Skip to main content

அந்தோன் சேகவ்வின் வான்கா என்ற கதை


அழகியசிங்கர் 






'அந்தோன் சேகவ்'வின் அருமையான சிறுகதையான 'வான்கா'  படித்தேன்.  ஒன்பது வயது சிறுவனைப் பற்றிய கதை இது. ' வான்கா மூக்கவ்' வேலை பயிலுவதற்காக 3 வாரங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன்.

பரபரப்பாக இருக்கிறான் வான்கா.  கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எசமானனும் எசமானியும் முதுநிலை வேலை பயிற்சியாளர்களும் கோவிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந்தான். 

பிறகு அலமாரியிலிருந்து மசிப்புட்டியையும் துருப்பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு எழுதத் தயாராகி விட்டான்.

யாருக்கு இந்தக் கடிதத்தை எழுதத் துடிக்கிறான்.  அவனுடைய தாத்தாவிற்குத்தான்.  அன்புக்குரிய தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச் என்று எழுத ஆரம்பித்தான்.  அந்தக் கடிதத்தில் தாத்தாவிற்குக் கிறிஸ்மஸ் வாழ்த்தைத் தெரிவிக்கிறான்.  வான்காவிற்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை.  எல்லாம் தாத்தாதான். 

அவனுடைய தாத்தா கன்ஸ்தன்தீன் ழிவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார்  65 வயதானவர்.  பகல் பொழுதில் பின்கட்டு சமையலறையினுள் தூங்குவார். அல்லது சமையல்காரிகளோடு வேடிக்கையாகப் பேசிக்கொண்டு பொழுதைப் போக்குவார். 

இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து பண்ணையைச் சுற்றி நடப்பார்.  அவருடன் விலாங்கு என்ற நாய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு உடன் வரும்.  இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும்.  ஆனால் அதை யாராலும் நம்ப முடியாது.  திருட்டுத்தனமாய் வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்துகொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங்காலில் எத்தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும் இருமுறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள்.உயிர் போகிற நிலைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். 

தாத்தாவை நினைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டவாறு கடிதம் எழுதுகிறான்.  

'நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள்.  முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள் வாரால் நையப் புடைத்தார்.  காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கி விட்டேன்.'
  
இப்படி அற்ப காரணத்திற்காக அடி வாஙகுகிறான்.  ஒன்பது வயதான அவனால் இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  மேலும் அவனுடைய எஜமானி வேறு அவனைக் கொடுமைப் படுத்துகிறாள்.  மீனை சுத்தம் செய்ய கொடுக்கிறாள். வான்கா வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தான்.  உடனே எஜமானி அந்த மீனைப் பிடுங்கி அதன் தலையை அவன் முகத்திலே வைத்துத் தேய்த்தாள்.  மற்ற வேலைக்காரர்களும் அவனை கேலி செய்கிறார்கள்.  மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள்.  எசமானுடைய தோட்டத்தில் போல் வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள். 

பெரும்பாலும் அவமானத்துடனும் பட்டினியுடன்தான் அவன் இருக்கிறான். காலையில் ரொட்டி தருகிறார்கள். மத்தியானத்துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டி கொடுக்கிறார்கள்.  தேநீரோ, முட்டைக் கோஸ் சூப் எதுவும் கிடைப்பதில்லை. 

வான்கா இதையெல்லாம் எழுதிவிட்டு தாத்தாவிடம் கெஞ்சிக் கேட்கிறான்.  'என்னை அழைத்துக் கொண்டு போய் விடு,' என்று.  

'உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த்தனை செய்வேன். என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்,'
என்று அந்தோன் செகாவ் அவன் நிலைமையை விளக்குகிறார். 

கண்ணீர் மல்க வான்கா இன்னும் எழுதுகிறான்.  

'எனது அன்புக்குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது இங்கிருந்து ஓடி விடலாம். நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம்.  ஆனால் என்னிடம் புதை மிதியடிகள் இல்லை.  கடுங்குளிர் தாங்க முடியாதே என்று பயந்துகொண்டு சும்மாயிருந்தேன். கருத்துடன் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்.  யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன்.  நீ இறந்தபின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன்.  என் அம்மாவுக்காக பிரார்த்தனை செய்கிறேனே அதே போல செய்வேன் என்கிறான் வான்கா.  

