Skip to main content

Posts

Showing posts from May, 2010

தமிழ்ப் பேசும் ஆங்கில படம்

தெரு விளக்குகள் அணைந்து விட்டது. எல்லா திசைகளிலும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறையாக சப்தம் காட்டியபடி தாறுமாறாக வீசியது. இந்தக் கோடையில் காய்ந்து சருகாகி மடிந்துப்போன சாலைப் புழுதியெல்லாம் காற்றில் மேலெழுந்து கண்களில் அப்பியது. மேலெல்லாம் நாற்றப் பூச்சு. நட்சத்திர மண்டலம் மறைந்துப் போனது. தேய்ந்து போய் வளர்ந்த நிலவையும் காணோம். மின்னல் மின்னி நெளிய, இடி இடித்துக் காட்டியது. மழைவரும் என்று பேசிக்கொண்டு சிலர் ஓட்டமும் நடையுமாய் விரைந்தார்கள். தூற்றல் பலமாக விழுந்தது. ஏறிவந்த சைக்கிளை தள்ளிக் கொண்டும் போக இயலவில்லை. சுழற்றியடித்து அதை நிறுத்தியது காற்று. உடல் பலஹீனம்வேறு. தேங்கிவிட்டேன். காலம் என் முன்னே இருளாக கவிழ்ந்து கிடக்கிறது. விளக்குகள் மீண்டும் உயிர்பொற்றன. காற்றும் தூறலும் கூடிக்கொண்டே இருந்தது. நாலு வீடு தள்ளி, ஒரு வீட்டின் முன்புறம் கொஞ்சம் பெரிய பெட்டிக்கடை. அதன் முன்னால் போடப் பட்டிருந்த கீற்றுப் பந்தலில் சிலர் ஒதுங்கி நின்றார்கள். மழை விடட்டுமென சைக்கிளை ஓரத்தே விட்டுவிட்டு நானும் அங்கே ஏறிக்கொண்டேன். தூரத்தில் இருக்கும் எங்க முஹல்லா பள்

பூனைகள்...........பூனைகள்................பூனைகள்......25

அரசியல் வாதியும் அவர் வளர்த்த பூனையும் அரசியல்வாதி ஒரு பூனை வளர்த்தார் அன்றாடம் பாலுடன் அனுசரணையாய் வளர்க்கப் பட்டது அந்தப் பூனை அவர் மடியில் கிடந்து மாமிசம் சாப்பிட்ட பூனை அது. அரசியல்வாதி எம். எல். ஏ ஆனார். எம். பி ஆனார். மத்திய மந்திரியும் ஆனார் பூனைக் காவல்படையுடன் சுற்றும் அவர் அருகே இன்று அந்த பூனையால் அண்ட இயலவில்லை அரசியல்வாதியின் மனைவியாய் நெடுங்காலம் இருந்த பின் ஒரே நாளில் திடீரென முதல் மனைவியாய் பதவி உயர்வு பெற்ற அந்தப் பெண்ணின் சமையல் அடுப்பில் தூங்குகிறது இன்று அந்த பூனை குமரி எஸ்.நீலகண்டன்..

யாவரும் கேளீர்

எழுதுவது, படிப்பது இரண்டும் தனிமையில்தான் சாத்தியமாக இருந்தாலும் இவை ஆழ்ந்த நட்புக்கும் காரணமாக இருந்து விடுகின்றன. புதுமைப்பித்தன்-ரகுநாதன், கு.ப.ரா-பிச்சமூர்த்தி. ராமையா-சி சு செல்லப்பா எனப் பலர் உடனே நினைவுக்கு வருகின்றனர். இந்திய சுதந்திரத்திற்கு முன்பு பொதுவாக மக்களிடம் இருந்த விடுதலை வேட்கை இவர்களிடமும் இருந்தது. கிட்டத்தட்ட இதே மாதிரிதான் ஷங்கரநாராயணன்-ஏ ஏ ஹெச் கே கோரி - சாந்தன் ஆகியோரைப் பற்றி நினைக்க முடிகிறது. இப்போது சுதந்திரம் என்ற அரூபமான, ஆனால் உணர்ச்சி எழுப்பக்கூடிய இலக்கு தேவையற்றுப் போய் விட்டது. இன்று பெரும்பாலும் பொருளாதாரக் கவலைதான் எல்லா இந்தியரையும் தீண்டுகிறது. எழுத்தாளர்களாகவும் இருந்து விட்டால் பத்திரிகை பிரசுரம், நூல் பிரசுரம் இவற்றுக்கும் மேல் வாசகர் கவனம் போன்றவை சின்னச் சின்னக் கவலைகளாக இருந்து வரும். பொருளாதாரம்தான் குடும்ப உறவுகள், பொறுப்புகளையும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் நிர்ணயிக்கிறது. இன்றைய மசாலாத் திரைப்படங்கள் இந்த ஒரு நம்பகமான சிறிதே பூதம் காட்டும் கண்ணாடி. இந்தப் பொது விதியிலிருந்து சாந்தன் சற்றே விலகியவர். அவர் இலங்கைத் தமிழர். இந்த

ஒரு கொத்துப் புல்

பூமியிலிருந்து சுமார் 12500 அடி உயரத்தில் யாத்ரீகர்களுக்காக நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டிருந்த சிற்றுண்டி சாலையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்னுடன் என் மனைவியும் மகளும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்...... கேதார்நாத்தின் உச்சிக்கு வந்தடைய கௌரிகுண்ட் என்ற ஸ்தலத்திலிருந்து 14 கிலோ மீட்டர் குட்டைக் குதிரையின் மேல் ஆடி அல்லாடி இரண்டு மணி நேரம் சவாரி செய்தாக வேண்டியிருந் தது. அந்த அனுபவ அவஸ்தையில் உடம்பும் மனசும் ஒரு வித்யா சமான வெளியில் பரபரத்துக் கொண்டிருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு குதிரை சவாரியை நினைத் துக் கொண்ட போது திடீர் திடீரென்று சிரிப்பு வந்தது.. முன்னும் பின்னுமாகவும் பக்க வாட்டிலும் எதிர்பாராத விதமாக ஆடிக் குலுங்கி கொண்டு வந்த அந்த வித்யாசமான பயணம் எங்களுக்குள் ஒரு குழந்தையின் சந்தோஷத்தை மலர்த்திக் கொண்டிருந்தது... " இருந்தாலும் அந்தக் குதிரையை நெனைச்சா ரொம்ப பரிதாமா இருக்கு அப்பா! " என்றாள் மகள்.. ' ஆமாம்...குதிரைகளுக்குக் கூட ஏன் எல்லா ஜ

திண்ணை

மழை பெய்துகொண்டிருந்த பிற்பகலொன்றில் மழைக்காகத் திண்ணையில் ஒதுங்கியிருந்த என்னிடம் பெரியாச்சிதான் அவ்விடயத்தைச் சொன்னார். தூறல் வலுக்கிறதாவெனப் புறங்கையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது வெற்றிலை, பாக்கு இடித்துக் கொண்டிருந்த பெரியாச்சி சொன்ன விடயம் இலேசான அதிர்வை உண்டாக்கியது என்னில். ஊருக்கு வந்தவுடனேயே டீச்சரைப் பற்றி நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேள்விப்படும் முதற்செய்தியை நல்ல செய்தியில் சேர்த்துக்கொள்வதா, கெட்ட செய்தியில் சேர்த்துக்கொள்வதா எனப்புரியவில்லை. சொன்ன பெரியாச்சியின் முகத்தை நம்பமுடியாமல் ஏறிட்டுப் பார்த்தேன். இறந்த காலங்களனைத்தையும் சுருட்டியெடுத்துச் சுருக்கங்கள் நிறைந்த முகத்தில் எந்த சலனமுமின்றி வெற்றிலை மென்று கொண்டிருந்தார். சடசடவென்று மழை திரும்பவும் வலுத்துப் பெய்யலாயிற்று. மழைச் சாறல் திண்ணையின் ஓரங்களில் சேற்றோவியம் வரையலாயிற்று. மழையின் எந்தப் பிரக்ஞையும் அற்று வாலறுந்த நாயொன்று ஓடிக்கொண்டிருந்தது. மாமாவின் வீடு இன்னும் புராணகாலத்து வீடாக, நாட்டு ஓடுகளைச் சுமந்துகொண்டிருந்தது. ஊருக்கே

