளகாய் பஜ்ஜி மட்டும் பிடிக்காது.  ஆனால் அசோகமித்திரன் ரசித்து

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர்   ஒரு கவிதை படிப்பவருக்குப் புரிய வேண்டுமா? வேண்டாமா? இந்தக் கேள்விக்கு ஒரு கவிதை வாசிப்பவருக்குப் புரிய வேண்டும் என்று நான் அழுத்தமாகக் கூறுவேன்.  பிரம்மராஜன் கவிதைகள் அவ்வளவு எளிதாகப் புரியாது.  இதை பிரம்மராஜன் காதுபட சொல்லாதீர்கள் என்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள்.  காரணம். நான் சொல்வதைக் கேள்விப்பட்டு பிரம்மராஜன் பெருமிதம் அடையக் கூடும் என்றுதான்.   ஆனால் உண்மையில் பிரம்மராஜன் கவிதை அவ்வளவு சுலபமாகப் புரியாது.  ஒவ்வொரு வரியாக புரியும்.  ஆனால் முழு கவிதைக்குள் போவதற்குள் பெரிய பாடாக இருக்கும்.  முபீன் சாதிகா கவிதைகளும் அப்படித்தான்.   கவிதை எப்படி எழுத வருகிறது என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன்.  தானாகவே எழுதுகிறது என்பது போல் சொன்னார்.  என்னால் நம்ப முடியவில்லை.   ஆட்டோமெடிக் ரைட்டிங் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுமாதிரி உண்டா என்பதும் தெரியாது.  அன்பின் ஆறாமொழி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை எடுத்துக்கொண்டால், முதலில் தலைப்பு அவருக்குத் தோன்றியதா?  அல்லது கவிதை வரிகள் முன்னதாக தோன்றியதா?  எது தலைப்பை தீர்மானித்தது? இந்தக் கேள்விக்கு எனக்கு

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை...

காலை 11 மணியிலிருந்து மூன்று மணிவரை... அழகியசிங்கர் இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.  அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும்.  மார்ச்சு மாதமே வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது.  11 மணிக்கு மேல் வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.  வெயிலில் நடந்து போகாதீர்கள்.  சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள்.  டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள்.  ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்.  அதுவும் கட்டாயமாக போக வேண்டுமென்றால் போங்கள். நீங்கள் ரத்த அழுத்த நோயாளியாக இருந்தால் வெளியே தலை காட்டாதீர்கள்.   நீங்கள் வெயிலைத் தவிர்க்க நிழலில் இருங்கள்.  60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோரும் பதவியிலிருந்து ஓய்வுப் பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.  ஒருசிலர் இன்னும் எதாவது ஒரு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.  ஓய்வுபெற்றவர்கள் வீட்டைவிட்டு 11 மணியிலிருந்து 3 மணிவரை எங்கும் போகாதீர்கள்.  அதேபோல் அலுவலகத்தில் பணிபுரிபவர் அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும்.  ஓய்வு பெற்றவர்கள

நீங்களும் படிக்கலாம்...29

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               அழகியசிங்கர் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள்...... ஐந்து நாடகங்களின் தொகுப்புதான் எஸ் எம் ஏ ராம் நாடகங்கள் என்ற தொகுப்பு.  அவரிடம் முதலில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் போல் தோன்றுகிறது?  ஏன் இவர் தொடர்ந்து நாடகங்கள் எழுதாமல் விட்டுவிட்டா