வான்காவின் கடிதம் தொடருகிறது. ' அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப்பெட்டியில் பத்திரமாய் வை.  திருமதி ஓல்கா இக்னாத்யென்னாவிடம் கேட்டு வாங்கு..வான்காவுக்கு என்று சொல்லு.'

அன்புக்கு ஏங்கும் ஒன்பது வயது சிறுவனான பழைய கனவில் மூழ்கி விடுகிறான்.  அவனை அவன் தாத்தா  பண்ணைவீட்டுக் கனவான்களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காக அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது.  அப்போதெல்லாம் காலம் எவ்வளவு இன்பகரமாக இருந்தது என்று யோஜனை செய்கிறான்.  

திருமதி ஓல்கா இக்னாத்யெவ்னாதான் - வான்காவுக்கு மிகப் பிடித்தவர் - யாரையும் விட முன்னிலையில் நின்று வேலை செய்வார்.  வான்காவின் தாயாகிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்தபோது ஓல்கா இக்னாத்யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவனுக்கு அவர் எழுதவும், படிக்கவும் நூறு வரை எண்ணவும் சொல்ஙூக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார்.  ஆனால் அவன் தாயார் பெலகேயா இறந்தபிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான்.  அங்கிருந்து மாஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டு வந்து விடப்பட்டான். 

தன் துயரங்களை வான்கா கடிதம் மூலம் எழுதிக்கொண்டிருக்கும்போது பழைய நினைவுகளுக்குப் போய் விடுகிறான்.  கதையின் உத்தி சிறப்பாகவே பயன்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் வாசிக்கத் தூண்டும் விதமாக.

வான்கா தாத்தாவை கெஞ்சி எழுதுகிறான்.  

'தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு என்று மேலும் எழுதுகிறான்.

இப்படிக் கெஞ்சும்போது எதைஎதையோ சொல்லி கெஞ்சுவார்கள்.  வான்கா அந்த நிலைக்குப் போய்விட்டான்.  அவன் கடிதம் உருக்கமாக இருக்கிறது.

'ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான்  துன்புறுகிறேன்.  எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள்.  எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன்.  துன்பம் தாங்கமாட்டாமல் எப்போதும் அழுது கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் மிக வருத்தத்துடன் கண்கலங்கியபடி கடிதம் எழுதுகிறான்.

இப்படி எழுதிக்கொண்டிருக்கும்போது அல்யோனாவுக்கும், ஒற்றைக் கண் எகோருக்கும், கோச் வண்டிக்காரருக்கும் அன்பைத் தெரிவிக்கிறான். கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே என்கிறான்.

பின் காகிதத்தை நான்காய் மடித்தான்.  ஒரு கப்பேக் கொடுத்து இதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத்திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்.  பிறகுச் சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான் : 

தாத்தா கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம்

என்று முடிக்கிறான்.  யாரும் தலையிட்டு தான் எழுதுவதைத் தடுக்கவில்லை என்று மகிழ்ச்சி அடைகிறான். கடிதத்தை தபாலில் சேர்க்க கோட்டு எதுவும் போட்டுக்கொள்ளாமல் வெறுஞ்சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.

அருகாமையிலிருந்த தபாற்பெட்டியிடம் ஓடி மதிப்பிற்குரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான். 

ஒன்பது வயது சிறுவன் தன் தாத்தாவை அழைக்க உருக்கத்துடன் கடிதம் எழுதி அனுப்புகிறான்.

இந்தக் கடிதத்தை தபாலில் சேர்த்த பிறகு ஒரு மணி நேரத்தில் அவனுக்குத் தூக்கம் வந்து விடுகிறது.  அவனுக்கு ஒரு கனவு வருகிறது.  ஒரு கணப்படுப்பு தோன்றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையல்காரிகளுக்குப் படித்துக் காட்டினார் என்று முடிகிறது கதை.  இந்தக் கதையை ரா கிருஷ்ணையா மொழி பெயர்த்துள்ளார். 

ஒன்பது வயது சிறுவனுடைய பார்வையில் கதையை அந்தோன் சேகவ் அற்புதமாக எடுத்துக்கொண்டு போகிறார்.  இக் கதையை எத்தனை முறை படித்தாலும் அலுக்காது. ஒவ்வொருவரும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளக் கூடிய கதை.  





