Skip to main content

Posts

Showing posts from July, 2018

நீங்களும் படிக்கலாம் - 44

அழகியசிங்கர்  முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள்... டாக்டர் ஜெ பாஸ்கரின் 'அது ஒரு கனாக் காலம்,' என்ற புத்தகத்தை முழுவதும் படித்துவிட்டேன்.  படித்துக் கொண்டிருக்கும்போது  இது சம்பந்தமான வேறு சில புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.  கடந்த சில ஆண்டுகளாக எனக்கு எழுத்தாள நண்பர்களின் பல புத்தகங்கள் படிக்கக் கிடைக்கின்றன.  ஆனால் என்னுடைய நல்ல பழக்கம் அந்தப் புத்தகங்களை உடனே படிப்பதில்லை.   அது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது.  ஏன்? உண்மையில் இந்தக் கேள்வியை பாஸ்கரன் புத்தகம்தான்  என்னைக் கேட்டது. இந்தப் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டதும் சில மாதங்களுக்குமுன் 'யானை பார்த்த சிறுவன்,' என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்த சுந்தரபுத்தன் புத்தகம் ஞாபகத்திற்கு வந்தது.   மேலும் மாதவ பூவராக மூர்த்தியின், 'இடம், பொருள், மனிதர்கள்,' என்ற புத்தகம் ஒன்றையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஏன் என்னுடைய புத்தகமான  'திறந்த புத்தகத்தை'ப் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். டாக்டரின் புத்தகத்துடன் ஏன் இந்த மூன்று புத்தகங்களைய

தினமணியில்.......

அழகியசிங்கர் என் ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீதர்-சாமா எழுதிய  மொத்த சிறுகதைகளையும்  'வழங்க வளரும் நேயங்கள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பு விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். 161 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பின் விலை ரூ.120.  இன்றைய தினமணி இதழில் இத் தொகுப்பைப் பற்றிய சிறிய விமர்சனம் வந்துள்ளது.  அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். தினமணி இதழுக்கு என் நன்றி உரித்தாகும்.      வழங்க வளரும் நேயங்கள் - ஸ்ரீதர்-சாமா; பக்.161; ரூ.120, விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட் மெண்ட்ஸ் , 7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை - 600033.        தமிழ் இலக்கியத்தில் சிறு கதை என்பது சமூகத்தின் நிலையை சுருக்கமாக விளக் கும்  தனி இலக்கியமாகவே இருந்துவருகிறது.    இந்நூலாசிரியர் சமூகத்தின் நிலையை  கண்ணாடி போல பிரதிபலிக்க தமது சிறுகதைகளைப் பயன்படுத்தியுள்ளார்.        நூலில் இடம் பெற்றுள்ள அனைத்துகதைகளும்  யதார்த்தமான வாழ்க்கையைப்  பிரதிபலிக்கின்றன. கதைக்களங்களில் நம்மை நிறுத்தி வைக் கின்றன.   நுனிப்புல் மேயும் எழுத்தாளர்களையும்,   சடங் குகளாக நடைபெறும் பாரா

பத்து கேள்விகள் பத்து பதில்கள் .....18

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி பேட்டி அளிக்கிறார் . இந்தத் தலைப்பில் இதுவரை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியையும் சேர்த்து மொத்தம்  18  படைப்பாளிகளைப்  பேட்டி எடுத்துள்ளேன்.  எல்லாம் எளிமையான கேள்விகள் எளிமையான பதில்கள்.  இன்னும் பலரை பேட்டி எடுக்க சித்தமாக உள்ளேன்.  ஒரே ஒரு கேள்விதான் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டேன்.  அதற்கே அவர் நீண்ட பதிலை அளித்துள்ளார்.  புதுக்கோட்டையில் பல்லாயிரகணக்கான புத்தகங்களை வைத்து நூல்நிலையம் ஒன்றை பல ஆண்டுகளாக திறமையாக நடத்தி வருகிறார்.  அவர் அனுபவத்தைக் கேட்டு ரசிப்போம்.  அழகியசிங்கர்