கதா மஞ்சரி கதை -3

அழகியசிங்கர்   வீடு நிறைந்த பொ ருள்                                                             ஒருவன் பதினாயிரம் வராகன் வைத்திருந்தான்.  அவன் தனக்கு இறக்குங்காலம் அடுத்திருப்பதை அறிந்தான்.  தன் இரு மக்களையும் அழைத்தான்.  ஒவ்வொருவனுக்கும் ஐந்தைந்து பணங் கொடுத்ôன்.  üüஇதனாலே வீட்டை நிறையும்படி செய்பவனுக்கு என் பொருள் முழுவதும் தருவேன்,ýý என்ளான்.  அவர்களிலே மூத்தவன் ஐந்து பணத்துக்கு மலிந்த பொருளாகிய வரகு வைக்கோலை வாங்கிவந்து வீடு நிறையக் கொட்டி பரப்பி வைத்தான்.  இளையவன் நல்ல விளக்கு வாங்கிவந்து வீடெங்கும் விளக்கமாகப் பொருள்கள் தெரிய ஏற்றி வைத்தான்.  தந்தை அவ்விரண்டையும் பார்த்தான்.  இளையவன் அறிவை வியந்து பாராட்டினான்.  அவனுக்கே தன் உடைமை முழுவதையும் ஒப்புவித்தான்.  ஆதலால், அறிவுடை ஒருவனே பெரியவன் ஆவான். கதா மஞ்சரி கதையை இப்போது எழுதினால் எப்படி இருக்கம்? ஒரு பணக்காரர்.  மரணம் அடையும் தறுவாயில் அவர் இருக்கிறார்.  தன் சொத்து முழுவதும் அவருடைய இரண்டு புதல்வர்களில் யார் அறிவில் சிறந்தவர்களோ அவர்களுக்கு அளிக்க விரும்புகிறார்.  புதல்வர்கள் இருவரையும் கூப்பிட்டு அனுப்ப

100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்....

. அழகியசிங்கர் மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுக்கும் கவிதையைக் குறித்தும், முடிந்தால் கவிஞர் பற்றியும் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் கவிதைப் புத்தகங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளன. இந்தக் கவிதைப் புத்தகங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட கவிதைகளையும் நான் மதிக்கிறேன்.   58வது கவிதையாக நான் நேசன் புத்தககத்திலிருந்து  எடுக்கிறேன். 'ஏரிக்கரையில் வசிப்பவன்' என்பதுதான் கவிதையின் புத்தகம்.  இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படி உள்ளன.  நேசன் ஒரு திறமையான கவிஞர்.  ஆரம்ப காலத்தில் நேகனும், ராணிதிலக் அவர்களும் போஸ்டல் காலனியில் உள்ள என் வீட்டிற்கு வருவார்கள்.  அவர்கள் எழுதிக்கொண்டிருந்த கவிதைகளை என்னிடம் காட்டுவார்கள்.  அவர்களை அக் கவிதைகளை வாசிக்கச் சொல்வேன்.  அவர்களும் கவிதைகளை வாசிப்பார்கள்.  உடனட

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது அழகியசிங்கர் எங்கள் தெருவில் முதல் தண்ணீர் சண்டை இன்று ஆரம்பமாகிவிட்டது.  இனி தினமும் இந்தக் காட்சிகளைக் கொண்டாட்டமாகப் பார்த்து ரசிக்கலாம்.  தினமும் காலையிலிருந்து தெருவில் உள்ள பெண்கள் தண்ணீருக்காக குடம் குடமாக எங்கிருந்தோ தண்ணீரை சேகரித்த வண்ணம் இருக்கிறார்கள்.  ஆண்கள் இதில் கலந்து கொள்வதாக தெரியவில்லை.  எப்படித்தான் இந்தப் பெண்களுக்கு இந்தக் குடங்களைக் கொண்டு வரும் சக்தி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  அதேபோல் தண்ணீர் பிடிக்க அவர்கள் சண்டைப் போடுவதும் ஆபாசமாக இருக்கும்.  ஒரே வீட்டில் பத்து குடுத்தனங்கள் இருப்பார்கள்.  எத்தனை தண்ணீரை சுமந்தாலும் தேவை இருந்துகொண்டே இருக்கும்.   நாங்கள் போஸ்டல் காலனி வீட்டில் இருந்தபோது தண்ணீருக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்.  மொத்தம் 7 அடுக்ககங்கள்.  எல்லோரும் சேர்ந்து லாரியில் தண்ணீர் வாங்கிக் கொண்டு, சம்பில் கொட்டுவோம்.  சம்பை சரியாக மூடாவிட்டால் நாங்கள் கொட்டிய தண்ணீரெல்லாம் எதிர்சாரியில் உள்ள வீடுகளுக்கு தானாகவே ஓடிவிடும்.   எங்களுக்குள்ளே சண்டையும் ஏற்படும்.  தண்ணீர் பிரச்சினை

ஒரு குழப்பம்......

