Skip to main content

Posts

Showing posts from January, 2018

சுக்வீர் கவிதைகள்

சுக்வீர் கவிதைகள் (மூலம் : பஞ்சாபி - ஆங்கிலம் வழி தமிழில் : மேலூர்) 1. நடத்தல் நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால் - சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும் இரவின் இருளையும் கடந்து செல்கிறேன் சுற்றிலும் மக்களின் காடு. என் கண்களின் துணையோடு அதைக் கடந்து செல்கிறேன் கண்களுக்கே அதனூடு செல்லும் திறன் உண்டு. என் கால்கள் களைத்துவிட்டன மிகவும் களைத்துவிட்டன. ஆனால் நான் நடந்துகொண்டேயிருக்கிறேன் மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு நான் முன்னேறிப் போகிறேன். என்றாலும் இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்க என்னால் இயலவில்லை. நான் நடக்கிறேன் என் கால்களால் அல்ல கண்களால் - ஒரு நீண்ட பயணம்                   ( நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 81

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 81 அழகியசிங்கர்    400 கவிதைகளைத்  தொகுக்கிறேன்... இன்னும் சில தினங்களில் மனதுக்குப் பிடித்த கவிதைகளின் தொகுதி 1 பிரசுரமாகிவிடும். 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக அது இருக்கும். இதுமாதிரி 100 கவிதைகள் விகிதம் 400 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  ஏற்கனவே வெளிவந்த கவிஞர்களின் கவிதைகள் மற்றத் தொகுதிகளில் இடம் பெறாது.  எல்லாக் கவிதைகளும் கவிதைப் புத்தகங்களில் வெளியாகி இருக்க வேண்டும்.  இதுமாதிரி 300 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வைத்திருக்கிறேன்.  அதிலிருந்து இன்னும் 300 கவிதைகள் எடுக்க உள்ளேன்.   படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன் அனார் கோடை அந்தி நிழல் சாயும் சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான் தொலைவுப் பாலத்தின் மேலே சூரியனையும்  படிக்கட்டுகளில் கீழே செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக் கொண்டிருந்தான் 'முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு வந்ததும் கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கையில் எதையும் ரசிக்க முடியாதென' அன்று எழுந்து சென்றுவிட்டான் படித்துறையில் அமர்ந

சார்லஸ் போதலேர்

கேரளக் கன்னிக்கு உன் பாதங்கள் உன் கைகளைப்போல மென்மையானவை.  உன் இடை மிக அழகிய வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும் சிந்தனை மிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும். வெல்வெட்டுப் போன்ற உன் கண்கள் உன் மேனியை விடக் கரியவை நீலமேகங்களும் புழுக்கமும் நிறைந்த உன் தாய் நாட்டில் உன் முதலாளியின் புகைபிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து பாத்திரங்களில் நீரை நிரப்பி வாசனைத் திரவியங்கள் கலந்து, தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப் படுக்கையினின்றும் விரட்டியடித்து, புலர்ந்து புலராப் பொழுதில் அத்திமர இலைகளின் வழி காற்று இசை எழுப்பும் போது அங்காடியில் அனாசிப் பழமும் நேத்திர வாழைப்பழமும் வாங்குகிறாய். நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம் வெறுங்காலுடன் சென்று மறந்துபோன பழம் பாடல்களை மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய். மேற்கே, சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு சாயும்போது கோரைப்பாயில் நீயும் மெதுவாகத் தலை சாய்க்கிறாய். மிதக்கும் உன் கனவுகளில் குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும். களித்துத் திரியும் கன்னியே, கடலோடிகளின் வன் கரங்களில் உன் வாழ்க்கையை ஒப்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 81