அந்தோன் சேகவ்


வான்கா





           ஒன்பது வயதுச் சிறுவன் வான்கா மூக்கவ் வேலை பயிலு வதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு புதைமிதி தயாரிப் பாளர் அல்யாஹினிடம் விடப்பட்டவன். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முந்திய இரவு அவன் தூங்கவில்லை. எச மானும் எசமானியும் முதுநிலை வேலைப் பயிற்சியாளர்களும் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்லும் வரை காத்திருந் தான்; பிறகு அலமாரியிலிருந்து மசிப் புட்டியையும் துரு பிடித்த முனை கொண்ட பேனாக்கட்டையையும் எடுத்து வந்து, கசங்கிப் போன காகிதத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு எழுதத் தயாராகி விட்டான். முத லாவது எழுத்தை வரையுமுன் நெஞ்சு படபடக்க இரண் டொரு தரம் வாயிற் கதவையும் சன்னலையும் பார்த்துக் கொண்டான். புதைமிதி அச்சுக் கட்டை அடுக்குத் தட்டு களுக்கு நடுவிலிருந்த சாமிப் படத்தை உற்று நோக்கிய வாறு விக்கிச் செறுமிப் பெருமூச்சு விட்டுக் கொண்டான். காகிதம் பெஞ்சின் மேல் இருந்தது, வான்கா பெஞ்சின் பக்கத்தில் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.
      ''அன்புக்குரிய தாத்தா கன்ஸ் தன் தீன் மக்காரிச்! என்று எழுதினான்.

         ''உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன். கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அனுப்புகிறேன், ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன். எனக்கு அப்பாவும் இல்லை, அம்மாவும் இல்லை; உன்னைத் தவிர யாரும் இல்லை எனக்கு.''

        இருண்ட சன்னல் கண்ணாடியை நோக்கி வான்கா கண் களை உயர்த்தினான். மெழுகு வத்தியின் பிம்பம் சன்னல் கண்ணாடியில் ஆடித் துடித்தது. அவனுடைய மனக் கண்முன் தாத்தா கன்ஸ் தன் தீன் மக்காரிச் தெளிவாய்த் தோற்ற மளித்தார். இவரியோவ் என்றொரு நிலப்பிரபுவின் பண்ணையில் அவர் இரவு நேரக் காவற்காரராய் வேலை பார்த்து வந்தார். மெலிந்து உருவில் சிறியவரான கிழவர் அவர், வயது சுமார் அறுபத்தைந்து இருக்கும். ஆனால் குறிப்பிடத் தக்க துடிப்பும் விறுவிறுப்பும் வாய்ந்தவர், சிரித்த முகமும் குடி போதை கொண்டு மங்கிய கண்களுமுடையவர். பகற் பொழுதில் அவர் பின் கட்டுச் சமையலறையினுள் தூங்கு வார், அல்லது சமையற்காரிகளோடு வேடிக்கையாய்ப் பேசிக் கொண்டு உட்கார்ந்திருப்பார். இரவில் பெரிய ஆட்டுத்தோல் கோட்டு அணிந்து சடசடப்பியை ஆட்டி ஒலித்தவாறு பண்ணையைச் சுற்றி நடப்பார். அவருக்குப் பின்னால் கிழட்டுக் கஷ் தான்காவும் விலாங்கு என்ற இன் னொரு நாயும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு செல்லும். அதன் கரிய நிறத்துக்காகவும் நீளமான நீர் நாயை ஒத்த உடலுக்காகவும் அதற்கு விலாங்கு என்று பெயர். இந்த விலாங்கு பணிவு மிக்கதாய் அருமையாய் வாலைக் குழைத்துக் கொண்டு வரும்; தெரிந்தவர்களா யினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும் அதே பார்வை கொண்டு தான் உற்று நோக்கும். ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது. அதன் அடக்க மும் பணிவும் வெளிவேஷமே தவிர மெய்யானவையல்ல ; அதன் கள்ளத்தனத்தையும் குரோதத்தையும் மூடிமறைக் கவே பயன்பட்டன இவை. திருட்டுத்தனமாய் அணுகி வந்து காலைக் கடிப்பதிலும், யார் கண்ணிலும் படாமல் குளிர்க் கிடங்கினுள் நுழைவதிலும், விவசாயிகளுடைய கோழிக் குஞ்சுகளைக் கவர்ந்து கொண்டு ஓடுவதிலும் அது தேர்ந்த திறமைசாலி. அதன் பின்னங் கால்களில் எத் தனையோ தரம் வெட்டுக் காயம் பட்டிருக்கும், இரு முறை அதைக் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டார்கள், வாரம் தவறாமல் நையப் புடைத்து உயிர் போகும் நிலையில் விட்டுச் சென்றார்கள். ஆனால் அது யாவற்றையும் சாமாளித்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தது.