அழகியசிங்கர் இன்று யாரும் இல்லை வீட்டில்.  அதனால் மாலை சங்கீதா ஓட்டலுக்கு டிபன் சாப்பிடச் சென்றேன்.  பங்களூரிலிருந்து நண்பர் மகாலிங்கமும் வந்திருந்தார்.  ஒரே கூட்டம்.  இந்த ஓட்டல் அசோக்நகரில் லட்சணமான ஓட்டல்.  அங்கே மரியாதையுடன் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் செய்கிறார்கள்.  நான் எப்போதும் இங்கே போகத் தொடங்கி விட்டேன்.  இந்த ஓட்டல் வந்த பிறகு இங்குள்ள மற்ற ஓட்டல்களின் மவுசு குறைந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. கொஞ்ச நேரத்தில் சினிமாப் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.  நான் மியூசிக் சிஸ்டம் மூலம் பாடுவதாக நினைத்தேன்.  ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் ஓட்டலின் மூலையில் நின்றுகொண்டு  பாடிக்கொண்டிருந்தார்கள்.  டி எம் சௌந்தர்ராஜன் மாதிரி, பி பி ஸ்ரீனிவாஸ், ராஜா மாதிரி எல்லாம் உடனே உடனே பாடிக்கொண்டிருந்தார்கள்.  ஒரு நிமிடத்தில் பழைய எம்ஜி ஆர் பாடல்களைக் கேட்டபோது, என் நிகழ் காலத்திலிருந்து நழுவி பழைய காலத்திற்குப் போனதுபோல் தோன்றியது.  எம்ஜிஆர் படங்கள் பாடல்கள் மூலம்தான் எனக்கு எம்ஜிஆரைத் தெரியும்.  அவர்கள் பாடல்களைக் கேட்கும்போது எம்ஜிஆரைப் பார்ப்பதுபோல் உணர்வு எழுந்தது. அந்தப் பாடல

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 57

அழகியசிங்கர்    காடு வஸந்த் செந்தில் ஒருவர் சென்று மழையோடு திரும்பி வந்தார் ஒருவர் சென்று மலர்களோடு திரும்பி வந்தார் ஒருவர் சென்று சுள்ளிகளோடு திரும்பி வந்தார் ஒருவர் சென்று பழங்களோடு திரும்பி வந்தார் ஒருவர் சென்று பறவைகளோடு திரும்பி வந்தார் பச்சயங்களோடு ஒருவர் மிருகங்களோடு ஒருவர் மீளவேயில்லை ஒருவர் ஒருவர் பயந்து உள் செல்லவேயில்லை அவரவர் தேவைகளை அவரவரக்கு அளித்து வழிதொலைத்த பாதைகளை வழியெல்லாம் வைத்து அடர்ந்து கிடக்கிறது காடு நன்றி : மழையும் நீயும் - கவிதைகள் - வஸந்த் செந்தில் - பதிப்பகம் : இலக்குமி நிலையம், ப எண் : 53, பு எண் : 115, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 - முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2001 - விலை : ரூ.30 - பக்கம் : 144 

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடி பதில்

அழகியசிங்கர் 1. இந்த ஆண்டு கோடை கடுமையாக உள்ளதா? ஆமாம்.  எங்கள் தெருவில் உள்ளவர்கள் 24 மணி நேரமும் தண்ணீருக்காக அலை அலை என்று அலைகிறார்கள்.  எங்கள் வீட்டிலும் அந்தப் பிரச்சினை வெடிக்கும். 2. இப்போது என்ன புத்தகம் ஆங்கிலத்தில் படிக்க எடுத்து வைத்திருக்கிறீர்கள்?     டங்ழ்ஸ்ரீஹ் கன்க்ஷக்ஷர்ஸ்ரீந் ன் பட்ங் இழ்ஹச்ற் ர்ச் ஊண்ஸ்ரீற்ண்ர்ய்  என்ற புத்தகத்தைப் படிக்கப் போகிறேன். 3. விருட்சம் சார்பாக கவிதைக்காக பரிசு கொடுக்க விரும்பினால், யாருக்கு  பரிசு வழங்குவீர்கள்? என்னை வம்பில் மாட்டாதீர்கள்.  நான் யாருக்கும் பரிசு வழங்க விரும்பவில்லை. 4. இலக்கியக் கூட்டங்களுக்கு இப்போதெல்லாம் செல்வதில்லையா? ஒரு இலக்கியக் கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது.  அங்கு போவதற்கு கிளம்பினேன்.  5 மணிக்கு மாம்பலத்திலிருந்து கிளம்பினேன்.  மயிலாப்பூர் போய்ச் சேரும்போது மணி 6 மணி மேல் ஆகிவிட்டது. பின் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு வரும்போது மணி 9 ஆகிவிடுகிறது.  இலக்கிய கூட்டம் போகலாமா வேண்டாமா என்ற யோசனை வருகிறது. 5. அப்படியென்றால் கூட்டம் எங்கே நடைபெற வேண்டும்? அவரவர் பகுதிகளில்தான் கூட்டம் நடைபெ