நான், பிரமிள், விசிறிசாமியார்......13

எனக்குத் தெரிந்தவரை பிரமிளுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் அவருடன் பழகிய இளமை கால நண்பர்கள், அவர் கஞ்சா அடிப்பார் என்று என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னால் இதை நம்ப முடியாது. நான் பழகியவரை அவர் கஞ்சாவும் சரி, எந்த மதுபானங்களும் குடிப்பவரில்லை. அடிக்கடி டீ குடிப்பார். தானே சமையல் செய்து கொள்வார். இன்னொரு பழக்கம். அவர் எல்லாரிடமும் பணம் வாங்க மாட்டார். யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம்தான் கேட்பார். அதேபோல் என்ன தேவையோ அதை மட்டும் கேட்பார். ஆரம்ப காலத்தில் எனக்கு வங்கியில் அதிக சம்பளம் இல்லை. இருந்தாலும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட தொகைக்குமேல் கேட்க மாட்டார். சிலசமயம் கேட்காமல் என்னைப் பார்க்கக்கூட வருவார். அவரைப்போல் நடக்க யாராலும் முடியாது. பல இடங்களுக்கு பெரும்பாலும் அவர் நடந்தே செல்வார். அவர் வயதில் கையெழுத்து தெளிவாக இருக்கும். ''ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் கையெழுத்து பிரமாதமாக இருக்கிறதே,'' என்பேன். ''நீர் கண்ணுப் போடாதீர்,'' என்பார். இன்று பிரமிளைப் புகழ்பவர்கள் ஒரு காலத்தில் அவர் கிட்டவே நெருங்க முடியாது. யாரையாவது அவர
மரமாகி நின்ற மரம் பச்சையம் நீர்த்து உதிர்ந்துகொண்டிருக்கும் இலையொன்றினை முதுகில் சுமந்தபடி கீழிறங்கிக்கொண்டிருக்கும் காற்றுக்கு உச்சிக்கிளையில் தரையென இறங்கி பின் கிளையென உணர்ந்து தரைதொட கிளை படரும் மழை நீருக்கு மலைகளென நினைத்து கணுக்களையும் குகைகளென பொந்துகளையும் தாண்டி ஊர்ந்து பயணித்த எறும்புக்கு வண்ணங்கள் பிடிபடாமல் பாளங்கள் பிளந்த மரப்பட்டையின் உள்ளிருந்து எட்டிபார்க்கும் கெவுளிக்கு ஓர் இணைப்பறவைகளின் கொஞ்சலில் முறிந்த முந்தைய காதலை கடன்வாங்கிக் கொண்டிருந்த எனக்கு என எல்லாருக்கும் மரமாகி நிற்கிறது இந்த மரம் வீட்டுவாசலில் !