நீங்களும் படிக்கலாம் - 43

பாதுகாக்க வேண்டிய புத்தகம் அழகியசிங்கர் சில புத்தகங்கள் மூலம் நாம் சிலவற்றை அறிந்து கொள்கிறோம்.  சில புத்தகங்கள் மூலம் நாம் புத்தக ஆசிரியருக்கு அறிவுரை வழங்கலாம் என்று நினைக்கிறோம்.  இன்னும் சில புத்தகங்களுக்கு நாம் அறிவுரையும் கூற முடியாது. படிக்காமலும் விட்டுவிடவும் தோன்றும். üமறுதுறை மூட்டம்ý என்கிற நாகார்ஜ÷னன் புத்தகத்தை திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  சரி அது ஒரு கதைப் புத்தகமா?  இல்லவே இல்லை.   அது ஒரு நேர்காணல் புத்தகம்.  அதில் கூறப்பட்ட பல்வேறு தகவல்கள்தான் என்னை ரொம்பவும் யோசிக்க வைக்கிறது.   இப் புத்தகத்தில் நான் பல இடங்களில்  கோடுகள் போட்டுக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.   நான் இப் புத்தகத்தில் கோடு போட்ட பகுதியிலிருந்து எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். ஐந்தாம் பக்கத்தில் அவர் பேட்டியில் அவர் சொல்ற விஷயம். 'உலகெங்கும் ஜாதி மத இன - தேசிய அடையாளங்களை, பாகுபாடுகளைத் தாண்டி நான் சம்பாதித்த  நண்பர்கள்தான் இருக்காங்க.'  ஆனா இந்த நண்பர்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பும் இல்லை.  பக்கம் 21ல் கூறியுள்ள

உ.வே.சாவும் பதிப்புப் பணியும்

உ.வே.சாவும் பதிப்புப் பணியும் - முனைவர் சரவணன் ஆற்றிய உரையின் கடைசிப் பகுதி - உரையாற்றுபவர் வ வே சு ஜாபர்கன்பேட்டையில் உள்ள 7 ராகவன் காலனி கிளை நூலகத்தில்  28.06.2018 அன்று நடந்த முதல் கூட்டம்.

திருக்குறள் சிந்தனை 25

அழகியசிங்கர் சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.  இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர் பெருமான் என்ன சொல்கிறார் என்பதை அறியவும் ஆவலாக உள்ளேன்   சமீபத்தில் நான் வாங்கிய புத்தகம் ராஜாஜியின் வள்ளுவர் வாசகம் என்ற புத்தகம்.  ராஜாஜி அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதுகிறார் : 'முனிவர் எழுதிய பாட்டுகளை இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் படித்து, அவற்றில் நான் கண்ட பொருளை எழுதுகிறேன்.  குற்றங்கள் பல இருக்கும்.  பெரியோர்கள் மன்னிப்பார்கள்.' என்ன தன்னடக்கம் பாருங்கள் ராஜாஜிக்கு.   இந்த இடத்தில் நானும் அதுமாதிரியே சொல்ல வருகிறேன். நான் பல திருக்குறள் உரைகளை வைத்திருப்பதால் ஒவ்வொருவரும் ஒரு குறளுக்கு என்ன பொருள் எழுதியிருக்கிறார் என்று ஆராய்வதில் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்.   ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. இங்கே தெளிவாகவே நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இப்படிக் கூறுகிறார் : ஐந்து இந்திரிய

உ.வே.சாவும் பதிப்புப் பணியும் - முனைவர் சரவணன் ஆற்றிய உரையின் தொடர்ச்சி 2.

ஜாபர்கன்பேட்டையில் உள்ள 7 ராகவன் காலனி கிளை நூலகத்தில்  28.06.2018 அன்று நடந்த முதல் கூட்டத்தில் முனைவர் சரவணன் அவர்கள் உ.வே.சாவும் பதிப்புப் பணியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதன் முதல் பகுதியை 22ஆம் தேதி வெளியிட்டோம்.  இன்று இரண்டாவது பகுதியை அளிக்கிறோம்.

