Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 139


அழகியசிங்கர்  



ஒரு போதும்





பவித்ரன் தீக்குன்னி 

மொழிபெயர்ப்பு : என்.டி.ராஜ்குமார்


அம்மாவும் அக்காவும் குடிசையும் 
தூக்கத்தில் ஆழ்ந்திருந்தபோது 
மண்ணெண்ணை மணக்கின்ற 
இருட்டிலிருந்து 
எழுந்துவந்த குழந்தை 
இறைவனிடம் கேட்டது 
ஒருபோதும் தேயாத ஒரு பென்சில் 
வேண்டுமென்று 
இறைவனும் நல்ல ஒரு பென்சிலை 
கொடுத்துவிட்டுச் 
சொன்னான் 
பத்திரமாக வைத்துக்கொள் 

ஒருபோதும் எழுதக்கூடாது.



நன்றி :  பவித்ரன் தீக்குன்னி கவிதைகள் - மொழிபெயர்ப்பு என்.டி.ராஜ்குமார் - வெளியீடு : புது எழுத்து - 3/167 ஸ்ரீராமுலு நகர், காவேரிப்பட்டிணம் 636 112, கிருஷ்ணகிரி மாவட்டம் - பின்கோடு : 9842647101 - பக் : 80 - விலை : 75 - வெளியான ஆண்டு : 2010




Comments