நான், பிரமிள், விசிறிசாமியார்......12

காலையில் ஸ்ரீனிவாஸன் போன் செய்தபோதுதான் இந்தத் தொடரை ஏன் நிறுத்தி விட்டோ ம் என்று தோன்றியது. ஒருவரைப் பற்றி சொல்லும்போது அவர்களுடைய சாதகமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூற வேண்டும். எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் பலவீனமான அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைப் பற்றி பல கதைகள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருக்கிறது என்றுதான் யோசிப்பேன். எனக்கு அவரைப் பார்க்கும்போது சில எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதையெல்லாம் வெளிப்படுத்த மாட்டேன். உதாரணமாக அவரைப் பார்க்கும்போது அவர் குளிக்கவே மாட்டாரா என்று தோன்றும். இதையெல்லாம் அவரிடம் கேட்டதில்லை. அவருடன் பழகிய ஒரு எழுத்தாளருடன் அவர் மயிலாப்பூரில் உள்ள சங்கீத சபா அருகில் சண்டைப் போட்டதாக சொல்வார்கள். நான் ஒருமுறைகூட இதைப் பற்றி அவரிடம் பேசியதே இல்லை. நானும், ஸ்ரீனிவாஸனும் என் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருநாள் வந்துவிட்டார்.அப்போதெல்லாம் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தா

மூன்று கவிதைகள்

செஞ்சுடராகி... மழையாய் இருந்திருக்க வேண்டிய ஓர் இரவில் நிலவு இருந்தது வெளிச்சதை சிந்திக்கொண்டு எதிர்பாராதவிதமாய் வந்திருந்தாள் மழையின் சீதளத்துடன் மொட்டைமாடியில் நிலாச்சாரலில் இருந்தோம் அவ்வொளியில் நிலவின் ஒரு துகளென விழிகளை கூசச்செய்யும் விதத்திலிருந்தாள் பின்புறத் தோட்டத்துச் சருகுகளில் எங்களுக்கிடையேயான காதல் சரசரத்தது பறந்து திரிந்த மின்மினிப்பூச்சிகள் அவள் விழிளோ என வியந்தேன் வானில் முகம் புதைத்தவளிடம் கூடடையும் ஜோடிப்பறவைகள் மையலைப் பாடிச் சென்றது உதிரும் ஓர் இலையொன்றில் தோன்றிய இசையோடு இளஞ்சிவப்பு உதடுகள் மெதுவாய் சேர்ந்திசைத்தன இதயத்தின் இசைவுகளை புனலின் விரைவென என் உடலில் குருதியின் பாய்ச்சல் கட்டுக்கடங்காமல் விரல்கள் தாவி விரல்களைக் கவ்வ நாணம் புற்றீசல்களாய்ப் பறந்ததும் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள் வெட்கம் வியாப்பித்த காற்றோடு நழுவும் கால்கள் படிகளில் இறங்கிச் செல்ல செஞ்சுடராகிய நான் பின் தொடர்ந்து மழையற்ற ஓர் இரவில் சூல்பிடித்த மேகங்களென கலந்துவிட்டோம் சந்திரவதனத்தின் கொத்துகொத்தான ஒளிக்கதிர்களிடையே. கருஞ்திராட்சைகளின

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

வளைதலும் வளைந்து கொடுத்தலுமான நாணல்களின் துயர்களை நதிகள் ஒருபோதும் கண்டுகொள்வதில்லை கூடு திரும்பும் ஆவல் தன் காலூன்றிப் பறந்த மலையளவு மிகைத்திருக்கிறது நாடோடிப் பறவைக்கு அது நதி நீரை நோக்கும் கணம் காண நேரிடலாம் நாணல்களின் துயரையும் சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து தான் கண்டுவந்த இரயில்பாதையோர நாணல்களின் துயர் இதைவிட அதிகமென அது சொல்லும் ஆறுதல்களை நாணல்களோடு நதியும் கேட்கும் பின் வழமைபோலவே சலசலத்தோடும் எல்லாத்துயர்களையும் சேகரித்த பறவை தன் துயரிறக்கிவர தொலைவானம் ஏகும் அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும் கண்டுவரக் கூடும் -

