Skip to main content

Posts

Showing posts from April, 2020

ஞானக்கூத்தன் எழுதிய ஒரே ஒரு சிறுகதை

அழகியசிங்கர்   அதிகமாகக் கவிதைகளைப் பற்றிச் சிந்திப்பவர் ஞானக்கூத்தன்.  கிட்டத்தட்ட 700 கவிதைகள் வரை அவர் வாழ்நாள் முழுவதும் எழுதியிருக்கிறார்.  இதைத் தவிரக் கவிதையைப் பற்றி தன் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறார்.   பலருடைய கவிதைகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.  கவனம் என்ற சிற்றேட்டுக்கு ஆசிரியராக இருந்து 7 இதழ்கள் கொண்டு வந்துள்ளார்.  இந்தச் சிற்றேடு மார்ச்சு 1981ஆம் ஆண்டு வெளிவந்தது.   ஆனால் யாருக்காவது அவர் கதை எழுதியிருப்பது தெரியுமா? கண்ணீர்ப்புகை என்பதுதான் அவர் சிறுகதை.  ரங்கமணி என்ற பெயரில் கவனம் இரண்டாவது இதழில் எழுதி உள்ளார்.  அந்தக் கத 1981ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த ஒரு சிறுகதையைத் தவிர அவர் வேற எதுவும் எழுதவில்லை.  ஒரு இலக்கியத் தரமான கதை என்றால் அந்தக் கதையைத்தான் சொல்ல வேண்டும்.  ஒரு முறைக்கு இருமுறை படித்தால்தான் கதையைப் புரிந்து கொள்ள முடியும்.  அந்தக் கதையைப் பார்ப்போம். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு இடத்திற்குப் போகத் தயாராக இருக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் யோஜனை செய்கிறார்கள்.  ஒருவர் இரயில் நில

கண்ணீர்ப்புகை

ஞானக்கூத்தன்  புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருந்தது.  பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும் இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாகவும், இரயிலிலே போய்க்கொண்டிருப்பதாகவும் குடும்பத்தில் ஒவ்வொருவரும்  பாவனை கொண்டு இயங்குகிறார்கள். பெண்கள் பட்டுப் புடவைக்கு மாறிவிட்டாகள். நிலைக்கண்ணாடிக்கு முன் வேலை முடிந்து வெறுமனே அவ்வப்போது எட்டிப் பார்க்கிறார்கள். ஆண்கள் கணுக்கால் சட்டையைப் பேர் இடுப்பில் இறுக்கிக் கொண்டுவிட்டார்கள். இன்னும் மூன்று நாட்களுக்குப் பால், தயிர், பத்திரிகை எதுவும் வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டதா என்று உறுதி செய்துகொண்டு நிலையத்துக்குப் போகும்வரைக்கும் தாக்குப் பிடிக்கப் பெரியவர் ஒருமுறை வெற்றிலைப் பாக்க புகையிலையை வாயில் நிரப்பிக் கொண்டுவிட்டார். வைத்யநாதன் அனேகமாக இரண்டு வண்டிகளுடன் திரும்பிக் கொண்டிருப்பான். அம்மா ரங்கநாயகிக்குத் துக்கம். ஒரு மூலையில் சென்று, யாருக்கும் தெரியாமல் துக்கத்தை உதறப் போனதை மற்றவர்கள் பார்த்துவிட்டகள். இராமநாதன் மாடிப்படிகள் இருக்கும் பக்கத்தை ஒரு முறை ஆத்திரத்துடன் பார்த்துப் பற்களை

அஞ்ச லட்டைக் கதைகள் - 7

அழகியசிங்கர் இது என் ஏழாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.   கதை 7 சொல்ல முடியாத சோகம் மெதுவாக நடந்தான்.  சோர்வாக இருந்தான். ஒன்றும் சாப்பிடவில்லை.   கொரோனாவால்  முழு கதவடைப்பு. அவனுக்கு வீடு இல்லை.  வாசலில்லை.    ஊருக்குத் திரும்பவும் போய்விடலாமென்று எண்ணத்தில் தனியாகத்  தங்கியிருந்த இடத்தைக்  கா லி செய்துவிட்டான்.  பெங்களூரிலுள்ள தன் கிராமத்துக்கு எப்படியும் போக முடியாது.  மூட்டை முடிச்சுகளைப் பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்திருக்கிறான். தினமும் காலையிருந்து அலைகிறான்.  ஓரிடத்திலும் இருக்க முடியவில்லை.  பசி.  கோரத்தாண்டவமாடும் பசி.  எங்கே உணவு கிடைக்குமோ  அங்கேயெல்லாம்  போய் நிற்கிறான். இதோ இப்போது நடந்து போகும் தெருவில் எல்லா வீடுகளும் திறக்கவில்லை.  யார் வீட்டுக் கதவையும் தட்டப் பிடிக்கவில்லை.  அயர்ச்சியாக இருக்கிறது.  பார்த்துக்கொண்டே போகிறவனுக்கு ஒரு வீடு வா வாவென்று திறந்து கிடக்கிறது. வீட்டுக் கேட்டைத் திறந்து உள்ளே நுழைகிறான்.  யாருமில்லை.  கூடத்தில்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 142