          தாத்தா இந்நேரத்தில் அனேகமாய் வெளி வாயில் அருகே நின்று கண்களைச் சுளித்துக் கொண்டு, கோயில் சன்னல்களிலிருந்து சென்னிறத்தில் பளிச்சிடும் ஒளியைப் பார்ப்பார்; ஒட்டுக்கம்பளப் பொதி மிதிகளைக் கால்களில் மாட்டிக் கொண்டு தத்துப்புத்தென நடந்து வேலையாட்களோடு கும்மாள மடிப்பார். அவருடைய சடசடப்பி இடுப்பு வாரில் தொங்கும். குளிராயிருக்கிறது என்று சொல்லிக் கைகளை விரித்துத் தன்னைத் தானே கட்டிப் பிடித்துக் கொள்வார். அல்லது யாராவது சமையற் காரியையோ பணிப்பெண்ணையோ கிள்ளிவிட்டுக் கிளு கிளுத்துக் கிழட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்.
                     ''ஒரு சிமிட்டா எடுத்துக் கொள்'' என்று அந்தப் பெண்களிடம் தனது பொடி டப்பாவைக் காட்டுவார்.
               ஒரு சிமிட்டா எடுத்து மூக்கினுள் இழுத்து உடனே தும்முவார்கள் அந்தப் பெண்கள். தாத்தாவுக்கு ஆனந் தம் தாங்க முடியாது, வயிறு குலுங்கச் சிரிப்பார். - ''உறைந்து போன மூக்குக்கு நல்லது!'' என்று கூவு வார்.
நாய்களுக்குங்கூட மூக்குப்பொடி கொடுப்பார். கஷ் தான்கா தும்மிவிட்டுத் தலையை ஆட்டி ஆட்சேபித்தவாறு விலகிச் செல்லும். ஆனால் பணி வடக்கம் மிகுந்த விலாங்கு தும்முவது சரியல்ல என்று வாலைக் குழைத்துக் கொண்டு நிற்கும். வானிலை அற்புதமாயிருந்தது. காற்று அசங்காது அமைதியாய், பளிங்கு போல் தெளிவாய், மாசு று வற்றிருந்தது. கரிய இரவென்றாலும் கிராமத்தின் வெண் ணிறக் கூரைகளும், புகைபோக்கிகளிலிருந்து எழும் புகை யும், உறைபனிக் கவசமிட்டு வெள்ளி போல் பளபளத்த மரங்களும், வெண்பனிப் பெருக்குகளும் தெட்டத் தெளி வாய்க் கண்ணுக்குத் தெரிந்தன. ஒய்யாரமாய்க் கண்சி மிட்டும் விண்மீன்கள் வானத்தில் வாரியிறைக்கப்பட்டிருந் தன. பால்வெளி மண்டலம் விழா நாளுக்காகக் கழுவிச் சுத்தம் செய்யப்பட்டு வெண்பனியால் தேய்த்து மெரு கிடப்பட்டது போல் கண்ணைப் பறிக்கும்படி எடுப்பாய்த் தெரிந்தது.... * வான்கா பெருமூச்சு விட்டவாறு பேனாவால் மசியைத் தொட்டு, மேலும் எழுதிச் சென்றான்:
                     ''நேற்று என்னை அடித்து நொறுக்கி விட்டார்கள் . முடியைப் பிடித்து எசமான் என்னை வெளி முற்றத்துக்கு இழுத்துச் சென்று கடிவாள வாரால் நையப் புடைத்தார். காரணம் என்னவென்றால் அவர்களுடைய குழந்தையை ஆட்டிக் கொண்டிருக்கையில் தவறிப் போய் நான் தூங்கிவிட்டேன். சென்ற வாரத்தில் ஒரு நாள் எசமானி என்னைக் கெண்டை மீனைச் சுத்தம் செய்யச் சொன்னாள். நான் வால் பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன், உடனே எசமானி அந்த மீனைப்பிடுங்கி அதன் தலையை என் முகத்திலே வைத்துத் தேய்த்தாள். ஏனைய வேலைப் பயிற்சியாளர்கள் என்னைக் கேலி செய்கிறார்கள், மது விடுதிக்குப் போய் வோத்கா வாங்கி வரச் சொல்கிறார்கள், எசமானுடைய வெள்ளரிக் காய்களைத் திருடி வரும்படிக் கூறுகிறார்கள், எசமான் கைக்குக் கிடைப்பதை எடுத்து என்னை அடித்துக் கொல்லுகிறார். சாப்பிட இங்கே எனக்கு ஒன்றும் கிடைப் பதில்லை. காலையில் ரொட்டி தருகிறார்கள், மத்தியானத் துக்குக் கஞ்சியும், இரவில் மீண்டும் ரொட்டியும் கொடுக் கிறார்கள். தேநீரோ, முட்டைக் கோ ஸ் சூப்போ எதுவும் எனக்குக் கிடைப்பதில்லை, யாவற்றையும் அவர்களே தீர்த்துக் கட்டி விடுகிறார்கள். என்னை நடையிலே படுக்கச் சொல்கிறார்கள், அவர்களுடைய குழந்தை கத்தும் போது நான் தூங்கக் கூடாது, அதை ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும். எனது அருமைத் தாத்தா, உனக்குப் புண்ணி யம் உண்டு, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு, கிராமத்துக்குக் கூட்டிச் சென்றுவிடு, என்னால் இனி பொறுக்க முடியாது. தாத்தா, உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன், எந்நாளும் மறக்காமல் உனக்காகப் பிரார்த் தனை செய்வேன், என்னை இங்கிருந்து அழைத்துச் சென்று விடு, இல்லையேல் நான் செத்துத்தான் போவேன்....''
             வான்காவின் உதடுகள் துடித்தன, கரிபிடித்த முட்டிக் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டு செறுமினான் .
          ''உனக்கு மூக்குப்பொடி இடித்துத் தருவேன்'' என்று தொடர்ந்து எழுதினான்.' 'உனக்காக ஆண்டவனை வேண்டிக் கொள்வேன். நான் எதாவது குறும்பு செய்தால் நீ எவ்வளவு வேண்டு மானாலும் என்னை உதைக்கலாம். எனக்கு அங்கே வேலை இருக்காதென நீ நினைத்தால், நான் காரியக் காரரிடம் போய் என் மீது இரக்கங் கொள்ளும்படிக் கேட் பேன், புதைமிதிகளுக்குப் பாலிஷ் போடும் வேலையை எனக்குத் தரும்படி வேண்டுவேன், அல்லது ஃபெத்காவுக்குப் பதில் நான் ஆடு மேய்க்கப் போவேன். எனது அன்புக் குரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை, எனக்கு உயிர் போகிறது. இங்கிருந்து ஓடி விடலாம், நடந்தே கிராமத்துக்கு வந்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனக்குப் புதைமிதியடிகள் இல்லை, கொடுங் குளிர் தாங்க முடியாதே என்று பயந்து கொண்டு சும்மாயிருந் தேன். நான் பெரியவனானதும் உன்னைக் கருத்துடன் கவ னித்துக் கொள்வேன். யாரும் உன்னைத் துன்புறுத்த விட மாட்டேன். நீ இறந்த பின் உன்னுடைய ஆத்மாவுக்காகப் பிரார்த்தனை செய்வேன், என் அம்மாவுக்காகப் பிரார்த் திக்கிறேனே அதே போல செய்வேன் உனக்காகவும்.
‘மாஸ்கோ மிகப் பெரிய ஊர், கனவான்களது வீடு களுக்குக் கணக்கே இல்லை, குதிரைகளும் ஏராளம். ஆனால் ஆடுகள் இல்லை, நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றிச் சாதுவாய் இருக்கின்றன. கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்துச் செல்வதில்லை. கோயி லில் நம்மைப் பாட விடமாட்டேன் என்கிறார்கள். தூண் டில் முட்கள் அப்படியே தூண்டில் நூல்களும் கோல்களும் அடங்கலாய்க் கடையில் விற்கப்படுவதை முன்பு ஒரு தரம் பார்த்தேன் நான். எந்த மீன் வேண்டுமானாலும் பிடிப் பதற்கு ஏற்றவையாய் விதம் விதமாய் நன்றாய் இருந்தன, ஒரு பூடு எடையுள்ள பெரிய தோப்பா மீனைத் தாங்கக் கூடிய ஒன்றுங்கூட இருந்தது. பண்ணை வீட்டில் எசமான் வைத்திருக்கிறாரே அந்த மாதிரி துப்பாக்கியும் இன்னும் பல விதமான துப்பாக்கிகளும் கடைகளில் விற்கிறார்கள், நான் பார்த்தேன். ஒவ்வொன்றும் நூறு ரூபிளுக்குக் குறை யாது. கசாப்புக் கடைகளில் காட்டுக் கோழிகளும், உள் ளான்களும் முயல்களும் இருக்கின்றன. ஆனால், கடையில் இருப்பவர்கள் இவை எங்கே சுடப்பட்டவை என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