பூனைகள்.....பூனைகள்........பூனைகள் - 24

ஐயப்ப மாதவன் அணிற்பிள்ளைகள்...பூனைகள் மாமல்லன் தெருவில் அதிகம் பூனைகள் இருக்கின்றன பல்வேறு நிறங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு விநோதம் சில அணில்பிள்ளைகளை கொன்று தின்கின்றன பசியின் வெறியோடு சில எஜமானர்களின் அன்பு பிடிக்குள் கிடைக்கும் எலும்புகள் அதிகம் கலந்த மாமிசத் துண்டுகளை முட்களோடு ஒட்டிய சிறிய சதைப்பகுதியோடு கூடிய மீன்களை உண்டு மகிழ்கின்றன அவனது மாடியில் எப்போதும் ஒரு பூனை சதா அலைந்துகொண்டு விசுவாசத்தின் அடையாளமாக மேலும் அவன் உதடசைவுகளுக்கு ஏற்றவாறு தன் நடத்தையை மாற்றியவாறு அவனை விரும்பும் அது ஒரு பெண் பூனை குரல்வழியே துரத்தும் ஓரிரு சமயங்களில் எதாவது தேவைப்படின் அப்புறம் படுத்துக்கிடக்கிறது நிலவின் நிழல்போல பெரிதாயிருந்த அதன் வயிற்றின் எடை குறைந்தவேளை அதைச் சுற்றி மூன்று சிறு குட்டிப்பூனைகள் அவனுக்கு பொறுப்பு கூடிவிட்டதாக் நினைத்துக்கொண்டான் மாடிக்கு வரும் தருணங்களில் அவற்றிற்காக எதாவது தருகிறான் அவ்வாறான பொழுதில் வன்மத்திலிருந்து ஒரு கிழட்டு ஆண் பூனை அங்கு வந்துவிட்டது அவன் அதை அங்கிருக்கும் பொழுதுகளில் விரட்டியடிக்க

அறிவிப்பு

நவீன விருட்சம் 87வது இதழ் வெளிவர உள்ளது. navinavirutcham.blogspot.com ல் வெளிவந்த படைப்புகளைப் பிரசுரம் செய்ய உத்தேசம். பெரும்பாலும் கதைகளும் கவிதைகளும் இதழில் வெளிவர உள்ளது. நீண்ட கதைகள் பிரசுரம் செய்யும் சாத்தியம் மிகக் குறைவு. படைப்பாளிகள் புதிதாக எழுதி அனுப்பலாம். ஏற்கனவே blogspot வந்தவை வேறு எங்காவது பிரசுரம் ஆனால் குறிப்பிட மறக்க வேண்டாம். அன்புடன் அழகியசிங்கர்

பூனைகள்.....பூனைகள்.......பூனைகள்.....பூனைகள்....23

தாரா கணேசன் அனாதை இல்லத்து சயாமிப் பூனைக்குக் கண்கள் குருடு அறை மூலை மென்னிருக்கையில் தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்க கைகள் தந்து சந்தித்தது அது என்னை முதன் முதலாய் தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித் திரும்ப பிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல் முறித்தது அங்குமிங்கும் அலைந்தன கண்ணாடி விழிகள் தேவதையின் இறக்கைகளுடன் கனவின் அடுக்குகள் ஒளிர மதில் மேல் சயனித்திருந்த அதன் கூவலில் கலைந்தது உறக்கம் மருண்ட பார்வையில் நானும் அதுவும் மயங்கி நின்றவள் துயருற்று நடுங்கும் மென்கரத்தால் கண்கள் சுழற்றி அதற்குப் பொருத்தினேன் அந்தப் பூனை பறவையாகிப் பறந்தது அன்றிலிருந்து இரவுகளில் பூனைக்குரலில் பேசும் பறவையொன்று பின் தொடர விநோதங்கள் நிறைந்த பூனைகளின் தீவில் அலைகிறேன் கோமேதகக் கண்களுடன்.