திருக்குறள் சிந்தனை 24

அழகியசிங்கர் ஒவ்வொரு முறை திருக்குறளைப் படிக்கும்போது மனதிற்குள் குறள் என்ன சொல்ல வருகிறது என்று நினைத்துக்கொள்வேன்.  ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல பல முறை குறள் நமக்கு எதோ தகவலை அளித்துக்கொண்டிருக்கிறது.  எளிமையான ஒன்றரை அடிகளில் முடிந்து விடுவதில்லை அது.  இதோ இந்தக் குறளைப் பார்ப்போம். உரனென்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. ஐம்பொறிகள் என்னும் யானைகளை அறிவு என்னும் அங்குசம் கொக்ஷ்;டு அடக்க வல்லவன் எவனோ அவன் எல்லாவற்றையும் துறந்தவன்.  அவன்தான் இந்த நிலத்திற்கு ஏற்ற ஒப்பற்ற உரமாகவும் இருக்க வல்லவன்.  நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்.  ஆனால் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது என்பது நம்மால் இயலாது.   உதாரணமாக ஐம்புலன்களின் ஒன்றான வாயை நம்மால் அடக்க முடிகிறதா?    வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலுக்குப் போய் உருளைக் கிழங்கு போன்டா சாப்பிடாமல் இருக்க வேண்டுமென்று நினைப்போம்.  ஆனால் கால்கள் தானாகவே அங்குச் சென்று போன்டா வை ஒரு பிடிபிடிப்போம்.  அதே மாதிரி நாம் பேசியே எத்தனைப் பேர்களைப் புண் படுத்துகிறோம்.  அதனால்தான் சொல்கிறேன் திருவள்ளுவர் எவ்

உ.வே.சாவும் பதிப்புப் பணியும் - முதல்வர் சரவணன் ஆற்றிய உரை.

உ.வே.சாவும் பதிப்புப் பணியும் - முதல்வர் சரவணன் ஆற்றிய உரை. அழகியசிங்கர்          ஜாபர்கன்பேட்டையில் உள்ள 7 ராகவன் காலனி கிளை நூலகத்தில்  28.06.2018 அன்று நடந்த முதல் கூட்டத்தில் சரவணன் அவர்கள் உ.வே.சாவும் பதிப்புப் பணியும் என்ற தலைப்பில் உரை நிகழ்ந்தினார். அதன் முதல் பகுதியை இங்கு அளிக்கிறோம்.

மூகாம்பிகை வளாகத்தில் 13 கூட்டங்கள் நடத்தி விட்டேன் தெரியாமல் 12 என்று எழுதி விட்டேன்..

அழகியசிங்கர் இதுவரை 13 கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  அதைவிட முக்கியம் ஒவ்வொரு கூட்டமும் கவனத்தில் வைத்தக்கொள்ளும்படி  அமைவது.   நேற்று நடந்த தமிழ் மணவாளன் கூட்டம் சிறப்பாக இருந்ததோடல்லாமல் ஒன்றரை மணி நேரம் போய்க்கொண்டிருந்தது.  வைதீஸ்வரனும் கூட்டத்திற்கு வந்திருந்தார். 12வது கூட்டம் என்பதால் எனக்குப் பிடித்த இனிப்பான பாதுஷாவை வாங்கிக்கொண்டு வந்தேன்.  எல்லோருக்கும் இனிப்பை வழங்கினேன்.  ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆடியோ நிச்சயமாக உள்ளது.  கீழ்க்கண்டவாறு நடந்த கூட்டங்களை குறிப்பிட விரும்புகிறேன். 1. ஜ÷ன் 2017  நடந்த கூட்டம் - திருப்பூர் கிருஷ்ணன் - ஜானகிராமனும் நானும்  2. ஜøலை 2017 நடந்த கூட்டம் - பெருந்தேவி - புதுமைப்பித்தனும் நானும் 3. ஆகஸ்ட் 2017ல் நடந்த கூட்டம் - கடற்கரை - ஏ கே செட்டியாரும் நானும். 4. செப்டம்பர் 2017 - ஓஷோவும் நானும் - செந்தூரம் ஜெகதீஷ் 5. அக்டோபர் 2017 - சந்தியா நடராஜன் - திருவாசகமும் நானும் 6. நவம்பர் 2017 - ராஜேஸ் சுப்பிரமணியன் - லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும் 7. டிசம்பர் 2017 - தஞ்சாவூர் கவிராயர் - தஞ்சை ப்ராகாஷ÷ம் நானும

