Skip to main content

மூகாம்பிகை வளாகத்தில் 13 கூட்டங்கள் நடத்தி விட்டேன் தெரியாமல் 12 என்று எழுதி விட்டேன்..



அழகியசிங்கர்





இதுவரை 13 கூட்டங்கள் நடத்தி உள்ளேன்.  அதைவிட முக்கியம் ஒவ்வொரு கூட்டமும் கவனத்தில் வைத்தக்கொள்ளும்படி  அமைவது.  
நேற்று நடந்த தமிழ் மணவாளன் கூட்டம் சிறப்பாக இருந்ததோடல்லாமல் ஒன்றரை மணி நேரம் போய்க்கொண்டிருந்தது.  வைதீஸ்வரனும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.
12வது கூட்டம் என்பதால் எனக்குப் பிடித்த இனிப்பான பாதுஷாவை வாங்கிக்கொண்டு வந்தேன்.  எல்லோருக்கும் இனிப்பை வழங்கினேன். 
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஆடியோ நிச்சயமாக உள்ளது.  கீழ்க்கண்டவாறு நடந்த கூட்டங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

1. ஜ÷ன் 2017  நடந்த கூட்டம் - திருப்பூர் கிருஷ்ணன் - ஜானகிராமனும் நானும் 
2. ஜøலை 2017 நடந்த கூட்டம் - பெருந்தேவி - புதுமைப்பித்தனும் நானும்
3. ஆகஸ்ட் 2017ல் நடந்த கூட்டம் - கடற்கரை - ஏ கே செட்டியாரும் நானும்.
4. செப்டம்பர் 2017 - ஓஷோவும் நானும் - செந்தூரம் ஜெகதீஷ்
5. அக்டோபர் 2017 - சந்தியா நடராஜன் - திருவாசகமும் நானும்
6. நவம்பர் 2017 - ராஜேஸ் சுப்பிரமணியன் - லத்தீன் அமெரிக்க இலக்கியமும் நானும்
7. டிசம்பர் 2017 - தஞ்சாவூர் கவிராயர் - தஞ்சை ப்ராகாஷ÷ம் நானும்
8. பிப்பரவரி 2018 - கல்யாணராமன் - கு அழகிரிசாமியும் நானும் 
9. மார்ச்சு 2018 - த நா குமாரசாமியும் நானும் - முனைர் வ வே சுப்பிரமணியன்
10.  ஏப்ரல் 2018 - கு ப ராஜகோபாலனும் நானும் - சாருநிவேதிதா
11. மே 2018 -சுனில்கில்கானியும் நானும் - சா கந்தசாமி
12. ஜøன் 2018 - சி ராஜேந்திரன் - திருக்குறளும் நானும்
13. ஜøலை 2018 - வைதீஸ்வரனும் நானும் - தமிழ் மணவாளரன்.
ஜனவரி மாதம் புததகக் கண்காட்சியை ஒட்டி கூட்டம் நடத்தவில்லை.   யாருக்காவது கூட்டத்தில் பேசியதை காதால் கேட்க வேண்டுமென்றால் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

Comments