Skip to main content

ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிறார்

அழகியசிங்கர் 





வரும் சனிக்கிழமை (21.07.2018) அன்று மாலை 6 மணிக்கு முனைவர் தமிழ்மணவாளன் வைதீஸ்வரன் கவிதைகள் ஆன மனக்குருவி என்ற புத்தகத்தைப் பற்றி பேச உள்ளார்.  1961லிருந்து 2017 வரை எழுதப்பட்ட 366 கவிதைகளின் தொகுப்பு நூல் இது.  வைதீஸ்வரன் வரைந்துள்ள ஓவியங்களும் இப் புத்தகத்தில் காணலாம்.  488 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.450.  ரூ.200க்கு இப் புத்தகத்தை வைதீஸ்வரன் கையெழுத்துப் போட்டு கொடுக்க உள்ளார்.   முதன் முறையாக ஒரு கவிஞரைக் குறித்து இன்னொரு கவிஞர் பேசுகிற கூட்டத்தில் வைதீஸ்வரனும் நேரிடையாகக் கலந்து கொள்கிறார். 
தமிழ்மணவாளன் அனுப்பிய அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.

Comments