பன்னிரண்டாவது கூட்டம் இந்த வளாகத்தில்

அழகியசிங்கர்  இன்று மாலை 6 மணிக்கு வைதீஸ்வரனும் நானும் என்ற தலைப்பில் தமிழ் மணவாளன் அவர்கள் பேசுகிறார்கள்.   இதுவரை ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் நடக்கும் 12வது  கூட்டம் இது.. முகவரி இதுதான் :     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 ஏற்கனவே 11 கூட்டங்களையும் பதிவு செய்திருக்கிறேன்.  இரண்டு கூட்டங்களின் ஆடியோ உள்ளது.  மீதி கூட்டங்களின் ஆடியோ வீடியோ எடுக்கப்பட்டிருக்கின்றன.  இதோ இந்தக் கூட்டத்தையும் பதிவு செய்ய உள்ளோம்.  இனி வரும் கூட்டங்களில் கூட்டத்தின் தன்மையை மாற்றி யோசிக்கலாம் என்று நினைக்கிறோம்.   வைதீஸ்வரனின் முழுக் கவிதைத் தொகுதியை வாங்கி இக் கூட்டத்தை சிறப்பு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.  பிரதியை வைத்துத்தான் இதுவரை கூட்டம் நடைபெற்றிருக்கிறது.  இந்த முறை மட்டும் பிரதியுடன் அதை எழுதிய ஆசிரியரின் வருகையும் உள்ளது.    அன்புடன் அழகியசிங்கர்           9444113205

திருக்குறள் சிந்தனை 23

அழகியசிங்கர் திருக்குறளை எடுத்துத் திரும்பவும் படிக்கும்போது அது வேற உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று விடும் என்பது உண்மை. இப்போது 23வது குறளைப் பார்க்கலாம். இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.   இங்கே வள்ளுவர் பெருமை பிறங்கிற்று உலகு என்ற வரியைப் பயன்படுத்துகிறார்.  பிறங்கிற்று என்று படிப்பதற்கே நன்றாக இருக்கிறது. ஈண்டு அறம் பூண்டவர் யார்?  அந்தத் தகுதி நம்மில் யாருக்கெல்லாம் இருக்கிறது.  அப்படியெல்லாம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா?  காண முடியுமா?  என்ற கேள்விகள் எழுகின்றன. இருமை வகைதெரிந்து என்பதை நாமக்கல் கவிஞர் பிறப்பு இறப்பு என்ற இரண்டு தத்துவங்கள் என்கிறார்.  ஆனால் நாவலரோ இயற்கையாக உள்ள நன்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகள் என்கிறார்.   பிறப்பு இறப்பு என்கிற தத்துவத்தை உணர்ந்து அல்லது நண்மை தீமை என்ற இரண்டு பாகுபாடுகளை உணர்ந்து தர்ம வாழ்க்கை நடத்தும் மகான்காளல்தான் இந்த உலகம் சிறப்படைகிறது. நம்மில் சிலர்தான் மேலே குறிப்பிடுகிற மகான்களாக இருக்க வாய்ப்பு உண்டு என்று தோன்றுகிறது. நான் பெரும்பாலும் உதாரணம் கொ

ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்

அழகியசிங்கர்  வரும் சனிக்கிழமை (21.07.2018) அன்று மாலை 6 மணிக்கு முனைவர் தமிழ்மணவாளன் வைதீஸ்வரன் கவிதைகள் ஆன மனக்குருவி என்ற புத்தகத்தைப் பற்றி பேச உள்ளார்.  1961லிருந்து 2017 வரை எழுதப்பட்ட 366 கவிதைகளின் தொகுப்பு நூல் இது.  வைதீஸ்வரன் வரைந்துள்ள ஓவியங்களும் இப் புத்தகத்தில் காணலாம்.  488 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450.  ரூ.200க்கு இப் புத்தகத்தை வைதீஸ்வரன் கையெழுத்துப் போட்டு கொடுக்க உள்ளார்.   முதன் முறையாக ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிற கூட்டத்தில் வைதீஸ்வரனும் நேரிடையாகக் கலந்து கொள்கிறார்.  தமிழ்மணவாளன் அனுப்பிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

வருபவர்களும் பேசுபவர்களும்....