யார் வந்திருந்து புத்தகத்தைப் போட்டிருப்பார்கள்..

அழகியசிங்கர் ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார்.   புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார்.  பேப்பர் கடைகளில் எப்போது வருகிறது என்று பார்த்து வாங்கி வந்து விடுவார்.  தீபாவளி மலர்களையும் அப்படி வாங்கிப் படித்திருக்கிறார்.  இந்தப் பேப்பர் கடைகளில் பழையப் புத்தகங்களும் கிடைக்கும்.  ஐராவதம் இதுமாதிரி பேப்பர் கடைகளில் வீசி எறியப்படும் புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கிவிடுவார்.  எனக்கும் அவர் மாதிரி ஒரு பித்து.  பேப்பர் கடைகளில் என்ன புத்தகம் கண்ணில் படுகிறது என்று பார்ப்பேன்.   பேப்பர் கடைகளில் புத்தகங்களை விலைக்குப் போடுபவர்களை நான் உயர்வாகவே நினைக்க மாட்டேன்.  ஏன்என்றால் ஒரு பேப்பர் கடையில் புத்தகங்களை விலைக்குப் போட்டால் ஒரு கிலோவிற்கு ரூ8 தான் பணம் கிடைக்கும்.  ஆனால் ஒரு கிலோ புத்தகம் என்பது நாலைந்து புத்தகங்களுக்கு குறைவில்லாமல் இருக்கும்.  என்னைப் போன்றவர்கள் திரும்பவும் அந்தப் புத்தகங்களை வாங்கச் சென்றால், பேப்பர் கடைக்காரர் ஒரு கிலோவிற்கு ரூ.100 என்று கொடுப்பார்கள்.  அல்ல

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 56

அழகியசிங்கர் அவதார ஆசை தி லகபாமா மலராய் இருந்திருந்தேன் மகரந்தத்துள் உனைத் திணிக்கப் பார்க்கின்றாய் தென்றலாய் இருந்திருந்தேன் என்னில் சுகம் கண்டு உனதென்று எனை உன் சுவாசமாய் உள்ளிழுக்கப் பார்க்கின்றாய் தீங்கனியாய் இருந்திருந்தேன் தோலுரித்து விதையெடுத்து மண்ணில் புதைக்க நினைக்கின்றாய் சங்கீதமென்றிருந்தேன் தாளங்களுக்குள் சிக்கவென்று தொடைதட்டிப் பார்க்கின்றாய் நெருஞ்சிமுள்ளாய் அவதார மெடுக்க ஆசை எனை நானாய் இருக்க விட்டு விடுவாயென்பதாலும் மிதிப்பவர்கள் சதை மீறி குத்திவிடலாமென்பதாலும் நன்றி : சூரியாள் - கவிதைகள் - திலகபாமா - வெளியீடு : மதி நிலையம் - விலை : ரூ.35 - வெளிவந்த ஆண்டு : 2002