குட்டிக்கதைகள்

புதிய ஒளி புதுமைப்பித்தன் அன்று இரவெல்லாம் நல்ல மழை. காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்திவிட்டுச் சென்றன. இரவு பூராவும் "ஹோ ஹோ" என்று ஓலம். பேயின் எக்காளச் சிரிப்பு. கத்திவீச்சு மின்னல்கள். சட சடா என்ற குமுறல்கள் குடலைக் கலக்கின. மழை நின்றது. காற்று ஓய்ந்தது. சொட்டு சொட்டென்று நீர்த்துளிகள். வீட்டு வெளிச்சத்தில் ஒளிபெற்று, ஜன்னல் உயரம் உயிர் பெற்று மறுபடியும் துண்டமாக மறைந்தன. வீட்டிலே நிசப்தம்.... இந்த ஓலத்திலே அதன் நிரந்தர சப்தத்திலே தூங்கிக் கொண்டிருந்த எனக்கு மழை ஓய்ந்ததும் விழப்பு வந்தது. அந்த நிசப்தம்; அந்த மௌனம். என் மனத்திலே என்னென்னவோ குவிந்து மறைந்தன. ஒன்றோடொன்று ஓடித் தளர்ந்து மறையும் எண்ணக் குவியல்கள். திடீரென்று... தூளியிலிருந்து குழந்தை...என் குழந்தை.. "அம்பி அம்பி குச்சியை எடுத்துண்டு வா...சீமா எடுத்துண்டு வா.." வீறிட்டு அழுகை. "என்னடா கண்ணே...அழாதே..." என்று என் மனைவி எழுந்தாள். "அம்பி இந்தக் குச்சிதான் ராஜாவாம்.....சாமிடா...நீ கொட்டு அடி. நான் கும்படறேன்..நான்தான் கும்பிடுவேன்.." ஒரே அழுகை. நான் படுக்கையைவிட

குட்டிக்கதைகள்

இரகசிய வேதனை அசோகமித்திரன் இருமுறை பஸ் கட்டண விகிதத்தை மாற்றியபோதும் அவன் சங்கடம் தீரவில்லை. முதன்முறை அவன் போகும் இடத்திற்கு 1.75 என்று நிர்ணயத்திருந்தது. கால் ரூபாய் நாணயம் அவனிடம் இருக்காது. இரண்டு ரூபாயாகக் கொடுத்தால் பல நேரங்களில் பாக்கிச் சில்லறை வராது. சில நேரங்களில் வருவது பொதுப் பழக்கத்திலிருந்து மறைந்திட்டட இருபது காசு நாணயமாக இருக்கும். நாட்டில் உள்ள இருபது காசு நாணயங்களெல்லாம் பஸ் கண்டக்டர்களிடம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும். இரண்டாம் முறை மாற்றப்பட்ட கட்டணம் 1.25. கால் ரூபாய் சில்லறை இல்லையென்றால் பஸ்ஸில் ஏறவே பயப்பட வேண்டும். எவ்வளவு கால் நாணயங்களைச் சேர்த்து வைக்க முடியும்? இன்று ஒரு கால் ரூபாய் நாணயமும் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான தடவைகளில் கால் ரூபாய்க்காக கண்டக்டர்கள் கொடுத்த இருபது காசு நாணயங்கள் இருந்தன. ஒரு முறை, ஒரே ஒரு முறை, அவர் கொடுக்கும் இருபது காசை அவர்கள் கால் ரூபாயாக ஏற்றுக்கொள்ளக் கூடாதா? பஸ்ஸில் பயணம் செய்வதே ஏதோ பிச்சைக்குப் போய் நிற்பது போலச் செய்து விட்டார்கள் கண்டக்டர்களும் டிரைவர்களும். பெரிய பஸ் நிலையங்களில் அந்தக் கேவலத்தைச் சொல்லி முடியாது. எல