வருபவர்களும் பேசுபவர்களும்.... அழகியசிங்கர் விருட்சம் இலக்கியச் சந்திப்பு என்ற பெயரில் 39வது கூட்டம் நடைபெற உள்ளது வரும் சனிக்கிழமை அன்று. கடந்த 12 மாதங்களாக ஸ்ரீராம் குரூப் அலுவலகத்தில் இக் கூட்டம் நடைபெற்று வருகிறது.   முதல் கூட்டத்தை திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி ஜானகிராமனும் நானும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அப்போது கூட்டம் ஆரம்பித்தபோது எந்தத் தலைப்பில் இக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் இருந்தது.  பின் தானாகவே ஒரு எழுத்தாளரைப் பற்றி இன்னொருவர் பேசுவது போல் கூட்டத்தை மாற்றிக் கடந்த 12 மாதங்களாக நடத்திக்கொண்டு வருகிறேன்.  வருகிறேன் என்று சொல்வதை விட வருகிறோம் என்று சொல்வது சரியாக இருக்கும்.  பேசுவோர், கூட்டத்திற்கு வருபவர்கள் என்று எல்லோரும் சேர்ந்துதான் இதை நடத்துகிறோம்.   முதலில் இக் கூட்டத்திற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன்.  இப்போது அந்த யோசனை போய்விட்டது.  எல்லாக் கூட்டங்களையும் ஆடியோவிலும் வீடியோவிலும் பதிவு செய்து கொண்டு வருகிறோம்.   இக் கூட்டம் நடத்த எனக்கு எப்போது
                                      விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 39                     வைதீஸ்வரனும் நானும்  சிறப்புரை :    முனைவர் தமிழ்மணவாளன் இடம் :      ஸ்ரீராம் குரூப் அலுவலகம்     மூகாம்பிகை வளாகம்     சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே     ஆறாவது தளம்      மயிலாப்பூர்     சென்னை 600 004 தேதி 21.07.2018 (சனிக்கிழமை) நேரம் மாலை 6.00 மணிக்கு பேசுவோர் குறிப்பு : முனைவர் பட்டம் பெற்றவர்.  தமிழில் குறிப்பிடப்பட வேண்டிய கவிஞர்.  நாலைந்து கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. அனைவரும் வருக, அன்புடன் அழகியசிங்கர் 9444113205

பிரமிளும் பிரமிளும்

அழகியசிங்கர் ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரமிள் படைப்புகள் நூல்கள் வெளியீட்டு விழாவில் பிரமிளைப் பற்றி ஒரு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசினேன். அதிகப் பேர்கள் பேசப்போவதால் எல்லோரையும் ஐந்து நிமிடங்கள் பேசும்படி கூறினார்.  விழா ஆரம்பிக்கும் முன்னதாக பேசுபவர்கள் சிலரைக் கூப்பிட்டு பிரமிள் புத்தகம் ஒவ்வொன்றாகக் கொடுத்தார்.  மொத்தம் ஆறு தொகுதிகளாக பிரமிள் படைப்புகள் முழுவதும் கொண்டு வந்துள்ளார் கால சுப்பிரமணியம்.   நீதியரசர் மகாதேவன் கடைசி வரை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.   இப்போது 21 வருடங்களுக்கு முன் உள்ள கதைக்குப் போவோம். அப்போது நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  பிரமிள் என்னைப் பார்க்க வருவார்.  பொதுவாக நாங்கள் சந்திக்கும் இடங்கள்.  மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமன் கோயில், ஜே கிருஷ்ணமூர்த்தியின் பவுண்டேஷன், என்னுடைய அலுவலகக் கான்டின்.   பிரமிள் சரியாக மதியம் நேரம் வருவார்.  நேராக கான்டீன் போவோம்.  என் அலுவலக கான்டீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ஒரு முறை என் கவிதைப் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார்.  நிச்சய

20 ஆண்டுகளுக்கு முன்னால்.....

அழகியசிங்கர் 20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னை ஜெயா டிவி பேட்டி எடுத்தது. இன்று பொதிகை டிவி. காலை 6.30 மணிக்குப் போய்விட்டேன். ஜெய டிவியில் பேட்டி எடுக்கும்போது மேக்கப் போடவில்லை. வேர்த்து விறுவிறுக்க உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் படப்படப்பாக இருந்தேன். நான் பேசிவிட்டு வந்தாலும் நிறையா வந்துக்களைப் பயன்படுத்தினேன். இன்று பொதிகை டிவியில் ஒளிபரப்பு ஆவதற்கு முன் லைட் மேக்கப் போட்டார்கள். நேரிடையாகப் பேசினேன். எந்தப் படப்படப்பும் இல்லை. பேசும்போது கவனமாக வந்துக்களைக் கூறவில்லை. நான் எழுதிய கவிதைகள், கதைகள், கட்டுரைகள் நவீன விருட்சம் பத்திரிகை என்று எல்லாவற்றையும் பேசினேன். அடுத்த வாரம் விங்க் கிடைக்கும். முகநூலில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.