அழகியசிங்கர்   கண்ணாடி குட்டி ரேவதி இறுகி மௌனித்துக் கிடக்கிறது குளம் ஒரு கல்லாய் நிழலை எறிந்து போகிறது பறவை இப்பொழுதும் குளம் இறுகிய முகத்துடன் நன்றி : யானுமிட்ட தீ - கவிதைகள் - குட்டி ரேவதி - பக்கங்கள் : 78 - வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம் -  விலை : ரூ.60.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள் - 3

ஆற்றங்கரை வணிகனின் மனைவி ஒரு கடிதம் என் தலைமயிற் வருடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே வாசல் முற்றத்தில் பூ பறித்து, நான் விளையாடியிருக்க நீர் வந்தீர்.  மூங்கில் பொய்கால் ஏறி குதிரை   விளையாடி வந்தீர். நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக் கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர். நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம். இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி பதினாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன் நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால் தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன். ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பிப்   பார்க்கவில்லை. பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன் என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன் என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்? பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள் குமரி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக தொலைவிலுள்ள கோடு யென்னுக்கு சென்றீர்கள் நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன. மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன. நீங்கள் போகும்ப

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 80 அழகியசிங்கர்   பிரதீபன் கவிதை திருவோடு ஏந்தி தெருவழியே போனால் சோறுதான் விழும்; வேட்டி விழலாம்; ஒதுங்கிக் கொள்ள திண்ணையில் இடமும் தருவார்கள்; நீ கேட்பதுபோல் ஒருபோதும் மலர் விழுவதில்லை நன்றி : கண்மறை துணி - கவிதைகள் - பிரதீபன் - வெளியீட்டாளர் : பிரதீபன், 25கே, ஜோதிநகர் 4வது தெரு, காமராஜ் மீட்டிங் ஹால் எதிரில், கோவில்பட்டி - 628 501 - விலை : ரூ.125 - பக்கங்கள் : 240

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 6

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் - 6 அழகியசிங்கர் 1. 41வது சென்னை புத்தகக் காட்சி எப்படிப் போயிற்று? 41வது சென்னை புத்தகக் காட்சியும், நானும், மூன்று இளைஞர்களும் என்று கட்டுரை எழுத உள்ளேன். 2. யார் அந்த மூன்று இளைஞர்கள்? எல்லாம் என் நண்பர்கள். கிருபானந்தன், சுந்தர்ராஜன், கல்லூரி நண்பர் சுரேஷ்.  3. எல்லோரும் இளைஞர்களா? எனக்கு 64.  என்னை விட சில மாதங்கள் பெரியவர் சுந்தர்ராஜன், என்னை விட சில மாதங்கள் சின்னவர் கிருபானந்தனும், சுரேஷ÷ம். அவர்கள் மூவரும் என்னை ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு புத்தகக் காட்சியை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். 4. 15 கோடிக்குப் புத்தகங்கள் விற்றதாக செய்தி வந்துள்ளதே? உண்மைதான்.  ஆனால் எதுமாதிரியான புத்தகங்கள் விற்றன என்பது தெரியாது.  அதை நம்பி புத்தகங்களை அதிகமாக அச்சடித்து விடாதீர்கள்.   5. புத்தகக் காட்சியில் நடந்த சோகமான நிகழ்ச்சி எது? ஞாநியின் மரணம்.  முதன்முதலாக நானும் ஞாநியும்தான் புத்தக ஸ்டாலில் நுழைந்தோம்.  அது எந்த ஆண்டு என்ற ஞாபகம் இல்லை. 6. ஒருநாளில் அதிகமாக எழுதுவது ஜெயமோகனா பா ரா

கவிதைப் புத்தகங்களும் சில உண்மைகளும்....