                 ''அருமைத் தாத்தா, பண்ணை வீட்டில் கிறிஸ்மஸ் மரம் வைக்கையில் எனக்கு ஒரு தங்கக் காய் எடுத்துப் பச்சைப் பெட்டியில் பத்திரமாய் வை. திருமதி ஓல்கா ? இக்னாத்யெவ்னாவிடம் கேட்டு வாங்கு, வான்காவுக்கு என்று சொல்லு.''

              நெடுமூச்சு விட்டு மீண்டும் சன்னல் கண்ணாடியை உற்றுப் பார்த்தான் வான்கா. பண்ணை வீட்டுக் கனவான் களுக்குக் கிறிஸ்மஸ் மரம் கொண்டு வருவதற்காகப் பேரனையும் அழைத்துக் கொண்டு தாத்தா புறப்பட்டுச் சென்றது அவனுக்கு நினைவு வந்தது. ஆகா, அப்போதெல் லாம் காலம் எவ்வளவு இன்பகரமாய் இருந்தது! தாத்தா கெக்கலித்துக் கொள்வார், உறைபனி மூடிய தோப்பும் கெக்கலிக்கும், இதைப் பார்த்து வான்காவும் கெக்கலித்துக் கொள்வான். பிர் மரத்தை வெட்டத் தொடங்குமுன் தாத்தா புகைக் குழாயைப் பற்ற வைத்துப் புகை பிடிப் பார், ஒரு சிமிட்டா பொடி எடுத்து மூக்கில் வைத்து நெடு நேரம் உறிஞ்சுவார், குளிரில் நடுங்கும் வான்காவைப் பார்த்து வாய்விட்டுச் சிரிப்பார்.... உறைபனிக் கவசம் பூண்ட பிர் மரங்கள் தம்மில் சாவுக்காகக் குறிக்கப்பட்டி ருப்பது யாராய் இருக்குமோ என்று ஆடாமல் அசையாமல் காத்திருந்தன. அப்பொழுது திடுமென ஒரு முயல் வெண் பனிப் பெருக்கைத் தாவி அம்பு போல் பாய்ந்து ஓடிற்று... தாத்தா இருப்பு கொள்ளாமல் துடிதுடித்துக் கத்துவார் :

                ''நிறுத்து அதை! நிறுத்து அதை!... நிறுத்து! ஓ! குட்டை வால் சைத்தான்!''

                  மரத்தைத் தாத்தா பண்ணை வீட்டுக்கு இழுத்து வருவார், அவர்கள் அதைச் சிங்காரிக்கத் தொடங்குவார் கள்.... திருமதி ஓல்கா இக்னாத்யெவ்னாதான்--வான்கா வுக்கு மிக்கப் பிடித்தவர்- யாவரையும்விட முன்னிலை யில் நின்று ஓடியாடி வேலை செய்வார். வான்காவின் தாயா கிய பெலகேயா உயிரோடு இருந்த காலத்தில், பண்ணை வீட்டில் அவள் வேலை புரிந்து வந்த போது ஓல்கா இக்னாத் யெவ்னா வான்காவுக்கு மிட்டாய்த் தருவது வழக்கம். அவ னுக்கு அவர் எழுதவும் படிக்கவும் நூறு வரை எண்ண வும் சொல்லிக் கொடுத்து மகிழ்வார், நடனமாடுவதற்குக் கூடக் கற்றுத் தந்தார். ஆனால் பெலகேயா இறந்த பிறகு, அனாதையாகிவிட்ட வான்கா பின்கட்டுச் சமையலறைக்கு, அவனுடைய தாத்தாவிடம் அனுப்பப்பட்டு விட்டான். அங்கிருந்து மா ஸ்கோவுக்குப் புதைமிதி தயாரிப்பாளர் அல்யாஹினிடம் கொண்டுவந்து விடப்பட்டான்......