பெண்கள் தினம்

அழகியசிங்கர் இன்றைய தினம் பெண்கள் தினம். இந்தத் தினத்தை ஞாபகப்படுத்தும் விதமாக என் பாட்டியின் ஞாபகம் வந்தது.  பாட்டியை வைத்து நான் எழுதிய ஜாடி என்ற கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  ஜாடி பழக்கப்படுத்தினாள் ஜாடியைப் பாட்டி ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின் நிறத்தில் நீண்ட ஜாடியின் இடுப்பு பொருத்தமாய் மாநிறத்தில் மூடி உண்டு உண்டு கல்லூரி நாட்களில் இரசாயனக்கூடத்தில் குடுவைகளும் அமில ஜாடிகளும் கண்டிப்பைக் காட்டும் பேராசிரியர் வழியில் கிலியைத் தோற்றுவிக்கும் உபயோகம் அவற்றுக்கு மணமும் சுவையும் நிரம்பிய ஜாடி பாட்டி பாதுகாத்த ஜாடி காலம் காலமாய் ஊறும் மாவடு வைத்திருக்கும் ஜாடி சுருங்கியத் தோற்றத்தில் சுவைதரும் ஜாடி நீண்ட சாதாரண ஜாடி மலர்ச்செடி வைக்க முடியாத பாட்டி வைத்திருக்கும் ஜாடி மாவடு வைத்திருக்கும் தருணத்தில் நிரம்பி வழியும் ஜாடி பார்க்கும்போதே சுவை ஊறும் விதம்விதமான தேர்ந்த மாவடுகள் பழகிய மாவடுவின் சுருங்கியத்தோற்றம் பாட்டியின் ஊறுதியை ஞாபகமூட்டும் கையில் தெரியும் மாவடுவ

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 55

அழகியசிங்கர்    தவிர்த்த கவிதை பா வெங்கடேசன் மன்னிக்கவும் நண்பரே நான் தவறுதலாக எதையும் பேசிவிடவில்லை. அந்த அறையின் உத்திரங்களுடன் உரையாட முடியுமானால் உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். நீங்கள் கவிதை எழுதுபவரா, எனக்குத் தெரியாது. அங்கே உலவ விட்டிருந்த கவிதை உங்களுடையதுதானா, அதுவும் எனக்குத் தெரியாது. அங்கே ஒரு கவிதை இருந்தது. அதைச் சுற்றிச் சிலர் அமர்ந்திருந்தார்கள். நானும் அவர்களுடனிருந்தேன். எல்லோருக்கும் அது செல்லமாய் இருந்தது. எல்லோரும் அதைத் தன்னிடமே வருமாறு  அழைத்துக்கொண்டிருந்தார்கள். யாரிடம் செல்வதெனத் தெரியாமல் அது விழித்துக்கொண்டிருந்தபோது குழப்பத்தைக் குறைக்குமென்று நம்பி மட்டுமே நான் அதனிடம் என்னை வேண்டுமானால் கழித்துக்கொள்ளேனென்று சொல்லிவைத்தேன். ஆனால் நண்பரே நிச்சயமாக எனக்குத் தெரியும் அங்கே ஒரு கவிதை இருந்ததென்று. மேலும் நண்பரே அதை நான் தவிர்த்த கணத்தில் அங்கே இருந்திராத உங்களை நிச்சயம் அது நானாக உணர்ந்திருக்கும். (நரனுக்கு) நன்றி : நீளா - கவிதைகள் - பா வெங்கடேசன் - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 - வெளியீடு : காலச்சு

பிளாட்பார கடையில் கண்டெடுத்த முத்து

அழகியசிங்கர் சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும்.  அட்டைப் போயிருக்கும்.  விபரம் போயிருக்கும்.  எழுபதெட்டு இனிய கதைகள் என்ற கதா மஞ்சரி புத்தகம் கண்ணில் பட்டது.  உடனே வாங்கிக்கொண்டேன்.  முன்பக்கத்தில் உள்ள பல கதைகளின் பக்கங்கள் போய்விட்டன.  இருக்கும் கதைகளை பத்திரப்படுத்தலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சி இது.  வாழ்க இவ்வையகம். 1)   கழுதையின் குரல் ஓர் ஊரில் இசைப்புலவன் ஒருவன் இருந்தான்.  அவன் தன்னிடமுள்ள குறை தெரியாதவன்.  அவன் வேறு நாட்டு அரசனிடம் இசைபாடிப் பரிசு பெறலாமென்று எண்ணினான்; வேறு நாட்டுக்குவந்து ஒரு வீட்டிலே இறங்கி இருந்து வந்தான்ல்.  மறுநாள் விடியற்காலத்தில் எழுந்து பாட்டுப் பாடினான்.  அடுத்த வீட்டு வண்ணாத்தி ஒருத்தி பெருங்குரலிட்டு அழுதாள்.  இவன் பாட்டை நிறுத்தினான்.  அவளும் அழுகையை நிறுத்திவிட்டாள்.  இவ்வாறாக ஒரு வாரம் வரை நடந்து வந்தது.  அதனால் இசைப் புலவன் வண்ணாத்தியை அழைத்தான்: "நான் பாடும்போது நீ ஏன் அழுகிறாய்," என்று வினவினான்.  அதற்கு அவள்,"ஐயா...தங்கள் பொன்னான குரலைக் கேட்கும்போது போன திங்கள்