குட்டிக்கதைகள்

நவீன விருட்சம் 40வது இதழில் (ஜூலை 1998) இப்படி எழுதியிருந்தேன் : குட்டிக் கதைகள் மற்ற எல்லா அம்சங்களுடன் சேர்ந்து பிரசுரமாகும்போது, உரிய கவனத்தை கவர்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. சமீப காலமாக ஒரு வணிக இதழ் குட்டிக் கதைகள் என்ற பெயரில் பலவற்றைப் பிரசுரம் செய்தும் அவற்றுக்குச் சன்மானமும் அளித்துள்ளது. வணிக இதழ் சந்தையில் வெளியாகும் எதுவும் நாசமாகிவிடும் என்பதற்கு 'குட்டிக் கதைகள்' என்ற பெயரில் வெளிவந்தவை உதாரணம். மாறாக சிற்றேடுகள் உரிய கவனத்துடன் கதைகளைப் பிரசுரம் செய்துள்ளன. 'குட்டிக்கதைகள்' எப்படி இருக்க வேண்டுமென்று யோசிக்கும்போது, நீதியைச் சொல்லும் ஒன்றாக முடிந்து விடக்கூடாது என்ற காரணத்தால், பாரதியாரின் நீதிக் கதைகளை இதில் சேர்க்கவில்லை. அதேபோல் நடைச்சித்திரமான வார்ப்பில் குட்டிக் கதைகளை அடைத்துவிடக்கூடாது. சம்பவத்தின் ஆழம் மாத்திரம் போதும், சம்பவத்தின் விஸ்தீரணம் தேவையில்லை. கதை ஆரம்பிக்கும் அவசரத்துடன் முடிந்துவிட வேண்டும். திரும்பவும் படிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்பட வேண்டும். அரைப் பக்கத்திலிருந்து இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் வரை குட்டிக்கதைகளை எழுத

Circle

I was inside the circle Within me was the circle. No change in Those looked as visions I felt like jumping the circle I stood near the line The joy was cut off Haste and restlessness struck me. I set out the step to jump over The circle appeared bigger Without getting caught up in my leap The joy that was cut off returned There is the circle within me I am within the circle The circle itself goes on expanding. (translated by RAA SRINIVASAN )

பூனைகள் பூனைகள் பூனைகள் 22

திருட்டுப் பூனை எல்லோருக்கும் உரியது எல்லாம் என்று எண்ணி இயங்குகிற பூனைக்கு கிட்டியப் பெயர் திருட்டுப் பூனை. திருடாத பூனைக்கும் உண்டு இப்பட்டம். இன்னொரு இனத்தால் இடப் பட்ட ஈனப் பெயர். இரையாகிற எலிகள் கூட நம்புகிறபோது இவர்களுக்கு மட்டும் திருட்டுப் பூனை. கட்சித்தொண்டனாய் தீக் குளித்தும் காட்ட முடியாது அதற்கு அதன் விசுவாசத்தை. பாவம் விசுவாச அரிதாரம் பூசத் தெரியாத விழிகளுடன் பதுங்கி பதுங்கி வாழும் பரம சாதுவாய் திருட்டுப் பூனை

மூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)

சுய துரோகம் நேற்று நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம் காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம் காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம் காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம் எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம் நேற்று நாங்கள் சந்திக்காதிருந்தோம் இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம் காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம் பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை அனுபவிக்காதிருந்தோம் நேற்று நான் கண்ட அதே நிலவை நீ காணாதிருந்தாய் நான் அனுபவித்த தென்றலின் தழுவலை நீ அனுபவிக்காதிருந்தாய் நேற்று நீயென்று ஒருவர் இருக்கவில்லை நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும் இன்றும் அவ்வாறே நான் மாத்திரமே பாதம் பதிக்க இடமற்ற வெற்று வெளியொன்றில் புவியொன்றா பிரபஞ்சமொன்றா பொருளொன்றா சக்தியொன்றா எண்ணமொன்றா உணர்வொன்றா இவை ஏதுமற்ற வெற்று வெளியொன்றில் வெறுமனே தரித்திருக்கிறேன் நேற்று சூரியன் உதித்திடவில்லை நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை அதுவுமன்றி நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை எல்லாமே வெறுமையாய்...