அழகியசிங்கர் விருட்சம் பதிப்பகத்தின் ஆரம்பத்தில் கவிதைப் புத்தகம் ஒன்றை கொண்டு வந்தேன்.   அது முதல் புத்தகமும் கூட.  500 பிரதிகள் அச்சடித்து வைத்திருந்தேன்.  அந்தத் தொகுதியைப் பார்த்தவர்கள் அதை எழுதிய கவிஞரை எல்லோரும் பாராட்டினார்கள்.  இன்னும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் அந்தப் புத்தகத்தை 10 ஆண்டுகளாக முயற்சி செய்து ஒருவாறு விற்றேன்.  பெரும்பாலும் இலவசமாகக் கொடுத்தேன்.  விற்கிற இடத்தில் கொடுத்தப் புத்தகப் பிரதிகளை அவர்கள் விற்று பணம் கொடுப்பதில்லை. நானும் கண்டுகொள்வதில்லை. அதன்பிறகு நான் கொண்டு வந்த பல கவிதைத் தொகுதிகளின் நிலை இன்னும் மோசம்.  எல்லோரும் கவிதைப் புத்தகங்களை வாங்காமல் சாட்டையால் அடிப்பதுபோல் அடித்தார்கள்.  நானும் திருந்த வேண்டுமே திருந்தவில்லை.  இன்னும் இன்னும் கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்.  இப்போது ஒரு உண்மை தெரிந்து விட்டது.  கவிதைப் புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு கையளவு புத்தகங்களையே காட்டுங்கள் என்பதுதான் அந்த உண்மை. நான் திரும்பவும் உமாபதி புத்தகத்தையும் நகுலனின் புத்தகத்தையும் அப்படித்தான் கொண்டு வந்துள்ளேன்.  விரல்க

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 4

என்னுடைய 'திறந்த புத்தகத்திற்கான' அறிமுக உரை பகுதி 4 அழகியசிங்கர் என் 'திறந்த புத்தகம்'பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர்  பேசி துவக்கி வைத்தார்.  எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.  அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள்.     இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள.  மூன்றாவதாக ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர் 20.12.2017 அன்று  பேசி உள்ளார்.    இப்போது மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்கள் பேசி உள்ளார்.  புத்தகக் காட்சியால் இதை ஒளிபரப்பத் தாமதமாகிவிட்டது.   என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதை கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

ஆனந்தின் பவளமல்லிகை

அழகியசிங்கர் ஆனந்த் என் நெடுநாளைய நண்பர்.  நான் அலுவலகத்தில் அவரைப் பார்க்கப் போவேன்.  'ஆனந்த், ஒரு கவிதை எழுதிக் கொடுங்கள்,' என்று கேட்பேன்.  உடனே ஒரு கவிதை எழுதித் தருவார். அந்தக் கவிதை நன்றாகவும் இருக்கும்.  பிரசுரிக்கும்படியாக சிறப்பாகவும் இருக்கும்.  ஆனந்த் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள மாட்டார்.   ஆனால் எல்லா விஷயங்களிலும் சுறுசுறுப்பானவர். அவருடைய நீண்ட கதைதான் 'இரண்டு சிகரங்களின் கீழ்' என்ற நீண்ட கதை.  அதை கையெழுத்துப் பிரதியாகவே எல்லோரிடமும் படிக்கக் கொடுத்திருக்கிறார்.  அதை ஒரு பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும். பிரசுரிக்க வேண்டும் என்ற  முயற்சி எடுத்துக்கொள்ள மாட்டார்.  ஒவ்வொருவரும் அந்த நீண்ட கதையைப் படிக்க வேண்டும்.  வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளும் கதைதான் அந்தக் கதை.  விருட்சம் வெளியீடாக அவருடைய கதைகளை முழுவதும் தொகுத்துள்ளேன்.   முதலில் வேர் நுனிகள் என்ற பெயரில் இத் தொகுப்பை கொண்டு வந்திருக்கிறேன்  இப்போது பெயரை மாற்றி  üபவளமல்லிகைý என்ற பெயரில் கொண்டு வந்துள்ளேன். 110 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.100தான்.  சிறுகத

