Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 80

அழகியசிங்கர்  

பிரதீபன் கவிதை

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பதுபோல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை


நன்றி : கண்மறை துணி - கவிதைகள் - பிரதீபன் - வெளியீட்டாளர் : பிரதீபன், 25கே, ஜோதிநகர் 4வது தெரு, காமராஜ் மீட்டிங் ஹால் எதிரில், கோவில்பட்டி - 628 501 - விலை : ரூ.125 - பக்கங்கள் : 240

Comments