அழகியசிங்கர்   கரப்பான் பூச்சிகள் வசிக்கும் அறை தாமரைபாரதி விளக்கொளிர்ந்ததும் அறையின் ஏதாவதொரு இடுக்கினை நோக்கி ஓடுகிறது  ஒரு கரப்பான்பூச்சி நான்கு கூட்டுக் கண்களால் நோட்டம்விட்டு இரவிலும் இருட்டிலும் இரைதேடும் ஒன்று வெளிச்சத்திற்குப் பயந்தோட ஓராயிரம் இருளுக்குள் ஒளிந்திருக்கலாம் சமையலறைகளின் குளியலறைகளின் அச்சுறுத்தலாக இருப்பினும் தூய்மைக் காவலர்களாக அறியப்படும் கரப்பான்பூச்சிகள்  மனிதர்களுக்கு | தீங்கு விளைவிக்கக்கூடுமென மருந்திட்டுக் கொல்லப்படுகின்றன காருண்யத்தின் ஒளிக்கிரணங்கள் தழுவாத அறைகளில் ஒழுங்கற்று இங்குமங்கும் கண்ணாமூச்சி காட்டி நடமாடுகின்றன  மனித உருமாற்றமடைந்த கரப்பான்பூச்சிகள். (ஃப்ரான்ஸ் காஃப்காவுக்கு) நன்றி : தபுதாராவின் புன்னகை - தாமரைபாரதி - கடற்காகம் வெளியீடு, 10-3-53 கணபதி நகர் முதல் தெரு, எஸ்ஆலங்குளம், மதுரை 625 017 - பக்கங்கள் 112 - விலை : ரூ.199 - கைபேசி : 78716 78748

1992ஆம் ஆண்டு எழுதிய கவிதை

அழகியசிங்கர் காலையில்  படுக்கையிலிருந்து  எழுந்துகொள்ளும்போது எதிர்பாராதவிதமாய் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது.  உடனே என் கவிதைப் புத்தகத்தை எடுத்து அந்தக் கவிதையைப் புரட்டினேன். அந்தக் கவிதையை 1992ஆம் ஆண்டு எழுதியது. தீர்க்கதரிசனமாக அந்தக் கவிதையை  எழுதியிருக்கிறேனோ  என்று இப்போது தோன்றுகிறது.   கொரோனாவல்   எற்ப்பட்ட   இக்கட்டைக்  கவிதை அன்றே வெளிப்படுத்தி விட்டது.  ஒரு கவிதை எப்படித் தோன்றுகிறது, எந்தச் சூழ்நிலையில் ஏன் அப்படியெல்லாம் எழுதினோம் என்பதெல்லாம் புரியவில்லை. அந்தக் கவிதையை வாசிக்க  இங்குத்  தருகிறேன்.  யாருடனும் இல்லை எதைப் பேசுவது  எப்படிப் பேசுவது  ஏன் பேசுவது  எதற்காகப் பேசுவது  பேசினால் அடிப்பார்களா  கேட்டால் உதைப்பார்களா  பார்த்தால் சிரிப்பார்களா  ஏன் பேசுவது  எதைப் பேசுவது  எப்படிப் பேசுவது  எதற்காகப் பேசுவது  பார்க்கப் போகலாமா  பேசுவதைக் கேட்பார்களா  கேட்டதை மனதில் வாங்கி  பதில் அளிப்பார்களா?  எதைப் பேசுவது  எப்படிப் பேசுவது  ஏன் பேசுவது  எதற்காகப் பேசுவது  பேசாமல் ஓடிப் போகல

அஞ்சலட்டைக் கதைகள்

அழகியசிங்கர் இது என் ஆறாவது கதை.  இந்தக் கதையைப் படித்தபோது ஒரு நிமிடம்தான் ஆயிற்று.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன்.  போஸ்டல் காலனி இரண்டாவது தெரு எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தோம்.  நானும் மனைவியும்தான்.  மனைவி டிவியில்.  நான் கணினியில் மூழ்கியிருப்போம்.  தினமும் கொரோனா செய்தி எங்களைப் பாடாய்ப் படுத்தும்.  உண்மையில் டிவியில் வரும் செய்தியைக் கேட்கும்போது திகில் கதையைப் படிப்பது போலிருக்கும்.  போஸ்டல் காலனி 1வது தெருவிலிருக்கிறோம்.  இரண்டாவது தெருவில் அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு இளைஞனுக்குத் தொற்றாம்.           யார் அது? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  என் நண்பன் வெங்கடேஷ் பையனாக இருக்குமாவென்று யோஜனைப் போயிற்று.  அவன் பையனாக இருக்கக் கூடாதென்று வேண்டிக்கொண்டேன்.  போன வருடம்தான் வெங்கடேஷ் இல்லாமல் போய்விட்டான்.  போய்ப் பார்க்கலாமென்றால், கட்டையைப் போட்டு தடுத்திருக்கிறார்கள்.  எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டுமென்று அவர்கள் வீட்டுத் தொலைப்பேசியைத் தட்டினேன்.  யாரும் தொலைப்பேசியை எடுக்கவில்லை.  பக்கத்துத் தெருதானே விஜாரிக்கலாமெ