பரீக்ஷா ஞாநியும் நானும்

அழகியசிங்கர் கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன்.  ஞாநியை முதன் முதலாக எங்கே சந்தித்தேன் என்று.  கிருத்துவ கல்லூரியில் சங்கரன் என்ற மாணவர் யாருடனோ பேசுவதிலிருந்து தெரிந்துகொண்டேன்.  அவர்தான் பின்னாளில் பரீக்ஷா ஞாநியாக வரப் போகிறார்.  அப்போது எனக்கு அவருடன் அறிமுகம் கிடையாது.  ஆனால் அவர் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தது மட்டும் காதில் விழுந்தது.  'கசடதபற நின்று விட்டது.  இனிமேல் வராது.'    üகசடதபறý ஒரு சிறு பத்திரிகை.  அது நின்று விட்டதை அவர் விவரித்துக்கொண்டிருந்தார்.  அப்போதுதான் üகசடதபறý என்ற சிற்றேட்டின் அறிமுகம் எனக்குக் கிடைத்திருந்தது.  அது எங்கே விற்கும் என்ற விபரம் தெரியவில்லை.  திரும்பவும் ஞாநியாக சங்கரன்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.  அப்போது சில சபா நாடகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.  எனக்கும் நாடகங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசை.  ஒரு நாடகக் குழுவுடன்  இணைந்து கொண்டேன்.  அதில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள்.  முதல் நாள் நாடக ஒத்திகையின்போது ஒரு வசனத்தைக் கொடுத்து பேசச் சொன்னார்கள்.  ஒரு பெண் நடிகையைப் பார்த்து  காதல் வசனம் பேச வேண்டும்.  நாடக இயக்குநர்

பிணா என்ற பத்மஜா நாராயணன் கவிதைத் தொகுதி

அழகியசிங்கர் இந்த முறை பிணா என்ற கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்துள்ளேன்.  மொத்தம் 41 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது.  விலை ரூ.50.  தமிழில் கவிதை நூல் கொண்டு வருவதுபோல ஆபத்தான சமாச்சாரம் எதுவும் இல்லை.  ஆனால் ஒரு பதிப்பாளர் என்ற முறையில் பல கவிதைத் தொகுப்புகள் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்ததில்லை. பெரிதாக விற்கவில்லை என்று கவலைப் பட மாட்டேன்.  பினா கவிதைத்தொகுப்பில் ஒன்றை கண்டுபிடித்தேன்.  அத் தொகுதியில் உள்ள கவிதைகளை சத்தமாக வாசித்தல்.  அப்படி வாசிக்கும்போது மனதில் பதியும்படி கவிதை வரிகள் நம்மை வசப்படுத்துகின்றன.   மௌனமாக வாசிக்கும்போது கவிதை வரிகள் நம்மை விட்டு நழுவி விடுகின்றன.  கவிதைகளை வாசிக்கும்போது அதிக இடைவெளி கொடுத்து வாசிக்க வேண்டும்.  வேசமாக ஒரு நாவலைப் படிப்பதுபோலவோ சிறுகதை வாசிப்பதுபோலவோ படிக்ககு; கூடாது என்பது அடியேனின் கருத்து.   