திரௌபதி ஏன் ஒன்றும் சொல்லவில்லை...

அழகியசிங்கர் துருபத மன்னனின் பெண் கிருஷ்ணயை என்கிற திரௌபதி. எந்தத் தகப்பனும் தன் பெண்ணை ஐந்து பேர்களுக்கு ஒரே சமயத்தில் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டான்.   முதலில் யுதிஷ்டிரர், "அரசே..எனக்கு இன்னும் திருமனம் நடைபெறவில்லை.  எனவே நான்தான் முதலில் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.  அதற்கு நிங்கள் அனுமதி தர வேண்டும்,"  என்று கூறுகிறார்.   துருபதன் அர்ச்சுனனுக்குத்தான் தன்பெண்ணை மணம் முடிக்க நினைக்கிறார்.  யுதிஷ்டிரர் சொன்னதைக் கேட்டு, துருபதன் சொல்கிறான் : "வீரரே என் பெண்ணை நீர் மணந்து கொண்டாலும் எனக்குச் சம்மதமே அல்லது யாருக்குச் செய்து கொடுக்க விருப்பமோ அவருக்குத் திருமணம் செய்து கொடும்,"என்கிறான். இதைக் கேட்டதும் யுதிஷ்டிரர் சொல்கிறார் : "அரசே.. நாங்கள் ஐவரும் திரௌபதியை மணந்துகொள்ள விரும்புகின்றோம்; இதனை என் தாய் முன்னமேயே கூறியுள்ளாள்.  கிடைத்ததை ஒன்று சேர்ந்து அனுபவிப்பதென்பது எங்கள் உடன்பாடு; எனவே அர்ச்சுனனால் பந்தயத்தில் வெற்றி கொள்ளப்பட்ட உம் புதல்வியைத் தர்மப்படியே ஐவரும் மணந்து கொள்கிறோம்.  நீங்கள் அனுமதி ககாடுங்கள்,"

எத்தனை திட்டுக்களை ஒரு நாளைக்கு வாங்குவீர்கள்?

அழகியசிங்கர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 தடவைகளாவது நான் திட்டு வாங்காமல் இருப்பதில்லை. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று என்னைத் திட்டாதவர்கள் தினமும் பத்துப் பேர்களுக்குக் குறையில்லாமல் இருப்பார்கள்.   இதைச் சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.  என்னை யார் திட்டுகிறார்கள் என்ற கேள்வியைக் கேட்பீர்கள்.  உண்மைதான்.  என்னை யார் திட்டப் போகிறார்கள்? திட்டுவதற்குக் காரணம்தான் என்ன இருக்கிறது. ஆனால் நீங்கள் திட்டுதல் என்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?  என் முகத்துக்கு நேரே கண்டபடி பேசி திட்டுவதாக நினைக்காதீர்கள்.  யாருக்கும் என்டமிருந்து எந்தப் புகாரும் இல்லை.  பின் திட்டு என்றால் என்ன?  திட்டு என்பது ஒரு பாவனை.  அதை எல்லாரிடமும் எல்லா நேரத்திலும் நமக்குக் கிடைக்காமல் போகாது.  உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்று தோன்றுகிறது.  உண்மையில் திட்டுபவர்களுக்கு நாம் பிறரைத் திட்டுகிறோம் என்பது தெரிவதே இல்லை.  ஏன் நான் கூட என்னை அறியாமல் யாரையாவது திட்டியிருப்பேன். காலையில் எழுந்தவுடன் கம்ப்யூட்டர் முன்னால் அமருகிறேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்.  என் திட்டு உடனே