நீங்களும் படிக்கலாம் தொகுதி 2

அழகியசிங்கர் இந்தப் பெயரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீங்களும் படிக்கலாம் 1 என்ற தொகுதியை திருவாளர் அழகியசிங்கர் அவர்கள் கொண்டு வந்தார்.  அத் தொகுதியில் 20 புத்தகங்களைப் பற்றி எழுதியிருப்பதாகக் கூறினார்.  கிட்டத்தட்ட 3000 பக்கங்கள் வரை படித்து எழுதியதாகவும் கூறினார்.   3000 பக்கங்கள் படித்தாலும் ஒவ்வொரு  புத்தகத்தைப் பற்றி எழுதும்போதும் இன்னொரு முறை என்று திரும்பவும் படிக்கும்படி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவது என்பது சிரமமானது என்று அசோகமித்திரன் அவர்கள் இவரிடம் குறிப்பிட்டதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகம் எதற்குப் பிரயோசனம் என்று அழகியசிங்கரிடம் கேட்டபோது அவருக்குக் கோபம் வந்துவிட்டது.  "யாராவது என் புத்தகத்தைப் படித்துவிட்டு அதில் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் ஒன்றாவது வாங்கினால் எனக்கு அது பெருமை இல்லையா?" என்று என் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் சொல்வது உண்மைதான்.  இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து  அழகியசிங்கரின்  நீங்களும் படிக்கலாம் புத்தகத்தைப் படிக்க நேர்ந்தால்

திருக்குறள் சிந்தனை 22

அழகியசிங்கர் தினமும் ஒரு குறள் படிக்கலாமென்று ஆரம்பித்தேன்.  ஆனால் முடியவில்லை.  ஒரு குறளைப் படிக்க ஐந்து நிமிடம் கூட ஆகாது.  ஒரு முறை அல்ல.  இன்னொரு முறையும் படிக்கலாம்.  உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்கலாம். இந்தக் குறளைப் பார்க்கலாம். துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. உயிரோடு இருக்கும்போதே பல்வேறு பற்றுகளை எல்லாம் துறந்து  வாழக்கூடியவர்களின் சிறப்பை அளவிட்டுக் கூற முடியாது என்கிறார். அப்படிக் கூற முற்பட்டால் பற்றுகளையெல்லாம் தானாகவே விட விரும்பாதவர்களின் சாதாரணமானவர்களின் மரண எண்ணிக்கையை விட பற்றுகளை விட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார். இந்த இடத்தில் திருவள்ளுவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்.  அதாவது பல்வேறு பற்றுகளை எல்லாம் துறந்து வாழ்கிறவர்கள் இந்தக் கலிகாலத்தில் இருக்கிறார்களா?  திருக்குறள் காலத்தில் பல்வேறு பற்றுகளைத் துறந்த மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.  இப்போது பார்ப்பதே அரிது.   இதற்கு இணையாக நவீன கவிதை என் கண்ணி6ல் தட்டுப்படவிலலை  ஆனால் த

மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்வு

அழகியசிங்கர் நேற்று மேலும் விமர்சன விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் விமர்சனத்திற்காக  மேலும் சிவசு விருது வழங்கி வருகிறார்.  தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. சிறப்பாகவே இக் கருத்தரங்கம் நடந்தது.  50 பேர்களுக்கு மேல் வந்திருந்தார்கள்.   பிரதியியல் திறனாய்வில் தொல்காப்பிய பாதிப்புகள் என்ற தலைப்பில் முதல் அமர்வும், தமிழவன் நாவல்கள் தேவைப்படுத்தும் புதிய விமர்சனங்கள் என்ற தலைப்பில் இரண்டாவது அமர்வும், அமைப்பியல் தாக்கத்தோடு வரும் பிற விமர்சனப் போக்குகள் என்ற மூன்றாவது அமர்வும் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. பூக்கோவும் தொல்காப்பியரும் என்ற தலைப்பில் ராஜா அவர்களும், குறியியலும் தொல்காப்பிய கவிதையியலும் என்ற தலைப்பில் பெ மாதையன் அவர்களும் பேசியதை கூர்ந்து கவனித்தேன்.  தொல்காப்பியத்தைப் பற்றி நான் பெரிதும் அறிந்திருக்கவில்லை.  ஆனால் அமைப்பியலை முன்னிறுத்தி விமர்சனம் செய்திருப்பதை நான் அறிந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே நான் அமைப்பியல் கோட்பாடு குறித்து தமிழவன், நாக