அந்தோன் சேகவ்வின் வான்கா என்ற கதை

அழகியசிங்கர்  'அந்தோன் சேகவ்'வின் அருமையான சிறுகதையான 'வான்கா'  படித்தேன்.  ஒன்பது வயது சிறுவனைப் பற்றிய கதை இது. ' வான்கா மூக்கவ்' வேலை பயிலுவதற்காக 3 வாரங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். பரபரப்பாக இருக்கிறான் வான்கா.  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானனும் எசமானியும் முதுநிலை வேலை பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான்.  பிறகு அலமாரியிலிருந்து மசிப்புட்டியையும் துருப்பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு எழுதத் தயாராகி விட்டான். யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதத் துடிக்கிறான்.  அவனுடைய தாத்தாவிற்குத்தான்.  அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச் என்று எழுத ஆரம்பித்தான்.  அந்தக் கடிதத்தில் தாத்தாவிற்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தைத் தெரிவிக்கிறான்.  வான்காவிற்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை.  எல்லாம் தாத்தாதான்.  அவனுடைய தாத்தா கன்ஸ்தன்தீன் ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண

உஷாதீபனின் பால் தாத்தா

அழகியசிங்கர் நான் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணி பத்திரிகை வாங்குவது வழக்கம்.  அதில் குறைந்தபட்சம் இரண்டு கதைகள் தென்படும்.   பத்திரிகை வாங்கினாலும் உடனே படிக்க மாட்டேன்.  பிறகு படிக்கலாமென்று வைத்துவிடுவேன்.  அப்படியே படிக்காமல் மறந்தும் போய்விடுவதுண்டு.  குறிப்பாகக் கதைகள்தான் படிக்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன். இதுமாதிரி தினமணி கதிர் பத்திரிகைகளை அடுக்கடுக்காக வீட்டில் வைத்திருக்கிறேன்.   என்னிடம் இப்படியே பல கதைகள் சேர்ந்து விட்டன.  ஒரு கதையைப் படிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு மேல் போகாது.  ஆனாலும் படிப்பதில்லை.  என்ன காரணம்?  பிறகு படிக்கலாம் பிறகு படிக்கலாமென்று தள்ளிப் போடுவதுதான் காரணம்.  இப்போது கொரோனா நேரமாக இருப்பதால் நிறைய நேரம் கிடைக்கிறது.  ஒரு தினமணி கதிர் இதழை முழுவதும் படித்து விடலாம்.  அல்லது குறைந்த பட்சம் கதைகளாவது படிக்கலாம். வழக்கம்போல் 19.04.2020 அன்று வந்த தினமணி கதிர் இதழ் மிகக் குறைவான பக்கங்களுடன் அச்சிடப்பட்டிருந்தது.   16 பக்கங்கள்தான் பத்திரிகையே. அதில் 'உஷா தீபன்' எழுதிய 'பால் தாத்தா'

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 141

அழகியசிங்கர்   நான் கே.ஜி.சங்கரப்பிள்ளை“- தமிழாக்கம் : சிற்பி விலைமகளாய் இருந்தாள் என் பாட்டிக்குப் பாட்டிக்குப் பாட்டியான பாட்டி பெண்ணாய் இருந்தால் நானும் விலைமகள் ஆகியிரு ப் பேன் காமுகனாய் இருந்தார் என் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டனுக்குப் பாட்டன் ஆணாக இருந்திருந்தால் நானும்  காமுகனாக ஆகியிருப்பேன் நன்றி : கே.ஜி.சங்கரப்பிள்ளை கவிதைகள் - தமிழில் : சிற்பி - சாகித்திய அகாதெமி - மொ.பக்: 224 - விலை : ரூ.125 

விருட்சம் 113வது இதழ்

அழகியசிங்கர் விருட்சம் 113வது இதழிற்குப் படைப்புகளை அனுப்பியவர்களுக்கு நன்றி பல.  நான் எதிர்பார்த்தபடியே கவிதைகள்தான் அதிகம்.  சிறுகதைகள் குறைவு.  கட்டுரைகள் இல்லவே இல்லை. கூடிய சீக்கிரம் கொண்டு வர உள்ளேன்.