அப்பாவைத் தேடி

அப்பாவைத் தேடி அழகியசிங்கர் 1970லிருந்து நான் மேற்கு மாம்பல வாசி.  நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் அவரைச் சந்தித்தேன்.  அவர் பத்திரிகைகளில் கதை எழுதிக்கொண்டிருப்பார்.  பெரும்பாலும் கல்கி, அமுதசுரபி, கலைமகள்.  கதைப் போட்டிகளில் அவர் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமாகி இருக்கின்றன.   ஒரு கதை பத்திரிகையில் வர என்ன செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.  அவர் ஒரு டைப்ரைட்டர் முன் அமர்ந்துகொண்டு தட்டச்சு செய்து கொண்டிருப்பார்.  ஒரு கதையை எழுதிவிட்டு பலமுறை படித்துத் திருத்திக்கொண்டிருப்பார்.  அது செய்வது அவசியம் என்று சொல்வார்.  1953 ஆம் ஆண்டிலிருந்து எழுதியிருக்கிறார்.  அவருடைய கதைத் தொகுதியான அப்பாவைத் தேடி புத்தகத்தை விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்திருக்கிறேன்.  25 கதைகள்.  278 பக்கங்கள்.  விலை ரூ.250. இத் தொகுப்பு நூலை வ சா நாகராஜன் வீட்டிற்குச் சென்று முதல் பிரதியை அவருடைய மனைவியிடம் கொடுத்தேன்.
இடம் பொருள் மனிதர்கள்  அழகியசிங்கர் என் நண்பர் மாதவ பூவராக மூர்த்தியின் கட்டுரைத் தொகுப்புதான் 'இடம் பொருள் மனிதர்கள்.'   இன்றைய சூழ்நிலையில் எழுத்தில் ஹாஸ்ய உணர்வு என்பது மருத்துக்குக் கூட கிடைப்பதில்லை.  அதைப் போக்கும் விதமாகத்தான் மாதவ பூவராக மூர்த்தியின் இந்தப் புத்தகம் தெரிகிறது.  அவர் ஒரு நடிகர், நாடக இயக்குநர், நாடகம் எழுதுபவர்.  சிறுகதை எழுதுபவர்.  இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்பு இவருடையது வந்துள்ளன.  இதெல்லாம் மீறி நல்ல மனம் கொண்ட மனிதர்.  இந்தப் புத்தகத்தைக் கொண்டு வர எனக்கு ரொம்ப நாட்கள் ஆயிற்று.   அவருடைய ஒவ்வொரு கட்டுரையும் ரசித்துப் படிக்கலாம்.  கொஞ்சம் சிரிக்கவும் செய்யலாம்.   இன்று காலையில்தான் மூர்த்தி தன்னுடைய புத்தகப் பிரதியை அவருடைய நண்பர் ஆர் கேயிடமும், அவர் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.   156 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.130 தான்.   

வழங்க வளரும் நேயங்கள்...

அழகியசிங்கர் என் ஒன்றுவிட்ட சகோதரர் எழுதிய புத்தகம்தான் üவழங்க வளரும் நேயங்கள்,ý என்ற சிறுகதைத் தொகுதி.  ஒரு நீண்ட கதையும் பத்து சிறுகதைகளும் கொண்ட புத்தகம் இது.  கதையை வர்ணனை வார்த்தை ஜாலம் இல்லாமல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த மாதம் ஐந்தாம் தேதி என் மாமா கோபாலன் அவர்கள் (80 வயது) பெற்றுக் கொள்ள அதை வழங்குபவர் ஸ்ரீதர்-சாமா என்கிற புனைபெயரில் எழுதும் சுவாமிநாதன் அவர்கள்.  162 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.120 மட்டுமே.  இந்த ஆண்டு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வரப்பட்ட நூல் இது. 

இரண்டு புத்தகங்கள்

அழகியசிங்கர் இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு என்னுடைய இரண்டு புத்தகங்கள் வர உள்ளன. இதைத் தவிர இன்னும் சில எழுத்தாளர்களின் புத்தகங்களும். ஒவ்வொன்றாக முகநூலில் அறிமுகப்படுத்த உள்ளேன். ஒரு புத்தகம். 'திறந்த புத்தகம்' என்ற பெயரில் உள்ள என் கட்டுரைத் தொகுப்பு. 207 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது. விலை : ரூ.170. இரண்டாவது என் முழுக் கதைத் தொகுப்பு. 664 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.600. ஆனால் புத்தகக் காட்சி அன்று வர உள்ளதால் சலுகை விலையாக ரூ.300க்கு இப் புத்தகம் தர உள்ளேன். இப் புத்தகத்தை வரும் 13.01.2018 க்குள் முன் பதிவு செய்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதுவரை பதிவு செய்தவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொலைபேசி மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் பதிவு செய்துகொண்டவர்கள் என்னுடன் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். Name of the Account : NAVINA VIRUTCHAM, BANK : INDIAN BANK, ASHOKNAGAR BRANCH. ACCOUNT NUMBER No. 462584636 `IFSC CODE : IDIB 000A031 Tel No. 9444113205 e mail: navina.viru