           ''தாத்தா, உடனே புறப்பட்டு வா, என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு'' என்று மேலும் எழுதினான் வான் கா.' 'ஏசுநாதர் அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு, உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
                அனாதைச் சிறுவன் நான், துன்புறுகிறேன், எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள், எந்நேரமும் நான் பசியாய் இருக்கிறேன். துன்பம் தாங்க மாட்டாமல் எந்நேரமும் இங்கு நான் அழுது கொண் டிருக்கிறேன். புதைமிதி அச்சுக் கட்டையால் எசமான் ஒரு நாள் என் மண்டையில் அடித்தார். அப்படியே கீழே விழுந்த நான் மீண்டும் எழுத்திருக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இங்கு எனது நிலை நாயினும் கேடான தாய் இருக்கிறது.... அல்யோனாவுக்கும் ஒற்றைக் கண் எகோ ருக்கும் கோச் வண்டிக்காரருக்கும் என் அன்பைத் தெரிவிக்கிறேன். என்னுடைய கன்சர்ட்டினா இசைத் துருத்தியை யாரிடமும் கொடுத்து விடாதே. உன் னுடைய பேரன் இவான் மூக்கவ். அருமைத் தாத்தா , வா என்னிடம்.''

        காகிதத்தை நான்காய் மடித்தான், ஒரு கப்பேக் கொடுத்து அதற்கு முந்திய தினம் அவன் வாங்கி வைத் திருந்த உறையினுள் அதைப் போட்டு மூடினான்..... பிறகு சற்று சிந்தனை செய்துவிட்டு, பேனாவால் மசியைத் தொட்டு எழுதினான்: 'தாத்தா''-தலையைச் சொறிந் கொண்டு மீண்டும் சிந்தித்துவிட்டு எழுதினான் :

            “கன்ஸ்தன்தீன் மக்காரிச், கிராமம்.'' 
        யாரும் குறுக்கிட்டுத் தன்னை எழுத விடாமல் தடுக்க வில்லையென மனம் மகிழ்ந்தவனாய்க் குல்லாவை எடுத்துத் தலையில் போட்டுக் கொண்டான். கோட்டு போட்டுக் கொள்ளாமலே வெறுஞ் சட்டையோடு தெருவுக்கு ஓடினான்.
     முந்திய நாளன்று அவன் விசாரித்த போது, கசாப்புக் கடையில் இருந்தவர்கள் கடிதங்களைத் தபாற் பெட்டி களில் போட வேண்டும், இந்தப் பெட்டிகளிலிருந்து அவை மூன்று குதிரைகளையும் குடிமயக்கம் கொண்ட வண்டிக் காரர்களையும் கண கணத்து ஒலிக்கும் மணிகளையுமுடைய கோச் வண்டிகள் மூலம் உலகெங்கும் அனுப்பப்படுகின்றன என்பதாய்ச் சொல்லியிருந்தார்கள். யாவற்றிலும் அரு காமையிலிருந்த தபாற் பெட்டியிடம் ஓடி மதிப்பிடற் கரிய தனது கடிதத்தை அதன் இடுக்கினுள் போட்டான்..
        இதன் பின் ஒரு மணி நேரத்துக்கெல்லாம் இனிய நம் பிக்கைகள் இதமாய்த் தட்டிக் கொடுத்து அவனைத் தூங்க வைத்தன.... அவனுடைய கனவில் ஒரு கணப்படுப்பு தோன் றியது. கணப்படுப்புப் பரணில் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த அவனுடைய தாத்தா அந்தக் கடிதத்தைச் சமையற்காரிகளுக்குப் படித்துக் காட்டி னார்...... கணப்படுப்புக்கு முன்னால் விலாங்கு தனது வாலைக் குழைத்துக் கொண்டு மேலும் கீழுமாய் நடை போட் டது.....
1886

Comments