திருக்குறள் சிந்தனை 21

திருக்குறள் சிந்தனை 21 அழகியசிங்கர் நேற்று படிக்க முடியவில்லை  திருக்குறளை.  ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சில புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன்.  அதைப் பற்றியும் எழுதுவதாக உள்ளேன்.  ஏன் திருக்குறளைப் படிக்கிறேன் என்றால், குறள் எதாவது சொல்கிறது.  அதைப் படித்து படித்து நானும் எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.  நீத்தார் பெருமை என்ற இந்த அத்தியாயத்தில் பத்து குறள்கள் இருக்கின்றன.  நாவலர் உரையில் துறந்தார் சிறப்பு என்று எழுதியிருக்கிறது.   குறளை இங்கு பார்ப்போம். ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு.   நல் ஒழுக்கத்தையே தழுவி வாழும் உலகப் பற்றை நீக்கிய சான்றோர்களின் பெருமையை நூல்களும் போற்றி புகழும்.   கவனிக்க வேண்டிய வரி 'வேண்டும் பனுவல் துணிவு.' உலகப் பற்றை நீக்கிய சான்றோர்கள் நம்மிடையே இருக்கிறார்களா என்ற கேள்வி ஏற்படாமல் இல்லை.  அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் நூல்கள் வழியாக அவர்களைப் போற்றிப் பாராட்டாமல் இருக்க முடியாது. எப்போதாவது... என்ற வைதீஸ்வரன் கவிதைதான் இந்தக் குறளைப் பிரதிபலிப்பதாகத் தோன்றுகிறது.  இதோ

திருக்குறள் சிந்தனை 20

அழகியசிங்கர்                                                                                                               இரண்டு நாட்களாரய் நான் ஜானகி எம்ஜிஆர் கல்லூரி புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டேன். பலரும் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவிகள் தமிழ் புத்தகங்களை வாங்கவில்லை.  நான் பலரிடம் விருட்சம் பத்திரிகையைக் கொடுத்து கவிதைகளை வாசிக்கச் சொன்னேன்.  யாருமே சரியாக உச்சரித்து கவிதை வாசிக்கவில்லை. மேலும் என் பத்திரிகை புது அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. உண்மையில் அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை.  எதிர்காலத்தில் யார் இனி தமிழ்ப் புத்தகங்கள் படிப்பார்கள் என்ற கிலி உணர்வு ஏற்பட்டது.   புத்தகங்கள் விற்காவிட்டாலும் எனக்கு புத்தகங்களை எடுத்துக்கொண்டு காரில் சென்ற அனுபவம் கிடைத்தது.  நான் கல்லூரியில் படிக்கும்போதுதான் பாரதியார் கட்டுரைகளைப் படித்தேன். தாம்பரத்திலிருந்து மாம்பலம் வரும்ரை மின்சார வண்டியில் தூரன் கொண்டு வந்த பாரதியார் கட்டுரைகளை வாசிப்பேன்.  அதே நினைவோடு வந்ததால் நான் எப்போதும் வாசிக்க விரும்பும் திருக்குறளை இப்போதுதான் வாசிக்கிறேன். நீர்இன்று அமையா

'மேலும்' விமர்சன விருது

அழகியசிங்கர் பொதுவாக விமர்சர்களை யாரும் கண்டுகொள்வதில்லை.  ஆனால் üமேலும்ý ஆசிரியர் சிவசு ஒவ்வொரு ஆண்டும் விமர்சகர்களுக்குக் கௌரவம் அளிக்கிறார்.  இந்த ஆண்டு விமர்சன விருது பெறுபவர்கள்: க வை பழனிச்சாமி, வாசுதேவன், சண்முக விமல்குமார்.  மூவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  வரும் 08.07.2018 ஞாயிறு காலை 10 மணியிலிருந்து மாலை வரை தமிழ்த் திறனாய்வில் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் புதிய போக்குகள் பற்றிய கருத்தரங்கமும் நடத்துகிறார்.  இக்ஷா மையம், எழும்பூரில் நடக்கும் இக் கூட்டத்திற்கு அனைவரும் வரும்படி கேட்டுக்கொள்கிறேன்.  ýகூட்டத்தின் முதல் அமர்வில் üபூக்கோவும் தொல்காப்பியரும்ý என்ற தலைப்பில் ராஜா அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்.  பூக்கோவையும் தொல்காப்பியத்தையும் எப்படி தொடர்பு படுத்திப் பேசப் போகிறார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். கூட்டத்திற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.