வெளியில் இருந்து வந்தவன்

அழகியசிங்கர் ஒருமுறைதான் சந்தித்தேன்.  1991ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை அன்று சென்னைக்கு என்னைப் பார்க்க வந்தார்.  வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டேன். மனமுவந்து சாப்பிட்டார்.  பின் அவர் கவிதைத் தொகுதி எப்படி கொண்டு வரவேண்டுமென்று அறிவுரை கூறிவிட்டு  கவிதைத் தொகுதி கொண்டுவர பணமும் கொடுத்துவிட்டுச் சென்று விட்டார்.  அவர் வேற யாருமில்லை உமாபதி என்கிற கவிஞர்.  அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.  கோவில்பட்டியா சென்னையா தெரியவில்லை.   என்னுடைய இந்த முகநூலை பார்ப்பாரா? தெரியவில்லை.  அப்படி என்ன விசேஷம் அவரிடம்.  அவருடைய கவிதைத் தொகுப்புதான்.  ழ பத்திரிகையில் அவருடைய கவிதை ஒன்று பிரசுரம் ஆனது.  அசந்து விட்டேன்.  மரணம் என்ற கவிதை அது. தன் கவிதைத் தொகுதி புத்தகமாக வருவதில் ரொம்பவும் கூச்சப்படுவார் என்பதை அவருடைய நண்பார்களான சுந்தர ராமசாமியும், ராஜ மாத்தாண்டனும் தெரிவித்துள்ளார்கள்.  அவர்களுடைய தூண்டுதல் பேரில்தான் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்தது.  அதுவும் விருட்சம் வெளியீடாக.  1991ஆம் ஆண்டு. 'வெளியிலிருந்து வந்தவன்' என்ற உமாபதி புத்தகத்துடன், 'இரு நீண்ட கவ

அழகியசிங்கர் கதைகள்

அழகியசிங்கர் விருட்சம் வெளியீடாக 'அழகியசிங்கர் கதைகள்' என்ற பெயரில் என் முழுத் தொகுப்பைக் கொண்டு வர உள்ளேன்.  வருகிற 12ஆம் தேதி புத்தகம் தயாராகிவிடும்.  650 பக்கங்களுக்குக் குறையாதப் புத்தகமாக வருகிறது.  64 சிறுகதைகள், 7 குறுநாவல்கள், 1 நாடகம், ஐந்தாறு சின்னஞ்சிறு கதைகள்.   நான் முதன்முதலாக எழுதிய கதையிலிருந்து இப்போது எழுதி இருக்கும் கதை வரை கொண்டு வந்திருக்கிறேன்.  எப்படி கதை எழுத வந்தேன், எப்படி கதையை எழுதுகிறேன் என்று ஒரு கட்டுரை தயார் பண்ணி எழுதி முடித்திருக்கிறேன்.  இதுவரை விருட்சம் வெளியீடாக கெட்டி  அட்டைப்போட்ட புத்தகமாக எதையும் நான் கொண்டு வந்ததில்லை.  மேலும் இவ்வளவு பக்கங்களுக்கு எந்தப் புத்தகமும் கொண்டு வந்ததில்லை.  என்னுடைய முழு கதைத் தொகுதியை இவ்வாறு கொண்டு வருகிறேன்.   இன்னும் சில தினங்களில் புத்தகமும் தயாராகிவிடும். இது சம்பந்தமாக எளிமையான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளேன்.          6 குறுநாவல்கள் கணையாழியில் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.  'அங்கிள்' என்ற என் சிறுகதைக்கு கதா விருது கிடைத்திருக்கிறது.